உண்மை காதல் -4

அத்தியாயம் -4


மிதிலாவை, விஷ்ணுவிடம் ஒப்படைத்துவிட்டு, வீடு திரும்பியிருந்த ஹரியோ, மறுநாள் அன்னபூரணியுடன், அவரின் தாய் வீட்டிற்கு, அங்குள்ள சொந்தங்களை காண அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டு இருந்தான். 


ஹரி காரில் செல்லும் பொழுது தான், முன்தினம் நடந்ததையெல்லாம் அன்னபூரணியிடம் பகிர்ந்து கொண்டு இருந்தான். 


அன்னபூரணி , "ஏன் ஹரி நேற்றே சொல்லவில்லை?? சொல்லி இருந்தா அவங்க வீட்டுக்கு போயிட்டு, பார்த்துவிட்டு, அப்படியே நாம கிளம்பி இருக்கலாம் இல்ல கண்ணா", என்றார்.


அதற்கு ஹரி, "நேத்து ரொம்ப டயர்டா இருந்ததால சொல்ல மறந்துட்டேன் மாம், ஜெட்லாக் வேற, காலையில சொல்லலாம்னு இருந்தேன், நாம இன்னைக்கு கிளம்புற பிளானும் நேத்து இல்லைல, ", என்றவன்,


மேலும் "அந்த அங்கிள் வேற கண்டிப்பா வீட்டுக்கு வர சொன்னாங்க, நானும் சரி டே டைம்ல உங்க கூட போயிட்டு பார்க்கலாம்னு நினைச்சு இருந்தேன், அந்த பொண்ணு வேற ரொம்ப பயந்த மாதிரி இருந்தா, என்ன ஆச்சு தெரியலை"என்றான் மிதிலாவின் அழுகையை நினைத்து.


அன்னப்பூரணி, "ஓ, கவலைப்படாத கண்ணா, அவங்க அம்மா அப்பா பார்த்ததும் அவளுக்கு சரியாகிட்டு இருக்கும், சின்ன பொண்ணுன்னு சொன்னயே, அதனால் தான் பயந்து இருப்பா, திரும்ப முடிஞ்சா திருச்சி போயிட்டு பார்க்கலாம், ", என்றுக்கூறினார்.


ஹரியும், "ஓகே மாம், ", என்றுவிட, அதன்பிறகு வேறு விஷயம் பேச ஆரம்பித்து விட்டனர்,


பிறகு அன்னப்பூரணியின் வீட்டிற்கு சென்றவர்கள், அங்குயிருந்த சொந்தப்பந்தங்கள் அனைவரையும் சென்று பார்த்து பேச. நேரம் காற்றின் வேகத்தில் கரைந்தது.


அங்கு இவர்கள் சென்று, இரண்டு நாட்கள் ஆன நிலையில், ஹரிக்கு அவன் பணி புரியும் மருத்துவமனையில் இருந்து அவசரமாக அழைப்பு வந்து இருந்தது.


ஹரியிடம் செக்கப்பிற்கு வரும் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு, உடல் நிலை சரியில்லை என்று சொல்லி, அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.


ஹரி அப்பெண்ணின் உடல் நிலையை கேட்டறிந்து, அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைக்கான உத்தரவுகளை, அங்கிருந்த வேறொரு மருத்துவருக்கு பிறப்பித்தான். 


மறுநாள் ஆகியும், அப்பெண்ணின் உடல்நிலையில், ஹரி எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாததால், ஹரி அன்னபூரணியிடம் விஷயத்தை கூறி, "நான் யூ.எஸ் கிளம்பறேன் மாம், சாரி, இதுவரை இப்படி நடந்தது இல்லை, ப்ரெக்னன்ட் வேற மாம், ஏற்கனவே மேரேஜ் முடிஞ்சு அஞ்சு வருஷம் மேல அவங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துச்சு‌, என்னால இங்க இருக்கவே முடியலை, பிளீஸ் மாம் நான் கிளம்பறேன், நீங்க இங்கே நாம் முன்பு பிளான் செய்தபடி இருந்துட்டு வாங்க, ", என்றான்.


அன்னபூரணி யோசித்து, மகனை பிரிய மனமில்லாது, "இல்லை நானும் உன்கூடவே வரேன் ஹரி, பிறகு ஒருமுறை வேண்டாம்னா திரும்ப இந்தியாவுக்கு நாம இரண்டு பேரும் வரலாம்.. இப்போ தான் எல்லாரையுமே பார்த்தாச்சே", என்றுவிட்டார்.


சரியென்ற ஹரி, உடனேயே கிடைத்த அடுத்த விமானத்தில் இருவருக்கும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட.. அடுத்த முப்பது மணி நேரத்தில் அமெரிக்காவிற்கே வந்து சேர்ந்துவிட்டனர்.


வந்து இறங்கிய மறுநிமிடமே, ஹரி மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான்.


அப்பெண்ணிற்கு தேவையான சிகிச்சைகளை கூடவே இருந்து அளித்து, அப்பெண்ணையும், அவர் வயிற்றினுள் இருந்த குழந்தையையும், முழுதாக காப்பாற்றியப்பின் தான் நிம்மதியானான்.


அதன்பிறகு ஹரி எப்பொழுதும் போல், பணிக்கு சென்று வர.. பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டு இருந்தனர்‌.. 


அச்சமயம் தான் விஷ்ணு, மிதிலாவின் விசேஷத்திற்கு அழைப்பு விடுக்க!!, ஹரிக்கு அழைத்துக் கொண்டு இருந்தார்.


ஹரியின் தொலைபேசி எண்ணோ, தொடர்பில் இல்லை என்று அவருக்கு வந்து கொண்டே இருந்தது.


ஹரி இந்தியாவில் தனியாக சிம் வாங்கி உபயோகித்து இருக்க… 


அது அவன் இந்திய எல்லையை தாண்டியதும் செயல் இழந்து விட்டு இருந்தது. 


அதனால் விஷ்ணுவால் ஹரியை தொடர்பு கொள்ள இயலாமல் போனது.


ஹரியும் மிதிலாவை, அடுத்தடுத்த வேலையினால், அப்படியே மறந்தேவிட்டு இருந்தான்.


விஷ்ணு, துளசியிடம் ஹரியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க..


அங்கு வந்த மித்ரா, "அப்பா அன்னைக்கு அந்த டாக்டர், சாக்லேட் எல்லாம் வச்சு ஒரு கவர் கொடுத்து இருந்தார் இல்ல, அத எங்க நாம வச்சோம்?? உள்ளே என்ன இருக்குன்னு பார்க்க மறந்துட்டோமே பா", என்று ஞாபகம் செய்ய.


விஷ்ணு "பெரிய அலமாரியில் தான்மா இருக்கு" என்றார்.


உடனே மித்ரா சென்று, அந்த கிஃப்ட் கவரை எடுத்து வர.. 


ஓடிவந்த மிதிலா, "மித்துக்கா என்னோட கிஃப்ட்ட நான் தான் திறப்பேன்…", என்று வாங்கி, கவரின் உள்ளே இருந்த சாக்லேட் மற்றும் பொம்மையை பார்த்துவிட்டு, கிரீட்டிங் கார்டை அவள் வெளியே எடுக்க, அதன் உடனே சேர்ந்து செயினும் வந்தது.


மித்ரா, "என்னடி மிது செயின்லாம் இருக்கு..", என்றுக்கூற.


உடனே விஷ்ணு செயினை வாங்கி பார்த்து, "இது பொட்டிக்கில்ல வாங்கின மாதிரி இல்லையே மிது, கல்லும் பார்க்க ஒர்ஜினல் மாதிரி இருக்கு, நான் நாளைக்கு, நகைக்கடையில் சரிபார்த்துட்டு வரேன்", என்று அதை எடுத்துச் சென்றார் பத்திரப்படுத்த.


வடைப்போச்சே மொமண்ட்டில் மிதிலா இருக்க.


மித்ரா, "எல்லாமே டார்க் சாக்லெட், ரொம்ப கசக்கும், எனக்கு எதுவும் வேண்டாம், உனக்கும் பிடிக்காது மிது இது", என்று சாக்லேட்டை திருப்பி பார்க்க..


உடனே மிதிலா, "இல்லை அது உடம்புக்கு ரொம்ப நல்லதாம் மித்துக்கா, நான் டெய்லி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுகறேன்…", என்றவள், கவருடன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.


அறைக்குள் வந்த மிதிலா, சாக்லேட்டை பிரித்து கடித்தப்படி, அதில் இருந்த Greeting card-யை பிரித்துப்பார்த்தாள்..


கார்டின் இறுதில் இருந்த ஹரியின் கையெழுத்து அவள் கண்களை அங்கு கட்டிப்போட்டது.


"Get well soon jigili" என்று எழுதி கீழே அழகாக அவனின் பெயரை கையெழுத்தாக போட்டு இருந்தான்.


மிதிலாவின் ஆள்காட்டி விரல் மெல்ல.. ஹரியின் பெயரை தொட்டுப்பார்க்க..


வாயில் இருந்த டார்க் சாக்லெட் கூட பெண்ணவளுக்கு தித்தித்தது.


********************************

மறுநாள் விஷ்ணு, தான் வேலைப்பார்க்கும் நகைகடையில், ஹரி கொடுத்த செயினை சரிபார்த்தப்போது, அது வைரக்கல் என்றும் செயின் பிளாட்டினம் என்றும் தெரியவந்தது.


விலை வேறு சில லட்சங்கள் இருக்கும் என்று பிளாட்டினம் பிரிவு மேனேஜர் சொன்னதும், விஷ்ணுவிற்கு ஒரே அதிர்ச்சி!!


 ஹரி அமெரிக்காவிலிருந்து இப்பொழுதுதான் வந்துள்ளதாக விஷ்ணுவிடம் கூறி இருந்தான், செயினும் திருச்சியில் வாங்கவில்லை என்று தெரிந்தது.


அப்படி என்றால் ஹரி யாருக்கோ வாங்கிய செயினை, தெரியாமல் கவரில் வைத்து விட்டான் போல், என்று நினைத்துக் கொண்டு, விஷ்ணு, ஹரிக்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். 


பலன் தான் பூஜ்ஜியம்.


அவன் தான் சிம்மையே எடுத்துவிட்டு இருந்தானே..


விஷ்ணு, வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை சொல்லி, பத்திரமாக நகைகள் வைக்கும் இடத்தில் அதனை வைத்துவிட்டார்.


ஹரி செயினை காணவில்லை என்று மீண்டும் தொடர்பு கொண்டால், அதை ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.


மறுநாள் பொட்டிக்கிற்கும் சென்று, ‌ஹரி வந்து விசாரித்தால், தன்னுடைய முகவரியை ‌கொடுக்குமாறு சொல்லி, வீட்டு அட்ரெஸையும் பகிர்ந்துவிட்டு‌ வந்தார்,.


மிதிலாவின் இளம் மனமோ, ஹரி கண்டிப்பாக தனக்கு தான் அச்செயினை கொடுத்து இருப்பான், என்று நம்பியது. அச்செயினை கழுத்தில் போட்டு பார்க்கும் சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தாள்.


நாட்கள் ஓட,


விஷ்ணுவின் குடும்பமும், பழைய நிலைக்குத் திரும்பி எப்பொழுதும் போல் இயங்க தொடங்கியது.


மிதிலா மீண்டும் பள்ளிக்கு சென்று வர ஆரம்பித்துவிட்டாள்.


மிதிலாவிற்கு, ஹரியுடன் நடந்த சம்பவங்கள் அனைத்தும், தினமும் அடிக்கடி மனதில் மேலெழுந்துக்கொண்டே இருந்தது.


பள்ளியில் ஒருநாள் ஏதோ பேச்சு வாக்கில் மிதிலா, நெருங்கிய தோழிகளிடம், ஹரியை பற்றி வாயை விட்டுவிட..


அத்துடன் அவளை உண்மைக்கூற சொல்லி பிடித்துக்கொண்டனர்.


மிதிலாவும் அன்று, ஹரியுடன் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டாள்.


அவன் முத்தமிட்டதை மட்டும் மறைத்து விட்டாள். 


தோழிகள் தன்னையோ, ஹரியையோ தவறாக நினைத்து விட்டாள், என்ன செய்வது என்று.


அவள் தோழிகளோ, "என்ன மிது சொல்ற?? செம லவ் ஸ்டோரி கேக்குற மாதிரி இருக்குடி!! ஆளு செம ரொமான்டிக் போல!! கிஃப்ட் எல்லாம் கொடுத்து இருக்கார்", என்றவர்கள்,  


அந்த வயதிற்கு ஏற்ற ஆர்வத்துடன், மேலும் "நீ ஏன்டி உன் பேர கடைசி வரைக்கும் சொல்லல லூசு??, உனக்கு செல்லமா ஜிகிலி-ன்னு பேர் எல்லாம் வேற வச்சிருக்காரு!!! செம ஸ்பீடான ஆளு போல!! பார்க்க எப்படி இருந்தார்!!", என்று அவள் கன்னத்தை கிள்ளிக் கிள்ளி, அவளை துருவி விசாரிக்க ஆரம்பித்தனர்.


மிதிலாவும் தோழிகளிடம், "பார்க்க நல்லா தான்டி இருந்தார், அப்புறம் டாக்டர்னு சொன்னார், அவ்ளோதான்", என்றாள் மேலோட்டமாக.


அதில் கடுப்பான மிதிலாவின் தோழி, "ஏன்டி பார்க்க எப்படி இருந்தார்னு கேட்டா ??, நல்லா இருந்தார்னு ஒரு வார்த்தையில் பதில் சொல்ற, என்ன கலர்? என்ன சைஸ்? என்ன ஹைட்?, அதெல்லாம் சொல்லுடி, இப்ப பாரு ஒழுங்கா டீட்டெயில்ஸ் சொல்லல, உன்னை தூக்கி போட்டு மிதிக்க போறோம்", என்று அவளை போட்டு விடாது கேள்விக்கேட்க..


கலகலவென்று சிரித்த மிதிலா, "இருங்க இருங்க சொல்றேன்.. யோசிச்சு பார்த்து...", என்றவள்.


அப்பொழுது தான் ஹரியின் தோற்றத்தை ஒவ்வொன்றாக யோசித்தாள்.


சிறு பெண்ணவள் தன் மனதை, ஹரியின் குணத்திடம் தான் இழந்து இருந்தாள்‌.


புற அழகை பார்த்து, எடைப்போடும் அளவிற்கு எந்த பக்குவமும் அவளிடம் இல்லை.


இன்று யோசித்து பார்க்கும் போது தான் அவன் எவ்வளவு அழகு என்பதே உரைத்தது.


அதற்குள் "சீக்கிரம் சொல்லுடி…", என்று மிதிலாவை போட்டு, ஆளுக்கு ஒரு புறம் இழுக்க, "ஐயோ விடுங்க டி, சொல்றேன் டி.. பிளீஸ், ஸ்டாப் ஸ்டாப் , ", என்றவள்.


படப்படவென்று, "அவர் பேர் ஹரிகிருஷ்ணா, பார்க்க கொஞ்சம் வெள்ளைக்காரன் மாதிரி ரொம்ப வெள்ளையா பிங்கா இருந்தார், அப்புறம்", என்று யோசித்தவள்,


"ரொம்பவும் ஹைட்டா இருந்தார், நான் அவர் செஸ்ட் அளவு தான் இருந்தேன்..",


"அப்புறம் அவருக்கு நல்லா பெரிய பிரவுன் ஐஸ், அவர் பேசும் பொழுது கண்ணை மட்டும் தான் பார்க்க தோனுச்சு, சம்திங் டிஃபரெண்ட் அண்ட் அட்ராக்டிவ்..", என்றவள்.


மேலும் யோசித்து, "செம வாசனையான பர்ஃப்யூம் அடிச்சு இருந்தார், அந்த ஸ்மெல் செமையா இருந்துச்சு டி, ஃபாரின் பர்ஃப்யூம் இல்ல", என்றவள் அப்படியே, தன் கண்ணைகளை மூடி, இன்றும் தன் நினைவலையில் அவனின் சுகந்த மணத்தை தேடி சுவாசித்தாள்.


அவள் தோழிகளோ ஹரியின் உருவத்தை கற்பனையில் பார்த்தப்படியே.. மேலே சொல்லு என்று கேட்க.


மிதிலா, "வேற எதுவும் பெருசா நோட் பண்ணலை டி..", என்றவள்.. மீண்டும் ஞாபகம் வந்தவளாக, "இதை சொல்ல மறந்துட்டேன் பாருங்க அவரோட வாய்ஸ், ரொம்ப ரொம்ப ஸ்வீட், அவ்ளோ மென்மையா இருந்துச்சு, அமெரிக்கன் அசென்ட் ல தான் மோஸ்ட்லி தமிழ் இங்க்லீஷ் ரெண்டும் கலந்து பேசினார், அந்த குரலே ரொம்ப வித்தியாசமா, நல்லா இருந்துச்சு டி", என்றுக்கூறி முடிக்க.


அவள் சொன்னதை அனைத்தையும் கேட்டு முடித்த அவள் தோழிகள், "அடிப்பாவி மிது, அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு, ஒன்னும் பார்க்கலை, வலியில முடியலன்னு சொல்லிட்டு, இந்த அளவுக்கு நோட் பண்ணி இருக்கியா, ஒரே நாளில் வளர்ந்துட்ட போ", என்று ஓட்ட தொடங்கினர்.


அதில் ஒருத்தி, "எனக்கென்னவோ அவருக்கு உன்மேல் சம்திங் சம்திங்னு தோணுது டி மிது, சாக்லேட், டாய்ஸ், செயின், டிரஸ், எஸ்பெஷல்லி கேர்ள்ஸ்க்கு தேவையான பர்சனல் ஐட்டம்ஸ் எல்லாம், பாய்பிரெண்ட் தான் டி வாங்கி தருவாங்க, யாரோ ஒரு பொண்ணுக்கு எதுக்கு இத்தனை செய்யனும், அவருக்கும் உன்னை பார்த்ததும் பிடிச்சு போச்சு போல", என்று கூற,


அந்த நொடி மிதிலாவின் மனதில் இருந்த சிறு சலனம்.. விடுவிடுவென்று விருட்சமாக வளர தொடங்கியது.


அதிலும் அவள் தோழிகள் ஹரியுடன் அவளை இணைத்து வைத்து பேசப்பேச, அவனுடனான மாய உலகிற்கு இழுத்து செல்லப்பட்டாள்.


ஹரி என்ற ஒற்றை வார்த்தை, அவளிடம் மந்திரமாக செயல்ப்பட, மிதிலாவின், நெற்றியும், கன்னமும், சூடாகியது. 


அதில் அவளின் ஆழகான பார்பி நிற முகம், ஆங்காங்கே சிவந்து பளபளத்து, மின்னத்தொடங்கியது. 


கண்கள் இரண்டும் மையலில் மிதந்தது பெண்ணவளுக்கு.


நொடியில் நிகழ்ந்த, மிதிலாவின் முக மாற்றத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட அவள் தோழிகள், "ஹே மிது, ஆர் யு பிளஷிங்(வெட்கம்), என்ன டி நடக்குது, அடிப்பாவி…", என்று அதற்கும் ஓட்ட,


பிறகே தன்னிலை மீண்ட மிதிலா அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்தாள்.


அவள் தோழிகள் தான் யாரும், அவளுடைய  சமாளிப்பை நம்பவில்லை.


************************


நாட்கள் வேகமாக உருண்டோட,


ஹரியை பற்றியே நினைத்துக் கொண்டும், அதிகமாக பேசிக் கொண்டும் இருந்ததில், மிதிலாவின் மனதில் ஹரி நீங்க இடம் பிடித்து இருந்தான்.


அதிலும் தினமும், அவளின் தோழிகளின் பேச்சு வேறு, அதிவேகமாக அவள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.


இதில் பதினாறு பதினேழு வயது பெண்களுக்கு, உடலில் ஏற்படும் அனைத்து ஹார்மோன் மாற்றங்களும் வேறு, மிதிலாவிற்கும் தோன்றி ஹரியை மறக்க விடாமல் செய்தது.


ஹரிக்கும் தன் மீது நிச்சயம் காதல் இருக்கும் என்று நம்பினாள்.


ஹரி கொடுத்திருந்த கிரிட்டிங் கார்டை, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், யாருக்கும் தெரியாமல் தனியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.


நாட்கள் கடக்க, அதில் ஹரியின் கையெழுத்திற்கு கீழ், ஜிகிலி லவ்ஸ் டாக்டர் என்று வேறு தைரியமாக எழுதி பார்த்து ரசித்தாள்.


அவன் கையெழுத்தை எண்ணில் அடங்கா தடவை வருடினாள், அதற்கு ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாள்.


காதல் வந்ததும், கள்ளமும் அவள் மனதில் வந்து புகுந்துக்கொண்டது. 


வீட்டில் யாரும் பார்க்காதவாறு, அக்கார்டை அவளுடைய சர்டிபிகேட்ஸ் உடன் மறைத்து வைத்து கொண்டாள்.


மொத்தத்தில் ஹரி, மிகவும் இம்சித்தான் மிதிலாவை பெயர் சொல்ல முடியா உணர்வுகளால்.


ஹரி, மருத்துவன் என்பதால் வேறு இன்னும் அவனை அவளுக்கு, பிடித்துவிட்டது.


நானும் டாக்டர், அவரும் டாக்டர், என்று எண்ணி மகிழ்ந்தாள்.


அமெரிக்கா எத்தனை தொலைவில் உள்ளது?, அங்கு செல்ல எத்தனை கெடுபிடிகள் உள்ளது?, ஹரியின் வாழ்க்கை தரம் என்ன?, என்று எதையும் யோசிக்கும் பக்குவம் அவளுக்கு கொஞ்சமும் இல்லாது ஆசையை வளர்த்துக்கொண்டாள்.


இப்படியே ஒரிரு மாதங்கள் கடந்துவிட..


ஹரி கண்டிப்பாக தன்னை காண வருவான் என்று நினைத்துக் காத்திருந்தவளோ, நாட்கள் பல கடந்தும், அவன் வராதுப்போனதில், காற்றுப்போன பலூனாக முகம் சுருங்கி, ஏமாந்துப்போனாள்.


முதல்முறை யாருக்கும் தெரியாமல், தனியாக கண்ணீர் வடித்தாள்.


வீட்டில் மனதில் இருப்பதை, சொல்லவும் அவளுக்கு பயமாக இருந்தது.


சிறு பெண், அவளால் அவள் உணர்வுகளை சரிவர புரிந்து கொள்ளவும் முடியவில்லை, தாங்கவும் முடியவில்லை.


ஹரியின் குரல்.. தொடுகை.. அனைத்தும் அவள் நினைவில் நீங்காத இடம் பிடித்து, அவளை வாட்டி எடுத்தது.


எப்பொழுது டியூஷனிற்கு அப்பக்கம் சென்றாலும் அல்லது அந்த பொட்டிக்கின் வழியாக எங்கு சென்றாலும், மிதிலாவின் கண்கள் ஹரியை தானாக தேடும்.


பல நாட்கள், ஹரியை சந்தித்த இடத்திலிருந்து பொட்டிக் வரை, தன் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே செல்வாள். அவன் நினைவுகள் அவளுடன் நிகழலாக நடைப்போடும்.


ஒவ்வொரு முறையும் இறுதியில், ஏன் மீண்டும் ஹரி, தன்னைக் காண வரவில்லை என்று நினைத்துத் நினைத்து சோர்ந்துப்போவாள்.


விஷ்ணுவிடம் சில நாட்கள் கழித்து சண்டைபோட்டு, 'ஹரி தனக்கு தான் அந்த செயினை கொடுத்தான்' என்று சத்யாகிரகம் செய்து, அடம்பிடித்த மிதிலா, 'ஒரே ஒருவாட்டிப்பா' என்று வாங்கி அதனை அணிந்து பார்த்தவள்..


அதையே தொடர் கதையாக வைத்துக்கொண்டாள்.


ஒருமுறை மித்ரா, மிதிலாவிடம் அச்செயினை காலேஜுக்கு போட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்க, "மாட்டேன், இது என்னோட லக்கி செயின் மித்துக்கா, பிளீஸ்" என்று மிதிலா, மித்ராவுடன் அதனை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டாள். 


அதேப்போல், அனைத்து வார விடுமுறை நாட்களிலும், கண்டிப்பாக ஹரி வாங்கி கொடுத்த மஞ்சள் நிற ஃப்ராக் தான் அணிந்துக்கொள்வாள்.


துளசி, "நல்ல டிரஸ், அதை ஏன்டா வீட்ல போட்டு வேஸ்ட் பண்ற மிது", என்பார்.


மிது, "எனக்கு பிடிச்சிருக்கும்மா, போங்க..", என்று காதில் போட்டுக்கொள்வதே இல்லை.


அனைத்து பெற்றோர்கள் போலவே விஷ்ணுவும், துளசியும் தங்கள் மகளை சிறு பெண்ணாகவே பார்த்தனர். அவளின் மன மாற்றத்தை கடுகளவும் அறியாது போயினர்.


இதற்கிடையில் மிதிலாவிற்கு 11ஆம் வகுப்பின் இறுதித் தேர்வுகள் வந்தது.


மித்ராவிற்கும் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு பெற்றது.


ஆறு மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில், மிதிலா வேறுவழியின்றி, ஹரியுடனான சந்திப்பையும், ஹரியின் நினைவையும், ஒரு குட்டி கிரஷ்ஷாக நினைத்து மனதை மாற்றினாள்.


அவள் தோழிகளும் மிதாலாவின் வருத்தத்தைப் பார்த்து, அவள் அதிலிருந்து வெளிவர உதவினர்.


ஹரியோ, மிதிலாவை பற்றி, அவளின் அளவிற்கு எல்லாம் நினைக்கவே இல்லை, எப்பொழுதாவது ஞாபகம் வந்தாலும் கூட, அவளை மிகவும் க்யூட்டான சிறுப் பெண்ணாக மட்டுமே நினைத்துக் கொள்வான். 


மிதிலாவின் மனதில் இவ்வாறான நினைவுகள் இருக்கும் என்று ஹரி கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. அறிந்திருந்தால், சிறு பெண்ணின் மனதை தன் செயல் இந்தளவிற்கு பாதித்து விட்டதா என்று, நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பான்.


அமெரிக்காவில் மருத்துவர்களின் ‌மாத சம்பளம் ஆரம்பமே 15 லட்சங்களில் இருந்துதான் ஆரம்பிக்கும், அதிலும் ஹரியின் சர்வீசிற்கு, குறைந்த பட்சம் ஒரு 25 லட்சமாவது மாதத்திற்கு வாங்குவான், அதனாலே மிதிலாவிற்கு கொடுத்த, செயினை பற்றி கூட அவன் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.


****************************


ஆயிற்று ஹரி மிதிலா சந்தித்து ஒருவருடத்திற்கு மேல்.


ஹரி மீதான உணர்வுகளின் பிடியில் இருந்து மீண்டிருந்த மிதிலாவை, அவளின் படிப்பின் பளுவும், நீட் தேர்விற்கான கோச்சிங் கிளாஸூம் முழுதாக இழுத்துக்கொண்டது.


எதற்காகவும் அவள் தன் படிப்பை மட்டும் நிறுத்தவில்லை.


சிறு வயது முதல் அசைப்பட்ட, அவளின் மருத்துவ கனவை நினைவாக்க, ஒருகணம் விடாது ஓடிக்கொண்டே இருந்தாள்.


இன்னும் ஒரு சில வாரங்களில் மிதிலாவிற்கு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது.


மித்ராவும் கல்லூரியில் இரண்டாம் வருட செமஸ்டர்களை முடித்து மூன்றாம் வருடத்திலேயே நுழைந்து விட்டு இருந்தாள். இன்னும் ஒரு வருடமே அவளிற்கு உள்ளது. அது முடித்து B.Ed ட்ரெயினிங் முடித்து, அடுத்து அவள் அரசு ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத வேண்டும். அவளும் அவள் கனவை நோக்கி தான் சென்றுக் கொண்டிருந்தாள்.


விஷ்ணுவும் துளசியும் எப்பொழுதும் போல் தங்களின் முழு ஆதரவையும், பிள்ளைகளுக்கு கொடுத்து ஊக்கப் படுத்திக்கொண்டு இருந்தனர்.


அச்சமயம் தான் விஷ்ணு வேலை செய்யும் நகை கடையின், ஓனரின் மகனுக்கு, திருமணம் என்று கடையில் எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தனர்.


கூடுதலாக, வரும் வெள்ளிக்கிழமை திருமணத்தை முன்னிட்டு, பணியாளர்கள் அனைவருக்கும், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என்று நான்கு தினங்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.


கடையில் பணியில் இருந்த அனைவரும், ஓனர் வீட்டு திருமணம் என்பதால் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் செல்வது தான் மரியாதையாக இருக்கும் என்று முடிவெடுத்து இருந்தனர்.


அதன்படி வியாழக்கிழமை மதியம் துளசி, மாலை ரிஷப்ஷனிற்கு வைத்துக்கொண்டு செல்ல, தோட்டத்தில் பூத்திருந்த குண்டுமல்லிப்பூக்களை பறித்து வந்து, அழகாக தொடுத்து கொண்டு இருந்தார். 


தங்களின் நிம்மதியான வாழ்விற்கு, இன்றுடன் தன் சின்ன மகள் முற்றுப்புள்ளி வைக்கப்போவதை பாவம் அவர் அறியாதுப்போனார்.


****************************


பிள்ளைகள் இருவரும் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு மதியமே வீட்டிற்கு வந்துவிட்டனர்.


மிதிலாவிற்கு நீண்ட தினங்களுக்கு பிறகு ஸ்கூலிற்கு லீவ் போட்டது, ஃபங்ஷனிற்கு செல்வது, அழகாக உடையணிந்து மேக்கப் போட்டு கொள்ள போவது என்று பல எண்ணத்துடன் குதுகலமாக இருந்தாள்.


முக்கியமாக கல்யாணத்தில் விதவிதமான ‌சாப்பாடு, ஐஸ்கிரீம் தருவார்கள், என்பது வேறு ஒருபக்கம் அவளிற்கு குஷி.


அன்று மாலை, மித்ரா அழகாக சில்வர் மற்றும் லைட் சாம்பல் நிற கலவையிலான டிசைனர் புடவையில் தயாரானால், அதற்கு தோதாக அழகாக சில்வர் நிறத்திலேயே வெள்ளை முத்துக்கள் மற்றும் வெள்ளை கற்கள் கொண்டு தைத்த பிளவுஸ் அவளின் அழகிற்கு அழகு சேர்க்க, 


மேலும் அதை அதிகப்படுத்த, காதில், கழுத்தில் மற்றும் கையில் சில்வர் மற்றும் கருப்பு நிறத்திலான, சில்க் த்ரெட்டில், டசல் மாடலில் ஸ்பெஷல் வொர்க் செய்த, அணிகலன்களை அணிந்துக்கொண்டவள், முகம் மற்றும் சிகை அலங்காரமும் இந்த காலத்திற்கு ஏற்ப செய்து கொண்டாள்.


சரியாக அந்நேரம் குளித்து முடித்து வெளிவந்த மிதிலா, "வாவ் மித்துக்கா.. ரொம்ப ரொம்ப அழகா இருக்க.. என்னையும் உன்னை மாதிரி அழகாக்கி விடு..", என்று ஓடிவந்து அணைத்துக்கொள்ள..


"மிதுக்குட்டி எந்த மேக்கப்பும் இல்லாமலே, அழகான பொம்முக்குட்டி மாதிரி தானே இருக்க..", என்று அவள் கன்னத்தில் வாஞ்சையாக தன் இதழ்களை மித்ரா பதிக்க.


மின்னல் கீற்றாக ஹரியின் எண்ணங்கள் மிதிலாவின் நினைவில் வந்து சென்றது.


தன் தலையை உடனே குலுக்கி அதை சரிசெய்துக்கொண்டாள்.


மித்ராவும் மிதிலாவை தயார் செய்ய தொடங்கினாள்.


மிதிலாவிற்கு அழகான இளம் பிங்க் மற்றும் பர்ப்பிள் நிறத்திலான, லெகங்கா டைப் உடையை தாவணி போல் அணிய‌ உதவி செய்து.


அவளை போலவே மிதிலாவிற்கும், அதே டசல் முறையில், பிங்க் மற்றும் பர்பிள் நிறத்திலான த்ரெட்களை(thread) கொண்டு செய்த, அணிகலன்களை அணிவித்து, மிதிலாவின் முகத்திற்கும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள்.


ஆரம்பம் முதல் அமைதியாக காட்டிய மிதிலா, இறுதியில்  கண்ணில் மை போடுவதற்குள் மித்ராவை ஒரு வழி செய்து விட்டாள்.


அவள் கண்ணில் பென்சிலை வைத்தாள்‌ போதும், 'ஹே மித்து கண்ணு கூசுது, கண்ணுல தண்ணி வருது', என்று கூறி கூறியே ஒரு வழி செய்து தயாரானாள்.


இருவருக்கும் தலையில் பூ வைத்துவிட்ட துளசி, கூடவே காதின் ஓரம் மறைவாக திருஷ்டி பொட்டு வைத்துவிட.


அனைவரும் ஒன்றாக கடவுளை வணங்கிவிட்டு, காரில் கல்யாண வரவேற்பிற்கு மகிழ்ச்சியாக புறப்பட்டனர்.


நகைக்கடை உரிமையாளரின் வீட்டு விஷேசம் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டாமா, மண்டபம் முழுவதும், மிகவும் அழகாகவும், ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


மண்டப்பத்திற்குள் சென்றதும், முதல் வேலையாக, மேடைக்கு சென்றவர்கள், மணமக்களுக்கு பரிசு கொடுத்துவிட்டு, 


இறங்கி வந்து கீழே விஷ்ணுவின் அலுவலக தோழர்களின் குடும்பத்துடன் அமர்ந்து உரையாடிக்கொண்டு இருந்தனர்.


பிறகு ஏழு மணி அளவில் அனைவரும் ஒன்றாக உணவருந்த சென்றனர்.


திருப்தியாக சாப்பிட்டு முடித்தப்பின், மிதிலாவும் மித்ராவும் சிறிது நேரம் மண்டபத்தில் உலவலாம் என்று யோசித்து விஷ்ணுவை உடன் அழைக்க..


விஷ்ணு, "நாங்க இரண்டு பேரும் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறோம் டா, நீங்க உள்ளேயே சுத்தி பார்த்துட்டு சீக்கிரம் வாங்க, பெரியகுட்டி நீதான் சின்னகுட்டிய கவனமா பாத்துக்கணும் சரியா", என்று கூறி அனுப்ப..

 

துளசி, "ஏங்க தேவையில்லாமல் தனியா அனுப்புறீங்க?? நான் வேணும்னா கூட போறேன்", என்று எழ..


விஷ்ணு, "இல்லை விடு துளசி, பாவம் பசங்க தனியா கொஞ்ச நேரம் சுத்தி பார்த்துட்டு வரட்டும், அவங்க வயசுக்கு ஏத்த மாதிரி பேசி ஜாலியா இருக்கட்டும்.. எப்ப பார்த்தாலும் படிப்பு வீடுன்னு தானே இருக்காங்கம்மா", என்று அவரை தடுத்துவிட்டார்.


முதலில் மிதிலாவும், மித்ராவும் ஒரு சுற்று மண்டபம் முழுவதும், செய்திருந்த அலங்காரங்களை ஒவ்வொன்றாக பார்த்து உலாவி விட்டு, அடுத்து வாசல் பக்கம் வந்தனர்.


அங்கோ பஞ்சுமிட்டாய், ஐஸ்கிரீம், பானிபூரி போன்ற கடைகளை, குடில் வடிவில் போட்டு, அழகாக அலங்கரித்து இருந்தனர்.


அனைத்தும் நம் மிதிலாவின் விருப்ப ஐட்டங்கள்.


தன் கண்களை நன்கு அகல விரித்த மிதிலா உடனே, "எனக்கு பஞ்சு மிட்டாய் வேண்டும் மித்து??" என்றுக்கூற..


மித்ரா, "பானிப்பூரி சாப்பிடலாம் மிது, இப்பதானே ஸ்வீட் சாப்பிட்டோம்" என்றாள்.


பிறகு இருவரும் எதை வாங்குவது என்று சிறு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு முடிவாக.. தனித்தனியே பிரிந்து அவர்களுக்கு பிடித்ததை வாங்க சென்றனர்.


மிதிலா மின்னல் வேகத்தில், இரண்டு கைகளிலும், பஞ்சுமிட்டாயை  பிடித்துக்கொண்டு வர..


அப்பொழுது வாசல் பக்கம் மிகவும் சலசலப்பு ஏற்பட்டது.


"எம்எல்ஏ குடும்பம் வராங்க..", என்று கட்சி தொண்டர்கள், பாதுகாப்பாளர்கள் என்று அனைவரும் பேசிக்கொண்டு கூட்டமாக சென்றனர்.


தீடிரென்று சூழ்ந்துவிட்ட கூட்டத்தை பார்த்த மிதிலாவோ, யார் வருகிறார்கள் என்று பார்க்க, அப்படியே நின்றுக்கொண்டாள்.


அப்பொழுது உள்ளே இரண்டு போலீஸ் ஜீப்களுக்கு இடையில் ஒரு சைலெண்சர் பொறுத்திய கவர்மெண்ட் கார் வந்து சேர..


அதிலிருந்து, ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்த கரைப்போட்ட, வெள்ளை வேட்டி சட்டையில், முதலில் ஆதிகேசவன் இறங்க..


அவரைத்தொடர்ந்து, மாதவியும் இறங்கினார்.


மிதிலா அவர்களை தான் வாசலிலேயே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.


அவர்கள் இறங்கியதும், ஓடிச்சென்ற தொண்டர்கள், சால்வை மாலை என்று வரிசையாக, ஆதிக்கேசவனுக்கு போட்டு, வெடி வெடித்து வரவேற்க..


"என்ன இது இந்த அங்கிளையும், ஆண்ட்டியையும் கல்யாண மாப்பிள்ளை பொண்ணை விட அதிகமா வரவேற்குறாங்க..", என்று மிதிலா வாயைப் பிளந்துக்கொண்டு அப்படியே நிற்க.


அப்பொழுது, ஒரு கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் பிஎம்டபிள்யூ(BMW) கார், சர்ரென்று வழிக்குக் கொண்டு வந்து, அங்கு நின்றது.


இப்பொழுது அனைவரின் பார்வையும் அந்த விலையுயர்ந்த BMW மீது.


அதில் முன்பக்கத்திலிருந்து உடனடியாக இறங்கி ஓடிவந்த டிரைவர், பின்பக்க கார் கதவை திறந்து விட, மிதிலாவின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.


அவள் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் பொருட்டு, மறுகணம் உள்ளிருந்து, வெள்ளை நிற சட்டை மற்றும் கருநீல நிறத்தில் பிங்க் நிற கோடுகள் போட்ட, கோட் சூட்டில் (Navy blue with pink check suit and white shirt) கம்பீரமாக ஒருவன் இறங்கினான்.


அவன் ருத்ரன். 


ருத்ரன் ஆதிக்கேசவன்.


அவனுக்கும் மரியாதை செய்ய மக்கள் அவனை நெருங்க.. வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் அவர்களை அவன் தடுத்துவிட..


முதலில் ஆதிகேசவன் மற்றும் மாதவியும், சிறிது இடைவெளிவிட்டு ருத்ரனும் மண்டபத்தின் உள்ளே செல்ல நடந்து வந்தனர்.


அப்பொழுது தான் மித்ரா, பானிபூரி கப்பை வாங்கி கொண்டு, மிதிலாவை நோக்கி பின்புறம் நடந்து வர தொடங்கினாள். 


ருத்ரன் குடும்பத்தை, அவள் சற்றும் கவனிக்கவில்லை, சற்று தூரத்தில் இருந்ததால் கூட்டத்தில் அவளுக்கு யாரின் முகமும் தெரியவில்லை.


மிதிலாவோ ருத்ரனை பார்த்து, அடையாளம் கண்டுபிடித்திருந்தவள், அவன் அவளை கடக்கும் சமயம், "ருத்ரன் அண்ணா", என்று சிறிது கத்தி அவனை அழைத்திருந்தாள். 


அவ்வளவு தான், அக்கணம் தொட்டு, எமகண்டம் அவளுக்கு ஆரம்பித்து விட்டு இருந்தது.


சத்தம் வந்த புறம் திரும்பி பார்த்த ருத்ரன், அங்கு வந்துக் கொண்டிருந்தவளை கண்டு, மின்சாரம் தாக்கியது போல், அதீத சந்தோசத்தில் அப்படியே நின்றுவிட்டான்.


வாழ்க்கையில் இனி காணமுடியுமா?? கிட்டுமா?? என்று எண்ணி அவன் ஏங்கிய தருணம், இன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு.


************************


ருத்ரன் தன்னிலை அடைந்த நொடி, மிதிலாவை விரைந்து நெருங்கினான்.


மித்ரா, மிதிலாவை நெருங்கி அவளை எச்சரிக்க வாயை திறந்த நொடி, அவர்கள் முன்பு வந்து நின்று விட்டு இருந்தான் ருத்ரன்.


தன் தலை முடியை அழுந்த கோதி, தன்னை சரிசெய்த ருத்ரன், மிதிலாவின் புறம் திரும்பி, "ஹாய் மிதுக்குட்டி, எப்படி இருக்க, அன்னைக்கு கான்டெக்ட் டீடைல்ஸ் கூட வாங்க முடியல", என்று நிறுத்தி "உங்களை மிஸ் பண்ணிட்டேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்", என்றான், கரகர குரலில், வாழ்க்கையில் முதல் முறை அவன் மனதில் படப்படப்பு. 


மிதிலாவோ சிரித்த முகமாக, "நல்லா இருக்கேண்ணா, அன்னைக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு அதான் நாங்க சீக்கிரம் போயிட்டோம், இப்ப தான் பார்த்துட்டோமே அப்புறம் என்ன..??, அப்புறம் உங்க மீட்டிங் எல்லாம் எப்படி போச்சு??, ரொம்ப முக்கியமானதுன்னு சொன்னீங்களே??", என்று தொடர் வினாக்களை தொடுத்தாள், ருத்ரனின் மனநிலையை அறியாமல்.


ருத்ரனிற்கு அது என்ன மீட்டிங் என்பதே அச்சமயம் நினைவில் இல்லை, அவன் மூளை தான் வேலை நிறுத்தம் செய்கின்றதே, இருந்தும் "சக்சஸ் டா", என்றான்.


ருத்ரன் எங்கே என்று பார்த்த ஆதிகேசவன்,


மகன் உடன் தொடர்ந்து வராததையும், அங்கிருந்த பெண்களிடம் அதிக ‌மகிழ்ச்சியுடன் பேசுவதையும், கண்களில் கூர்மையேற்றி பார்த்து, தனது கையாளிற்கு கண்ணை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.


மித்ராவோ இதுவரை ஒரு வார்த்தை பேசவில்லை. 


ருத்ரனின் உடல் மொழி, அவளின் மனதிற்கு ஏனோ ஒருவித நெருடலை தந்தது.


எந்தவித சூதுவாதும் இல்லாமல், வெள்ளந்தியான மனதை கொண்ட மிதிலாவோ, ருத்ரனிடம் தொடர்ந்து படப்படவென்று பட்டாசாக பேசிக்கொண்டே இருந்தாள். 


நல்லது எது, கெட்டது எது, என்று சரியாக தெரியாத இரண்டாங்கெட்டான் வயதில் இருந்தவளுக்கு, பாவம் எங்கிருந்து, ருத்ரனின் மையல் சுமந்த விழிகளின் வித்யாசம் தெரிய போகிறது.


அப்பொழுதுதான் ருத்ரன் நியாபகம் வந்தவனாக மிதிலாவிடம், "உங்களோட முழு பேர் என்ன மிதுமா?", என்று விசாரிக்க, 


உடனே மிதிலா அவளுடைய பெயர், "மிதிலா" என்றும், அருகில் இருந்த மித்ராவை, "சங்கமித்ரா", என்றும் அறிமுகப்படுத்த. 


அப்பெயரை கேட்டதும், ருத்ரன் தன் மனதினுள் ஒருமுறை அதை சொல்லிப் பார்த்து, பெயர் பொருத்தமும் பார்த்து, அதற்குள் செல்லப் பெயராக அதை சுருக்கி என்று மகிழ...


மித்ராவின் கூர்மையான மனதை துளைக்கும் பார்வை ருத்ரனை அந்நொடி கூர்ந்து நோக்கியது.


அதை ருத்ரன் உணர்ந்த மறுகணம்.. உடனே தன்னை சரிசெய்துக்கொண்டு, என்ன பேசுவது என்று தெரியாமல், சிறிது தட்டு தடுமாறி மிதிலாவிடம், "தனியாவா வந்தீங்க??,  யாரு வீட்டு சைடில் வந்தீங்க டா??", என்று ஏதேதோ விசாரிக்க..


மிதிலாவும் ஒன்று விடாமல் பதில் கூறிக்கொண்டு இருந்தாள்.


மித்ராவிற்கு எரிச்சல் அதிகமானது, மிதிலா ருத்ரனை அழைத்ததே அவளிற்கு பிடிக்கவில்லை, அதிலும் அவன் ஆவலாக விரைந்து வந்து பேசுவதும், அவனின் உரிமையான விசாரிப்புகளும், அதற்கு மிதுவின் பதில்களும் என்று அவளின் ரத்த அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது.


அன்று ருத்ரன், தேவையில்லாமல் அடாவடியாக, அவர்கள் வண்டியில் வந்ததே அவளிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


அப்பொழுது பார்த்து ருத்ரன், அவர்களின் வீடு எந்த பகுதியில் உள்ளது, என்று மிதிலாவிடம் கேட்க,


மிதிலாவும் சொல்லப்போக,


உடனே அவளை சொல்லவிடாது தடுத்த மித்ரா, மிதிலாவிடம் கடுகடுவென்று, "மிது வா முதல்ல இங்கிருந்து போகலாம்.. அப்பா உடனே வரச்சொன்னார் இல்ல,  தேவையில்லாமல் என்ன பேச்சு இது தெரியாதவங்க கிட்ட", என்றவள், பட்டென்று அவள் கையை பற்றி வேகமாக இழுத்து செல்ல தொடங்கி விட்டாள்.


ருத்ரனிடம் ஒரு சிறு மரியாதைக்கு கூட மித்ரா பேசவில்லை. 


மிதிலா அவசர அவசரமாக, ருத்ரனிடம் விடைபெற்றுக்கொண்டு மித்ரா உடன் சேர்ந்து ஓடினாள்.


மித்ராவின் மரியாதையற்ற இச்செயலைப் பார்த்து ருத்ரனுக்கு பயங்கர கோபம் வந்தது. 


இருந்தும் அதீத மகிழ்ச்சி முன்னின்று அக்கோபத்தை அடக்கியது, வேறு யாராவதாக இருந்து இருந்தால் அவ்விடத்தில் நடந்து இருப்பதே வேறு.


அதைவிட பூனைக்கண்ணை மூடிக்கொண்டு, உலகமே இருண்டதாக நினைத்த கதையாக, அவள் மிதிலாவை அழைத்து சென்றது, அவனுக்கு சிரிப்பை வர வைத்தது‌.


'நீ சொல்ல விடலைனா என்ன.. என்னால கண்டுப்பிடிக்க முடியாது..??', என்று நினைத்த ருத்ரன், அவனுடைய ஆளை அழைத்து, அவர்களை ஃபாலோ செய்யுமாறு ஜாடை காட்டினான்.


அங்கு மிதிலா மித்ராவிடம், "ஏன் மித்துக்கா கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல், இப்படி இழுத்துவர??" என்று சண்டையிட,


மித்ரா, "வாயிலயே ஒரு அடிப்போடுவேன் பாத்துக்கோ மிது.. எல்லார்கிட்டயும் இப்படி போயிட்டு பேசக்கூடாது, அவன் பார்க்க அவ்வளவு நல்லவனாவும் தெரியலை, பார்வையும் கொஞ்சம் கூட சரியில்லை, கட்சிக்காரன் குடும்பம் போல வேற, அப்பவே நம்ம கார்ல எப்படி ஜம்பமா வந்தான், அவன் கூட போயிட்டு பேசிட்டு.. அம்மாகிட்ட சொல்றேன் இரு", என்று பொரிய,


உடனே மிதிலா அமைதி ஆகிவிட்டாள்.


ஆனால் அவள் மனதினுள், 'அந்த அண்ணா நல்லா தானே பேசுனாங்க, இவ ஏன் இப்படி பண்றா', என்றே சிந்தனை ஓடியது.


பிறகு பெற்றோருடன் சென்று இணைந்து கொண்டனர். ருத்ரனை பார்த்ததைப் பற்றி பெற்றோருடன் இருவருமே பகிர்ந்து கொள்ளவில்லை. 


மிதிலாவை திட்டுவார்கள் என்று மித்ராவும் சொல்லவில்லை.


விஷ்ணுவும் துளசியும், அங்கு நடந்த பாட்டுக் கச்சேரியை ரசித்துக்கொண்டு இருந்தனர். 


சினிமா துறையில் இருந்து பாடகர்கள் வந்து பாடிக்கொண்டு இருந்தனர்.


பிள்ளைகளும் ருத்ரனை மறந்து அதில் மூழ்கினர்.


வரிசையாக ஒவ்வொரு திருமண பாட்டாக பாடப்பாட, அதைக்கேட்ட மிதிலாவின் கண்கள் இரண்டும், கொஞ்சம் கொஞ்சமாக கனவில் மிதக்க ஆரம்பித்தது.


கனா காண்கிறேன் 

கனா காண்கிறேன் கண்ணாளனே..!!


ஒரே பந்தலில் 

ஒரே மேடையில் இருவருமே..!!


என்ற‌ பாடலில் மயங்கிய மிதிலாவும், மகிழ்ச்சியாக கனா காண‌ ஆரம்பித்தாள்.


அப்பாடல்‌ வரிகள் மிதிலா‌ உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி தகதகவென்று மின்ன செய்தது.


நீண்ட நாட்களிற்கு பிறகு மீண்டும் பேரலையாக, ஹரியின் நினைவுகள், மிதிலா மனதில் அடிக்க ஆரம்பித்தது.


'எப்ப டாக்டர் உங்க ஜிகிலிய‌ பார்க்க நீங்க வருவீங்க..?, வருவீங்க தானே..??', என்று மிதுவின் மனம் ஏங்கியது,


அங்கு ருத்ரனோ, மண்டபத்தின் மேல் மாடியில் இருந்து விஷ்ணுவின் குடும்பத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.


அவன் கண்களில், அவளின் அழகும், இளமையும், நேர்த்தியான உடையும் என்று ஒவ்வொன்றும் மையலை அதிகப்படுத்தியது.


அழகாக வடிவமைக்கப்பட்ட, தனித்துவமான சிற்பம் போல், இயற்கை எழில்கள் கொட்டி கிடந்தவளை, கண்களால் பலமுறை ஸ்கேன் செய்தான்.


அப்பொழுது ‌மண்டபத்தில் அடுத்த பாடலாக,


முழுமதி அவளது முகமாகும்…


மல்லிகை அவளது மணமாகும்…


மின்னல்கள் அவளது விழியாகும்…


மௌனங்கள் அவளது மொழியாகும்…


மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…


மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…


அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்


இதயம் கொடு என்று வரம் கேட்டேன்


அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்!!!


என்று ருத்ரனின் ரசனைக்கு ‌ஏற்றவாறு

பாடலை பாடத்தொடங்கினர்.


கண்களை மூடி மூடி திறந்தான், தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல், 


மெல்லிடையாலை அந்நிமிடமே சிறையெடுக்க தயாராகி விட்டான்.


கண்ட முதல் வினாடியில் இருந்து தோன்றிய நேச உணர்வுகள், அவனை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.


அதில் ருத்ரனின் உடலும் மனமும் தகித்தது.


மகனின் ‌அனைத்து நகர்வுகளையும்.

ஆதி கேசவன் பார்த்து கொண்டே தான் இருந்தான்.


பாட்டு கச்சேரி முடிந்ததும், இரவாகிவிட்டதால் விரைந்து விஷ்ணு குடும்பம் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர். 


ருத்ரனின் மற்றும் ‌ஆதிகேசவன் கையாள்களும், அவர்களை அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தனர்.


மிதிலா ருத்ரனை அழைத்து, தன்னுடைய குடும்பத்திற்கு பேராபத்தை அறியாமல் கொண்டு வந்து சேர்த்து விட்டு இருந்தாள்!!


இதனால் அவளின் கனவும், சுக்குநூறாக சிதர போகின்றது‌ என்பதையும் பாவம் ‌அறியவில்லை அவள்..!!


அனைவரும் வீட்டிற்குச் சென்று, உடைகளை களைந்து விட்டு, சிறு குளியலை போட்டு விட்டு, அசதியில் நிம்மதியாக உறங்கி விட்டனர்.


இங்கு அன்று நல்லிரவே, ருத்ரனின் கையில் விஷ்ணுவின் குடும்பத்தின் மொத்த ஜாதகமும் இருந்தது.


ருத்ரன் மாடியில், பூஞ்செடிகளுக்கு இடையில் படுத்தப்படி, அவ்விரவின் ஏகாந்தத்தை ரசித்துக்கொண்டு இருந்தான்.


அவன் மனதிலும், கண்களிலும் அவளே நிறைந்து இருந்தாள். 


அவன் வாழ்க்கை முழுமை அடைந்து விட்டதாக எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டு கொண்டு இருந்தான்.


இன்று அவள் உடுத்தியிருந்த அழகான உடையும், அவளின் கண்கள் பேசிய மொழியும், அவள் திரும்பும் பொழுது எல்லாம் ஆடிய காதணியும், என்று ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து ரசித்துக் கொண்டிருந்தான்.


இலைமறை காய்மறையாக தெரிந்த அவளின் மெல்லிய வெந்நிற இடை வேறு அவனை மிகவும் இம்சித்து அங்கேயே குடிகொள்ள அழைத்தது. 


அதன்‌ மென்மையை உணர அவன் நாடி நரம்புகள் அனைத்தும் ஏங்கியது.


"யூ‌ ஆர் மை கிளாசிக் பியூட்டி ஏஞ்சல், 

யூ‌ ஆர் கில்லிங் மீ, ஓ காட், ஐயம் கம்லீட்லி கிரேசி ஆன் யூ பேப் "


என்று வாய்விட்டு புலம்பிய ருத்ரனால், அவனின் உணர்வுகளை கொஞ்சமும் தாங்க இயலவில்லை. எழுந்தவன், மாடியிலேயே இருந்த நீச்சல் குளத்தில் தொப்பொன வேறுவழியின்றி குதித்தான்.


யாருக்கு யார்?, கடைசிவரை என்பது காலத்தின் கையில்.


ஆதி கேசவன் என்ற அதர்மனால், இங்கு ஒரு‌ கலியுக குருஷேத்திரம் நிகழ போகின்றது,


நியாயமும் அநியாயமும் மோத உள்ளது.


போரென்றாலே இழப்பு, அதுவும் இருப்புறமும் இருக்கும் தானே..??


******************************


ருத்ரன் கடந்த சில மாதங்களாக, எங்கும் உல்லாச டூர்களுக்கு செல்லவில்லை, முகமும் வேறு கொஞ்சம் வாட்டமாகவே இருந்தது, அவனுடைய இரும்பு தொழிற்சாலை அல்லது கெஸ்ட் ஹவுஸே கதி என்று அங்கேயே இருந்தான்.


ஆதிகேசவன், தன் அதிர்ஷ்ட தேவதையான மகனின் நடவடிக்கை, ஏன் வித்தியாசமாக உள்ளது, என்பது தெரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தான், கேட்டதற்கும் அவனிடம் பதில் இல்லை.


இன்றோ ஆதிகேசவனின் குழப்பத்திற்கு பதில், ருத்ரன் திருமண மண்டபத்திற்கு சென்று வந்த பிறகு கிடைத்து இருந்தது. 


ருத்ரன் முகம் மிகவும் பிரகாசமாக மாறியதும், சில சமயங்களில் அவன் கண்கள் கனவில் மிதப்பது போலவும், இருப்பதையும், பார்த்து அறிந்துக்கொண்டான்.


அதைவிட மறுநாள் தொடங்கி, காலையும் மாலையும் அவளை காண ருத்ரன் செல்வதை கண்டு, முடிவே செய்துவிட்டான் ஆதிகேசவன்.


ருத்ரனோ எவ்வாறு விஷ்ணு குடும்பத்தை அணுகுவது என்று தெரியாமல்,

நட்பு கரம் நீட்டிய‌ மிதிலாவிடமே பேசாது பேசலாம் என்று முடிவு செய்து, தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டு இருந்தான்.


ஆதிகேசவன் தன்னை கண்காணிப்பதை ருத்ரன் அறியாமல் போனான், அறிந்து இருந்து இருக்க வேண்டுமோ என்னவோ..?!


அறியும் சமயம் என்ன ஆகுமோ???


******************************


இப்படியே ஒருசில வாரங்கள் கடந்துவிட..


ஆதிகேசவன், முடிவாக அந்த வாரம் வந்த வெள்ளிக் கிழமையன்று, மாதவியுடன் சேர்ந்து விஷ்ணுவின் வீட்டிற்கு செல்வதற்கு கிளம்பினான்.


அதே நாளில் மிதிலாவிற்கு நீட் கோச்சிங் கிளாஸூம் முடிவடைந்தது.


அதனால் நிறைவு பார்ட்டி போல், அன்று சிறிது நேரம், கோச்சிங் கிளாசில் பார்ட்டி நடைபெற்றது.


மிதிலாவிற்கு அந்த நீட் கோச்சிங் கிளாசில் யாரும் பள்ளி தோழிகள் இல்லை.


எனவே, பார்ட்டி முடிந்ததும் தனியாக கிளம்பிய மிதிலா, கோச்சிங் சென்டரில் இருந்து, சைக்கிளை தள்ளிக்கொண்டு ஒரு நான்கு அடி நடந்து இருப்பாள்.


அப்பொழுது அங்கு வழியில், மிதிலாவிற்காக ருத்ரன் காத்துக்கொண்டு இருந்தான்.


மிதிலாவை பார்த்ததும், "மிதுமா, இங்க பாரு", என்று ருத்ரன் அவளை அழைக்க. 



நடையை நிறுத்திய மிதிலா, ருத்ரனை பார்த்து ஆச்சரியமாக, "அண்ணா நீங்களா!! என்ன இந்த பக்கம், எப்படி இருக்கீங்க", என்று மித்ரா எச்சரிக்கை செய்ததை மறந்து விசாரிக்க..


ருத்ரன், "சும்மா தான் டா, இங்க ஒரு ஃப்ரண்ட பார்க்க வந்தேன், அவன் வரலைன்னு சொல்லிட்டான், அதான் கிளம்பிட்டேன், கிளம்பும்போது தான் உன்னை பார்த்தேன், நீ இங்கே என்ன செய்ற", என்று தெரிந்தும் தெரியாதது போல் அவன் கேட்க.


மிதிலா மடைதிறந்த வெள்ளம்போல், நீட் கோச்சிங் கிளாஸ் பற்றியும், கிளாஸ் இன்றுடன் நிறைவடைந்தது, பார்ட்டி வைத்தது, தற்பொழுது வீட்டிற்கு சென்று கொண்டிருப்பது, என்று அனைத்தையும் ருத்ரனிடம் ஒப்புவித்து முடித்தவள், "இனி 12த் எக்ஸாமிற்கு மட்டும் தான் பிரிப்பர் பண்ணனும்னா", என்றாள்.


ருத்ரன், "ஓ அப்படியா ரொம்ப சந்தோஷம் டா, இன்னைக்கு உனக்கு கோச்சிங் கிளாஸ் முடிஞ்சது இல்ல, சோ ட்ரீட், வா நாம பக்கத்துல இருக்க ஐஸ்க்ரீம் ஷாப்ல ஐஸ்கிரீம் சாப்பிடலாம், எனக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல இருக்கு, யாரும் வேற கூட இல்லை, வரியா சாப்பிட்டுட்டே பேசலாம், ஃபிரண்ட் வேற இல்லை பசிக்குது, தனியா சாப்பிட்டா ஒரு மாதிரி இருக்கும்", என்று அழைத்தான், வாயிற்கு வந்த காரணத்தை அடுக்கி..


மிதிலாவிற்கு ருத்ரன் பசி என்றதும், யாரும் உடன் இல்லை என்றதும், ஒரு மாதிரியாக இருக்க, அங்கேயே இருந்த கடைக்கு செல்ல முடிவெடுத்து, அவனிடமும் சொல்லி, இருவரும் பக்கத்தில் இருந்த சிறு ஐஸ்கிரீம் கடைக்குள் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றனர்.


எங்கு அடித்தால் மிதிலா விழுவாள் என்று தெரிந்து அங்கே அடித்து விட்டு இருந்தான் ருத்ரன். 


சிறு பூ அவளும் ஏமாந்து இருந்தாள்.


************************



கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻