உண்மை காதல் -Final

அத்தியாயம் -25


விடியற்காலையில் ஹரி வந்த விமானம் சியாட்டலில் தரையிறங்கியது..


காலை 7 மணிப்போல் வீட்டிற்கு வந்து சேர்ந்த ஹரி, உள்ளே நுழைந்ததும் மிதிலாவை காண மாடிக்கு ஓடினான்..


கதவை திறந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களை பார்த்த ஹரியினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..


மிதிலா, ஹஸ்கியின் மீது தன் ஒரு காலையும், ஒரு கையையும் தூக்கிப்போட்டு.. சுகமாக தூங்கிக்கொண்டு இருந்தாள்.


பாவம்..  ஹஸ்கியும் வேறுவழி இல்லாமல்.. அசையாது..  அப்படியே படுத்து இருந்தது.


மறுபுறம் மிதிலாவின் சட்டையை பற்றி சப்பியபடி..  மகிழ்மதி அவளை போலவே கோணலாக படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள்..


ஹரி வந்ததும், பட்டென  ஹஸ்கி எழுந்து கொண்டான்..


ஹரி பார்த்ததும்..  அது பாவமாக..  "என்ன காப்பாத்து டா டியூட்.. அஞ்சு நாளா முடியல டா..", என்பதுபோல் பார்த்து வைத்தது.


ஹரி தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்து..  மிதிலாவின் கையையும் காலையும் மெதுவாக ஹஸ்கியின் மீது இருந்து எடுத்து பெட்டில் விட்டான்..


ஹஸ்கி மறுநிமிடம், "அப்பாடா சாமி..  தப்பிச்சுட்டேன்", என இறங்கி ஓடிவிட்டது..


ஹரி மறுபுறம் வந்து, மகிழ்மதியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு..  அவளின் வாயில் இருந்த மிதிலாவின் உடையை எடுத்துவிட்டு..  


மெதுவாக அவளை தூக்கிக்கொண்டு..  கீழே சென்று..  அன்னபூரணியின் அறையில் அவளை படுக்க வைத்துவிட்டு..  


நேராக கிச்சனுக்கு சென்று மிதிலாவிற்கு பிடித்த வகையில் காபி போட்டு எடுத்துக்கொண்டு..  ரூமிற்கு வந்து..  மிதிலாவின் மூக்கின் முன்பு காபி கப்பை காண்பித்தான்..  


அவனுடைய ஒரு மாத சர்வீஸில்..  மிதிலா என்ன செய்தாலும் எழுந்துக்கொள்ள மாட்டாள் என.. புரிந்துக்கொண்ட ஹரி.. காபியோடு வந்து இருந்தான்.


சில வினாடிகளில் காபியின் மணத்தை..  தன் நாசியில் நிரப்பியபடி..  நாக்கில் எச்சி ஊற.. எழுந்து உட்கார்ந்த மிதிலா, முகத்தின் அருகில் இருந்த காபி கப்பை பட்டென வாங்கி…  ஒரே ஷாட்டில் குடித்துவிட்டு..  மீண்டும் ஹரியின் மடியிலேயே படுத்து.. தூங்க ஆரம்பித்துவிட்டாள்..


ஹரி, "அடிப்பாவி சீக்கிரம் வாங்க வாங்கன்னு.. என்னை பாடா படுத்திட்டு.. இப்ப கண்டுக்காம நீ மட்டும் தூங்குறியா…  எழுந்திரு பேபி..  மணி ஆயிடுச்சு… நாம ரெண்டு பேரும் இன்னைக்கு  ஒன்னா ஹாஸ்பிடல் போகணும்..  குயிக்..", என அவளை எழுப்பி பார்த்து..  முடியாமல் தூக்கிக்கொண்டு போய் பாத் டப்பில் இறக்கி  நிறுத்தியவன், அப்படியே ஷவரைத் திறந்து விட்டான்... 


பிறகு என்ன ஹரியின் கொஞ்சலும்..  மிதிலாவின் மிஞ்சலும்.. குளியலறையில் நடந்து..


முடிவில்..  ஹரியை பிடித்து வெளியே தள்ளிவிட்ட மிதிலா குளித்துமுடித்து வெளி வந்தாள்…


கீழே வந்த ஹரி சாஹித்யாவிடம் நலம் விசாரித்து விட்டு மேலே வந்து.. அவனும் குளித்து முடித்து தயாராகி.. மிதிலாவுடன் மருத்துவ மனைக்கு கிளம்பினான்.


ஹாஸ்பிடலில்..  ரிசப்ஷனில்.. ஹரி ஃபார்மை வாங்கி..  அதை ஃபில் செய்துவிட்டு.. மிதிலாவை கையெழுத்து போட..  சொன்னான்..


மிதிலா "எனக்கு எதுக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்..  நான் நல்லா தானே இருக்கறேன்..", என..


ஹரி, "உனக்கு பீரியட்ஸ் வந்து எத்தனை நாள் ஆச்சு..  ஞாபகம் இருக்கா.. பேபி ", என்றான் புன்னகையுடன்.


மிதிலா, யோசித்து பார்த்து.. "ஒரு நாற்பத்தி ஆறுநாள் இருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர்..  ஓ அதனாலதான், என்னை ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்களா.." என்றவளுக்கு, இறுதிவரை எதற்கு வந்தோம் என்று தெரியாதே, தன் கையெழுத்தை போட்டு கொடுத்தாள்.


ஹரி, 'இவள வச்சிக்கிட்டு..  ஐயோ..  இவ டாக்டர் ஆகிறதுகுள்ள..  காலேஜில் இருக்க எல்லா பிரஃபசரும் செத்துடுவாங்க..' , என  நொந்தபடி 'ஆமாம்.. ஆமாம்'..  என மிதிலாவிடம் தலையாட்டினான்..


மிதிலாவோ, அடுத்து இதுக்கெல்லாமா டாக்டர், ஹாஸ்பிடல் வருவாங்க,  என அவனை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்..


ஹரி, மிதிலாவை நேராக ஸ்கேனிங் ரூமிற்கு அழைத்துச்சென்று..  அவளின் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதில் அளித்து..  அவளுக்கு வேறு உடைகள் எடுத்து கொடுத்து..  அதனை மாற்ற வைத்து..  ஒரு வழியாக பெட்டில் படுக்க வைத்தான்..


சுற்றி இருக்கும் ஃபோட்டோக்களில் எழுதியிருந்த தகவல்களை பார்த்ததும் மிதிலாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது..  மிரட்சியுடன் ஹரியை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.. 


ஹரி, Fetal Doppler என்னும் கருவியை எடுத்து மிதிலாவின் வயிற்றின் மீது வைத்துவிட்டு..  ஒருநொடி அமைதியாக தன் கண்களை மூடி..  மனதை ஒருநிலை படுத்திக்கொண்டு..  


மிதிலாவின் கைகளுடன் தன் ஒரு கையை கோர்த்தபடி..  அந்த டிவைஸின் சுவிட்சை ஆன் செய்தான்..


மறு வினாடி அந்த இடம் முழுவதும்.. "லப்டப் லப்டப்", என்ற சத்தம் நிறைந்து எதிரொலித்தது..


அக்கணம் ஹரியின் கண்களும்..  மிதிலாவின் கண்களும்.. மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது. 


ஹரி, ஹார்ட் பீட்டின் எண்ணிக்கையை மகிழ்ச்சியாக பார்த்துவிட்டு..  மிதிலாவின் உதட்டில் முத்தமிட்டு..  "என்ன சத்தம்னு..  தெரியுதா பேபி..", என்றான் மகிழ்ச்சியுடன்..


மிதிலா ஹரியின் கையை பற்றி..  தன் வயிற்றில் இருந்து.. கேட்கும் லப் டப் சத்தத்தை உள்வாங்கி.. "என்.. என்னோட வயித்துக்குள்ள..  பாப்..பா இப்ப இருக்கா அம்மூ", என்றாள்.


ஹரி, "எஸ் பேபி..  நம்ம பேபியோட ஹார்ட் பீட் தான்..  ரொம்ப நல்லா இருக்குடா.. செம ஹேப்பி பேபி நான்.. நீ எப்படி ஃபீல் பண்ற", என்றுக்கேட்க....


“ரொம்ப ஆச்சரியமா இருக்கு..”, என்ற மிதிலா, தன் வயிற்றைத் தடவிப் பார்க்க தொடங்கினாள்..


ஹரி, மிதிலாவின் கையை பற்றி..  சரியாக ஒரு இடத்தில் வைத்து..  "இங்க தான் நம்ம பேபி இருக்காங்க டா",.. என்றான்..


மிதிலா, ஆசையாக தன் வயிற்றை தடவி பார்த்துக் கொண்டே.. "உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..   நீங்க ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல..", என்றாள்..


ஹரி, "எனக்கு 2 வீக்ஸ் முன்னாடியே தெரியும் டா..  ஒரு அஞ்சு நாள் வெயிட் பண்ணி பார்க்கலாம்னு நினைச்சேன்.. ஆனா அடுத்தடுத்து நிறைய நடந்துடுச்சு..", என்று விட்டு அந்த டிவைஸை ஆஃப் செய்து அப்புறப்படுத்திவிட்டு ஸ்கேன் செய்ய ஆரம்பித்தான்..


ஹரி கணித்த படியே குழந்தைக்கு ஆறு வாரம் இப்பொழுது ஆகி இருந்தது..


அரை சென்டி மீட்டர் அளவில் இருக்கும்.. தங்களின் குழந்தையை இருவரும் பார்த்து மகிழ்ந்தனர்..


ஹரி மானிட்டரை மிதிலாவிடமும் காண்பித்து…  குழந்தையை பற்றி விளக்கிவிட்டு..  பிறகு பிளட் டெஸ்டிற்கு  கொடுத்துவிட்டு..  இருவரும் ஸ்கேன் ரிப்போர்ட்களுடன் வீட்டிற்கு கிளம்பினார்..


ஹரியும் மிதிலாவும், ஸ்வீட் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்து அன்னபூரணியிடம் கொடுக்க… அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. எங்கே ஹரி தனி மரமாக நின்று விடுவானோ என்று அவர் வேண்டாத தெய்வமில்லையே.. 


ஜூடியும், சாஹித்யாவும்..  ஸ்வீட்டை எடுத்துக்கொண்டு ஹரிக்கும் மிதிலாவிற்கும் வாழ்த்து கூறினர்..


ஹரி, இந்தியாவிற்கும் ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாம் என்றுக்கூற, மிதிலாவோ, வெட்கத்தில் "அச்சோ நான் சொல்ல மாட்டேன், நீங்களே சொல்லுங்க, எனக்கு பயமா இருக்கு", என..


ஹரி தான் அனைவருக்கும் அழைத்து கூறினான்..


விஷ்ணு, துளசி, மித்ரா அனைவருக்கும்..  மிதிலா ஹரியின் வாழ்க்கையையும்.. புது வரவையும் குறித்து மிகுந்த மகிழ்ச்சியே..


ஹரி அடுத்த நாளில் இருந்தே வேலையில் சேர்வதாக இருந்தான்..


அன்று மாலை அன்னபூரணியின் அறைக்கு சென்ற ஹரி, அவரிடம்  மிதிலாவை திருச்சியில் சந்தித்தது முதல்..  ஆதிகேசவனின் அட்டூழியங்கள்..  அவளின் குடும்பத்தின் நிலைமை..  மகிழ்மதியைப் பற்றி..  இப்பொழுது ஆதிகேசவனின் செயல்.. ருத்ரன் சாஹித்யா..  என்று அனைத்தையும் கூறிவிட்டான்..


ஹரி சொல்ல சொல்ல..  அன்னபூரணிக்கு மிகுந்த அதிர்ச்சி..  என்ன சொல்வது என்றே தெரியவில்லை..  இந்த மாதிரியான சம்பவங்களை செய்தித்தாளில் பார்த்ததுடன் சரி..  தெரிந்தவர்களுக்கு கூட அவர் கேள்விப்பட்டது இல்லை..  விஷ்ணு துளசியை நினைத்து அவரின் மனம் மிகவும் வருந்தியது…  மிதிலா தனியாக எத்தனை துன்பங்களை மனதில் சுமந்து கொண்டு வாழ்ந்து இருக்கின்றாள்.. அதை விட மித்ராவின் நிலைமையை சொல்ல வார்த்தைகளே இல்லை..   அதிக வேதனையாக இருந்தது அவருக்குமே....  


இதில் மிதிலாவும் ஹரியும் இணைந்தது.. நிச்சயம்..  கடவுள் இட்ட முடிச்சு போல.. என்று நினைத்துக் கொண்டார்.. 


அன்று இரவு ஹரியும், மிதிலாவும்.. டின்னருக்கு தனியாக வெளியே சென்று..  பொறுமையாக இரவு உணவை முடித்துக்கொண்டு.. தாமதமாக வீடு திரும்பினர்..


வீட்டிற்குள் செல்ல தொடங்கிய மிதிலாவை ஹரி நிறுத்தி..  எப்பொழுதும் போல்..  தன் கைகளில் அவளை ஏந்தியபடி..  ட்ரீ  ஹவுஸிற்கு வந்தான்..  


மிதிலாவும் மகிழ்ச்சியுடன் ஹரியின் கழுத்தை கட்டிக்கொண்டு வந்தாள்..


மேலே ட்ரீ ஹவுஸினுள் வந்ததும்..  


ஹரி மிதிலாவை மென்மையாக கட்டியணைத்து முத்தமிட்டு..  "லவ் யூ டா ஹனிபேபி.. ரொம்ப ரொம்ப இன்னைக்கு நான் ஹாப்பியா இருக்கேன்.. தேங்க் யூ டா", என்றவன், அவளை பெட்டில் தன் மடியில்  வைத்து கொஞ்சி தீர்த்தவன்.. 


லட்சம் முத்தங்களை அவளுக்கும், அவளின் வயிற்றில் வளரும் தன் மகவுக்கும் பதித்து.. அந்த இரவை, அவளுடன் மென்மையாக கலந்து, கொண்டாடி தீர்த்து.. அவளை தன் அணைப்பிலேயே உறங்க வைத்தான் ஹரி.


மறுநாள் காலை, எப்பொழுதும் முதலில் எழும் ஹரி, இன்று இன்னும் தூங்கி கொண்டே இருந்தான்..  தொடர் பயணத்தினாலும் அசதியினாலும்..


பறவைகளின் தொடர் சத்தத்தில்..  மிதிலாவின்  தூக்கம் தான் முதலில் கலைந்தது..  


ஹரியின் நெஞ்சில் இருந்து..  தன் தலையை தூக்கி..  மெல்ல தன் கண்களை மலர்த்தியவள்..  தூங்கும் ஹரியின் முகத்தை தான் முதலில் பார்த்தாள்..


வெளியில் இருந்து வந்த கதிரவனின் ஒளி..  நன்றாக அந்த மர வீட்டை நிறைத்து.. ஒளிர செய்து இருந்தது..


வசீகரமான முகத்துடன்..  ஆணழகனாக.. தூங்கும்  ஹரியின் முகத்தை பார்த்த மிதிலா, வெட்கத்துடனும்..  ஆசையுடனும்..  நெருங்கி..  அவன் நெஞ்சின் மீது தன் இதழை அழுத்தமாக பதித்தாள்..


அப்பொழுது, வெற்று மார்புடன் தூங்கும் ஹரியின் நெஞ்சில், இருந்து தன் இதழை பிரித்த, மிதிலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது..


ஹரியின் இடதுபக்க மார்பு பகுதி முழுக்க புதிதாய் டாட்டூ நிறைந்து இருந்தது..


ஹரி..  ஒரு கையில் சைக்கிளை பற்றியபடியும்..  மறு கையால் மிதிலாவை அணைத்தபடியும் நடப்பது போன்று இருந்தது அந்த டாட்டூ.. 


மிதிலா, ஸ்கர்ட்டில்..  இரட்டை சடை போட்டு இருந்தாள்..  ஐந்து வருடத்திற்கு முன்பு..  ஹரியும் மிதிலாவும் முதன் முதலில் சந்தித்த நிகழ்வின்..  நகல் அந்த ஓவியம்..


இருவரின் அன்றைய தோற்றம் அச்சுபிசகாமல்..  முடிந்த அளவு அதே மாதிரியே, நிறம் முதற்கொண்டு, டாட்டூவாக வரையப்பட்டு இருந்தது..


மிதிலா தன் நெஞ்சில் முத்தமிடும் பொழுதே ஹரி எழுந்து விட்டான்..  அவள் என்னதான் செய்கிறாள் என்று அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தான்.. 


மிதிலா கண்ணிமைக்காமல் அந்த டாட்டூவையே தொட்டுத் தொட்டு, நெஞ்சம் படப்படக்க  பார்த்துக்கொண்டு இருந்தாள்..


இது அவளின் இரகசிய கணா ஆகிற்றே!!!


அக்கணம் மிதிலாவின் இடுப்பை பற்றி தூக்கிய ஹரி..  அவளை தன் முகத்திற்கு நேரே கொண்டுவந்து..  அவளின் உதடுகளில் அழுந்த தன் இதழை ஒருமுறை ஒற்றி எடுத்து..


புன்னகையுடன்.. "ஹே ஜிகிளி..  கல்ப்ரிட் கல்ப்ரிட்..  கடைசிவரை என்கிட்ட நீ சொல்லவேயில்ல இல்ல..  அன்னைக்கு மேடம் பேரு கூட சொல்லாம..  அவ்ளோ சீன் போட்டுட்டு..  கடைசியில ஒரு நாள் விடாம..  என்னை நினைச்சு சைட் அடிச்சிகிட்டு இருந்து இருக்க..  இப்பவும் என்னை சைட் அடிச்சிட்டு..  நான் பார்க்கும் போதெல்லாம் ஒன்னும் தெரியாத மாதிரி மூஞ்ச வச்சுக்கோ.. நேத்து நைட் கூட சொல்லுவன்னு பார்த்தேன்.. சொல்லவே இல்லை", என்றவன் மிதிலாவின் கன்னத்தை பற்றி முத்தமிட்டு.. லேசாக இப்பொழுது தான் சதை வைக்க ஆரம்பித்த கன்னத்தை கடித்து விடுவித்தவன்..  "பேபி சீக்கிரம் முன்னாடி இருந்த ஜிகிளி கேக் மாதிரி, கியூட்டா சப்பியா மாறு.. எனக்கு அந்த மிதிலா தான் வேண்டும்...", என…


மிதிலாவிற்கோ ஹரி தன் மனதில் இருந்ததை, கண்டுபிடித்து சொல்லச் சொல்ல வெட்கம் தாளவில்லை.. 


“அச்சோ உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்…” என்றவள்.. ஹரியின் கழுத்தின் வளைவில் உள்ளே..  தன் முகத்தை புதைத்து மறைத்துக் கொண்டாள்..


அதில் ஹரி "ஹோய்..  என்ன பண்ற பேபி..  கூசுது டா…  எழுந்திரு..", என்று மிதிலாவின் முகத்தை பற்றி, கழுத்தில் இருந்து நிமிர்த்த..


மிதிலா ஹரியின் முகத்தை பார்க்க முடியாது, தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.. 


ஹரி மெல்ல அவளின் இடையில் கோலம் போட.. அதில் தன் கண்களை திறந்த மிதிலா..


ஹரியின் முகத்தில் தெரிந்த விஷமத்தையும்..  குறும்பு சிரிப்பையும்..  பார்த்து.. "உங்களுக்கு எப்ப தெரியும் இதெல்லாம்..  ஏன் என்கிட்ட எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டே..  மறைச்சீட்டீங்க..", என அவனின் தோளில் அடிக்க தொடங்கினாள்.


ஹரி மிதிலாவின் கையை பிடித்து தடுத்து முறைத்துக்கொண்டே.. 


"அடிப்பாவி..  நானா பேபி சொல்லல..  நீ தான் சரியான மக்கு பொண்ணு.. ", என்றவன், தங்களின் முதல் கூடல் அன்று நடந்தவற்றை சொல்லி..  "சரியான தத்தி பேபி நீ.. இப்ப வரைக்கும்..", என்று அவளின் அறியாமையை கூற..


“ஐயோ.. ஆமா இல்ல.. நான் அப்படி நினைக்கவே இல்லை..”, என்ற மிதிலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டது… 


அதைப்பார்த்த ஹரி அவளை இறுக அணைத்துக்கொண்டு, "அன்னைக்கு உனக்கு டிரஸ் எடுக்கும் போது தான்..  கிரீட்டிங் கார்டு..  செயின்..‌ எல்லோ டிரஸ்..  எல்லாம் பார்த்தேன்..  பிறகு தான் உன் பாஸ்போர்ட் டிட்டெயில்ஸ் பார்த்துட்டு.. உடனே ஆதித்யனுக்கு கூப்பிட்டேன்", என்றவன்.. 


அவளை இறக்கி பக்கத்தில் மெல்ல படுக்க வைத்துவிட்டு.. "டைம் ஆகிடுச்சு பேபி.. வா வீட்டுக்குள்ளே போகலாம்", என்று அருகில் இருந்த, டேபிளின் மீதிருந்த அவனின் ஷர்ட்டை எட்டி எடுக்க…


அப்பொழுது தான் ஹரியின் முதுகிலும் டேட்டூ போட்டு இருப்பதை மிதிலா கவனித்தாள்..  


அவனை பற்றி முழுவதுமாக திருப்பி பார்த்தாள்..


முதுகில் மேல்புறம் " Together Forever " என்றும்.. அதன் கீழே.. "அம்மூ❤️ஜிகிளி", என்றும் அழகாக எழுதி, டாட்டூ வரைந்து இருந்தனர்..


அப்படியே ஹரியை, பின்புறம் இருந்து இறுக்க அணைத்த மிதிலா..  அவன் நெஞ்சிலும்..  முதுகின் புறம் இருக்கும்..  டாட்டூவிற்கும்..  ஆயிரம் முத்தங்கள் வைத்து..  


தன் மனதில் இருந்த காதலை அவனுடன் முதல்முறை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள்...


அன்று ஹரி தன் நெற்றியில் முத்தமிட்ட அந்த நொடி.. தன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தினையும்..  அதன் பிறகு தினமும் அவனை தேடியதையும்..  கிரீட்டிங் கார்டில் பெயர் எழுதி யாருக்கும் தெரியாமல் வைத்தது..  செயினை விஷ்ணுவிடம் சண்டைபோட்டு வாங்கியது..  எப்பொழுதும் அவன் தந்த அந்த கவுனை போட்டுக் கொள்வது..  என்று அனைத்தையும் ஹரியிடம் பகிர்ந்து கொண்டாள்..


மிதிலாவின் காதலை அவள் வாயினாலேயே கேட்கும் பொழுது..  ஹரி சிறகில்லாமல் காதல் வானில் பறக்க தொடங்கினான்.. 


காதலிக்க படுவதை விட சந்தோஷம், இவ்வுலகில் வேறு உள்ளதா என்ன..?


நாட்கள் பறக்க… 


ஹரி மிதிலாவை, மெடிக்கல் என்ட்ரென்ஸ் எக்ஸாமிற்காக,

ஆன்லைன் கிளாஸில் சேர்த்துவிட்டு.. தினமும் அவள் தேர்விற்கு தயாராக உதவியும் செய்தான்.

  

மிதிலா முழு கவனத்துடன் மீண்டும் தன்னுடைய கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்.. 


உடன் மிதிலா தன் பெற்றோரை நேரில் காணப் போகும் நாளுக்காகவும் காத்து கொண்டு இருந்தாள்..  


ஹரி அடுத்த ஸ்கேன் பார்த்துவிட்டு, சாஹித்யாவை அழைத்துக்கொண்டு, இந்தியாவிற்கு செல்லலாம் என்று இருந்தான்..


அம்மாதம் இறுதியில் மகிழ்மதியின்.. முதல் பிறந்தநாள் விழா..  ஹரியின் வீட்டு தோட்டத்திலேயே..  அழகாக கொண்டாடப்பட்டது..


விஷ்ணு, துளசி, மித்ரா அனைவரும் குழந்தையின் பிறந்தநாள் விழாவை வீடியோ காலில் பார்த்து மகிழ்ந்தனர்..


*******************************


இரண்டு மாதங்களுக்கு பிறகு..


மகிழ்மதி, மிதிலா, சாஹித்யா, ஹரி..  அனைவரும் இந்தியாவிற்கு கிளம்பினார்..


ருத்ரன் சாஹித்யாவை அமெரிக்காவிலேயே பிரசவத்திற்கு ஹரியிடமே காட்டலாம் என்று இருக்கச் சொல்ல.. 


சாஹித்யா தான் முடியாது.. இனி நான் திருச்சியில் உங்களுடன் தான்.. என்று கிளம்பி விட்டாள்…


திருச்சி ஏர்போர்ட்…


ருத்ரனுடன், விஷ்ணுவும் துளசியும் ஏர்போர்ட்டிற்கு வந்து..  தங்களின் மகளையும், மருமகனையும், பேத்தியையும் காண காத்து இருந்தனர்..


மித்ரா, பிரித்திவ்வுடன் கேரளாவில் மருத்துவமனையில் தான் இருந்தாள்… 


பிரித்திவ்வுடன் சேர்ந்து தான், தன் மகளை முதலில் காண வேண்டும் என்று நினைத்தாள்..


கிட்டத்தட்ட..  ஒரு வருடத்திற்கு மேலான பிறகு..  மிதிலாவின் கால் திருச்சியில் பதிந்தது...


பெற்றவர்கள்..  சகோதரி..  என்று அனைவரையும் கொடூரமான முறையில் பறிகொடுத்துவிட்டு…  அடுத்த நிமிடம் என்ன என்று தெரியாமல்…  பிறந்த குழந்தையுடன், வழி தெரியாமல் ஆரம்பித்த அவளின் ஓட்டம்..  


மும்பை.. அமெரிக்கா என்று தொடர்ந்து.. மீண்டும் இன்று  திருச்சியில் வந்து அழுத்தமாக  முடிவடைந்தது…


தூரத்தில் ஹரியின் அணைப்பில் வரும் மிதிலாவையும்..  மகிழ்மதியையும்..  கண்ட விஷ்ணு துளசியின் கண்களில்.. பூரிப்புடன் கூடிய ஆனந்தம் ஆனந்தம் மட்டுமே...


குழந்தையாக சென்ற தன் மகள்..  இன்று கணவனுடன்..  சூல் கொண்டு..  தேவதையாக ஜொலித்துக்கொண்டு வரும் காட்சி..  பெற்றோர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியையும்..  நிம்மதியையும்..  கொடுத்தது..


இந்த மூன்று மாதங்களில் ஹரியுடன் நன்றாக விஷ்ணுவும் துளசியும் பேசி பழகி இருந்தனர்..


பிரித்திவ், ஹரி இருவருமே..  விஷ்ணு துளசிக்கு..  மித்ரா, மிதிலா போன்று தான்..  இருந்தனர்..  


அதிலும் ருத்ரன் இன்னும் சிறப்பு..  தன் தந்தையையே எதிர்த்து.. தங்களுக்காக அவன் செய்த உதவிகளும்..  பட்ட கஷ்டமும்..  கொடுத்த ஆதரவும் ஏராளம்..


அனைவரும் ருத்ரனின் இல்லத்திற்கு நேராக சென்றனர்…


ஆறுமுகம் தான் ருத்ரனின் கார் ‌ஓட்டுனர்.


ருத்ரன், குமுதம் குடும்பத்தினரை தேடி கண்டுபிடித்து.. தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு இருந்தான்….  


குமுதம் வீட்டில், மாதவிக்கு துணையாக அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கின்றார்.. அவர் பிள்ளைகளை ருத்ரன் திருச்சியில் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டு இருந்தான்.. எத்தனை பெரிய உதவியை அவர்கள் செய்து இருந்தனர்.. அதற்கான பலன் அவர்களின் பரம்பரையையே தூக்கி நிறுத்திவிட்டது.


அதேப்போல், துளசியின் வீட்டினரை காட்டிக்கொடுத்திருந்த, அந்த பெண்மணியை தனியாக பிடித்து, சிறப்பாக கவனித்து இருந்தவன், ஜோசியம் என்ற பெயரில், விஷ்ணுவின் குடும்பத்தையும், அவனின் வாரிசையும் அழிக்க பார்த்த சாமியாரின் ஆயுள் ரேகையை மொத்தமாக அழித்தேவிட்டு இருந்தான்.


அடுத்து அடுத்து விரைவாக பணிகள் நடந்தது..


திருச்சியில், மிதிலாவின் மீது இருந்த வழக்குகளை..  மறுபடியும் எடுத்து பார்த்து..  அதனை முடித்துவிட்டு…


மிதிலா மற்றும் மகிழ்மதிக்கு திருச்சியில் அவர்களின் சொந்த ஐடி கார்டுகள் வைத்து தக்கலில்..  பாஸ்போர்ட் வாங்க அப்ளே செய்தனர்…  


அடுத்து ஹரி, மிதிலாவின் திருமணத்தை தமிழகத்தில் ரிஜிஸ்டர் செய்துவிட்டு..  


ஹரியின் அமெரிக்க குடியுரிமை மூலம், மிதிலாவிற்கு அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க கிரீன் கார்ட் வாங்க ஏற்பாடுகள் செய்தனர்....


ருத்ரன், மகிழ்மதி, விஷ்ணு, துளசி, ப்ரித்திவ், மித்ரா அனைவருக்கும் டூரிஸ்ட் விசாவிற்கு அப்ளை செய்து இருந்தான்..  


மகிழ்மதியின் பாஸ்ப்போட்டை பார்த்த ஹரிக்கு, அப்பொழுதிலிருந்தே அவன் மனதை போட்டு ஒரு பாரம் அழுத்த தொடங்கியது..


அனைத்து வேலைகளும் முடிய, கிட்டத்தட்ட ஒருமாத காலம் ஆகிவிட்டது.. 


விஷ்ணுவும் துளசியும் முன்பே கேரளா சென்று விட்டனர்.. மித்ராவிற்கு துணையாக..


வேலைகள் முடிந்ததும்.. மீதமுள்ள அனைவரும் கேரளாவிற்கு கிளம்பினர்..


மித்ரா..  மிகுந்த எதிர்பார்ப்புடனும்.. மனம் முழுக்க தன் மகளை நேரில் பார்த்து தொட்டு தூக்கும் தருணத்தையும் எண்ணி.. மகிழ்மதிக்காக..  ஆசையாக காத்து இருந்தாள்..


மருத்துவமனைக்கு அனைவரும் வந்து சேர்ந்த நொடி..


ஹரியின் கையில் இருந்த குழந்தையை வாங்கி வாரி தன் நெஞ்சுடன் சேர்த்து..   இறுக அணைத்துக்கொண்டாள்..  


எத்தனை நாள் குழந்தையை இழந்து தவித்துக்கிடந்தாள்..


குழந்தையின் குண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட மித்ரா…  


தன் உதிரத்தில் தோன்றியவளை..  இறுக்க அணைத்துக் கொண்டுச்சென்று..  


பிரித்திவ்வின் அருகில்  மகிழ்மதியுடன் உட்கார்ந்தவள்..  ஆழ்ந்த சயனத்தில் இருப்பவனிடம்.. குழந்தையை காட்டி.. பேசத் தொடங்கினாள்…


சில வினாடிகளில் மகிழ்மதியின், ஈர உதடுகள், தன் தந்தையின் ‌கன்னத்தில் ஆழ பதிந்து..  அவனை பற்றி இழுத்து எழுப்ப  தொடங்கியது…


பார்த்து கொண்டு இருந்த அனைவரையும் அக்காட்சி கசக்கி பிழிந்தது…


நன்றாக வாழ வேண்டிய வயதில் இருக்கும்..   இருவரின் நிலையை எண்ணி…


ஹரியும் ருத்ரனும் மித்ராவிற்கு..  அதிக மன தைரியத்தைக் கொடுத்து இருந்தனர்..  


நிச்சயம் பிரித்திவ்வை விரைவில் குணமடைய செய்துவிட முடியும் என..


மறுநாளே அனைத்தும் தயாராக இருக்க..


கொச்சினில் இருந்து அமெரிக்காவிற்கு "ஏர் ஆம்புலன்ஸ்" (Air Ambulance) மூலம் பிரித்திவ்வை அழைத்து சென்றனர்…


உடன் விஷ்ணு துளசி மித்ரா அனைவரும்..


தனக்கு யாரும் இல்லை என்று நினைத்த பிரித்திவ்வை, சுற்றி இன்று அத்தனை உறவுகள்…  அவன் தான் யாரையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றான்…


சியாட்டிலில் உள்ள உலக புகழ்பெற்ற, நரம்பியல் சம்பந்தப்பட்ட மருத்துவ மனையில் பிரித்திவ்வை அட்மிட் செய்தனர்.. 


அவ்வாரமே பிரித்திவ்விற்கு தலையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து..  சில கட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு..  மற்றவற்றை எலக்ட்ரிக் டிவைஸ் கொண்டு கரைத்து அப்புறப்படுத்தினர்..


அறுவை சிகிச்சைக்கு பிறகு ப்ரித்திவ்வின்..  ரிப்போர்ட்டுகள் நார்மலாக வந்துவிட்டு இருந்தது.. ஆனால் இன்னும் அவன் தான் கண் முழிக்கவில்லை..


பிசியோதெரபி வைத்து தினமும் பிரித்திவ்வின் உடலிற்கு அசைவுகள் கொடுக்கப்பட்டது..


நாட்கள் கடக்க, பிரித்திவ்வின் மூடிய கண்களில் இருந்து ஓயாமல் நீர் வழிய தொடங்கியது..  டாக்டர்கள் இது நல்ல சிம்டம்..  ஞாபகங்கள் திரும்ப தொடங்குகின்றது..  என்று சொன்னார்கள்..


ஆதித்தியன் வந்து பிரித்திவ்வை பார்த்துவிட்டு சென்றான்..


கிட்டத்தட்ட  ஒருமாதத்திற்கு மேல் கடந்த நிலையில்.. ஒரு நாள்.. பிரித்திவ்வின் கைகளை பற்றியப்படி மித்ரா அமைதியாக படுத்து இருந்தாள்..


அப்பொழுது மித்ராவின் கை விரல்களை பிரித்திவ்வின் கை அழுந்த பற்றியது.. 


உடனே பிரித்திவ்வின் அழுத்தத்தை உணர்ந்த   மித்ரா..  எதிர்பார்ப்புடன் எழுந்து பிரித்திவ்வின் முகத்தை பார்த்தாள்..


பிரித்திவ்வின் கண்கள் அக்கணம் திறந்து இருந்தது.. 


மித்ராவின் கண்களை தான் அவன் கண்கள் நோக்கியது..


மித்ராவிற்கு கண்களில் இருந்து, நீர் பெருக்கெடுத்தது..


" ராஜ்" என்றாள் அழுகையுடன்..


அக்கணமோ உடனே பிரித்திவ்வின் கண்கள் மீண்டும் மூடிக்கொண்டது… 


அதிர்ந்துப் போன மித்ரா நர்ஸை அழைக்கும் பட்டனை அழுத்திவிட்டு..  அவனுக்கு மூச்சு உள்ளதா என பொறுத்தப்பட்ட கருவியில் பார்த்துவிட்டு…


"ராஜ் இப்ப எழுந்து என்னை பாத்தீங்க இல்ல.. உண்மை தானே… பிளீஸ் திருப்பி கண்ணை திறந்து என்னை பாருங்க… என்னால முடியல ராஜ்… இந்த வாழ்க்கையை நீங்க இல்லாம என்னால கடக்க முடியல.. பிளீஸ் எனக்காக எழுந்துறிங்க", என அழுது கதறினாள்..


பிரித்திவ்வின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.. அவனின் கை கால்களின் விரல்கள் கூட அசைய தொடங்கியது..  


மீண்டும் முயன்று பிரித்திவ், தன் கண்களை திறந்து மித்ராவை பார்த்தான்.. 


முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு இருந்தது.. 


பிரித்திவ் பேச முயன்றும் அவனால் பேச முடியவில்லை…


மீண்டும் மித்ராவின் கை விரல்களை அழுந்த பற்றினான்..


அவன் உதடுகள் "புஜ்ஜி" என்று சத்தம் எழுப்பாமல் அசைந்தது..


அதை உணர்ந்துக்கொண்ட மித்ராவிற்கு நெஞ்செல்லாம் குளிர்ந்தது.. அவள் உதடுகள் நீண்ட தினங்களுக்கு பிறகு மகிழ்ச்சியை பொழிந்தது…


பிரித்திவ்வின் உதடுகளும் லேசாக விரிந்தது..


அடுத்த ஒருசில நிமிடங்களில், டாக்டர் குழு ஒன்று ப்ரித்திவ்வை சுற்றி சூழ்ந்தது..  விடுவிடுவென்று பிரித்திவ்விற்கு அனைத்து பரிசோதனைகளும் செய்தனர்..


மித்ரா ஹரிக்கு அழைத்து கூற, சிறிது நேரத்தில் ஹரியும், மருத்துவமனைக்கு ஓடி வந்து விட்டான்..


டாக்டர்கள்..  ஒன்றும் பிரச்சனை இல்லை.. பிரித்திவ் இன்னும் இரண்டு மாதத்தில் முழுமையாக குணம் அடைந்து விடுவான்..  என்றும்..  தொடர்ந்து பிசியோ தெரபி செய்தால்தான் அவனுக்கு உடலின் அசைவுகள் நன்றாக வரும் என்றும்..  அவனுடன் பேசிக் கொண்டே இருக்குமாறு கூறிவிட்டு..  ஹரியின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துவிட்டு.. கிளம்பினர்..


தினமும் பிரித்திவின் உடல் சிறிது சிறிதாக முன்னேற  தொடங்கியது..


விஷ்ணுவிற்கும் துளசிக்கும் மனதில் இருந்த பாரம் இறங்கத் தொடங்கியது..


ஒரு மாதத்திற்கு பிறகு பிரித்திவ்வை வீட்டிற்கு அழைத்து வந்தனர்..


அன்னபூரணி மிகவும் மகிழ்ச்சியாக..  துளசியுடனும்..  விஷ்ணுவுடனும்..  வீட்டில் இருந்தார்..  


விஷ்ணுதுளசியும் அமெரிக்க வாசி ஆகிவிட்டனர்..


ருத்ரன் மட்டும் ஒரிரு முறை தனியாக வந்து பிரித்திவ்வை பார்த்து விட்டு சென்றான்..


ருத்ரனுக்கு பிரித்திவ் கண்ணை திறந்தப்பின் தான் மனமே நிம்மதியானது..


பிரித்திவ்வால் தொடர்ந்து  நடக்கவெல்லாம் முடியவில்லை..  கொஞ்சம் கொஞ்சமாக நடக்கவும்..  பேசவும்..  ஆரம்பித்து இருந்தான்…


மித்ரா பிரித்திவ்வை..  24 மணி நேரமும்..  சிறிதும் சலிக்காமல்..  ஒரு தாயாக இருந்து..  அவனுக்கு சேவை செய்து பார்த்துக் கொண்டாள்..


ஹரி மிதிலாவின் குழந்தையும் நாளுக்கு நாள், மிதிலா வயிற்றில் வளமாக, வளர்ந்துக் கொண்டிருந்தது.. 


இப்பொழுது அவளுக்கு ஆறாவது மாதம்..


மகிழ்மதியும் இப்பொழுது..  ஒரிரு வார்த்தை..  பேச ஆரம்பித்து இருந்தாள்..


குழந்தை பிறந்ததும்.. ஆறு மாதத்திற்கு பிறகு..  மிதிலா மருத்துவ கல்லூரிக்கு செல்ல வேண்டும்..


துளசியின் கவனிப்பில் மிதிலா பழையபடி பளபளவென ஹரியின் ஜிகிளியாக ரெடியாகி இருந்தாள்..


ஹரி தான் அவளிடம்  "வாக்கிங் வா பேபி.. நிறைய ஸ்வீட் சாப்பிடாதே.. பேபி வெயிட் அதிகமாகிட்டா.. டெலிவரி கஷ்டம்… ", என கெஞ்சிக் கொண்டு இருந்தான்..


நாட்கள் அழகாக இறக்கை கட்டி பறக்க தொடங்கியது...


மிதிலாவிற்கு அன்று வீட்டிலேயே சீமந்தம் செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்..


பிரித்திவ் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் நடக்கவும்.. அவனே அவன் வேலைகளை செய்யவும் தொடங்கி இருந்தான்..


அன்று மாலை தோட்டத்தில் பல வண்ண மலர்களால்..  உட்கார மேடையும் நாற்காலியும் அமைத்து..  


தோட்டம் முழுக்க லைட் செட்டிங் செய்து..  அனைவரும் உட்கார வசதியாக அலங்கரித்து இருந்தனர்..


மிதிலா, அடர் பச்சை வண்ணத்தில்.. மெரூன் பார்டர்…  வைத்த பட்டில்.. முழுக்க கண்ணன் தவழ்ந்து செல்வது போல் நெய்யப்பட்ட புடவையில்..  தன் ஒன்பது மாத வயிற்றை பற்றியபடி… ஐந்தே கால் அடி.. தங்க சிலையாக…  அழகு ரதி ஒன்று அசைந்து வருவது போல்.. 


அதே நிற பட்டு பாவாடை சட்டை அணிந்து இருந்த  மகிழ்மதியின் கையைப் பற்றியப்படி, அழகாக நடந்து வந்து.. அம்மலர் வனத்தினுள் நுழைந்து அமர்ந்தாள்..


அனைவரும் வரிசையாக வந்து நலுங்கு வைக்க ஆரம்பித்தனர்..


துளசி மகளுக்கு, தன் கைகளில் இருந்த வளையலை கழற்றி போட்டு விட்டு.. அவளை ஆசிர்வதித்தார்...


வந்திருந்த அனைவரும் நலங்கு வைத்து முடிக்க, இறுதியாக மேடையேறிய ஹரி, ஆழகான வைர மாலை ஒன்றை மிதிலாவின் கழுத்தில் போட்டுவிட்டு.. அவள் கையை பற்றி நவரத்தினங்களால் கட்டப்பட்ட வளையலையும் போட்டு.. அவளின் பளிங்கு கன்னத்தில் சந்தனம் பூசி… குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து, அட்சதையை தூவி, அன்றைய நிகழ்ச்சியை முடித்து வைத்தான்…


அனைவரும் உணவு உண்ண கலைந்து சென்றனர்…


ஹரி முதலில் பிரித்திவ்விற்கும், மித்ராவிற்கும்… தனியாக அனைத்து உணவுகளையும் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு.. அவர்கள் அறைக்கு சென்றான்.. 


அவன் உடனே மகிழ்மதியும் ஓடிவந்து விட்டாள்...


பிரித்திவ்விற்கு குளிர் தாங்க முடியாததால், நிகழ்ச்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உள்ளே வந்துவிட்டு இருந்தனர்…


ஹரி மித்ராவிடம் உணவைக் கொடுத்துவிட்டு சென்றான்…


மித்ரா பிரித்திவ்விற்கு உணவினை எடுத்து ஊட்ட ஊட்ட.. மகிழ்மதியும்… தன் பிஞ்சுக்கரத்தால் உணவினை எடுத்து ஒருபுறம் பிரித்திவ்விற்கு ஊட்டினாள்..


வேறு என்ன வேண்டும் பிரித்திவ்விற்கு..


தன் இரு தேவதைகளின் கையில் உணவு உண்டவன்.. தன் ஜென்ம பலனை அடைந்தான்..


அதே நாள் அங்கு திருச்சியையே ஒன்றுக்கூட்டி, சாஹித்தியாவிற்கு சீமந்தம் செய்தான் ருத்ரன்…


இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மிதிலாவிற்கு முதலில் பிரசவ வலி வந்து விட்டது…


ஹாஸ்பிடலை இரண்டாக்கி… ஹரியை தலையால் தண்ணீர் குடிக்க வைத்து… அழுது.. கதறி‌…  இப்படி வலிக்கும்னு தெரிஞ்சும்.. ஏன்டா என்னை இப்படி பண்ண… என ஹரியை போட்டு திட்டி, அவனை அடித்து….  அதிர செய்து என‌ அனைத்தும் முடிந்த பிறகு… 


இறுதியில் ஒரு வழியாக ஹரி கிருஷ்ணா மற்றும் மிதிலாவின் புதல்வன்,  "பிரக்ஷித் அபிமன்யு" இந்த உலகத்தில் தன் காலடியை எடுத்து வைத்தான்…


குழந்தையை முதன் முதலில் தன் கரத்தில் ஏந்திய ஹரி, முதல் வேலையாக குழந்தையின் பாதத்தில் தன் இதழை பதித்து, நர்ஸ் நீட்டிய மெல்லிய வெள்ளை துண்டில் சுற்றி, மிதிலாவின் மார்பில் தவழவிட்டான்..


அத்தனை நேரம் கத்தி ஓய்ந்த மிதிலாவின் இதழ்களும் குழந்தையின் நெற்றியில் பதிந்து மீண்டது..


மேலும் ஒரு வாரம் கடக்க, ருத்ரன்.. சாஹித்யாவிற்கு..  மகள் பிறந்தாள்…


ருத்ரன் தன் அன்பு மகளுக்கு  "சமிக்ஷா"... என பெயர் சூட்டினான்..


நாட்கள் மாதங்களாக உருண்டோட..


பிரித்திவ் பரிபூரணமாக குணமடைந்து விட்டு இருந்தான்..


விஷ்ணு, துளிசி, பிரித்திவ், மித்ரா அனைவரும் இந்தியா செல்ல தயாராகினர்…


அவர்களும் எப்பொழுதிலிருந்தோ இந்தியா கிளம்பிக்கொண்டு தான் இருந்தனர்..


ஹரி தான், தோ இதோவென்று, இத்தனை மாதங்களாக தடுத்து விட்டு இருந்தான்.. 


கிளம்பும் நாளும் வந்து சேர, ஹரி ஒரு நொடிப்பொழுதும் மகிழ்மதியை விட்டு அகலவில்லை..

அவன் முகமே முற்றிலும் வாடிவிட்டது…


அவனின் மனதில் உருண்டு திரண்டு கொண்டிருந்த உணர்வுகள் மகிழ்மதியே.


"டாட் டாட்" என்று, அவனின் கரங்களில் இரண்டு வருடங்களுக்கு மேலாக தவழ்ந்தவள் இனி அவனுக்கு இல்லை..


வாசலில் அனைவரும் ஒன்றாக ஏர்போர்ட் செல்ல பெரிய கார் வந்து நின்றது..


முதலில் லக்கேஜ்களை ஏற்றிவிட்டு.. விஷ்ணுவும் துளசியும் காரில் ஏறி அமர…


அடுத்து பிரித்திவ்வும் மித்ராவும் விடைப் பெற்றுக்கொண்டு கிளம்பினர்…


ஹரியின் கைகளில் இருந்த மகிழ்மதியை அவர்கள் வாங்கவில்லை..


அதனை உணர்ந்த ஹரி, "மித்து..  மகி பேபிய..  விட்டுட்டு போற‌ பாரு.",. என்று ஓடி வந்து, காரினுள் அமர்ந்து இருந்தவளிடம் நீட்ட....


மித்ரா அருகில் அமர்ந்து இருந்த பிரித்திவ்வின் முகத்தை பார்த்தாள்…


தன் கண்களை மூடி திறந்த பிரித்திவ்  "மகிழ்மதி உங்களோட பொண்ணு தானே அண்ணா..  நீங்கதானே அவளை பார்த்துக்கணும்..  நாங்க எப்படி கூப்பிட்டு போறது.. ", என்றான் புன்னகையுடன் ..


ஹரிக்கு ஷாக் அடித்ததுபோல் இருந்தது பிரித்திவ்வின் சொன்னதை கேட்டவுடன்.. 


ஹரி, "நோ நோ இல்ல பிரித்திவ்..  மகிழ்மதி உங்க பொண்ணுதான்..  நான் கொஞ்ச நாள் தான் வச்சு இருந்தேன்..  கண்டிப்பா அவ உங்களுடைய குழந்தை தான்.. உங்களோட சொத்து அவ.. உங்க கூட தான் இருக்கணும்..  அதுதான் நியாயமும்..", என்று, உடனே மித்ராவின் கையில் குழந்தையை  கொடுத்து விட்டான்..


இரண்டு தினங்களுக்கு முன்பு அன்னபூரணி…  ஹரியின் முகம் மிகவும் சோர்ந்து காணப்படுவதை பார்த்து…  ஹரியை தனது அறைக்கு அழைத்து சென்று… "என்ன கண்ணா ஆச்சு..  முகம் ரொம்பவும் வாட்டமா இருக்கே…  அம்மாகிட்ட சொல்லு கண்ணா", என்று விசாரித்தார்..


அப்பொழுது பார்த்து அன்னபூரணிக்கு குடிக்க..  மித்ரா சூப் எடுத்து வந்து இருந்தாள்…  


வந்தவள் காதில் தாய் மகனின் உரையாடல் தெளிவாக விழுந்து தொலைத்தது.


ஹரி "மகிழ்மதி மாம்",  என்றவன், அன்னப்பூரணியை அணைத்துக் கொண்டான், தன் முகத்தை மறைத்தபடி..


எத்தனை வயதானாலும் ஒரு தாய்யின் முன் மகன் குழந்தை தானே..


மிதிலா முன்பு கூட அவன் தப்பி தவறி தன்‌ எண்ணத்தை காட்டிக் கொண்டதில்லை.. நிச்சயம் இவ்விஷயம் தெரிந்தால் அவள் ஹரிக்காக சென்று பேசுவாள் என்று அவனுக்கு தெரியும்..


ஹரி,  "மகிழ்மதி என்னோட பொண்ணுன்னு நான் நினைச்சுட்டேன் மாம் …  என்னால அவள பிரிய போறத…  ஏத்துக்கவே முடியல.. எனக்கு தெரியும்..  பிரித்திவ் மித்ராவுக்கு தான் குழந்தை மேல முழு உரிமை…  அதைவிட அவங்க ரொம்ப பாவம்…  ஆனாலும் என்னோட மனசு தாங்க மாட்டுது மாம்... ஷி ஈஸ் மை லிட்டில் பிரின்சஸ்",  என்றான் வேதனையாக…


தன் பொருள் தனக்கு மட்டுமே என்ற குணம் உடைய ஹரியினால் மகிழ்மதியை விட்டுத் தர முடியவில்லை..


மிதிலாவிற்குமே, பிறந்த நொடி முதலில் இருந்தே, அவள் தன் கரத்தினுள், வைத்து வளர்ந்திருந்த மகிழ்மதியை பிரிய வருத்தும் இருந்து இருந்தாலும், அவளுக்கு மகிழ்மதியை தன் உடன் பிடித்து வைப்பதை காட்டிலும், தன் அக்கா, தன் மாமா, அவர்களின் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டு இருந்தாள். பிரித்திவ்வின் தன் மகள் மீதான ஆசையை அவள் நேரில் வேறு கண்டு இருந்தாளே..!


ஹரி பேசியதை, மித்ரா கேட்டுவிட்டு போய்..  பிரித்திவ்விடம் சொல்லிவிட்டாள்…  


இன்று மிதிலா…  மகிழ்மதி..  பிரித்திவ்.. என்று அனைவரும் உயிருடன் வாழ்வதற்கும்.. அத்தனை ரிஸ்க் எடுத்து, அவர்களுக்காக ஆதிகேசவனை அழித்ததற்கும்.. காரணம் ஹரியே…  


எந்தவித பிற்பலனும் எதிர்பாராது, யாரோ ஒரு குடும்பத்திற்கு, யார் இதையெல்லாம் செய்வர்.


அவன் தங்களுக்காக இவ்வளவு செய்த பிறகும்..  அவர்களால் ஹரியை எவ்வாறு வேதனை கொள்ள செய்யமுடியும்..


ருத்ரன் அன்று தெய்வாதினமாக, ஆதிக்கேசவன் கடத்தி வைத்து இருந்த மிதிலாவை பார்க்கவில்லை என்றாலும் கூட, மிதிலாவும், மகிழ்மதியும் ஹரியுடன் சந்தோஷமாக வாழ்ந்து இருந்து இருப்பர்.


அதைத்தொடர்ந்து வீட்டில் அனைவரும் ஒன்றாக பேசி முடிவெடுத்து.. தங்களின் ஒரே மகள் மகிழ்மதியை..  இதோ ஹரிக்கே கொடுத்து விட்டனர்… 


ஹரி எவ்வளவு மறுத்தும் மகிழ்மதியை ஹரியிடமே கொடுத்துவிட்டு…  சட்டப்படி தத்து எடுப்பதற்கான டாக்குமெண்ட் முதற்கொண்டு அத்தனையும் கொடுத்துவிட்டு..  மித்ராவும் பிரித்திவ்வும் இந்தியா நோக்கி கிளம்பினர்…


யாருக்கு வரும் இம்மனம்…  


அன்று மிதிலா வேறொருவரின் மனைவி என்று தெரிந்து இருந்தாலும், ஹரி அவளின் மனதையே பார்த்து ஏற்றான், குழந்தையும் அவ்வாறே.


உண்மை தெரிய வரும் அந்த நிமிடம் வரை அவன் ஒரே ஒரு வினாடிக்கூட மிதிலாவிற்கு தான் இரண்டாவது என்றோ.. மகிழ்மதி வேறொருவரின் மகள் என்றோ அவன் தன் சிறு செயலில் கூட காட்டியது இல்லை.. அதே போல் தான் அன்னபூரணியும்..


அந்த தூய உள்ளத்திற்கு பரிசாகவே, மீண்டும் அவனிடம் மகிழ்மதி..


நாட்கள் செல்ல…


மிதிலா மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, தினமும் சென்று வர ஆரம்பித்தாள்…


இரண்டு குழந்தையும் பகலில் அன்னபூரணியின் பொறுப்பு.. மற்ற நேரத்தில் ஹரி பார்த்துக்கொள்வான்.. 


மிதிலாவின் படிப்பு பளுவை புரிந்து, அவளுக்கான நேரத்தை கொடுத்து விட்டனர்..


மாதங்கள் உருண்டோட…


ஹரி, ருத்ரனிடம் பேசி பிடிவாதமாக பிரித்திவிற்கு சியாட்டலிலேயே… உள்ள யுனிவர்சிட்டியில்..  வேலைக்கு விண்ணப்பிக்க வைத்து…  


பிரித்திவ், மித்ரா, விஷ்ணு மற்றும் துளசியை மீண்டும் அமெரிக்காவிற்கு தங்களுக்கு அருகிலேயே வர வைத்து விட்டான்..


மித்ராவும் அமெரிக்காவிலேயே பிளே ஸ்கூல் வைப்பதற்கான படிப்பை, மீண்டும் கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு…  வீட்டிலேயே பிளே ஸ்கூல் ஒன்றை ஆரம்பித்து விட்டாள்… டீச்சர் ஆக வேண்டும் என்ற அவளின் கனவும் நிறைவேற்றப்பட்டது...


விஷ்ணுவும் துளசியும், பிரித்திவ் மித்ராவிற்கு உதவியாக அவர்களுடன் இருந்து, பள்ளிக்கு வரும் குழந்தைகளுடன் சேர்ந்து தங்கள் மன பாரத்தை கரைக்க தொடங்கினார்கள்…


*********************************

எபிலாக் : 1


ஆறு வருடங்களுக்கு பிறகு…..


அனைவரும் மாபெரும் அரங்கம் ஒன்றில் கூடி இருந்தனர்…


ருத்ரன் மற்றும் சாகித்யா அவர்கள் குழந்தை சமிக்ஷாவுடனும்..  


பிரித்திவ், மித்ரா அவர்களின், நான்கு வயது மகள் ஆரோய்யி உடனும்..  


ஹரி, தன் மகள் மகிழ்மதி, மற்றும் மகன் பிரக்ஷித் உடனும் என்று அமர்ந்து இருந்தனர்.. 


இவர்களுடன் அன்னபூரணி, விஷ்ணு, மற்றும் துளசியும் வாயிலை பார்த்தவாறு அமர்ந்து இருந்தனர்…


அப்பொழுது பல இசைக்கருவிகள் ஒலிக்க, பல மாணவர்கள் ஒன்றாக அணிவகுத்து பட்டமளிப்பு விழாவிற்கு நடந்து வந்தனர்.. 


அதில் தன் பேபியை கண்ட ஹரியின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது…


பட்டமளிப்பு விழாவிற்கான வெள்ளை நிற கவுனில்…  தனது 6 மாத கருவை சுமந்தபடி…   நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு..  மகிழ்வாக நடந்து வரும் மிதிலாவையே…  குடும்பத்தில் இருந்த அனைவரின் கண்களும் நோக்கியது..


விஷ்ணு துளசிக்கு சொல்லவே வேண்டாம்.. தன் மக்கள் என்றும் இன்றுப்போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்..


அனைத்து மாணவர்களும் முன்புறம் அமர வைக்கப்பட்டனர்…


முதலில், பட்டமளிக்க வந்திருந்த விருந்தினர்களின் உரையாடல் நடந்தது..


அடுத்து பட்டங்களை வழங்க, மாணவர்களை லிஸ்ட்டில் உள்ள பெயர்படி வரிசையாக நிற்க வைத்து முடிக்க..


மேடையில், மைக்கில், முதல் பெயராக, வாஷிங்டன் யுனிவர்சிட்டி  டாப்பர், டாக்டர்.மிதிலா ஹரிகிருஷ்ணன்.. என்று அவ்வரங்கம் முழுக்க மிதிலாவின் பெயர் ஒலிக்க.. 


அதன் உடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின், கைத்தட்டல் பறந்து வந்து, அவளை கௌரவிக்க..


மிதிலா மகிழ்ச்சியுடன் மேடையேறி சென்று, அவளுக்கு கொடுத்த தங்க மெடலையும்…  எம்பிபிஎஸ் கிராஜுவேஷன் சர்டிபிகேட்டையும்..  ஷீல்டையும் வாங்கிக்கொண்டு கீழே இறங்கி வந்தாள்…


குடும்பத்தில் இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கைதட்டி அவளின் வெற்றியை கொண்டாட..


மிதிலா தன் கழுத்தில் இருந்த மெடலை, விஷ்ணுவின் கழுத்தில் போட்டு.. சர்டிபிகேட்டை துளசியின் கையில் கொடுத்து.. ஷீல்டை அன்னபூரணியிடம் கொடுத்துவிட்டு வந்து..


ஹரியின் இதழில் தன் இதழை பதித்து‌‌.. தன் வெற்றியை கொண்டாட..


பிள்ளைகள் ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டனர்.


விழா முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாக, மதியத்திற்கு மேல் வீட்டிற்கு கிளம்பினர்…


பிரித்திவ்வின் காரில், விஷ்ணு துளசி, மித்ரா மற்றும் அவர்களின் குழந்தை ஆரோயி கிளம்ப..


மீதம் இருந்தவர்கள் ஹரியின் காரில் கிளம்பினர்.‌


அப்பொழுது ருத்ரன் தான், ஹரியின் காரை ஓட்டினான்..  


பின்புறம் மிதிலா குழந்தைகளுடன் அமர்ந்து இருந்தாள்.. 


கார் வீட்டிற்கு செல்லாமல் வேறு வழியில் செல்ல தொடங்கியது..  


ஹரியும் மிதிலாவும் கவனித்து கேட்க…  ஒரு சின்ன சர்ப்ரைஸ் என்று ருத்ரன் முடித்துக் கொண்டான்..


அடுத்த பத்து நிமிடத்தில், கார் ஒரு மிகப்பெரிய வளாகத்திற்குள் நுழைந்து…  புதிய..  பல பெரிய கட்டிடங்களுக்கு முன்பு நின்றது… 


இவர்களுக்கு முன்பே பிரித்திவ்வின் கார் அவ்விடத்திற்கு வந்துவிட்டு இருந்தது..


ருத்ரன் இறங்கி, மிதிலா பக்க கதவை திறந்து, அவளின் கையை பற்றி அழைத்து சென்றான்..


குடும்பத்தில் இருந்த அனைவரும், ஒன்றும் புரியாது, ருத்ரனை பின் தொடர்ந்தனர்….


கட்டிடத்தின் வெளித்தோற்றம் மற்றும் பெயர்ப்பலகை அனைத்தும் மறைக்கப்பட்டு இருந்தது..


நுழைவு பகுதிக்கு முன்பு மேடை அமைத்து  இருந்தனர்…


கீழே பல நூறு மக்கள் அமர்ந்து இருந்தனர்..


மிதிலாவும் ருத்ரனும் அவ்விடத்திற்குள் நுழைய, மெல்லிய இசை அவ்விடம் முழுக்க ஒலிப்பரப்பப்பட்டது..


ருத்ரனுடன் நடந்த மிதிலா, அதைப்பார்த்து, "ருதுமா..  நாம எங்க போயிட்டு இருக்கோம்…  இது என்ன பில்டிங்..  உங்களுக்கு தெரிஞ்சவங்களோட பங்க்ஷனா இங்க… ",  எனறு சுற்றிப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.. 


ருத்ரன், "வெயிட் பண்ணு மிது.. கொஞ்ச நேரத்தில் உனக்கே தெரியும்..", என்று மிதிலாவை அழைத்துச்சென்று, நுழைவு வாயிலுக்கு முன்பு, அந்த கட்டிடத்தில் நிற்க வைத்தவன்..


அவளின் கரத்தில், ஒரு ரிமோட் கொடுத்து அழுத்தக்கூற…


அங்கிருந்த அனைவரும் இவர்களிடம் வந்துவிட்டு இருந்தனர்.


ஹரிக்கு, அவனுக்கு தெரிந்த, சில டாக்டர்களை அங்கு பார்த்தவுடனே, அது என்னவென்று புரிந்து விட்டது..


மிதிலா அதிர்ந்து விழிக்க, ருத்ரன் மிதிலாவின் கைப்பற்றி, அவளின் விரலை அவனே பட்டனில் பொறுத்தி, அழுத்தினான்..


கட்டிடத்தின் முன் புறம் முழுக்க கவரினால் மூடப்பட்டு…  மேலே ஒரே ஒரு த்ரெட்டின் மூலம்…  அனைத்தும் இணைக்கப்பட்டு..  இருந்தது…


பட்டனை அழுத்திய மறுநொடி, மளமளவென மேலிருந்த பேப்பர்கள் அனைத்தும்  கீழே சரிந்து வந்தது…


அங்கே மிகப்பெரிய அளவில்.. அரோரா சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல் என்று பெயர் பொறிக்கப்பட்ட பலகை மின்னிக்கொண்டு இருந்தது…(Aurora Children's hospital)


அரோரா- புதிய தொடக்கம் என்று பொருள்.


உள்ளே முழுக்க முழுக்க தீம்பார்க் போன்ற அமைப்பில்… குழந்தைகள் நன்றாக விளையாடும் படி அந்த மருத்துவமனை அமைக்கப்பட்டு இருந்தது…


மிதிலா ஆசைப்பட்ட வகையிலேயே அமைக்கப்பட்ட…  குழந்தைகள் மருத்துவமனை அது..


அன்று ஐஸ்க்ரீம் ஷாப்பில் ருத்ரன் மனதில் மிதிலாவை எம்பிபிஎஸ் படிக்க வைத்து…  அவளுக்கு ஹாஸ்பிடல் கட்டித்தர வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்…


ருத்ரன் அன்று தன் மனதில் எடுத்த வாக்கை, இன்று நிறைவேற்றி இருந்தான்...


கீழே மருத்துவமனையின் டைரக்டர்..  என்ற இடத்தில் இருந்த மிதிலாவின் பெயரை பார்த்ததும்… மிதிலா பதறி ஹரியின் கையை பிடித்து இழுத்து... என்ன இது என்று கேட்க...


ருத்ரன், "உன்னுடைய ஹாஸ்பிடல் தாண்டா…  உனக்காக உனக்கு பிடிச்ச மாதிரியே அமைச்சது…  பிடிச்சு இருக்கான்னு மட்டும் பார்த்து சொல்லு..", என்றான் ஆசையாக..


மிதிலாவை, ஹரி பேசு என்பது போல் கண்ணை காண்பித்தான்.. 


மிதிலா "நான் இன்னும் எம்டியே பண்ணலையே..  ஏன் அதுக்குள்ள ஹாஸ்பிடல் கட்டனீங்க ருதுமா… உங்களுக்கு நிறைய செலவு ஆகியிருக்குமே," என்று தயங்க..


ருத்ரன் சிரித்துக்கொண்டே "இங்க இருந்தே பிராக்டிஸ் பண்ணுங்க டாக்டர் குட்டி மேடம்... அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.. வா உள்ளே போகலாம் ", என அழைத்துச் சென்று, ஹாஸ்பிடலில் முழுக்க சுற்றிக் காட்டினான்…


அங்கேயே மதிய உணவிற்கு ஏற்பாடு செய்து இருக்க.. 


அங்கேயே உணவை முடித்துக்கொண்டு.. சிறிது நேரம் மேனேஜ்மென்ட் பற்றி அனைத்தும் பேசிவிட்டு..


அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.


ருத்ரனும்..  சாஹித்யாவும்..  மருத்துவமனையில் இருந்தே ஏர்போர்ட்டிற்கு செல்வதாக கூற…


ஹரி, மறுத்து "ஏன் ருத்.. மூனு பேரும் ஒரு ஒன் வீக் ஆச்சும் இருங்க..", என..


ருத்ரன், "இல்ல ஹரி.. நாளைக்கு டெல்லியில் மீட்டிங் இருக்கு…  கண்டிப்பா போயே ஆகணும் ஹரி…  நெக்ஸ்ட் மந்த் தங்கற மாதிரி வரேன்…", என்ற விட்டு குழந்தையுடன் கிளம்பிவிட்டான்…


ஆம் திருச்சி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ருத்ரன்..


ஆதிகேசவன் செய்த அனைத்தையும், சரி செய்ய முடியவில்லை என்றாலும், முடிந்த அளவு, ருத்ரன் சரிசெய்து கொண்டு வருகின்றான்…


ஆதிகேசவன், தப்பு செய்யவில்லை என்றால் அடித்து கொல்லுவான்…  


ருத்ரன் தப்பு செய்தால் அடித்து கொல்லுவான்… 


திருச்சிக்கு 30 வருடங்களுக்கு பிறகு விடுதலை கிடைத்து இருந்தது…..


*********************************


அனைவரும் ஆதிகேசவன் என்னும், புயலில் அகப்பட்டு, ஒவ்வொரு புறம் பிரிந்து, சில காலம் பயணித்து இருந்தாலும்…  


எப்படியோ அதில் இருந்து போராடி மீண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களின் மீத வாழ்க்கையை நிறைவாக வாழ ஆரம்பித்தனர்…


                ‌‌ -சுபம்-


*****************************


என்ன நடப்புகளே, சுவாதியின் எழுத்தில், முதன் முதலாக வெளிவந்த, “உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே” கதை உங்களுக்கு பிடித்து இருந்ததா..?


கதை பிடித்து இருந்தால், உங்களின் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்💕


உங்களின் கருத்துக்களை தெரிந்துக்கொள்ள தான், உங்களுக்காக இலவச சைட்டில், கதை பதிவேற்றினேன். கருத்துகளை பகிர்ந்து, என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள் 💕


My Facebook page Link ⏬


https://www.facebook.com/share/Ju8ctLtuBU3j6vTg/?mibextid=qi2Omg


யாருக்கெல்லாம் ஹரி மிதிலாவின் மகளான, மகிழ்மதியின் வாழ்க்கையையும் படிக்க ஆசையாக உள்ளது..!


ஆம், சுவாதியின் எழுத்தில், இரண்டாவது கதையாக, ஹரி மிதிலாவின் மகளாக மகிழ்மதிக்கு, “மகிழ்மதியின் அரசன்” கதை வெளிவந்து உள்ளது.


அதன் லிங்க் கீழே கமெண்ட் பாக்ஸில் உள்ளது.


ஹரியின் காதலை பார்த்தவர்கள்.. அதில் ஹரியின் தந்தை அன்பை பார்ப்பீர்கள்.


அக்கதை பற்றிய சிறு அறிமுகம் 🤗


இந்தியாவில், பத்தாயிரம் கோடிகளுக்கு மேலான ஆஸ்திகளுக்கு ஒரே வாரிசான, மாபெரும் அரச குடும்பத்தை சார்ந்த, இளவரசன் “துருவ் நக்ஷத்திரன் யதுவீர் சாம்ராட்டிற்கும்”, 


அமெரிக்காவை இருப்பிடமாகக்கொண்ட, Business Lawyer “மகிழ்மதி-க்கும்” இடையில் உருவாகப்போகும், காலங்களை தாண்டி வாழப்போகும், காதல் பந்தமே நம் “மகிழ்மதியின் அரசன்” கதை.


அரச குடும்பங்களுக்கு என்றே இருக்கும் பல கெடுபிடிகளுக்குள் இருக்கும் துருவ் நக்ஷத்திரன், எவ்வாறு சாதாரண பெண்ணான, மகிழ்மதியை சந்திந்து, மணம் முடிப்பான், இதனால் இடையில் அவன் சந்திக்கப்போகும் பிரச்சனைகள்..! என்று அனைத்தையும் ஊடல், காதல், கூடல், ரொமான்ஸ், நட்பு, ராஜ வம்சம் என்று பல சுவாரசியங்களை, சேர்த்து, இந்நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது.


இக்கதை நிச்சயம், இவ்வுலகை மறக்க வைத்து, உங்களை மொத்தமாக வேறொரு உலகத்திற்கு, அழைத்துச்சென்று, என்றுமே உங்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கும்.


💖Royal Family Based Romantic Love story 💖


லிங்க் 👇


https://swathilakshmitamilnovels.blogspot.com/2023/07/royal-family-based-romantic-thriller.html


ஆடியோ நாவல் லிங்க்


https://youtube.com/@Swathilakshmitamilaudionovels?si=PRCU9QRnSneYods2


படித்து மகிழுங்கள் 🎶


நன்றி 💖




கருத்துகள்

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻