உண்மை காதல் -5

 அத்தியாயம் -5


கடைக்குள் சென்று, ஒரு சேரில் அமர்ந்துகொண்ட ருத்ரன், மிதிலாவிடம், 

"உனக்கு என்ன பிடிக்குமோ, போயிட்டு அதையே நம்ம ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வாமா ", என்று அனுப்ப..


சரியென்ற மிதிலாவும் சென்று விட்டாள்.


ருத்ரனிற்கு, இதுபோன்ற கடைகளுக்கு வருவது இதுவே முதல் முறை, எவ்வாறு இருக்கும் என்பது எல்லாம் தெரியாது, அவன் வளர்ந்த சூழ்நிலைக்கு, அக்கடை கொஞ்சம் ஒவ்வாமையாகவும் வேறு இருந்தது. இருந்தும் பொறுத்துக்கொண்டு, மிதிலாவை அனுப்பி இருந்தான்.


மிதிலா, சென்று பார்க்கும் பொழுது கடைக்காரர் என்ன வேண்டும் என்று கேட்டு, மெனுகார்டு கொடுத்து, இங்கு எது வேண்டுமோ சொல்லி, பணம் செலுத்திவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டுபோய், ஐஸ்கிரீம் எடுத்துக்கொள், என்றார்.


மிதிலாவும், சரியென்று விட்டு, அவளுடைய ஸ்கர்டில்(skirt) இருந்த பாக்கெட்டில் கை விட்டு பணத்தை எடுத்தாள்.


10 ரூபாய் தான் அவளிடம் இருந்தது.


மிதிலா, '2 சின்ன கப் ஐஸ்கிரீம்' என்று, பத்து ரூபாய்க்கு எது வருமோ அதை கேட்க.


பெரிய வியாபரம் என்று நினைத்து ஏமாந்த கடைக்காரர், மிதிலாவையும் ருத்ரனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு டோக்கனை கொடுத்தார்.


மிதிலா, ஐஸ்கிரீம் கப்புடன் ருத்ரன் அமர்ந்து இருந்த டேபிளுக்கு வந்து, அவன் எதிர்ப்புறம் அமர்ந்துகொண்டு, அவளுக்கு ஒன்றும், அவனுக்கு ஒன்றும் என்று வைத்தாள்.


ருத்ரன் கப்பின் அளவை பார்த்துவிட்டு, "என்ன மிதுக்குட்டி இவ்வளவு சின்னதா இருக்கு, ஐஸ்கிரீம் கப்? பிளேயின் flavor-ஆ வேற இருக்கே.?", என்று கேட்க.


மிதிலா, "இல்லை அண்ணா, அது வந்து, என்கிட்ட பத்து ரூபாய் தான் இருந்துச்சு, அதான் சின்னதா ரெண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி வந்தேன், ஏன் உங்களுக்கு பத்தாதா சாரி, நீங்க வேணும்னா என்னோட ஐஸ்கிரீமையும் சாப்பிடுங்க, நான் இப்பதான் கோச்சிங் கிளாஸ்ல ஸ்னாக்ஸ் எல்லாம் கொடுத்தாங்க சாப்பிட்டேன், ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று அவளுடைய ஐஸ்கிரீமை எடுத்து, அவள் ருத்ரன் பக்கம் தள்ளி வைக்க.


அக்கணம் ருத்ரன் அவனை அறியாது, மிதிலா உடைய செய்கையிலும் அப்படியே உருகி விட்டான், "அச்சோ எனக்கு இதுவே போதும் டா, நீ உன்னுடையதை சாப்பிடு" என்று கொடுத்துவிட்டு, "பணம் என்கிட்ட வந்து வாங்க வேண்டி தானே, ஏன்டா‌ மா", என்றான்.


மிதிலா, "இருக்கட்டும்ணா இன்னைக்கு என்னோட ட்ரீட் தானே", என்று பெருமையாக கூற,


'எது இது ட்ரீட்டா..', என்று நினைத்தவன், அவளின் சிறுப்பிள்ளை தனமான செயலில் வந்த சிரிப்பை, அடக்க முடியாமல், எப்படியோ அடக்கி, தன் இதழ்களுக்குள் மறைத்தான்..


இருந்தும், அவளின் இருப்பதே போதும் என்று கருதும் குணமும், அதையும் மனம் வந்து அவள் பகிர்ந்து கொள்ள நினைத்த அவளின் உள்ளத்தையும், அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.


டீன் ஏஜ்ஜின் வெகுளி தனம் நிறைந்து இருப்பவளிடம், எங்கிருந்து அவன் தன் மனதில் இருப்பதை கூறுவது, ஆரம்பப் புள்ளியே எப்படி வைப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.


வேறுவழியின்றி ருத்ரன், "உனக்கு என்ன flavor ஐஸ்கிரீம் டா பிடிக்கும் மிது", என்று பேச்சை ஆரம்பிக்க.


மிதுலா, "எனக்கு ஐஸ்கிரீம்னு சொன்னாலே பிடிக்கும், அதுல இந்த ஃப்ளேவர் அந்த ப்ளேவர்னு இல்லை, எல்லாமே பிடிக்கும் அண்ணா', என்றாள் கன்னம் குழிந்த சிரிப்புடன்.


"வாவ், உனக்கு ரொம்ப அழகா டிம்பிள் விழுது..", என்ற ருத்ரன், அவளிடம் பேசிக்கொண்டே, அவள் அன்புடன் வாங்கி கொடுத்த ஐஸ்கிரீமை ரசித்து உண்டுவிட்டு, எழுந்து பில் கவுன்டர் நோக்கி நடந்தவன்.


கடைக்காரரிடம் பேசிவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.


சில நிமிடத்தில் ஒரு பெரிய பவுலில் அனைத்து ஐஸ்கிரீம் வகையிலும் ஒவ்வொரு ஸ்கூப்(scoop) என்று, அழகாக மேலே மேலே வைத்து எடுத்துவந்த, கடைக்காரர் அதை மிதிலாவின் முன்பு வைத்துவிட்டு செல்ல.


மிதிலாவின்‌‌ கண்கள் இரண்டும், ஆச்சர்யத்தில் விரிந்துக்கொண்டது, கேள்வியுடன் அவள் ருத்ரனை பார்த்தாள்.


"என்னோட குட்டி ஏஞ்சலுக்கு, என்னோட ட்ரீட் இது, என்ஜாய்", என்றான் அவன்.


மிதிலா, "வாவ் தேங்க்ஸ்ண்ணா.. பட் இவ்வளவும் எப்படி நான் மட்டுமே சாப்பிடுவேன், நீங்களும் என்கூட சாப்பிடுங்கண்ணா", என்று, அவனுக்கும் ஒவ்வொரு பிளேவர் வரும்பொழுதும், அதிலிருந்து எடுத்து, அவன் கப்பில் பாதியை அவள் வைத்துக்கொண்டே சாப்பிட.


ருத்ரனிற்கு அவளுடைய ஒவ்வொரு செய்கையிலும், கள்ளம் ஏதும் அறியா தூய பாசமே தெரிந்தது, அவளுடைய செய்கை அனைத்தையும் எந்த மறுப்பும் இன்றி வாஞ்சையாக ஏற்றுக்கொண்டான் அவன். 


ருத்ரனின் மனதில் பெயர் தெரியாத, ஒரு உணர்வு அவளின் புறம் அவனிற்கு அக்கணம் தோன்றியது. 


வாழ்நாள் முழுவதும், இது நிச்சயம் தொடர்ந்தே தீர வேண்டும் என்று கருதினான். 


என்ன வாயிற்கு வாய் கூறும், அவளின் அண்ணா மட்டும், பாகற்காயாய்‌ அவனுக்கு உள்ளே,

கசந்து இம்சித்தது.

 

அவளுடன் சிறிது சிறிதாக பேச்சு கொடுத்துக் கொண்டே, அவள் கொடுத்த ஐஸ்கிரீமை அவன் சாப்பிட, 


அனைத்து கதைகளலயும் அவனிடம் கூறிய மிதிலா, அவளுடைய எதிர்கால கனவைப்‌ பற்றியும் அவனிடம் ‌கூற தொடங்கினாள்.


நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், 


அரசு மருத்துவக் கல்லூரியில் ஃப்ரீ சீட்டில் எப்படியாவது இடம் பெறவேண்டும்,


குழந்தைகள் நல மருத்துவர் ஆகவேண்டும், 


எப்பொழுதும் குழந்தைகளை சுற்றி இருக்க‌வேண்டும், குழந்தைக்கு என்று தனியாக அழகாக நிறைய விளையாட்டு சாமான்களுடன், குட்டி தீம் பார்க் போல் ஹாஸ்பிடல் கட்ட‌ வேண்டும், அவர்களுக்கு வலிக்காமல் ஊசி போட வேண்டும்,

என்று அவளுடைய ஆசைகள் அனைத்தையும், வரிசையாக பகிர்ந்து கொண்டாள்.


ருத்ரன் அமைதியாக, அவளுடைய பேச்சையும், அவளின் கண்கள் ஆசையில் மின்னுவதையும், ரசித்து கொண்டு அமர்ந்து இருந்தான்.


ஏதேதோ நினைத்து வந்திருந்தான், ஆனால் இந்த சிறு அளவு சிந்தனையில் இருக்கும், சின்ன பெண்ணிடம், எப்படி பேசுவது என்று தெரியாமல், அதைக்கூறாதே விட்டுவிட்டான்.


அவள் கனவை முழுதாக அவள் சொல்லி முடித்ததும், ருத்ரன், "எக்செல்லன்ட்(excellent) டா மிது, நீ கண்டிப்பா ஆசைப்பட்ட மாதிரியே டாக்டர் ஆவ, நீ எதிர்ப்பார்த்த மாதிரியே ஹாஸ்பிடல் உனக்கு கண்டிப்பா அமையும் டா", என்றவன், தன் மனதில் கண்டிப்பாக நாமே சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்று உறுதியும் எடுத்து கொண்டான்.


ருத்ரனாலேயே அவளுடைய மருத்துவ கனவு, கண்ணாடி துண்டுகளாக உடைந்து சிதர போகின்றது என்பதை, அக்கணம் அவ்விருவருமே உணரவில்லை.


இருவரும் கடையில் இருந்து வெளிவந்தனர்.


கெஞ்சம்‌ ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.


மாலை நேரம் முடிந்து, இருள் கவிழ தொடங்கிவிட்டு இருந்தது.


ருத்ரன், சுற்றிப் பார்த்தப்படி, மென்மையாக மிதிலா கைப்பற்றி, அழைத்து சென்று அவளுடைய சைக்கிள் முன்பு நிறுத்தினான்.


மிதிலா, "பை அண்ணா", என்றுவிட்டு சைக்கிளில் கிளம்ப ஏற,


ருத்ரன், சைக்கிளின் ஹாண்ட் பாரை (hand bar) பற்றியப்படி, தடுமாற்றத்துடன், "நான் உனக்கு அண்ணா இல்லை மிதுமா", என்று தன் மனதில் இருந்ததை எப்படியோ உரைத்துவிட்டவன்.. 


கேள்வியாக பார்த்தவளிடம், சிறிது நிதானித்து, சின்ன பெண்ணிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திண்டாடி, "நா உனக்கு அண்ணா இல்லை, ருத்ரன் தான், சோ பேர் சொல்லியே கூப்பிடு, நாம ஃபிரெணட்ஸ், ஓகேவா", என்றான்.


மிதிலா ஒன்றும் புரியாமல் கு‌ழப்பத்துடன் தலை அசைத்தாள்.


அதை தெளிய வைக்க ருத்ரன், "எனக்கு எல்லாரும் அண்ணா கூப்பிட்டா பிடிக்காது அதுதான்", என்றான் விளக்கமாக.


உடனே மிதிலா, "ஓ அப்படியா அண்ணா..", என்றவள், பட்டென்று மீண்டும் அண்ணா என்று அழைத்ததில், தன் பல்லை கடித்து பேச்சை நிறுத்தி, "சாரி….", என்றுரைத்து, "ஓகே நீங்க என்னை மிதுமான்னு கூப்பிடற போல, நான் உங்களை ருதுமான்னு கூப்பிடறேன்.. உங்களுக்கு ஓகேவா..", என்று கேட்க.


ருத்ரன், "டபுள் ஓ.கே மிதுமா..", என்றான்.


அதற்கு சிரித்த மிதிலா, "ஓகே, பை ருதுமா, டைம் ஆகிடுச்சு" என்றுவிட்டு கிளம்பினாள். மனதில், ருத்ரனிற்கு, ஒருவேளை அவன் தங்கையை தவிர, வேறு யாரும் அண்ணா என்று அழைத்தால், பிடிக்காது போல் என்று நினைத்துக்கொண்டாள்.


ருத்ரனும், "பார்த்துப் போ டா மிதுகுட்டி", என்று சந்தோசமாக, அவளின் பிரத்யேக அழைப்பில் சிரித்தப்படி விடை கொடுத்தான்.


சிறிது நேரத்தில் அவனின் சிரிப்பு, தடம் தெரியாது அழியப்போவதை அறியாது.


தன் காரில் கிளம்ப ஏறிய ருத்ரன், இருள் படற தொடங்கிய நேரத்தில், மிதிலா தனியாக செல்கின்றாளே‌ என்று யோசித்து, மிதிலாவை பின்தொடர்ந்தான், அவளுக்கு பாதுகாப்பாக.


முக்கியமாக அவள் அவனிடம், வெகுளி தனத்துடன் பேசி, அனைத்தையும் சரளமாக பகிர்ந்துக் கொண்ட அவள் குணம், அவனுக்கு பயத்தை கொடுத்து இருந்தது.


மிதிலாவிற்கோ, தன் டாக்டர் கனவு பற்றி ருத்ரனிடம் பேசும் பொழுதே அவளிற்கு ஹரி‌யின் நியாபகம், அவள் அழைக்காமலே வந்து சேர்ந்து விட்டு இருந்தது.


டாக்டர் என்றாலே அவள் மனதில் நின்று போனது அவன் பிம்பமே, மேலும் மேலும் மருத்துவம் படிக்க அவளுள் எழும் இன்றைய அதிக வெறிக்கு காரணம், ஹரியும் ஒரு மருத்துவன் என்பதே.


"கண்ணன் வரும்

வேளை 


அந்திமாலை 


நான்

காத்திருந்தேன்"


என்று பாடிக்கொண்டே, சைக்கிளை மிதித்தாள்.


விதி வலிக்க வலிக்க அவளிற்கு வாழ்க்கை பாடத்தை இன்றிலிருந்து புகட்ட போவதை அறியாமல்.


மிதிலா வீட்டினை நெருங்கிய சமயம்,


அவள் வீட்டின் முன்போ நிறைய கார்கள் நின்று கொண்டு இருந்தது.


தெருவில் அனைவரும் இவர்கள் வீட்டையே தான் பார்த்துக் கொண்டு இருந்தனர், வீட்டின் முன்பும் வேறு பல புது ஆட்கள் நின்று கொண்டு இருந்தனர்.


இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே வந்த மிதிலா, வீட்டிற்கு யார் வந்து இருக்கின்றார்கள் என்று பார்க்க, சைக்கிளை நிறுத்திவிட்டு, வேகமாக வீட்டின் உள்ளே ஓடினாள்.


மிதிலாவை பின் தொடர்ந்து வந்த ருத்ரனும், இதை பார்த்துவிட்டு இருக்க, உடனே அவன் அப்பாவின் பி.ஏ-விற்கு அழைத்து, எதற்காக இங்கே வந்து இருக்கின்றீர்கள் என்று கோபத்தில் கத்தத்தொடங்கினான்.


அதற்கு பதிலாக, பி.ஏ கூறியதை கேட்ட ருத்ரன், நிஜமாகவே ருத்ரனாக மாறினான்.


காரை நிறுத்திவிட்டு இறங்கி, அவனும் விரைந்து மிதிலாவின் வீட்டிற்குள் சென்றான்.


**********


அன்று மாலை, கல்லூரியில் இருந்து வந்த மித்ரா, இறுதி ஆண்டு பிராஜெக்ட் ரிப்போர்டிற்காக, சில பிரிண்ட் அவுட்டுகள் எடுக்க, ஜெராக்ஸ் ஷாப் செல்ல வேண்டும் என்று, துளசியிடம் பணம் கேட்டுக்கொண்டு இருந்தாள்.


அப்பொழுது துளசியோ, "ஏன்டா மித்து லஞ்ச் பேக்க, நேத்து தான் தொலைச்சுட்டு வந்த பார்த்தா, இன்னைக்கும் தொலைச்சிட்டு வந்து இருக்க, கொஞ்சம் கவனமா இருக்கலாம் இல்ல டா, எப்படிடா தொலையும், சின்ன குழந்தையா நீ…." என்று கடிய,


அதில் மித்ராவின் கண்கள் உடனே கலங்க தொடங்கிவிட்டது.


அதைப் பார்த்த துளசி, "மித்துமா என்ன இது, எதுக்கு இதுக்கு போயிட்டு அழற, அம்மா உன்னை ஒன்னும் சொல்ல கூடாதா, என்ன பொண்ணோ போ, வர வர நீயும் மிது கூட சேர்ந்து சின்ன பிள்ளை மாதிரி ஆகிட்டு வர, சரி விடு இனி எதுவும் உன்னை சொல்லலை, இன்னைக்கு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு, உனக்கு பிடிச்ச மாதிரி புது லஞ்ச் பேகும், லஞ்ச் பாக்ஸும், வாங்கிட்டு வா சரியா", என்றுவிட்டு அவள் கையில், 500 ரூபாயை கொடுத்து அவளை அனுப்பினார்.


துளசி மனதில், 'ஏன் இவ இதுக்கு போயிட்டு அழுறா, அப்படி என்ன பெருசா கேட்டுட்டேன்.. ஒருவேளை பை தொலைஞ்சு போனதுல்ல அவளுமே வருத்தமா தான் இருந்தாளோ, தெரியலையே..', என்று நினைத்துக் கொண்டவர், சமையல் அறைக்கு சென்று, இரவு உணவுக்கான வேலையை பார்க்க ஆரம்பித்தார்.


அப்பொழுது, தெரு கதவு திறக்கும் சத்தம் கேட்க,


துளசி உடனே, 'என்ன அதுக்குள்ளே மித்து வந்துட்டுளா??', என்று தனக்குள் பேசியப்படி ஹாலிற்கு வந்தார்..


அவர் ஹாலிற்கு வரவும், ஆதி கேசவன் மற்றும் அவனது மனைவி மாதவி ஹாலிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.


அவர்களை தொடர்ந்து, பின்புறம் வந்த நான்கு ஆட்கள், சில கவர்களை எடுத்து வந்து நடு கூடத்தில் இருந்த, ஊஞ்சலின் மீது வைத்துவிட்டு சென்றனர்.


உள்ளுணர்வு, நடப்பது எதுவும் சரியில்லை என்பதை, துளசிக்கு உணர்த்த, அவர் மாதவியை பார்த்து, "வாங்க மா, என்ன வேண்டும், யாரைப் பார்க்க வந்தீங்க, உங்களை நான் இதுவரை பார்த்ததில்லை, என் வீட்டுக்காரர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார், அவர் பக்க உறவா..??", என்றார், கேள்வியாக யோசனையுடன்.


மனம் ஒருப்புறம் ஒரே படப்படப்பாக இருந்தது.


ஆதிகேசவனை எங்கோ பார்த்தது போல் வேறு இருந்தது துளசிக்கு, அவருடைய கட்சி வேஷ்டியையும் பார்த்தார், ஆராய்ச்சியாக.


ஆதிக்கேசவனோ அங்கு இருந்த சோபாவில், ஜம்பமாய் சென்று அமர்ந்துகொண்டு, "இன்னைக்கு நல்ல நாள் அதான் கிளம்பி வந்துட்டோம், இன்னிக்கே பேசி முடிச்சுடலாம்னு"

என்று துளசியைப் பார்த்து பேசத்தொடங்க..


உடனே இடையிட்ட துளசி, "நீங்க வீடு மாறி வந்துட்டீங்க போல இருக்கு, நீங்க யாருன்னு எனக்கு தெரியலை.. நீங்க பேசுறதும் புரியலை..", என்றார் குழப்பத்துடன்.


ஆதிகேசவனுக்கோ அவன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே, துளசி இடையில் தடுத்து பேசியது மிகவும் கோபத்தை கொடுத்தது.


அதிலும் திருச்சியில், தன்னை தெரியாமல் ஒரு ஆளா, என்று வேறு கோபமானவன், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, "நான்தான் ஆதிகேசவன், திருச்சி தொகுதி எம்எல்ஏ 30 வருஷமா," என்றுவிட்டு, "இது என் பொண்டாட்டி", என்று மாதவியையும் காட்டிவிட்டு, "என்னோட ஒரே பையன் ருத்ரன், அவனுக்கு எது பிடிச்சாலும், நான் உடனே அவன் கேட்காமலேயே எப்பவும் வாங்கி கொடுத்துடுவேன், இப்போ உங்க பொண்ணை அவனுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு, அதனால தான் அவனுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு பேசி முடிச்சுட்டு போலாம்னு வந்து இருக்கேன்," என்று துளசி தலையில் இடியை இறக்கினான்.


அவ்வளவு தான் துளசி அரண்டுப்போனார்.


கட்சிகாரர், எம்எல்ஏ, பெண்ணின் மீது விருப்பம், என்று சொன்னதைக் கேட்டவருக்கு, கணவர் வேறு இப்பொழுது வீட்டில் இல்லை, என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை துளசிக்கு.


ஆதிகேசவனோ இவ்வளவு பேசியதே அதிகம் என்ற எண்ணத்தில், "போயிட்டு உங்க குடும்ப ஜாதகத்தை எடுத்துட்டு வாங்க, ஹம்ம் சீக்கிரம், ஜோசியர் கிட்ட காட்டனும்", என்றான் கட்டளையாக, 


துளசியோ வார்த்தைகள் தந்தியடிக்க, "இல்லை எங்க பொண்ணுக்கு, ரொம்ப சின்ன வயசு, அவர் வரட்டும்," என்றார் பயத்துடன்.


ஆதிகேசவனுக்கோ, துளசி அபசகுனமாக, ஜாதகத்தை கேட்டதும் மறுத்து பேசியதில் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.


ஏனோ அவனிற்கு ஆரம்பம் முதலே துளசியை பிடிக்கவில்லை.


உடனே கோபமாக எழுந்த ஆதிகேசவன், "ஏன் மா, போ, ஒரு தடவை சொல்றேன் இல்ல, சீக்கிரம் போய் ஜாதகத்தை எடுத்துட்டு வா, வீணா பேசிப்பேசி என்ன மிருகம் ஆக்காத போ…", என்று அதட்டியவன்,  


துளசி இன்னும் போகாது, ஏதோ மறுத்துப்பேச வருவதை பார்த்து, "சும்மா நையி நையின, சங்க அறுத்துடுவேன்" என்று துளசியை பெருங்குரலெடுத்து அதட்டியப்படி அவரை நெருங்க..


அவ்வளவு தான் துளசிக்கு சர்வமும் ஆடிப்போனது..


அதிலும் ஆதிகேசவன், துளசியின் அருகில், நெருங்கியப்படி வந்து பேசியது வேறு, அவருக்கு மிகவும் பயமாகவும், அருவருப்பாகவும் இருக்க.


உடனே சாமி அறையில் இருக்கும் ஜாதகத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு ஓடிவிட்டார்.


இங்கு நடப்பது அனைத்தையும் மாதவி மனப்பாரத்துடன், அங்கு இருக்கும் உயிரற்ற பொருட்களுடன் ஒருவராக இருந்து பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தார், 


ருத்ரனின் திருமண விஷயமே அவருக்கு புதிது.


உடனே ஆதிகேசவன் ஜோசியருக்கு கால் செய்தான்.


அப்பக்கம் ஃபோனை எடுத்ததும், ஆதிகேசவன் பவ்யமாக, "வணக்கம் சுவாமி சௌக்கியமா, நான் நல்லா இருக்கேன், எல்லாம் உங்க ஆசீர்வாதத்தால் தான்" என்றுவிட்டு, ருத்ரனின் ஆசையை பற்றி ஜோசியரிடம் கூறினான். 


ஜோசியர் உடனே, "இன்னைக்கே நாள் நல்லா இருக்கு, இன்னைக்கே ஜாதகம் பார்த்துடலாம் கேசவா", என்றிட..


ஆதிகேசவன் ஜோசியரிடம், விஷ்ணுவின் வீட்டு முகவரியை கூறி, இங்கேயே ஜோசியரை வர சொல்லிவிட்டு வைத்தான்.


அவனையே அதிர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த மாதவியை, "இங்க என்ன படமா காட்றாங்க.. பார்க்குற.. போ போயிட்டு, அந்தம்மா கூட ஜாதகத்தை எடுத்துட்டு வா சீக்கிரம், இன்னும் என்ன பண்ணுதோ", என்று விரட்டினான். 


உடனே மாதவி, துளசி போன பக்கம் விரைந்தார்.


அங்கோ சாமி அறையில், துளசி, பேய் அடித்தது போன்று நின்று இருந்தார்.


துளசியை பார்க்கவே பாவமாக இருந்தது மாதவிக்கு. 


துளசியிடம், யாருமே இதுவரை இவ்வாறு நடந்துக்கொண்டது இல்லை. விஷ்ணு ஒருமுறை ‌கூட தன் குரலை கூட உயர்த்தி அவரிடம் பேசியதில்லை.


அவரின் வீட்டில் ராணியாக, இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார்.


ஆனால் இன்றோ, அடித்த புயலில், அவர்களின் நந்தவனத்தின் மீது குப்பைகளும், சேரும், சகதியும், வந்து சேர்ந்து விட்டதே..


அவர்கள் நந்தவனத்தில், ஆதிகேசவன் என்னும் துர்நாற்றம் வீச தொடங்கிவிட்டதே..


இனி என்ன செய்வார்..??


உள்ளே வந்த மாதவி, துளசியின் தோள் மீது தன் கையை வைத்தார் ஆதரவாக.


அதில் துளசி, பதறி திரும்ப, "பயப்படாதீங்க நான் தான்", என்ற மாதவி, ஆதரவாக துளசியின் கையை பற்றிக்கொண்டு, "தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா இருங்க, உங்க வீட்டுல்ல அவர் வரட்டும், என் பையன் யாரையும் இதுவரை கஷ்டப்படுத்தியது இல்லை, எனக்கும் இங்க என்ன நடக்குதுனு புரியல, அவர் கிட்ட எதுவும் தயவு செய்து எதிர்த்து பேசாதிங்க இப்போதைக்கு, சீக்கிரம் வாங்க நாம போலாம், அவரை கோபம் படுத்தினால் அது நல்லதுக்கு இல்லை", என்றுக்கூற.


அது துளசிக்கு இன்னும் பயத்தை கொடுத்தது.


பிள்ளைகள் தானே அவர்களின் உயிர், சொத்து, எதிர்காலம் அனைத்துமே.


மாதவி வற்புறுத்த, வேறு வழியின்றி துளசி, மாதவியுடன், சாமி அறையில் இருந்து ஹாலுக்கு வந்தார்.


அப்பொழுது ஆதிகேசவனோ ஹாலில் இருந்த, மிதிலாவின் மஞ்சள் நீராட்டு விழா போட்டோ ஃபிரேமை கையில் வைத்துக்கொண்டு, பார்த்துக் கொண்டு இருந்தான்.


ஆதிகேசவனிடம், துளசி ஜாதகம் அடங்கிய மஞ்சள் பையை நீண்ட, அதை வாங்கியப்படி அவனோ கொஞ்சமும் நாகரீகம் இன்றி, "உங்க வீட்டுக்காரர் ரொம்ப கொடுத்து வைச்சவர் போல, சுத்தி ஒரே தேவதையா இருக்கீங்க ", என்றான், கண்ணில் விஷமத்துடன் கையில் இருந்த ஃபோட்டோ ஃபிரேமில் பார்வையை பதித்தப்படியே.


அதில் துளசி அதிர்ந்து பார்க்கும் பொழுதே, "இரண்டு குழந்தைகளுக்கு அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க உங்களை பாக்குறவங்க", என்றுவேறு கூற.


அந்நொடி துளசி கூனிக் குறுகி, செத்தே விட்டார் என்றே சொல்ல வேண்டும்.


நக்குற நாயிக்கு, அது செக்குன்னு தெரியுமா..??

சிவலிங்கம்னு தெரியுமா..??


மாதவிக்கு, ஆதிகேசவனின் இக்குணம் பழகிவிட்டாலும், துளசியின் நிலையை பார்க்க பாவமாக இருந்தது.


இவர்கள் பேசி கொண்டு இருக்கும் பொழுதே ஜோசியர் வந்துவிட்டார்,


ஜோசியரை பார்த்ததும் ஆதிகேசவன் முற்றிலுமாக மாறிவிட்டான், பவ்யமாக ஜோசியரின் காலுக்கடியில் உட்கார்ந்துகொண்டான் சோஃபாவின் கீழே. 


சிறு விசாரிப்புகளுக்கு பிறகு ஜோசியரின் கையில் விஷ்ணு குடும்பத்தின் ஜாதகம்.


ஜாதகத்தை பார்த்து ஏதோ கணித்து விட்டு ருத்தரனின் ஜாதகம் இருக்கின்றதா என்று ஜோசியர் கேட்டார்.


உடனே ஆதிகேசவன், தன் மொபைலில் இருந்த, ருத்ரனின் ஜாதக சாஃப்ட் காப்பியை(soft copy) எடுத்து காண்பித்தான்.


ஜோசியர், "எவ்வாறு நாம் இதை பார்க்காமல் விட்டோம் என்று தெரியவில்லை கேசவா, வரும் சனிப் பெயர்ச்சி ருத்ரனிற்கு சரியாக இல்லை, மூன்று மாதத்திற்குள் அவனுக்கு கல்யாணம் நடக்க வேண்டும், இல்லை என்றால் ருத்ரன் பேராபத்தை சந்திப்பான், உன்னுடைய அரசியல் அமைப்பும் ஆட்டம் கொள்ளும், அதைவிட இவ்வருடத்திற்குள் ருத்ரனுக்கு குழந்தை பிறக்க வேண்டும், இல்லை என்றால் அதுவும் பிரச்சனை", என்று ஏதேதோ பணம் கறக்க கூற,


ஆதிகேசவன், "இப்போ தான் தெரிஞ்சுடுச்சே சாமி, மேற்கொண்டு என்ன செய்றது சொல்லுங்க", என்றுக்கேட்க.


ஜோசியர், விஷ்ணு குடும்பத்தின் மற்றவர்கள் ஜாதகத்தையும் மொத்தமாகப் பார்த்துவிட்டு, "எல்லாமே சரியா இருக்கு கேசவா, இவங்க குடும்பத்தில் யாரோட ஜாதக அமைப்பும் உனக்கு எப்பவும் தீங்கு ஏற்படுத்தாது, இரண்டு பொண்ணுங்க ஜாதகமுமே ரொம்ப அமோகம், மகாலட்சுமிங்க, பார்த்து பேசி சீக்கிரம் முடிவு செய், எனக்கு இரவு பூஜை இருக்கு, நான் சீக்கிரம் போகனும் கேசவா, நாளைக்கு அங்க வா, கல்யாண தேதி பார்த்து சொல்றேன்", என்று விடை பெற்றுக்கொண்டு கிளம்ப தயாரானார்.


உடனே ஆதிகேசவன், இரண்டு பணக்கட்டை எடுத்து அவரின் கையில் கொடுத்து, ஆசிர்வாதம் வாங்கி கொண்டு, விடைக்கொடுத்து அனுப்பினான்.


அவனை உருத்தெரியாமல் மொத்தமாக அழிக்கப்போகும் ஜாதகம், அங்கு மருத்துவன் ஒருவனிற்கு இருப்பது தெரியாது போனான்.


துளசியோ எந்தவித எதிர் செயலும், ஆற்றமுடியாமல் பயந்து போய், அவர்களுடைய உரையாடல்களை கேட்டு, சம்பித்த நிலையில் நின்று இருந்தார்.


அச்சமயம் தான் மித்ரா பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு, புது லன்ச் பேக்கும் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.


தங்களின் வீட்டின் முன்பு கார்களும், ஆட்களும், இருப்பதை பார்த்தவள், 


சுற்றி அக்கம் பக்கம் ஆட்கள் நின்று வேறு வேடிக்கை பார்ப்பதை பார்த்து, என்னவோ ஏதோவென்று பதறி உள்ளே ஓடி வந்தாள்.


உள்ளே துளசியின் முகத்தை பார்த்ததுமே ஏதோ சரியில்லை என்று பதறி, துளசியின் அருகில் வந்து "என்னமா, என்ன ஆச்சு, ஏன் முகம் எல்லாம் இப்படி இருக்கு..", என்று விசாரிக்க.


துளசி பயத்துடன் மகளின் கையை இறுக பற்றிக்கொண்டு ஆதிகேசவனை பார்த்தார்.


ஆதிகேசவனின் கொடிய கண்களோ, மித்ராவை மேலிருந்து கீழ் வரை அளக்க,


அதை பார்த்த துளசி, பதறி மித்ராவை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டார்.


ஆதிகேசவனை நினைத்து, துளசியின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. 


நடப்பது எதுவும், இனி தங்களுக்கு நல்லதிற்கில்லை என்று அவருக்கு நன்றாக விளங்கியது.


அங்கிருந்த இருவரையும், ஒருப்பார்வை பார்த்த மித்ரா, மீண்டும் துளசியிடம், "என்னம்மா, என்ன ஆச்சு", என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க..


உடனே அங்கு இருந்த மாதவி, மித்ராவிடம் "நீ கொஞ்சம் உள்ளே இருமா, நாங்க பெரியவங்க பேசிட்டு இருக்கோம்", என்று அவளை அனுப்ப முற்பட.


மித்ரா உடனே, "நீங்க யார்னு முதல்ல சொல்லுங்க ஆன்ட்டி, உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க, அம்மாகிட்ட என்ன சொன்னீங்க" , என்று வரிசையாக தைரியமாக எதிர்க்கேள்வி அவள் எழுப்ப.


யாரும் எதுவும் பதில் சொல்லவில்லை.


துளசியின் அழுகை வேறு மித்ராவிற்கு வந்தவர்கள் மீது கோபத்தை கொடுத்தது.


உடனே மித்ரா, "நான் இப்பவே போலீசுக்கு கூப்பிடறேன், எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க, எங்க அம்மா உங்களை பார்த்து தான் பயப்படுறாங்க, முதல்ல வெளியே போங்க இரண்டு பேரும்.." என்று கத்த..


அவளின் எடுத்தெறிந்து, குரலை உயர்த்தி பேசும் பேச்சில் ஆத்திரமடைந்த ஆதிகேசவன், மறுகணம் கோபமாக, "ஏய்…..",  என்று கர்ஜித்தப்படி எழுந்து, மித்ராவை நோக்கி வந்தவன்.. "பொட்ட கழுதை.‌. இனியொரு முறை வாயை திறந்த.. நாக்க அறுத்துடுவேன்", என்றவனின் பேச்சில், மித்ராவிற்கு உடல் முழுக்க நடுக்கம் பரவியது.


"ஐயோ….", என்றப்படி உடனே துளசி பதறி, மகளை தன் பின்புறம், மறைவாக பிடித்து நிறுத்திக்கொள்ள.


அச்சமயம் தான் மிதிலாவும் வீட்டிற்குள் நுழைந்து இருந்தாள்.


மிதிலா வாசலில் இருந்தே, "அம்மா அம்மா", என்று கத்திக்கொண்டே, "நம்ம வீட்டுக்கு யாருமா வந்து இருக்காங்க, நிறைய கார் நிக்குது" என்று கேட்டுக் கொண்டே, உற்சாகமாக உள்ளே, கையில் பள்ளி பையை தூக்கிக்கொண்டு ஓடி வந்தவள்..


உள்ளே துளசி அழுது கொண்டிருப்பதையும், அவர் பின்பு மித்ரா பயந்து நடுங்கி போய் நின்று கொண்டிருப்பதையும், ஆதிகேசவவனின் கோப முகத்தையும், பார்த்து அப்படியே ஷாக் அடித்ததுப்போல் நின்று விட்டாள்.


அரண்டு போயி தாழ்வார வாசல் படியிலேயே நின்றிருந்த, மிதிலாவை பார்த்த, ஆதிகேசவன், "வாமா வா, நீதான் கொஞ்சம் சிரிச்ச முகமா இந்த வீட்டுல ஓடி வந்த, நீயும் ஏன் அப்படியே நின்னுட்ட", என்றவன்..


சட்டென்று திரும்பி துளசியிடம் ஆவேசமாக, "நான் என்ன உன் பொண்ணுகளை என் மவனுக்கு கூட்டி கொடுக்கவா சொன்னேன், எதுக்கு இப்படி ஓவரா இல்லாத வித்தை காமிக்கற, தரித்திரம் தரித்திரம், கல்யாண விஷயம் பேசும்போது அபசகுணமா அழுதுகிட்டு, அப்படியே அறைஞ்சனா என்ன ஆகும்னு தெரியாது சனியனே" என்று கத்த.


அவ்விடத்தில் குண்டு ஊசி விழுந்தால் கூட கேட்டும் அளவிற்கு அமைதி.


அனைவருமே மூச்சு எடுக்க கூட மறந்துவிட்டனர்.


என்ன வார்த்தை, சின்ன பெண்கள் முன்பும், குடும்ப பெண்மணியை பார்த்தும் உதித்து விட்டான்.


துளசிக்கு அப்படி ஒரு அவமானமாக இருந்தது.


அக்கணம், "ம்மா……", என்று அதிர்ச்சியில் முனங்கிய மிதிலா, பயந்துபோய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள், உள் வாசலில் படியில் நின்றப்படியே..


அதில் மேலும் காண்டான ஆதிகேசவன், "என் பையன் நினைச்சாலே போதும், அத்தனை டாப் மாடலையும், அவனை திருப்தி படுத்த இறக்குவேன். அதுவே மாசம் பத்து இருபது லட்சம் ஆகும்..", என்று தன் தந்தை பெருமையை கூறியவன், மேலும் தொடர்ந்து, "இவ்வளவு இருந்தும் ஒரு தகுதியும் இல்லாத கழிசடை உன் கிட்ட வந்து நிக்குறனா, அது என் பையனுக்காக தான், எப்பவும் நான் இப்படி பொறுமையா இருக்க மாட்டேன்.. ஒழுங்கா நடந்துக்கோ.. உன் பொண்ணுகளுக்கும் சொல்லி வை.. இல்லை அசிங்கப்பட்டுப்போவ", என்று எச்சரிக்க...


அப்பொழுது அவன் இறுதியில் கூறியவற்றை கேட்டுக்கொண்டே, ஆவேசமாக வீட்டினுள் நுழைந்த ருத்ரன்..


வாசல் படியில் மருண்ட விழிகளுடன் மிதிலா நின்று, அழுவதை பார்த்து பதறி, அவளை பற்றிக்கொண்டு, "ஒன்னும் இல்லைடா குட்டிமா, பயப்படாத, ஒன்னும் இல்லை, நான் பாத்துக்கறேன்" என்று அவள் கை பிடித்து வீட்டிற்குள் அழைத்து வர..


ருத்ரனை பார்த்து துளசிக்கும், மித்ராவிற்கும் அதிர்ச்சி.


காரில் வந்தவன் எப்படி வீட்டிற்கு வந்தான், மிதிலாவிடம் வேறு உரிமையாக பேசுகிறானே என்று‌ துளசி நினைக்க.


ஒருப்பக்கம் ருத்ரனை பார்த்ததும் ஆதிகேசவன் முற்றிலும் மாறிவிட்டான், "செல்லம் வா வா, டாடி உனக்காக தான் இங்க வந்தேன், எல்லாமே பேசி முடிச்சுட்டேன் செல்லம், ‌நீ வந்ததும் நல்லது தான், நம்ம ஜோசியரும் வந்து பார்த்துட்டார், எல்லாம் சுபம்" , என்று பேசிக்கொண்டே மகனிடம் விரைந்தான்,


ருத்ரனோ அதை எதையும் காதில் வாங்காது, வீட்டிற்குள் இருந்த அனைவரின் முகத்தையும், அமைதியாக ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.


துளசியின் முகம் வேதனையில் வெம்பி போய், கண்கள் எல்லாம் வீங்கி, என்று பயத்தில் நடுங்கியப்படி நின்று கொண்டு இருந்தார்.


அன்று அவ்வளவு லட்சுமிகரமாக இருந்த முகம், இன்று இவ்வாறு ஆகிவிட்டதே என்று மிகவும் வேதனை உற்றான்.


அதைவிட தன்னவளின் அழுகையும், பயந்த முகமும், அவனின் மனதை அக்கணம் மொத்தமாக நொறுங்க செய்தது.


எவ்வாறு எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தானோ, மொத்தத்தையும் ஆதிகேசவன் அனைத்தையும் நாசமாக்கி விட்டு இருந்தான்.


பூவை செடியிலேயே விட்டு ரசிக்கும் குணம் கொண்டவன் ருத்ரன்.


அதை பறித்து கசக்கி முகரும் குணம் கொண்டவன் ஆதிக்கேசவன்.


முதல் கோணல் முற்றிலும் கோணல் அல்லவா..!!


ருத்ரன் வேதனையுடன் தன் தந்தையை பார்த்து, "ஏன் டாட் இப்படி பண்ணீங்க",

என்றான்..


உடனே ஆதிகேசவன், "என்ன செல்லம், என்ன பண்ணேன், உனக்காக தானே டாடி இங்க வந்தேன், உன் முகம் ஏன் இப்படி மாறிடுச்சு, நீ எதுக்கும் வருத்தப்படாத நான் பாத்துக்கறேன்.." என்று மீண்டும் மீண்டும், தன் அதிர்ஷ்ட தேவதையான மகனின் முகம், வேதனையில் வாடுவதை தாங்காமல் ஆதிகேசவன் பேச,


அவனை பார்த்து முறைத்த ருத்ரன், "தயவுசெய்து கிளம்புங்க டாட், போதும் நீங்க இதுவரை பண்ணதே, என்னலாம் பேசிட்டீங்க, கிளம்புங்க முதலில்", என்று கட்டளையிட,


மீண்டும் ஆதிகேசவன், "ஏன் செல்லம்", என்று பேச ஆரம்பிக்க..


" டாட், ப்ளீஸ் க்ளியர் திஸ் ப்ளேஸ் நவ்" என்று ருத்ருத்ரன் கோபமாக கட்டுப்பாடு இன்றி கத்த.


அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாத, ஆதிகேசவனும் கோபமாக ருத்ரனிடம், "நான் போயிட்டு கல்யாண வேலையை பார்க்கறேன்.. வந்து சேரு…" என்றவன், திரும்பி துளசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மாதவியுடன் அவ்விடத்தைவிட்டு காலி செய்தான்.


ருத்ரனுக்கும், ஆதிக்கேசவனுக்கும் இடையில் நடந்த முதல் மனக்கசப்பு இது தான்.


அப்படி ஒரு கோபம் ருத்ரனிற்குள்.. அதுவும் தன்னவளின் கண்கள் சிந்தும் நீரும்.. அவனை பார்க்கும் பயப்பார்வையும்.. அவனின் புதிதாக காதல் பூ பூத்த நெஞ்சை கொன்றது.


அங்கு இருந்தவர்களுக்கு, ஆதிகேசவனின் மகன் தான், ருத்ரன் என்பதே, அப்பொழுது தான் விளங்கியது.


ருத்ரன் துளசியின் அருகில் சென்று, "வெரி சாரி ஆன்ட்டி, நீங்க எதுவும் பயப்படாதீங்க, நான் பார்த்துக்கிறேன், என்னால் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு சாரி" என்றுவிட்டு..


அவனுடைய விசிட்டிங் கார்டை பாக்கெட்டிலிருந்து எடுத்து துளசியின் கையில் கொடுத்து, "ஏதாவது அவசரம் என்றால் எனக்கு உடனே கால் செய்யுங்க, சாரி ஆன்ட்டி" என்று விட்டு வெளியில் வந்துவிட்டான்.


அவனால் அங்கு நிற்கவே முடியவில்லை, துளசியின் முகத்தில் தன்னை காணும் பொழுது தோன்றிய பதட்டம் கலந்த அருவருப்பை சற்றும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.


அவன் வெளியில் வரும் பொழுதுதான் விஷ்ணுவும் வீட்டிற்குள் கேட்டை திறந்துக்கொண்டு நுழைந்தார். ருத்ரனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டு, எதற்கு இவர் இங்கு வந்து இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டே, விஷ்ணு, "வாங்க தம்பி, என்ன விஷயம்" என்று விசாரிக்க..


ருத்ரன் உணர்வுகள் துடைத்த முகத்துடன், "ஹாய் அங்கிள், இப்பதான் வேலை முடிஞ்சு வரீங்களா..??", என்றவன், அவர் பதில் கூறுவதற்குள், "நான் மறுபடியும் வரேன் அங்கிள், இப்ப எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு, சாரி பாய்.." என்று விட்டு அவரிடம் எதுவும் சொல்லாமல் விடுவிடுவென்று  வெளியேறி விட்டான்.


விஷ்ணுவிற்கு ஒன்றும் சரியாக படவில்லை,

"துளசி மா, மித்து, மிது குட்டி.." என்று அழைத்துக்கொண்டே ஹாலிற்குள் வந்தார், 


அவரை பார்த்ததும் துளசி பாய்ந்து சென்று அவரின் கையைப் பற்றிக்கொண்டு, "என்னங்க வந்தீங்களா, இன்னைக்கு….", என்று ஆரம்பித்தவர், "நம்ம பொண்ணோட வாழ்க்கை…. எல்லாம் போச்சு" என்று வார்த்தை வராமல் அழத்தொடங்க,


விஷ்ணுவிற்கு மாரடைப்பே வரும் போலானது,


"என்னமா துளசி சொல்ற.. என்ன ஆச்சு.. அந்த தம்பி ஏன் நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாப்ல" என்று அவர் பதற,


மித்ரா, நடந்த அனைத்தையும் தெரிந்த அளவு விஷ்ணுவிடம் கூறினாள்.


துளசியும், கொஞ்சம் நிதானம் அடைந்து ஆதிகேசவன் வந்தது, திட்டியது, ஜோசியர் வந்தது, என்று அனைத்தையும் சொன்னார்.


கேட்ட அனைவருக்கும் பயம் பிடித்துக்கொண்டது.


வீடே சோகக்கடலில் மூழ்கிவிட..


விஷ்ணுவிற்கு, எவ்வாறு இதிலிருந்து குடும்பத்தை காப்பாற்று‌வது என்று ஒன்றும் புரியவில்லை.


மித்ராவிற்கு, அப்பொழுது தான் அந்த விஷயம் ஞாபகம் வந்தது.


அன்று ருத்ரனை திருமண மண்டபத்தில் பார்த்ததையும், மிதிலா அவனை பார்த்து அழைத்ததையும், அவன் பார்வை அன்றே சரியாக இல்லை என்றும், இன்று ஆதிகேசவன் ருத்ரனின் பெண்களின் சவகாசம் பற்றி பேசியதையும் விஷ்ணுவிடம் கூறிமுடிக்க..


மிதிலாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.


மிதிலா பயந்து கொண்டே, இன்று ருத்ரனுடன் சென்று ஐஸ்கிரீம் உண்டதை வீட்டில் மறைக்காது சொல்லிவிட..


மிதிலாவின் அதிக பிரசங்கித் தனத்தினாலும், வெகுளி தனத்தினாலும், சொல் பேச்சு கேட்காமல் நடந்ததாலும், அடுக்கடுக்காக நடந்தவையின் தீவிரம் அனைவருக்கும் புரிந்தது.


அன்றே மிதிலா வாயை மூடிக்கொண்டு இருந்து இருந்தால், இந்த பிரச்சனையே வந்து இருக்காதே.


என்ன செய்வது, விதி எவ்வழியிலும் வந்து தானே தீரும்.


விஷ்ணுவோ வந்த கோபத்திற்கு ‌மிதிலாவை அடித்து வெளுக்க ஆரம்பித்துவிட்டார்.


என்ன தப்பு செய்தோம் என்று தெரியாமலே, ஒன்றும் புரியாது, அடிகளை வாங்கிக்கொண்ட மிதிலா "அப்பா.. பிளீஸ் ப்பா.. வலிக்குது ப்பா… ம்மா வலிக்குது ம்மா…", வலி தாங்காமல் அழுது கதறினாள்.


நினைவு தெரிந்த பிறகு மிதிலா வாங்கும் முதல் அடி.


மித்ராதான் விஷ்ணுவை போராடி தடுத்தாள்.


இறுதியில் மிதிலாவிற்கு அழ கூட சக்தி இல்லாமல், உடல் மொத்தமும் தூக்கி தூக்கி போட, தன் கன்னத்தைப் பற்றியப்படி, ‌மித்ராவின் தோளின் மீது சாய்ந்து, தேம்பி கொண்டு இருந்தாள்.


அவளால் ஒழுங்காக நிற்க கூட முடியவில்லை. முதுகில் அப்படி ஒரு வலி. 


அளவிற்கு, விஷ்ணு போட்டு அவளை அடித்துவிட்டார்.


தடுத்த மித்ராவிற்கும், எதற்கு அன்றே ருத்ரனிடம் பேசியதை சொல்லவில்லை என்று நான்கு அடி விழுந்து இருந்தது. அந்த நாளே அவளுக்கு அத்தனை வலியை தந்தது.


இத்தனை நடந்தும் துளசியிடம் எதற்குமே பிரதிபலிப்பு இல்லை.


ஆதிகேசவன் ‌பேசிய கீழ்தரமான பேச்சிலேயே அவரின் உலகம் நின்றுவிட்டு இருந்தது.


மிதிலாவின் தேம்பலோ சற்றும் கட்டுப்படுத்தமுடியாது வெளி வர, மித்ராவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.


ஒரு வேகத்தில் ஆதங்கம் தாங்காது அடித்துவிட்ட, விஷ்ணுவின் கையோ திகுதிகுவென்று எரிய.. பிறகு தான் தன் செயலின் வீரியத்தை உணர்ந்தார்,


உடனே மிதிலாவை நெருங்கி, "சாரிடா மிது.. அப்பா சாரிடா " என்று அவளை தன்னுடன் ‌அணைத்துக்கொள்ள முற்பட. 


எங்கே மீண்டும் அடிப்பார்களோ என்று பயந்த மிதிலா, விஷ்ணு நெருங்கியதும் மீண்டும், அழ தொடங்கினாள்.


அதிலும் விஷ்ணுவின் கரம், அவளை அணைக்க முதுகில் படித்ததும், அவளால் முதுகு வலியை தாங்கவே முடியவில்லை.


"இனி யாருக்கிட்டேயும் பேசவே மாட்டேன் ப்பா….", என்று கதறியவளுக்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே, பயத்தில் இழுப்பு போல் வந்துவிட்டது.


கீழே விழுந்தவளின் உடல் விட்டுவிட்டு இழுக்க தொடங்கி, மூச்சு விட அவள் சிரமப்பட, அனைவருமே அதிர்ந்து விட்டனர்‌.


உடனே மிதிலாவை தூக்கிகொண்டு, அனைவரும் ஹாஸ்பிடலுக்கு காரில், விரைந்தனர்.


அங்கோ ஆதிக்கேசவன் வீட்டில், அவனுக்கும் ருத்ரனிற்கும் இடையில், நீண்ட ‌விவாதம் நடந்து கொண்டு இருந்தது.


அப்பொழுது ருத்ரனிற்கு ஃபோன் வர.. எடுத்து பேசினான்.


அந்தப்பக்கமிருந்து, மிதிலா குறித்த செய்தி சொல்லப்பட, உடனே பதறிய ருத்ரன் ஹாஸ்பிடல் நோக்கி ஓடினான்.


அங்கு மிதிலாவிற்கு சிகிச்சை நடந்துக் கொண்டு இருக்க..


அறைக்கு முன்பு, விஷ்ணு உடன் துளசி மற்றும் மித்ரா, பயந்தப்படி நின்றுக்கொண்டு இருந்தனர்.


அப்பொழுது ருத்ரன் அவ்விடத்தை அடைந்தான்.


மருத்துவமனையில் ருத்ரனை மீண்டும் கண்டதும் அனைவருக்கும் பயமாகியது. 


யாரின் பார்வையையும் சட்டை செய்யாமல், யாரின் அனுமதியும் எதிர்பாராமல், புயலென மிதிலாவை காண ருத்ரன் அறைக்குள் சென்றான்.


அங்கு மிதிலாவின் கையில் சலைன் போட்டு படுக்க வைத்து இருந்தனர், மயக்கத்தில் இருந்தாள்.


அவள் முகம் முழுவதும், வரிவரியாக விஷ்ணுவின் கைத்தடம்.


மாலை பார்த்த யூனிஃபார்ம் உடையிலேயே தான் இன்னமும் இருந்தாள்.


தலைமுடி முழுக்க கலைந்து, வீங்கி கன்றிப்போன முகத்துடன், வாடிய கொடியாக கிடந்தவளின் தோற்றம் ருத்ரனை வேருடன் சாய்த்தது,


மாலை ஐஸ்கிரீம் கடையில் அவன் பார்த்த மிதிலாவிற்கும், இப்பொழுது பார்க்கும் மிதிலாவிற்கும் எவ்வளவு வித்தியாசம்.


ருத்ரன், மிதிலாவின் கையை பற்றிக்கொண்டு, "மிதுமா சாரிடா, குட்டிமா சாரிடா, ஐயோ எப்படி டா தாங்குன" என்று அவளின் வரிவரியாக சிவந்த கன்னத்தை மெல்ல வருடினான்.


அவளோ எதையும் உணராமல் மயங்கி கிடந்தாள்‌.


ருத்ரன் கண்களிலோ, அவனை மீறி கண்ணீர் வரத்தொடங்கியது.


சூடான நீர் கன்னத்தில் இறங்கிய பிறகுதான் தான் அழுவதை உணர்ந்தான்.


கஷ்டம் என்றால் எவ்வாறு இருக்கும் என்றே தெரியாமல் வளர்ந்தவன், கண்ணில் முதல் கண்ணீர்.


மறுகணம், அவ்வுணர்வுகளை, எவ்வாறு கட்டுப்படுத்த என்றே தெரியாது அறையை விட்டு வெளியேறியவன், 


விடுவென மருத்துவமனையை விட்டே வெளியேறி விட்டான்.






கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻