இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சங்கீதம்-44

அத்தியாயம் -44 பூமியினை மெல்ல இருள் அணைத்து, அந்நாளைய இரவினை அறிவித்துவிட்டிருக்க! ஈத்தனின் கெஸ்ட் ஹவுஸ் தோட்டம் முழுவதும் மெல்லிய இசையாலும், செயற்கை விளக்குகளாலும், பல்வேறு சுகந்தமான நறுமணங்களினாலும் நிறைந்து சொர்க்கமாக மாறிவிட்டு இருந்தது. சீராக வெட்டப்பட்ட பச்சை புல்வெளியில், இளம் ரோஜா, ஊதா, பீச், நீலம், வெள்ளை போன்ற – பல இள வண்ண மலர்கள் கொண்டு மிகப்பெரிய ஆர்ச் வடிவ நுழைவு வாயில்,  “Aurora Bloom Gate” என்ற நியான் விளக்குகளால் ஆன பெயர் பலகையை தாங்கிக்கொண்டு, நீளமாக அமைக்கப்பட்டு இருக்க… அதனை பார்த்து, “ஓ மை காட்! பேபிஇஇஇ, லவ் யூ சோ மச்! அம்மாஆஆ லவ் யூ சோ மச்!” என்று குதித்த ஈஷா,  வானை முட்டும் மகிழ்ச்சியுடன் தன் வெண்ணிற பார்ட்டி கவுனை, இரண்டு பக்கமும் லேசாக பற்றியப்படி, தேவதையாக அந்த நுழைவுவாயிலினுள் நுழைந்து நடந்துச்செல்ல… அவள் உடைக்கு ஏற்ப, வெண்ணிற ஷிஃபான் பார்ட்டி வியர் புடவையில் தயாராகியிருந்த குறிஞ்சியும், வெண்ணிற ஃபார்மல் ஷர்ட் மற்றும் கருப்பு பேண்ட்டில் இருந்த ஈத்தனும் மென் புன்னகையுடன் அவளை பின்தொடர்ந்தனர். ஈஷா பிறந்தது முதல், இப்பொழுது வரை எடுத்த புகைப்படங்களில்...

சங்கீத வானில் ஓர் அந்திப்போர் (அத்தியாயம் -43)

அத்தியாயம் -43 ஈத்தனின் வீட்டில் இருந்து கிளம்பிய கார், ஒருசில நிமிடங்களிலேயே அவர்கள் வீட்டின் அருகிலேயே இருந்த சிறிய தேவாலயத்தின் முன்பு சென்று நின்றது. முன் பக்க சீட்டில் இருந்து இறங்கிய ஈத்தன், ஏற்கனவே அங்கு வந்துவிட்ட அவனுடைய பாதுகாவலர்களிடம், ஏற்பாடுகள் குறித்து பேசி, பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து, குறிஞ்சி பக்க கார் கதவை திறக்க… உடனே இறங்கப்பார்த்தாள் குறிஞ்சி. அதில், “ஒன் செக்” என்று அவளை இறங்கவிடாது நிறுத்திய ஈத்தன், “உனக்கு கம்ஃபர்ட்னா மட்டும் சர்ச் உள்ளே வா கேர்ள். இல்லை நீ கார்லயே இருக்கலாம்”, என்றவன், “உன்கூட செக்யூரிட்டீஸ் இருப்பாங்க. ஜஸ்ட் டென் மினிட்ஸ். நானும், பேபியும் போயிட்டு வந்துடறோம். பிரச்சனை கிடையாது கேர்ள்” என்றான், அவள் மீது தப்பி தவறிக்கூட தான் பின்பற்றுவதை திணித்துவிட கூடாது என்று வெகு கவனமாக. அதை உணர்ந்து பெருமிதம் கொண்டவள், “சர்ச் போறது, எனக்கு காலேஜ் அப்ப இருந்தே பழக்கம் தான்ங்க. கடவுள் எங்க இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும் எனக்கு ஒன்னுதான், நான் கும்பிடுவேன்” என்று தன் எண்ணத்தை கூறிய குறிஞ்சி, “நானும் வரேன்”, என்றாள் அவன் நீல விழி...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates