39.4
இருவரையும், தன் இரண்டு பக்க இடையிலும் கரத்தினை பதித்து மாறி மாறி, தூக்க கண்களுடன் பார்த்த ஈஷா… “என்னோட அலாரத்தை ஏன் பேபி இந்த வருஷமும் ஆஃப் பண்ணிங்க” என்று ஈத்தனிடம் கேட்டவள். குறிஞ்சியின் புறம் திரும்பி, “என்னை ஏன் அம்மா நீங்களும் எழுப்பலை” என்று கேட்கவும்… மொத்தமாக வியர்த்துப்போய் நின்றிருந்த குறிஞ்சி. பதில் கூறும் அளவிற்கெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு, சற்று முன்னர் நடந்த நிகழ்வில், வேலை நிறுத்தம் செய்துவிட்ட தன்னுடைய மூளையை வைத்துக்கொண்டு… திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தாள்… அதனை வெளியில் காட்டாத புன்னகையுடன் பார்த்த ஈத்தன், “நான் தான் பேபி, உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அம்மா கிட்ட சொன்னேன். சாரி”, என்றான். அதில், “போங்க பேபி…” என்று தன் ஒரு காலினை தூக்கி தரையில் மெல்ல உதைத்த ஈஷா… அறைக்குள் ஓடி, மிகப்பெரிய புத்தகம் ஒன்றுடன் வெளிவந்து, “ஹேப்பி பர்த்டே பேபி…” என்று அவன் கையில் அதனை பரிசாக தந்தவள். ஈத்தனை குனிய செய்து, “லவ் யூ பேபி” என்று அவனின் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி தன் இதழ்களை பதித்தெடுக்க… “மீ டு… லவ் யூ சோ மச் பேபி…” என்று, அவளை அணைத்து அவளின் நெற்...