இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

38.5

குறிஞ்சி கூறியதில் முற்பகுதி எந்தளவிற்கு ஈத்தனுக்கு வருத்தத்தை கொடுத்ததோ. அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பிற்பகுதி அவனுக்கு கோபத்தை கொடுத்து இருந்தது. அது தீக்குழி என்று நன்றாக தெரிந்தப்பிறகும், அதில் இறங்கி இருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம். சரி அதுக்கூட, அவளின் அம்மாவிற்காக பயந்துக்கொண்டு போனாள் என்று தள்ளுபடி செய்தாலும், அவர் மறைந்த பிறகும் அவனிடம் அவள் வரவில்லையே. அவன் குத்துக்கல் போல் இருக்கும் பொழுது, எதற்கு அவள் அந்தளவிற்கு யோசித்து, பதறி, பயந்து, யார் யாரின் உதவியையோ நாடி, ஓடி, ஒளிந்து ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். அதிலும் அவளால், அவன் செய்து வைத்தவைகளின் விளைவுகள், Butterfly Effect எனப்படும் பட்டாம்பூச்சி விளைவினை போல், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு, இன்று வரை அதன் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க.  குறிஞ்சியை வெளிப்படையாகவே கோபமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஈத்தன். அதில், “எல்லாம் தான் சொல்லிட்டோமே. இப்ப என்ன!” என்று ஒன்றும் புரியாமல் அதிர்ந்த குறிஞ்சி. மீண்டும் அவனருகில் இருந்து எழுந்துக்கொள்ள பார்க்க. அவளின் மடிமீது தன் கரத்தினை போட்டு. அவளை எழ விடாமல்...

38.4

அன்று,  ஈஷா பிறந்து ஆறுமாதம் கடந்த நிலையில், பேசி வைத்தது போலவே, ஈத்தனின் வீட்டில் இருந்து குறிஞ்சியை பிரபுவும், ஐஸ்வர்யாவும் வந்து அழைத்து சென்றுவிட்டு இருந்தனர். குறிஞ்சி, ஈத்தன் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, பிரபுவிடம் கூறிவிட்டு தான் வந்து இருந்தாள். “அவர் கொடுத்த பணம் எதுவும் எனக்கு வேண்டாம் மாமா. இவ்வளவு தூரம் நீங்களும், அக்காவும் எனக்காக வந்ததே பெருசு. நீங்களே அந்த பணத்தை வச்சிக்கோங்க”, என்று எப்படியும் அவன் அந்த பணத்தை தரமாட்டான் என்பது தெரிந்து, அவளே கூறுவது போல் கூறிவிட்டவள். “அதுக்கு உபகாரமா, இந்த விஷயத்தை யார்கிட்டேயும் முக்கியமா அம்மாக்கும், சித்திக்கும் தெரியாமல் பார்த்துக்கோங்க. நான் ஈத்தன் சாருக்கு குழந்தையை பெத்து கொடுத்துட்டு வந்ததும், அம்மா கூட வேற ஊருக்கு போயிடறேன். ப்ளீஸ்” என்று இருந்தாள். அனைத்திற்கும் பிரபு, பலமாக தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்து, அவளை ஈத்தனுடன் விட்டுவிட்டு வந்து இருந்தான். அவனெல்லாம், ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தாலே, அவள் கூறியதை எல்லாம் செய்து தந்து இருப்பான். இங்கோ இரண்டு கோடி ரூபாய். அவன் கனவிலும் கூட காணாத பணம். ‘இனி ராஜா தான் நான...

38.3

ஒன்னுமில்லை கேர்ள்… இங்க வா…” என்று குறிஞ்சியின் கையைப்பற்றி இழுத்து தன்னருகே மீண்டும் அமர வைக்க பார்த்தான். அவளோ ‘மாட்டேன்’ என்று தலையாட்டியவள், “அப்ப, இத்தனை நாளும் வேலைன்னு என்கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க” என்று இதழ்கள் நடுங்க, அவனை அவள் கேள்வி கேட்க. ஈத்தனின் புருவங்கள் இரண்டும் உயர்ந்து இருந்தன. ‘என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்று அவன் கேட்காமல் கேட்பது போல் இருக்க. குறிஞ்சியின் முகம் மொத்தமாக கசங்கிவிட்டது. குற்றம் செய்த நெஞ்சம் ஆயிற்றே. குறுகுறுத்தது. அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், “சாரி, குறிஞ்சி” என்று வேறு ஈத்தன். அவன் பொய் சொன்னதற்கு அவளிடம் உடனே மன்னிப்பு கேட்டுவிட. குறிஞ்சியின் கண்களில் இருந்து மெல்ல அணையை உடைத்துக்கொண்டு நீர் துளிகள் துளிர்க்க ஆரம்பித்துவிட்டு இருந்தன. அதில், “ஷ். குறிஞ்சி மலர். நான் உன்னை ஒன்னும் கேட்கலை. விடு” என்ற ஈத்தன். அவளை வலுக்கட்டாயமாக இழுத்து தன்னுடன் அமர வைத்துக்கொள்ள. “என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்களுக்கு எந்த விதத்திலும் உண்மையா இல்லை” என்ற குறிஞ்சி.  வானில் மிதக்கும் மேகத்தை விட மென்மையான மனம் கொண்ட தன்னவனுக...

38.2

குறிஞ்சி டீயுடன் அறைக்குள் நுழைந்தப்பொழுது, அங்கு ஈத்தனுடன், ஈஷா மீண்டும் ஐக்கியமாகிவிட்டு இருக்க. ஈத்தனுக்கு டீயினை தந்துவிட்டு, அவர்களை பார்த்தப்படியே அமைதியாக அமர்ந்துவிட்டாள் குறிஞ்சி. ஈஷா, அவளின் ஒருவார கதைகளை ஈத்தனின் மீது சாய்ந்தமர்ந்து கூறியப்படியே இருக்க… அவளிடம் எப்பொழுதும் போல் பேசிக்கொண்டு இருந்த ஈத்தன்… தப்பி தவறிக்கூட குறிஞ்சிப் பக்கம் தன் பார்வையை திருப்பவில்லை. அப்பொழுது மட்டும் இல்லை. இதோ இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து, அவர்களுடன் குறிஞ்சி படுத்தப்பிறகும் அது தொடர்ந்தது. இரவு உணவின் போதுக்கூட, ஈஷா தான் அவளை தங்களின் பேச்சில் இணைத்துக்கொண்டு இருந்தாள்‌. அப்பொழுது கூட ஈத்தனின் பதில்கள் பட்டும் படாமலே தான் இருந்து இருந்தது. ‘ஏன் இப்படி’ என்று நினைத்த குறிஞ்சிக்கு, சட்டென்று நடுக்கடலில் அவளை தனியாக விட்டுவிட்ட உணர்வு. ‘கடவுளே! இதெல்லாம் என் மன பிரமையா தான் இருக்கனும். என்னை அவர் நிச்சயம் ஒதுக்கி வைக்க மாட்டார். அசதியில் தான் அப்படி இருக்கார். பாப்பா சின்ன பொண்ணுன்னு அவகிட்ட அதை காட்டி இருக்க மாட்டார்’, என்று மனதினுள் ஜபம் போல், திரும்ப திரும்ப அவள் அதையே கூறி தன...

38.1

💌👩‍❤️‍💋‍👨 ஹாய் டார்லிங்ஸ் ❤️ அப்டேட் எப்படி இருந்தது. Flashback மொத்தமும் இந்த அப்டேட்ல முடிச்சிடனும்னு முடிச்சிட்டேன். ஈத்தன், குறிஞ்சி கேரக்டருக்கு ஒத்து வரும் போல் எழுதி இருக்கேன். ஓகே வா? எதுவும் நான் மிஸ் பண்ணி இருந்தால் கமெண்ட்டில் பண்ணுங்க❤️  -சுவாதி லக்ஷ்மி 💕 🪻  அத்தியாயம் -38 கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க… கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உடைக்க கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்… என்று காதில், திருமதி சித்ராவின் குரல் தேனாக பாய்ந்தோட. அதில் தன் மனதை ஒன்ற வைக்க முடியாமல், பல்வேறு சிந்தனைகளுடன், ஒரு மரத்தின் கீழே புல்வெளியில் அமர்ந்திருந்தாள் குறிஞ்சி. அவளிடம் இருந்து சில அடிகள் இடைவெளிவிட்டு நின்று இருந்த ஈஷா. அவளின் வெளிநாட்டு ஓவிய ஆசிரியர், ஆன்லைன் வகுப்பு மூலம், வீடியோ காலில் அவளுக்கு சொல்லிக்கொடுக்க கொடுக்க… அங்கு தோட்டத்தில், முழுதாய் மலர்ந்திருந்த ஒரு புத்தம் புதிய ரோஜாவை, பெரிய பெயிண்ட்டிங் கேன்வாஸில், அதற்கேற்ற நிற கலவைகளை துல்லியமாக கொண்டு, அவ்வளவு தத்ரூபமாக மதியத்தில் இருந்து வரைந்துக்கொண்டு இ...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates