இடுகைகள்

35.1 அந்திப்போர்

அத்தியாயம் -35 இது ஈஷா மற்றும் குறிஞ்சிக்கான நேரம் என்பது புரிந்து… அவர்கள் இருவருக்குள்ளும் செல்லாமல் அமைதியாக நின்றிருந்த ஈத்தன்… ஒரு எல்லைக்கு மேல், குறிஞ்சியின் உணர்வுகள் வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே செல்லவும்… இதற்கு மேல் ஒரு வினாடி விட்டாலும் அவள் உடைந்துவிடுவாள்… அது அவளின் உடல் நலனுக்கும் நல்லதில்லை… ஈஷாவின் மனநிலைக்கும் நல்லதில்லை என்பதை உணர்ந்து… சூழ்நிலையை இலகுவாக்க… குறிஞ்சியின் உள்ளங்கையில் சிறு அழுத்தம் கொடுத்து வருடியப்படியே… அவளை ஈஷாவிடம் இருந்து மெல்ல பிரித்தவன்… குடிக்க தண்ணீர் எடுத்துவர கூறி குறிஞ்சியை அனுப்பிவிட்டு இருந்தான். ஈஷாவின் சிவந்த முகத்தை பார்த்து தன்னை சுதாரித்துக்கொண்ட குறிஞ்சியும்… உடனே சமையல் கட்டிற்குள் சென்று மறைந்துவிட்டு இருந்தாள்… ஹாலில், “அம்மா ரொம்ப பாவம் இல்ல பேபி. நீங்க சொன்ன மாதிரி நம்மளை ரொம்ப மிஸ் செய்திருக்காங்க. ஐ ஃபீல் சோ பேட் ஃபார் ஹர். இனி நாம அவங்க கூடவே இருக்கலாம். அவங்களுக்கு நிறைய லவ்வை தரலாம்” என்று மனதில் தோன்றுவதை எல்லாம், கலங்கிய கண்களுடன் ஈத்தனிடம் ஈஷா பகிர்ந்துக்கொண்டிருக்க… “கண்டிப்பா பேபி” என்று ஈஷாவை சமாதானம் ச...

34.3 அந்திப்போர் 🪻😘📽️

வீட்டின் வாசலில் இருக்கும், இரும்பு கேட் திறக்கும் சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து மதர் மற்றும் ஈஷாவின் குரலும் கேட்க… பரப்பரப்பாகி போனாள் குறிஞ்சி. அதை உணர்ந்து அவளின் கன்னத்தில் தட்டிக்கொடுத்த ஈத்தன்… “பேபி முன்னாடி எதுவும் காட்டிக்க வேண்டாம் குறிஞ்சி. நாம பிறகு பேசலாம். ஓகே” என்றுவிட்டு வெளியே சென்று அவன் பார்க்க. பிறகு வருவதாக ஈத்தனிடம் கூறிய மதர், ஈஷாவை மட்டும் விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். ஈத்தனை பார்த்த பொழுது நெஞ்செல்லாம் குறிஞ்சிக்கு பூ பூத்தது என்றால்… ஈஷாவின் அண்மையை உணர தொடங்கியதற்கே அவளின் உடல் முழுவதுமே பூ பூத்துவிட்டிருந்தது… அவளின் ஒரு பகுதி.  அவளின் உதிரம்.‌  அவளின் உயிர். அவளே நினைத்தாலுமே மறுக்க முடியாதே! பீச்(Pinkish Orange) வண்ணத்தில் அடுக்கடுக்காக தைக்கப்பட்ட முட்டி வரையிலான ஸ்கர்ட் அணிந்து. அதன் மீது ஈத்தன் போலவே க்ரீம் வண்ணத்தில் ஸ்வெட் ஷர்ட் அணிந்திருந்த ஈஷா. தன் நீண்ட இரட்டை ஜடைகள் முன்னும் பின்னும் ஆட, ஈத்தனுடன் பேசியப்படியே… கையில் மிகப்பெரிய சிகப்பு நிற ரோஜா பூங்கொத்துடன் அவ்வீட்டினுள் நுழைய… குறிஞ்சியின் அடிவயிற்றில் மிகப்பெரிய பூகம்பம். அத...

34.2 அந்திப்போர் 🪻😘📽️

இருவரின் மௌனத்தையும் களைக்கும் விதமாக… ஈத்தனின் தொலைப்பேசி அப்பொழுது மெல்ல ஒலியெழுப்ப ஆரம்பித்தது… அதில் குறிஞ்சியை ஒருக்கையால் பிடித்தப்படியே, ஈத்தன் மறுக்கையால் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த தொலைப்பேசியை எடுத்துப் பார்த்தான்… மதரிடம் இருந்து அழைப்பு என்றவுடன் உடனே அவன் அழைப்பை ஏற்று பேச… குறிஞ்சிக்கு அப்பொழுது தான் ஈத்தனின் அணைப்பில் அவள் இருப்பது புரிந்தது… அதில் அதிர்ந்து பட்டென்று அவள் விலகப்பார்க்க… அதை உணர்ந்த ஈத்தனும் தன் கரத்தினை விலக்கிக்கொண்டான்…  ஆனால் பார்வை மொத்தத்தையும் மட்டும், அவள் மீது தான் விலக்காமல் வைத்து இருந்தான்… பின்னே மறுபடியும் அவள் ஓட பார்த்தால், அவன் ஓடி பிடிக்க வேண்டுமே… அப்பொழுது மதர், “உன் மனைவி என்ன சொல்றா ஈத்தன். எல்லாம் பேசிட்டயா?” என்று கேட்க. ஈத்தனுக்கு மிக அருகில் நின்றிருந்த குறிஞ்சிக்கு அவர் பேசியது ஒரு வார்த்தை விடாமல் கேட்டு இருந்தது. அதில், ‘என்ன மனைவியா!’ என்று அதிர்ந்துப்போன குறிஞ்சி… மேலும், ‘ஐயோ மதருக்கு எல்லாம் தெரியுமா?’ என்று ஈத்தனை நிமிர்ந்துப்பார்க்க… அவளின் கேள்விகள் அனைத்தையும், அவளின் விழி வழியே படிக்க கற்றுக்கொண்டிருந...

34.1 அந்திப்போர் 🪻😘📽️

அத்தியாயம் -34 பன்னிரண்டு வயது பெண்ணிற்கு தந்தையான ஈத்தனை, எவ்வித பாரபட்சமின்றி வீதியில் இறங்கி ஓடவிட்டிருந்த குறிஞ்சி… அவசர அவசரமாக தன் வீட்டு பூட்டினை திறந்தப்படியே, திரும்பி பார்த்தாள். ஈத்தன் அப்பொழுது தான் அத்தெரு வளைவினுள் திரும்புவது தெரிந்தது. அதில் அவன் பார்ப்பதற்குள் மறைந்துவிட வேண்டும் என்று குடுகுடுவென்று வீட்டிற்குள் ஓடியவள்… ஓடிச்சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாற்றி, கிடுகிடுவென நடுங்கும் தன் தேகத்தை அக்கதவு மீதே சாய்த்து நின்று… “ஹப்பாடா… தப்பிச்சோம்” என்று பலமாக மூச்சுவாங்கும் தன் இதயத்தை அழுந்த பற்றி ஆசுவாசப்படுத்த பார்க்க… மறுவினாடியே “குறிஞ்சி, ஓப்பன் த டோர்” என்று வெளியில் இருந்து ஈத்தனின் குரல் கேட்டு, அவளின் அதிவேகமாக விம்மி தணியும் மார்பை அப்படியே அசைவின்றி உறைய வைத்திருந்தது… உடன், “உன்னை கதவை திறக்க சொன்னேன் குறிஞ்சி. என்ன பழக்கம் இது? ஓப்பன்!”, என்று கத்திய ஈத்தன், அந்த அறைக்கதவை போட்டு தட்டிய தட்டில், அவளுக்கு உடலில் இருந்த நடுக்கமும் நின்றுவிட்டது… “ஐயோ கடவுளே…. இவருக்கு நம்ம வீடு எப்படி தெரிஞ்சிச்சு” என்று நினைத்தவளுக்கு… அடுத்து என்ன செய்வதென்...

33. அந்திப்போர் 🪻😘📽️

அத்தியாயம் -33 தன் மொபைலை எடுத்த ஈத்தன், ஈஷா கூறிய பிரச்சனையை, என்னவென்று கூகுளில் தேடி பார்த்துவிட்டு… அந்த இரவே, அவளை அழைத்துக்கொண்டு, இரவு நேர அவசர மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டு இருந்தான். செல்லும் வழியெல்லாம் ‘மருத்துவமனை வேண்டாம்’ என்று அடம் பிடித்த ஈஷாவை… “ஒன்னும் இல்லை பேபி… ப்ரீ டீன் கேர்ள்ஸுக்கு இது நார்மல்னு தான் போட்டு இருக்காங்க டா… நாம ஜஸ்ட் டாக்டரை பார்த்து… பெயின் போக மெடிசன் மட்டும் வாங்கிட்டு வந்துடலாம்…” என்று அவளை சமாதானம் செய்து, எப்படியோ மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டவனால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது போனது… உள்ளே அவளை பரிசோதனைக்கு என்று அழைத்துச்சென்ற பெண் மருத்துவர்… என்னவென்று பார்க்க முற்பட… ‘தொடவே கூடாது… எனக்கு பிடிக்கவில்லை… நோ…’ என்று கத்தி ஒரே அழுகை ஆர்பாட்டம் ஈஷா… குழந்தையாக இருந்த போது கூட அவள் இந்தளவிற்கு அழுதது கிடையாது. அனைத்திற்கும் சேர்த்து வைத்து அன்று அவள் அழுது தீர்த்துவிட்டாள்… பெரிதாக மக்களுடன் தொடர்பு இல்லாது, அவளை சிறு கூட்டிற்குள் வைத்தே ஈத்தன் வளர்த்துவிட்டு இருக்க… அவளால் யாரையும் ஒரு எல்லைக்கு மேல் அக்கூட்டிற்குள் சட்டென்று ...

32.2 அந்திப்போர் 🪻😘

ஈத்தனால் அக்கணங்களின் உணர்வுகளை தாங்கவே முடியவில்லை… எங்கோ தோற்ற உணர்வு அவனுக்கு… எப்படி மகள் அப்படி கூறலாம்… தொண்டையெல்லாம் அடைத்துவிட்டது அவனுக்கு… அவன் ஒருமாதிரியான வலியில் இருக்க… ஈஷாவோ வேறு மாதிரியான உணர்வுகளில் தவித்துக்கொண்டு இருந்தாள்… நிமிர்ந்து ஈத்தனின் முகம் பார்த்தவள்… அவன் தாடையை பற்றி, “அம்மா இல்லாமல் உங்களுக்கு நிறைய கஷ்டமா இருந்து இருக்கும் இல்ல பேபி?” என்று கேட்டாள் திடீரென்று, சற்றும் சம்பந்தமே இல்லாமல். அதில் சுத்தமாக குழம்பி போனான் ஈத்தன். ஈஷாவின் அமைதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அவன் மூளை வேக வேகமாக யோசிக்க ஆரம்பித்தது… திடீரென்று மகள் ‘அம்மா இல்லாமல் நீ நிறைய கஷ்டத்தை அனுபவித்தாயா’ என்று கேட்டால் என்ன அர்த்தம். அக்கஷ்டத்தை அவள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறாள் என்று தானே அர்த்தம். முன்பு ஈஷா கேட்டதை விட… இது அதிக வலியை ஈத்தனுக்கு தர… அதற்குள் ஈஷா அடுத்த கேள்வியாக, “பேபி நீங்க பார்த்த அந்த ஏஞ்சல். குறிஞ்சி ஆன்ட்டி போல் இருப்பாங்களா பேபி…?” என்று வேறு கேட்டு வைக்க… ஈத்தனுக்கு இதயமெல்லாம் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது… கண்ணுக்கு புலப்படாத இயற்கையின் சக்தி...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates