32.2 அந்திப்போர் 🪻😘
ஈத்தனால் அக்கணங்களின் உணர்வுகளை தாங்கவே முடியவில்லை…
எங்கோ தோற்ற உணர்வு அவனுக்கு…
எப்படி மகள் அப்படி கூறலாம்…
தொண்டையெல்லாம் அடைத்துவிட்டது அவனுக்கு…
அவன் ஒருமாதிரியான வலியில் இருக்க… ஈஷாவோ வேறு மாதிரியான உணர்வுகளில் தவித்துக்கொண்டு இருந்தாள்…
நிமிர்ந்து ஈத்தனின் முகம் பார்த்தவள்…
அவன் தாடையை பற்றி, “அம்மா இல்லாமல் உங்களுக்கு நிறைய கஷ்டமா இருந்து இருக்கும் இல்ல பேபி?” என்று கேட்டாள் திடீரென்று, சற்றும் சம்பந்தமே இல்லாமல்.
அதில் சுத்தமாக குழம்பி போனான் ஈத்தன்.
ஈஷாவின் அமைதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அவன் மூளை வேக வேகமாக யோசிக்க ஆரம்பித்தது…
திடீரென்று மகள் ‘அம்மா இல்லாமல் நீ நிறைய கஷ்டத்தை அனுபவித்தாயா’ என்று கேட்டால் என்ன அர்த்தம்.
அக்கஷ்டத்தை அவள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறாள் என்று தானே அர்த்தம்.
முன்பு ஈஷா கேட்டதை விட… இது அதிக வலியை ஈத்தனுக்கு தர…
அதற்குள் ஈஷா அடுத்த கேள்வியாக, “பேபி நீங்க பார்த்த அந்த ஏஞ்சல். குறிஞ்சி ஆன்ட்டி போல் இருப்பாங்களா பேபி…?” என்று வேறு கேட்டு வைக்க…
ஈத்தனுக்கு இதயமெல்லாம் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது…
கண்ணுக்கு புலப்படாத இயற்கையின் சக்தியில் பிரமித்து கூட போனான்…
________________________________
ஈஷாவிற்கு ஐந்து வயதான சமயம் அது… ஈத்தன் ஒரு ஆங்கில ஆல்பம் பாடலுக்கான ஷூட்டிங்கிற்கு என்று அமெரிக்காவிற்கு ஈஷாவுடன் வந்து… ஒரு பிரைவேட் பீச்சில் தங்கி இருந்தான்…
அங்கு தான் ஷூட்டிங் நடந்துக் கொண்டு இருந்தது…
கூட்டம் பெரிதாக இல்லை என்றாலும்… ஒருசில குடும்பங்கள் அங்கு இருந்தன…
அதில் ஈஷா, ஈத்தனின் கண்காணிப்பில், அங்கு விளையாடும் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து அவளும் விளையாடிக்கொண்டு இருந்தவள்…
அங்கு அவவை தவிர்த்து, மற்ற அனைத்து பிள்ளைகளுமே, தாய் தந்தையுடன் வந்திருப்பதை கவனித்து…
ஈத்தனிடம் அதை காட்டியவள்…
“பேபி ஈஷாக்கு மாம்மா(momma)” என்று அவளுக்கு அன்னை எங்கே என்று கேட்க…
ஈத்தன், “பேபிக்கு டாடி தான் அம்மாவும்” என்று அந்நேரம் அவளை சமாளித்திருக்க…
அத்துடன் அதை ஈஷாவும் விட்டுவிட்டாள்…
ஆனால் ஒருசில வருடங்களிலேயே… அவனிடம் வந்தவள்…
அவர்களை பார்க்க வரும் சித்லேகாவின் குடும்பத்தை காட்டி, ஈத்தன் அவர்களின் குழந்தை என்றால், ஏன் ஈத்தன் அவர்களுடன் இல்லை என்ற கேள்வியை கேட்டு வைத்தாள்.
உடன் எப்பொழுதாவது வரும் அவன் தந்தை ஹன்டர் குறித்த குழப்பங்களும் வேறு அவளுக்கு. ஹன்டர் தான் அப்பா என்றால், ஆபிரஹாம் யார் என்று வேறு அவள் கேட்க ஆரம்பித்துவிட்டாள்.
குடும்பத்திற்குள் ஒன்று இரண்டு சிக்கல் இருக்கலாம். ஆனால் இங்கு குடும்பம் மொத்தமுமே சிக்கலில் இருந்தால். என்ன செய்வது?!
அதில், ஒருநாள் அவளை அமர வைத்து ஈத்தன்… அவனின் தாய் தந்தை யார் என்று விளக்கமாக, அவனின் சிறு வயது புகைப்படங்களுடன் கூறியவன்…
உடன் அனைவரின் தாய், தந்தையும் ஒன்றாக வாழ்வார்கள் என்று கிடையாது… சிலர் அவர்களுக்கு பிடித்தவருடன் பிரிந்து சென்று வேறு குடும்பம் அமைத்துக்கொள்வார்கள்… அதில் தவறு எதுவும் கிடையாது… அதேப்போல் தான் உன்னுடைய தாத்தா, பாட்டியும் என்று முடிந்தளவு வெகு எளிமையாக, அவளுக்கு புரிய வைத்தவன்…
உமையாள் மற்றும் மயில்வாகனம் குறித்தும்… அவர்களுடன் அவன் வளர்ந்தது குறித்தும்… நல்ல விதமாகவே அவன் கூறி முடிக்க…
அனைத்தையும் ஆர்வமாக கேட்டுக்கொண்ட ஈஷா…
அன்று மீண்டும் ‘அவளின் அம்மா எங்கே’ என்ற கேள்வியை ஈத்தனிடம் கேட்டு இருந்தாள்.
கேள்வி கேட்கும் வயதாகிற்றே…
கேட்காமல் இருப்பாளா?
கேட்டுக்கொண்டே இருந்தாள்.
ஈத்தனால் தான் பதில் சொல்ல முடியவில்லை. நிச்சயம் அவளின் பிறப்பு குறித்து அவளிடம் ஒருநாள் அவன் கூறிவிட வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தான். ஆனால் இப்பொழுது அவளுக்கு அதை புரிந்துக்கொள்ளும் வயது இல்லை என்பதால்…
“Once upon a time….”, என்று ஆரம்பித்தவன்…
“ஒரு நாள் டாடி, மாடியில் தனியா மூன், ஸ்டார்ஸ் எல்லாம் பார்த்தப்படியே படுத்து இருந்தேன் பேபி…
அப்போ திடீர்னு, யுனிவர்ஸ் ஒரு ஏஞ்சலை அங்க அனுப்பிடுச்சு பேபி….”, என்றவன்…
ஈஷாவின் ஆச்சரியத்தில் விரிந்த கண்களை பார்த்தப் படியே…
“டாடிக்கு ஏஞ்சலை பார்த்துட்டு செம ஷாக் அண்ட் சர்பிரைஸ் பேபி… உங்களை மாதிரியே”, என்று அவளின் கண்களில் தன் இதழ்களை ஒற்றி எடுத்துவிட்டு…
“அப்போ, அந்த ஏஞ்சல் என் கிட்ட, ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள் ஈத்தன் நான் தரேன்’னு சொன்னாங்க பேபி”, என்றுக்கூற…
“ஏஞ்சல்… ஏஞ்சல்…” என்று குதிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள் ஈஷா…
அதே உற்சாகத்துடன் அவளை வைத்திருந்த ஈத்தன்…
“டாடி உடனே எனக்கே எனக்குன்னு ஒரு பேபி, ஸ்வீட்டா, கியூட்டா, கைண்ட்டா வேண்டும்னு கேட்டேன் பேபி…”, என்றவன்…
அந்த ஏஞ்சலும் ‘ஓகே ஈத்தன் உனக்கு உன் விருப்பப்படி ஒரு பேபி தரேன்’ சொல்லி அவங்களை மாதிரியே ஒரு குட்டி ஏஞ்சலை என் கையில் தந்துட்டு போயிட்டாங்க பேபி. அது பேபி நீங்க தான் பேபி. டாடி நீங்க வந்த பிறகில் இருந்து ரொம்ப சந்தோஷமா ஆகிட்டேன்”, என்றவன்…
இறுதியாக, “அந்த ஏஞ்சல் தான் பேபி உன் அம்மா. ரொம்ப நல்ல ஏஞ்சல் டா அவங்க” என்றிருந்தான். உடன் இதை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம் குடும்ப கதை இது. யாரிடமும் சொல்ல கூடாது என்று வேறு அவன் கூறியிருக்க…
அதைத்தொடர்ந்து ராத்திரி ஆனால் போதும் ஈஷா, ஈத்தனிடம் பல நாட்கள் ரகசியமாக “ஏஞ்சல் ஸ்டோரி வேண்டும்…” என்று அந்த கதையையே கேட்டு, பலமுறை அவனை சொல்ல வைத்து… தன் மனதில் பதிந்து வைத்திருந்தாள்…
அதில் தான் அன்று அந்த தொகுப்பாளினி பெண் கேட்ட பொழுதும், எனக்கு என் அம்மாவை ரொம்ப பிடிக்கும் என்றிருந்தவள்… வானத்தை பார்த்து I love you mom என்று கூறியிருந்தாள்…
________________________________
இன்றுவரையுமே ஈத்தன் கூறியதையெல்லாம் சிறிது கூட மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டிருந்த ஈஷா…
‘தனக்கு அம்மா இல்லை’ என்று கூற தெரியாமல்…
‘நீ அம்மா இல்லாமல் கஷ்டப்பட்டாயா’ என்று எத்தனை கேட்டு வைக்கவும்…
என்ன பதில் சொல்வான் ஈத்தன்…
“நீங்க என்கூட இருக்கும் போது… எனக்கு எந்த கஷ்டமும் கிடையாது பேபி…”, என்றான் ஈஷாவிடம்…
அதைத்தொடர்ந்து, “நீங்க பார்த்த ஏஞ்சல் பத்தி சொல்லுங்க பேபி”, என்று ஈத்தனிடம் கேட்ட ஈஷா…
“ஏன் பேபி. நம்ம கூடவே அந்த ஏஞ்சல் இல்லை. நாம தேடி கூட்டிட்டு வரலாமா…” என்றெல்லாம் வேறு கேட்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.
அதில், ஈஷாவின் தாடையை பற்றி தன் முகம் பார்க்க செய்த ஈத்தன்…
அவளின் கண்களை ஆழமாகப்பார்த்தபடியே…
“பேபிக்கு அம்மா வேண்டுமா?” என்று நேரடியாக கேட்டு இருந்தான்.
சில மாதங்களுக்கு முன்பும் இதையே தான் கேட்டு இருந்தான்.
அன்று “எனக்கு நீங்க மட்டும் போதும்” என்று அவ்வளவு வேகமாக பதில் கூறியிருந்தவள்… இன்று பதில் கூறாமல் அமைதி காக்க…
“அம்மா கிட்ட தான் உங்க பிரச்சனையை சொல்ல முடியுமா பேபி?” என்று கேட்டான் ஈத்தன்.
அதில், ஈஷாவின் கண்களில் இருந்து நீர்… அவளின் இரண்டு கன்னங்கள் வழியாகவும் வழிந்து உருண்டோட…
ஈத்தனின் கண்களும் அதில் கலங்க ஆரம்பித்துவிட்டு இருந்தன… அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம்…
ஈஷா, “பேபி எனக்கு ரொம்ப பயமா இருக்கு பேபி…” என்றவள்… “எனக்கு இங்க ரொம்ப பெயினா இருக்கு… டச் பண்ணவே முடியலை…” என்று தன் மார்பகங்களை ஆடைக்கு மேலாகவே தொட்டு காட்டியவள்… அங்கு ஏற்படும் புதிய புதிய மாற்றங்களையும் சொல்லி அழ…
ஈத்தன் அந்நொடி உயிருடனே மரித்துவிட்டு இருந்தான்.
அவன் மகள் இத்தனையை வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் வைத்து, இத்தனை நாட்கள் தவித்துக்கொண்டு இருந்தாளா? அவனால் தாங்கவே முடியவில்லை.
தாயை அறியாதவன்,
தாரத்தை அறியாதவன்,
எங்கிருந்து சேயின் பிரச்சனையை அறிந்து களைவது...
இயற்கையாக ஒரு குழந்தைக்கு தாயோ, தந்தையோ இல்லாது, அவர்களின் அரவணைப்பு மறுக்கப்பட்டால், விதி என்று வேறுவழியின்றி அதனை ஏற்றுக்கொள்ளலாம்!
ஆனால் இங்கோ ஈத்தனின் கடந்த காலமும், பணமும்…
குறிஞ்சியின் கடந்த காலமும், நன்றிகடனும்…
அப்பிஞ்சிற்கு, அவ்விதியை பரிசளித்துவிட்டதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
சித்ரலேகா, ஹன்டர் ஈத்தனுக்கு செய்ததும்… குமார் குறிஞ்சிக்கு செய்ததும் தவறு என்றால்…
ஈத்தனும், குறிஞ்சியும் ஈஷாவிற்கு செய்ததின் பெயர் என்ன…
தவறுக்கு பதில் தவறென்றால்! அதற்கான எதிர்வினையையும் அவர்கள் சந்தித்து தானே ஆக வேண்டும்.
"For every action, there is an equal and opposite reaction” - Newton’s 3rd Law.
________________________________
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/05/33.html
Aiyaaa.. jolly jolly ipdiyachum kurinji and samar sernthuruvangala
பதிலளிநீக்குBut eesha papa paavam pa. Intha lusu samar paiyana mandai la thatti kurinji Koda seekirama serthu veinga pa. And take care of ur health.. nanga elarum kekarom nu romba type panni kasta pada vendam ma. Nanga wait panrom no problem
Romba nalla irunthuchu sis ud👌👌
பதிலளிநீக்குஅச்சோ... தாயுமானவனா எல்லா விதத்துலையும் தான் நல்ல விதமா வளர்த்துட்டு இருக்கறதா நினைக்கிற ஈத்தனுக்கு இது எவ்வளவு பெரிய வலி.
பதிலளிநீக்குகுறிஞ்சிய அவன் புருஞ்சு அழச்சிட்டு வரனும்ன்னு இருக்கும் போது இது தெரிய வந்ததால அவன் முடிவு ஸ்டாராங்கா மாறலாம். சப்போஸ் அவளை பற்றிய புரிதலுக்கு முன்னாடி நடந்திருந்தா...ஈத்தன் என்ன ஆவான்
Balance quicka podunga mam waiting writing super eppadi sollarathunu theriyala wonderful
பதிலளிநீக்குTouching sis
பதிலளிநீக்குSuperb Esha baby pavam
பதிலளிநீக்கு