இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

36.3 அந்திப்போர்

ஏர்போர்ட்டில் ஐடி(ID) பரிசோதனைகள் நடக்கும் போது தான் குறிஞ்சி ஒன்றை உணர்ந்தாள். எப்பொழுதும் வெளியே பொதுவெளியில் அவளுடன் இருக்கும் பொழுதுகளில் எல்லாம் மாஸ்க் மற்றும் கூலர்ஸூடன் இருக்கும் ஈத்தன். இன்று காலை முதலே அது எதுவும் இல்லாது அவளுடன் இயல்பாக நெருக்கமாக இருந்ததை. உடன் இருந்தவர்கள் செக்யூரிட்டிகளாக இருந்தாலும் கவனித்து இருப்பார்களே என்ற ஐயம் அவளுள் எழுந்தது. போன முறை, ஏர்போர்ட் வந்தப்பொழுது, நர்ஸ் போர்வையில், பல அடி தூரம் அவர்களிடம் இருந்து பின்தங்கி வந்து இருந்தாள். இப்பொழுதோ ஈஷா அவளின் கையையும், ஈத்தனின் கையையும் ஒருசேர பிடித்தப்படி நடக்கவும், உடலெல்லாம் வெலவெலவென வந்தது, குறிஞ்சிக்கு… தங்களை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாதே. அப்படி இருக்கையில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ஈத்தனை குறித்து தவறாக எண்ணுவார்களோ? என்னையும் தவறாக எண்ணுவார்களோ? என்றெல்லாம் சினிமா வெளிச்சத்திற்கு பழக்கப்படாத சாதாரணமான பெண்ணாக அவளுக்கு அச்சம் வந்தது… உடன் இன்னொன்றும் கண்முன் வந்து அவளை கலவரப்படுத்தியது. ஈத்தன் இதை எல்லாம் மறந்துவிட்டானா? என்று நினைத்தவளாள்… அவனை எச்சரிக்கை கூட செய்ய முடியவ...

36.2 அந்திப்போர்

 சர்ப்ரைஸ் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதை விட, சர்ப்ரைஸ் வர போகிறது என்று தெரிந்துவிட்டதில் தான், குறிஞ்சிக்கு கொஞ்சமும் நிலைக்கொள்ளவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்தே மண்டை சூடாகிவிடும் போல் இருந்தது. இதுவரை அவள் சென்றிருக்காத பாதையில் வேறு, கார் வளைந்து நெளிந்து செல்ல… முந்தானையின் நுனியை போட்டு ஒரு வழி செய்துக்கொண்டு இருந்தாள். அவளை சற்று திசை திருப்பும் விதமாக ஈஷா, அன்று காலை தன்னுடைய ஸ்கெட்ச் நோட்புக்கில் வரைந்ததை குறிஞ்சிக்கு பிரித்து காட்ட… குறிஞ்சியின் கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்திருந்தன. குறிஞ்சி இருந்த வீட்டின் ஹாலின் ஒருப்பக்கத்தை, அப்படியே வெறும் பென்சில் கொண்டே அவ்வளவு துல்லியமாக ஈஷா வரைந்து வைத்திருந்தாள்… சுவற்றில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கப்பட்டிருந்த, சாந்தினியின் ஃபிரேம் செய்யப்பட்ட புகைப்படம் தொடங்கி, ஜன்னல் எல்லாம் சேர்த்து, அங்கிருந்த ரோஜா செடி தொட்டிகளை சுற்றி உதிர்ந்திருந்த இதழ்கள் வரை எதையுமே அவள் விடவில்லை… “ரொம்ப அழகா இருக்கு செல்லமா… எப்படி ஒன்னுவிடாமல் எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணி ஸ்கெட்ச் பண்ணீங்க… சான்சே இல்லைடா ம...

36.1 அந்திப்போர்

 அத்தியாயம் -36 குறிஞ்சியை சந்தோஷமாக வரவேற்று, அவளுடன் பேசிக்கொண்டிருந்த மதர்… ‘இனி எப்பொழுதும், ஈத்தன் மற்றும் ஈஷாவுடன் தான் அவள் இருக்க வேண்டும்…’ என்று உரிமையாக அவளுக்கு அன்பு கட்டளையிட. “கண்டிப்பா மதர்” என்று உறுதியளித்தாள் குறிஞ்சி. அதைத்தொடர்ந்து, அன்று ஈத்தன் வந்து, அவரிடம் திருமண காணொளியை காண்பித்து, பேசிய அனைத்தையும் அவளுடன் பகிர்ந்துகொண்டவர், அவளின் அன்னையின் உடல்நலம் மற்றும் அவள் பணம் இல்லாது பட்ட கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவிக்க. “இருக்கட்டும் மதர். பரவாயில்லை” என்றாள். என்றோ நடந்து முடிந்துவிட்டதை யாரால் இனி என்ன செய்ய முடியும். அதைத்தொடர்ந்து அன்று, சென்னை கான்வென்ட்டில் இருக்கும் மதருடன், அவரும் ஈத்தனும் பேசியதை கூறியவர். ஈத்தன் முதலில் அவளுக்கு வேறொரு திருமணம் செய்ய முடிவெடுத்ததையும்… பிறகு அன்றே அவன் தன் முடிவை கடவுளின் கிருபையால் மாற்றிக்கொண்டதையும் கூற… ‘என்ன எனக்கு வேறொரு திருமணமா!’ என்று முதலில் அதிர்ந்த குறிஞ்சி, இறுதியாக அவர் கூறியதை கேட்டப்பிறகு தான் ஆசுவாசம் அடைந்தாள். பின்னே! அப்படியெல்லாம் ஈத்தன் வந்து அவளை வற்புறுத்தியிருந்தால். நிலைமையை நினைத்து...

35.4 அந்திப் போர்

மறுநாள் அதிகாலை மணி 5.30… எங்கோ ரேடியோவில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பழக்கமற்ற சாமி பாட்டில்… தூக்கம் கலைந்து கண்களை திறந்த ஈத்தன்… இருக்கும் இடம் உணர்ந்து… ஈஷாவை பார்த்துவிட்டு… கீழே பார்க்க… அங்கு குறிஞ்சியும் இல்லை, அவளின் படுக்கையும் இல்லை… அதில் பதறிப்போனவன்… அப்படியே எழுந்து அறையில் இருந்து வெளிவந்து… திறந்திருக்கும் வாசல் கதவை பார்த்து மேலும் பதறி… வெளிப்பக்கம் ஓடிச்சென்று பார்க்க… அங்கு… எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா?! எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா… இசையின் ஸ்வரங்கள் தேனாய் இசைக்கும் குயில் நீ தானா?! பனியில் நனையும் மார்கழிப் பூவே! எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே. உனக்கென பிறந்தவள் நானா? நிலவுக்கு துணை இந்த வானா. வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்! வந்தாயே உறவாகா இன்னாள். என்று குறிஞ்சியின் காதில் ப்ளூடூத் வழியாக ஜானகி அம்மா பாடிக் கொண்டிருக்க… உடன் சேர்ந்து அவளும் பாடியப்படியே… இன்னும் இருள் பிரியாத பொழுதில், அடிக்கும் வெண் பனி காற்றில், தேகம் மொத்தமும் ஜில் ஜில்லென்று இருப்பதை சற்றும் பொருட்படுத்தாமல்…  தண்ணீர் தெளித்து சுத்தமாக இருந்த வாசலில்…  அ...

35.3 அந்திப் போர்

ஈஷா அவளுடைய சிறு வயது உடைகளை பார்த்து, “சோ கியூட்…” என்று கொஞ்சியப்படியே… அதனை தன்னுடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொள்ள… அவள் முகத்தில் வழிந்த ஆசையில்..‌. ‘இன்னும் நிறைய டிரஸ்ஸை குறிஞ்சி எடுத்துட்டு போய் இருக்கலாம்’ என்று ஈத்தனும்… ‘ச்சே… இன்னும் நிறைய எடுத்துட்டு வந்திருக்கலாமே’ என்று குறிஞ்சியும் நினைத்து இருந்தனர்… அப்பொழுது, அடுத்ததாக ஈத்தனின் பொருட்கள் அடங்கிய இடம் வரவும்… அவ்விடத்தில் இருந்து ஈஷாவை அவளுக்கே தெரியாதவாறு நகர்த்தி சென்றுவிட்டான் ஈத்தன்… அதில் குறிஞ்சியிடம், மீதமிருந்த கொஞ்ச நஞ்ச பதட்டமும் ஓடப்பார்க்க… அது எப்படி? அதற்குள் உன்னை விட்டுவிடுவோமா என்ற விதி‌… அவளை வசமாக சிக்க வைத்துவிட்டு இருந்தது… அதில் முன்பு விடைப்பெற்று சென்றிருந்த பதட்டமும், மீண்டும் ஓடிவந்து அவளுடனே ஒட்டிக்கொண்டது… அதிலும் ‘அடிப்பாவி….’ என்பது போலான ஈத்தனின் அதிர்ந்த பார்வையில்… எங்கு சென்று ஒளிந்துக்கொள்வது என்று தான் குறிஞ்சிக்கு தெரியவில்லை. “பேபி நம்ம ஃபேவரைட் hello kitty ஷர்ட்…” என்று ஒரே மாதிரி இருக்கும் அவர்கள் இருவரின் சட்டையை… அங்கிருக்கும் குறிஞ்சி ஸ்வெட்டர் பின்னும் மேஜையில் இர...

35.2 அந்திப்போர்

சிறிது நேரத்தில் ஈத்தனுக்கு தொலைப்பேசியில் அழைப்பு வர… வெளியே சென்று பேசிவிட்டு உள்ளே வந்தவனுடன்… அவனை தொடர்ந்து உள்ளே வந்த தாமஸ்… ஈத்தன் மற்றும் ஈஷாவின் பொருட்கள் அடங்கிய இரண்டு சிறிய ட்ராலிகளையும்… அவர்கள் அனைவருக்குமான இரவு உணவையும் வைத்துவிட்டு… ஈத்தனுடன் பேசிக்கொண்டிருக்க… குறிஞ்சி தான், ‘அச்சோ இங்க சாப்பாடு வச்சி சாப்பிட சின்ன மேஜை கூட இல்லையே… ரூம்ல இருக்கிறதை எடுத்து வந்து போடலாமா… ஆனா அது உயரம் சரி வராதே’ என்று அவர்களின் வசதிக்கு பார்த்து தவிக்க… ஈத்தனுக்கும், ஈஷாவிற்கும் அந்த வீட்டின் வசதி குறைப்பாடுகள் எதுவுமே கண்ணுக்கு தெரியலை… குறிஞ்சியுடன் இருக்கும் நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அதை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருந்தனர்… அவள் வாழும் இடத்தில் அவர்களால் வாழ முடியாதா என்ன?! குறிஞ்சிக்கு அப்பொழுது தான், அவளுடன் மதர் கூறி தங்கியிருந்த ஆசிரியர் பெண்ணின் ஞாபகம் வந்து, ஓடிச்சென்று அவளின் அறையை பார்த்தாள்… அந்த அறையோ, சிறு துரும்பு கூட அங்கு இல்லாமல், சுத்தமாக காலி செய்யப்பட்டு காணப்பட… ‘என்ன இது’ என்று உடனே அவளுக்கு குறிஞ்சி தொலைப்பேசியில் அழைத்து விசாரிக்க… “ஈத்தன் சார்...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates