இடுகைகள்

37.3

ஈஷா, ஈத்தனுக்கு வழிவிட்டு தன் நாற்காலியை வேறு பின்புறம் சற்று தள்ளிக்கொள்ள… வேறுவழியின்றி தன் கையில் இருந்த ஸ்பூனை தட்டில் வைத்து ஈத்தன்… ‘குறிஞ்சிக்கு எத்தனை முறை நாம் ஊட்டிவிட்டு இருக்கிறோம். அதுபோல தானே இது’ என்று அவள் குழந்தை உண்டாகி இருந்த சமயங்களிலும், அவள் குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்த நாட்களையும், நினைத்தவாறே குறிஞ்சியின் கையருகே செல்ல… குறிஞ்சிக்கும் வேறுவழியில்லாமல் போனது. அதில் குறிஞ்சியின் விரல்கள், மெல்ல ஈத்தனின் இதழ்களை ஸ்பரிசிக்க தொடங்கி இருந்தன. அதன் பலனாக அவனின் இதழ்களும் அவளின் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்து, உணவை தனக்குள் எடுத்துக்கொள்ள… ஈத்தனின் உமிழ்நீர் குறிஞ்சியின் விரல்களை நனைத்து இருந்தது. அதில், குறிஞ்சி தன் கால் விரல்களை அழுந்த நிலத்தில் பதித்து தன்னை கட்டுப்படுத்த முயன்றுக்கொண்டு இருந்தாள். ஈத்தனுக்கும், ஸ்பூனால் அவன் அவளுக்கு ஊட்டிவிட்டதற்கும், இன்று அவள் கையால் ஊட்டிவிட்டதற்கும் இருக்கும் வித்யாசம் புரிந்திருக்க… அமைதியாக விலகிக்கொண்டு இருந்தான். அவனுக்கும் உணர்வுகள் உண்டு தானே. அவளின் விரல்களில் கதகதப்பு இன்னும் அவன் வாயில் நீங்காது இருக்...

37.2

இன்னுமே தன்னிலை உணராது, கண்கள் எல்லாம் கலங்கி, முகம் மொத்தமும் கலவரம் பூசிக்கொண்டு, மூச்சுவாங்கிய வண்ணம் இருந்த குறிஞ்சியை… “ஹேய் ஈசி கேர்ள்… ஒன்னுமில்லை… இங்கப்பாரு… I’ve got you, you are safe now” என்று ஈத்தன் சமாதானம் செய்ய… குறிஞ்சியின் இதய துடிப்புகள் சீராக சில பல வினாடிகள் பிடித்தது. ‘நல்லவேளை இந்த வயசில் விழுந்துவாரி மானம் போகலை…’ என்று நினைத்தவள்… கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு… அவர் அனுப்பி வைத்த ஈத்தனுக்கும், “தேங்க் யூ சார்…” என்றவள்…  அவனின் முறைப்பில் பல்லை கடித்து, கண்களை சுருக்கி, “அச்சோ சாரி, பதட்டத்தில் மறந்துட்டேன்”, என்று அவனிடம் மன்னிப்பு கேட்டவள், “தேங்க்யூ ங்க…” என்றாள் சாரை விடுத்து. அதில் ஈத்தனின் பார்வையில் இருந்த அனல்… அவனின் கண்களின் நிறத்திற்கு ஏற்ப குளிர தொடங்க… சற்று நிம்மதியான குறிஞ்சியின்‌ உடல், அப்பொழுது தான் அவளின் உடலில் ஏறும் வெப்பத்தை உணர்ந்து இருந்தது! அதில் கீழே விழ போகின்றோம் என்ற போது கூட துடிக்காத அளவிற்கு, அவளின் இதயம் எகிறி குதித்து துடிக்க ஆரம்பித்துவிட்டது… அந்தளவிற்கு, வியர்வையில் குளிர்ந்திருந்த அவளின் மொத்த இடதுப்பக்க இடையையும்,...

37.1

அத்தியாயம் -37 குறிஞ்சி கொடைக்கானல் விட்டு, ஈத்தனுடன் சென்னை வந்து ஒரு மாதத்திற்கு மேல் கடந்துவிட்டு இருந்தது‌. அப்படி இருந்தும், அவர்கள் இருவரின் உறவும் கிணற்றில் போட்ட கல் போல் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நாசுக்காகவே இருக்க... ஈஷா குறிஞ்சியின் உறவு மட்டும், முற்றிலும் அதற்கு எதிர்மாறாக மாறிவிட்டு இருந்தது. ஈத்தன் மற்றும் குறிஞ்சி போல் எவ்வித தயக்கமும் இல்லாமல், தனக்கு பிடித்த குறிஞ்சியுடன் ஈஷா அப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள். அதிலும், ஈத்தன் தவிர்த்து ஈஷா நெருக்கமாக பழகும் முதல் நபராக குறிஞ்சி இருந்தது மட்டுமில்லாது, அவள் பழகும் முதல் பெண்ணாகவும் குறிஞ்சி இருக்க… ஈத்தனுடன் அவள் உறவு ஒரு மாதிரி என்றால், குறிஞ்சியுடன் அவளின் உறவு வேறு மாதிரியாக இருந்தது. குறிஞ்சியை தாயாக பார்ப்பது மட்டுமில்லாமல், புதிதாக தனக்கு கிடைத்த தோழியாகவும் ஈஷா அவளை பார்த்தாள். பாட நேரம் போக, மற்ற நேரங்களில் குறிஞ்சிக்கு வீட்டை சுற்றிக்காட்டுவது, அவளுக்கு பிடித்தவற்றை காட்டுவது என்று ஆரம்பித்த ஈஷா… அப்படியே அவளுடன் சேர்ந்து வரைவது, கிராஃப்ட்(craft) வொர்க் செய்வது, அனிமேஷன் படங்களை பார்ப்பது, ...

36.3 அந்திப்போர்

ஏர்போர்ட்டில் ஐடி(ID) பரிசோதனைகள் நடக்கும் போது தான் குறிஞ்சி ஒன்றை உணர்ந்தாள். எப்பொழுதும் வெளியே பொதுவெளியில் அவளுடன் இருக்கும் பொழுதுகளில் எல்லாம் மாஸ்க் மற்றும் கூலர்ஸூடன் இருக்கும் ஈத்தன். இன்று காலை முதலே அது எதுவும் இல்லாது அவளுடன் இயல்பாக நெருக்கமாக இருந்ததை. உடன் இருந்தவர்கள் செக்யூரிட்டிகளாக இருந்தாலும் கவனித்து இருப்பார்களே என்ற ஐயம் அவளுள் எழுந்தது. போன முறை, ஏர்போர்ட் வந்தப்பொழுது, நர்ஸ் போர்வையில், பல அடி தூரம் அவர்களிடம் இருந்து பின்தங்கி வந்து இருந்தாள். இப்பொழுதோ ஈஷா அவளின் கையையும், ஈத்தனின் கையையும் ஒருசேர பிடித்தப்படி நடக்கவும், உடலெல்லாம் வெலவெலவென வந்தது, குறிஞ்சிக்கு… தங்களை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாதே. அப்படி இருக்கையில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ஈத்தனை குறித்து தவறாக எண்ணுவார்களோ? என்னையும் தவறாக எண்ணுவார்களோ? என்றெல்லாம் சினிமா வெளிச்சத்திற்கு பழக்கப்படாத சாதாரணமான பெண்ணாக அவளுக்கு அச்சம் வந்தது… உடன் இன்னொன்றும் கண்முன் வந்து அவளை கலவரப்படுத்தியது. ஈத்தன் இதை எல்லாம் மறந்துவிட்டானா? என்று நினைத்தவளாள்… அவனை எச்சரிக்கை கூட செய்ய முடியவ...

36.2 அந்திப்போர்

 சர்ப்ரைஸ் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதை விட, சர்ப்ரைஸ் வர போகிறது என்று தெரிந்துவிட்டதில் தான், குறிஞ்சிக்கு கொஞ்சமும் நிலைக்கொள்ளவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்தே மண்டை சூடாகிவிடும் போல் இருந்தது. இதுவரை அவள் சென்றிருக்காத பாதையில் வேறு, கார் வளைந்து நெளிந்து செல்ல… முந்தானையின் நுனியை போட்டு ஒரு வழி செய்துக்கொண்டு இருந்தாள். அவளை சற்று திசை திருப்பும் விதமாக ஈஷா, அன்று காலை தன்னுடைய ஸ்கெட்ச் நோட்புக்கில் வரைந்ததை குறிஞ்சிக்கு பிரித்து காட்ட… குறிஞ்சியின் கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்திருந்தன. குறிஞ்சி இருந்த வீட்டின் ஹாலின் ஒருப்பக்கத்தை, அப்படியே வெறும் பென்சில் கொண்டே அவ்வளவு துல்லியமாக ஈஷா வரைந்து வைத்திருந்தாள்… சுவற்றில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கப்பட்டிருந்த, சாந்தினியின் ஃபிரேம் செய்யப்பட்ட புகைப்படம் தொடங்கி, ஜன்னல் எல்லாம் சேர்த்து, அங்கிருந்த ரோஜா செடி தொட்டிகளை சுற்றி உதிர்ந்திருந்த இதழ்கள் வரை எதையுமே அவள் விடவில்லை… “ரொம்ப அழகா இருக்கு செல்லமா… எப்படி ஒன்னுவிடாமல் எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணி ஸ்கெட்ச் பண்ணீங்க… சான்சே இல்லைடா ம...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates