35.1 அந்திப்போர்
அத்தியாயம் -35 இது ஈஷா மற்றும் குறிஞ்சிக்கான நேரம் என்பது புரிந்து… அவர்கள் இருவருக்குள்ளும் செல்லாமல் அமைதியாக நின்றிருந்த ஈத்தன்… ஒரு எல்லைக்கு மேல், குறிஞ்சியின் உணர்வுகள் வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே செல்லவும்… இதற்கு மேல் ஒரு வினாடி விட்டாலும் அவள் உடைந்துவிடுவாள்… அது அவளின் உடல் நலனுக்கும் நல்லதில்லை… ஈஷாவின் மனநிலைக்கும் நல்லதில்லை என்பதை உணர்ந்து… சூழ்நிலையை இலகுவாக்க… குறிஞ்சியின் உள்ளங்கையில் சிறு அழுத்தம் கொடுத்து வருடியப்படியே… அவளை ஈஷாவிடம் இருந்து மெல்ல பிரித்தவன்… குடிக்க தண்ணீர் எடுத்துவர கூறி குறிஞ்சியை அனுப்பிவிட்டு இருந்தான். ஈஷாவின் சிவந்த முகத்தை பார்த்து தன்னை சுதாரித்துக்கொண்ட குறிஞ்சியும்… உடனே சமையல் கட்டிற்குள் சென்று மறைந்துவிட்டு இருந்தாள்… ஹாலில், “அம்மா ரொம்ப பாவம் இல்ல பேபி. நீங்க சொன்ன மாதிரி நம்மளை ரொம்ப மிஸ் செய்திருக்காங்க. ஐ ஃபீல் சோ பேட் ஃபார் ஹர். இனி நாம அவங்க கூடவே இருக்கலாம். அவங்களுக்கு நிறைய லவ்வை தரலாம்” என்று மனதில் தோன்றுவதை எல்லாம், கலங்கிய கண்களுடன் ஈத்தனிடம் ஈஷா பகிர்ந்துக்கொண்டிருக்க… “கண்டிப்பா பேபி” என்று ஈஷாவை சமாதானம் ச...