இடுகைகள்

4.1-சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘📽️

படம்
அத்தியாயம்-4 சகல வசதிகளுடன் வீடு போலிருந்த உயர்ரக கேரவனின் உள் அறைக்குள் இருந்த சொகுசு படுக்கையில், ஈத்தன் கொடுத்த இரவு உணவை சமத்தாக உண்டுவிட்டு, இலகுவான இரவு உடைக்கு மாறியிருந்த ஈஷா, நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளருகேயிருந்த ஈத்தன் ஈஷாவின் உறக்கம் கலையாத வண்ணம், தொலைபேசியில் சன்னக்குரலில் பேசிக்கொண்டு இருந்தான். அவன் அன்னை சித்ரலேகா ஏதோ கூற, “நோ மாம். நான் விசாரிக்க சொல்லி இருக்கேன். நீங்க எதுவும் தலையிட வேண்டாம். நான் பார்த்துக்கறேன்” என்றான் உறுதியுடன். அதில் சித்ரலேகா, “இதெல்லாம் நம்ம ஸ்டேட்டஸுக்கு தேவையா ஈத்தன்? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு வெளியே சொல்லக்கூடாதுன்னு” என்றவர், எப்பொழுதும் ஆரம்பிக்கும் பல்லவியை ஆரம்பித்துவிட… ஈத்தன் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை.  அழைப்பை துண்டிக்கவுமில்லை. இறுதியில் அவருக்கே வாய் ஓய்ந்து, “இவ்வளவு அழுத்தம் உனக்கு இருக்கக்கூடாது ஈத்தன்” என்றுவிட்டு மூச்சு வாங்க… “சாரி மாம்… ப்ளீஸ் டேக் கேர்…” என்றுவிட்டு ஈத்தன் தொலைபேசியை வைத்துவிட்டான். அதில் கைக்கு அடக்கமாக இருந்த மகனை தொடர்ந்து அப்படியே வைத்துக்கொள்ளாது விட்டுவிட்ட சித்ரலேகாவினால், இப்பொழு...

3.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🫰🪻😘

மகளை முதலில் இங்கிருந்து அழைத்துச்சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிவந்திருந்த ஈத்தன்…  “பேபி…” என்று அவள் தோளில் கை வைக்க. தந்தையின் குரலில் முகம் முழுவதும் மத்தாப்புகள் பூக்க திரும்பி அவனைப்பார்த்த ஈஷா, தொகுப்பாளினியிடம், “எக்ஸ்கியூஸ் மீ ஆன்ட்டி…” என்றுவிட்டு, ஈத்தனிடம், “பேபி! நீங்க வரும் வரை நான் ஆன்ட்டி கூட பேசிட்டு இருந்தேன். ரொம்ப ஸ்வீட் இவங்க. இருங்க பேபி நான் கான்வர்சேஷனை முடிச்சிட்டு வரேன். அதானே சரியான மேனர்ஸ்” என்று அவன் கற்றுக்கொடுத்தவற்றை அவனிடமே கூறியவள். திரும்பி, “என்ன ஆன்ட்டி கேட்டீங்க. என் அம்மாவ எனக்கு பிடிக்காதான்னு தானே கேட்டீங்க?” என்று கேட்டு அக்கேள்வியை உறுதிப்படுத்திக்கொண்டவள், “யாருக்காச்சும் அவங்க அம்மாவ பிடிக்காமல் போகுமா என்ன? எனக்கு என் அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி. ஆனால் அவங்க நீங்க தரும் எந்த நம்பர் உள்ளேயும் அடங்க மாட்டாங்க. She is infinite(எல்லையற்றவள்). அதனால் தான் நான் சொல்லலை” என்றுப்பதில் கூறிவிட… அப்பதிலில் லைவ் ஷோ பார்த்துக்கொண்டிருந்த மொத்த மக்களின் புருவமுமே உயர்ந்து இருந்தது. தாய்மையை இதற்குமேல் வார்த்தைகளால் மரியாத...

3.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🫰🪻😘

படம்
 அத்தியாயம்-3 பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஈத்தன், இப்படியான கேள்விகள் அவனை பார்த்து கேட்கப்பட ஆரம்பித்ததுமே, ‘என் திருமணம் பற்றியோ, என் மனைவியை பற்றியோ யாரும் எதுவும் கேட்க வேண்டாம். அது என் தனிப்பட்ட விஷயம். பகிர்ந்துக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நம் உறவு என் இசையுடன் மட்டுமேயானதாக இருக்கட்டும். என் இசையை மட்டும் ரசியுங்கள், விமர்சியுங்கள், விவாதியுங்கள்…’ என்று கூறிவிட்டு இருந்தான். அப்படியும் சிலர், ‘குழந்தையின் நிறம் தவிர வேறு எந்த ஒற்றுமையுமே குழந்தைக்கும் அவனுக்கும் இல்லை’ என்று கூறி, ‘அக்குழந்தை அவனுடையதே இல்லை... ஈத்தன் யாரோ ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்க்கின்றான். அதனால் தான் தன் மனைவியை காட்டவில்லை…’ என்றும்,  வேறு சிலர், ‘ஈத்தனின் மேலைநாட்டு கலாச்சார வாழ்க்கை முறையில், முறையற்ற உறவின் பலனாக உண்டான குழந்தை’ என்றும் கூறியவர்கள், உட்ச கட்டமாக அவனை ஒருசில நடிகைகள் உடன் எல்லாம் இணைத்து மூன்றாம் தர ஊடகங்கள் வாயிலாக விதவிதமான கிசுகிசுக்களை வெளியிட்டுக்கொண்டு இருந்தனர்.  அதை பார்த்து கொதித்துவிட்ட ஈத்தன், அவனின் மனைவி குறித்த விவரங்களையும், ஈஷா தன் மகள்...

2(b). சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘

படம்
ஈத்தனுக்கோ தொடர்ந்து பாடியதில் சுத்தமாக தொண்டை வற்றிவிட்டிருந்தது. சுற்றியிருந்த இசைக்கருவிகளுடன் அமர்ந்திருந்த தன் குழுவிடம் சென்று பேசியவன், இவ்வளவு நேரம் தொடர்ந்து வாசித்ததில் அவர்களும் எவ்வளவு சோர்ந்திருப்பர் என்பதை உணர்ந்து, அவர்களை ஓய்வெடுக்க செல்லக்கூறிவிட்டு, மீண்டும் மேடைக்கு நடுவில் வந்து மைக்கை கையில் எடுத்தான்‌. அவனையே பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சிக்கு அப்பொழுது தான், தான் இன்னும் கைப்பையை கூட கழட்டாமல் நிற்பது புரிந்து, தலையில் தட்டிக்கொண்டவள்...  தன் அலைப்பேசியை கையில் எடுத்து, கேமிராவை ஆன் செய்து, தொலைக்காட்சியில் தெரியும் ஈத்தனை, தன் அலைப்பேசிக்குள் சிறையெடுக்க ஆரம்பித்துவிட்டாள்...  “என்ன டார்லிங்ஸ்! எப்படி போச்சு கன்சர்ட்… எல்லாரும் ஹேப்பியா…” என்று கேட்ட ஈத்தன் மைக்கை மக்கள் பக்கம் திருப்பிக்காட்ட… “ஹேப்பி ஈத்தன்” என்று பலர் கத்தினர்…  சிலரோ, “பத்தலை ஈத்தன்…” என்று மேலும் பாடக் கூறி கேட்டு, “வீ வான்ட் மோர்…” என்று, விளையாட்டு மைதானம் விட்டு கிளம்ப மறுத்து அடம் செய்யும் குழந்தைப்போல் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்துவிட… “அச்சோ… இப்பவே அவர் குரல் மாற...

2(a). சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘

படம்
அத்தியாயம் -2 வரிசையாக ஈத்தன் அடுத்தடுத்த பாடல்களை பாடிக்கொண்டே போக, குறிஞ்சியோ இன்னமுமே அப்படியே தான், உட்காரும் எண்ணமில்லாது, தொலைக்காட்சி பெட்டியின் முன்பு நின்று இருந்தாள். நேரம் கடந்தும் தன் கண்களின் மணிகளை அப்பக்கம் இப்பக்கம் என்று எப்பக்கமும் அவளால் அசைக்க முடியவில்லை.  அசைத்து வேறெங்கும் சென்றாலும் கூட, வினாடிக்குள் மீண்டும் ஈர்க்கப்பட்டு அவனின் கண்களின் மணிகளுக்குள்ளே சிறைப்பட்டு, மாய லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தாள். அவனுடைய தந்தையிடமிருந்து வந்திருந்த அவனின் திருத்தமான செதுக்கப்பட்ட முகத்தோற்றமோ, திடக்காத்திரமான உடல் அமைப்போ, மாசு மருவற்ற வெண்பளிங்கு தேகமோ… தாயிடமிருந்து வந்திருந்த அடர்த்தியான கருமை நிற கேசமோ…  இன்றைய டிரென்டான முழு ஷேவ் செய்யாது, ட்ரிம் மட்டுமே செய்யப்பட்ட அவனின் நெருக்கமான மீசையும் தாடியுமோ, எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாததின் பலனாக நிறம் மாறாதிருந்த அரிதான அவனின் திண்மையான இளம் ரோஜா நிற அதரங்களோ, இல்லை அவை அசையும் போது வெளிப்படும், சீரான வரிசையில் இடைவெளியற்று நட்டு வைத்திருந்த அவனின் வெண்ணிற பளீர் பற்களோ… எதுவுமே அவளை அசைக்கவில்லை. ...

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻

படம்
Hi Honeys!🍯💌 Happy Morning 🌤️ எல்லாரும் எப்படி இருக்கீங்க? Valentine's Month Special - New Ongoing💘 ஆரம்பிக்கலாமா😎 தலைப்பு🎬: சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🌆💋 Love in twilight💏 நாயகன்: ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர் 🎼 ♂️🕺 நாயகி: குறிஞ்சி மலர்🪻♀️💃 Theme: Singer Weds Fan Girl💜 Love and Love Only🫰😘 🔴Suspense குறையாமல் இருக்க இந்தமுறை டீசர் இல்லை டார்லிங்ஸ். வாங்க நேரடியா கதைக்கு போகலாம்🔴 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! அத்தியாயம்-1 தன் இளங்கட்டு மேனி முழுவதையும், பல வண்ண கண்கவர் மலர்களாலான பச்சை பட்டையுடுத்தி மறைத்து வைத்திருந்த மலைகளின் ராணியவள், என்ன மந்திரம் போட்டாளோ தெரியாது, மறுகணமே ஆதவன் அவளின் மந்திரத்திற்கு கட்டுண்டு, அவள் பின்னோடே நில்லாது செல்ல ஆரம்பித்துவிட்டு இருந்தான்.  சென்றவன் அத்தோடு நின்றானா என்ன?  இருக்கும் இடம் மறந்து, உலகம் மறந்து, ராணியினுள் அஸ்தமிக்க வேறு தொடங்கிவிட, காதலர்கள் இருவரின் இச்செயலில் திகைத்து வெட்கிப்போன கீழ்வானமோ, ‘அச்சோவென்று’ தன் தேகம் முழுவதும் செம்மஞ்சள் பூசிக்கொண்டு அந்திசாய்ந்துவிட்டது.  இடம்: கொடைக்கானல், நேர...

Completed story - 💃🕺ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

படம்
#Kindle_Readers  Hi Friends! Exciting News! My fourth book is now live on Kindle!❤️ 📚🔥 Title: 😈ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!💣 Theme: Mr.கோபக்காரன்😡 Weds Miss.சிடுமூஞ்சி🌶️🥶 📚A family romance about enemies who become lovers, and their journey from hate to love.📚 நாயகன்: “வேதாந்த் அதிமதுரன்”🕺♂️♥️🍯🐝 பெயரில் மட்டுமே, அதிக இனிப்புடைய மதுரத்தை, கொண்டவன். நேரிலோ யார் மாட்டுவார்கள், எப்படி அவர்களை முள்ளாக குத்தலாம் என்று காத்து இருப்பவன். பலாப்பழத்திற்கு நிகரானவன். ஆனால் அவனுள் இருக்கும் இனிப்பை, அவனை தீண்டியவர்கள் உணரும் முன்பே, அவனால் காயப்பட்டு விலகி விடுவார்கள். பெரும் கோபக்காரன்!🔥 நாயகி: “தேன்விழி கண்ணப்பிரான்”♀️💃♥️🍯🐝 காந்தமாய் இழுக்கும், தேன்நிற விழிகளுக்கு சொந்தக்காரி. காலத்தின் சதியால், கரடுமுரடான பாதையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தவள், அதன் பலனாக பெண்மையின் மென்மையை தொலைத்து, முற்றிலும் முரடாகவே மாறிவிட்டு இருந்தாள். பழகுவதற்கு சிறிதும் இனிமையானவள் இல்லை. சிடுசிடு சிடுமூஞ்சி!🔥 💣Anti Hero Weds Rugged Heroine💣  🐀🐯எலியும் பூனையுமாக, அடித்து🥷 கொண்ட இருவரும்,...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates