36.3 அந்திப்போர்
ஏர்போர்ட்டில் ஐடி(ID) பரிசோதனைகள் நடக்கும் போது தான் குறிஞ்சி ஒன்றை உணர்ந்தாள். எப்பொழுதும் வெளியே பொதுவெளியில் அவளுடன் இருக்கும் பொழுதுகளில் எல்லாம் மாஸ்க் மற்றும் கூலர்ஸூடன் இருக்கும் ஈத்தன். இன்று காலை முதலே அது எதுவும் இல்லாது அவளுடன் இயல்பாக நெருக்கமாக இருந்ததை. உடன் இருந்தவர்கள் செக்யூரிட்டிகளாக இருந்தாலும் கவனித்து இருப்பார்களே என்ற ஐயம் அவளுள் எழுந்தது. போன முறை, ஏர்போர்ட் வந்தப்பொழுது, நர்ஸ் போர்வையில், பல அடி தூரம் அவர்களிடம் இருந்து பின்தங்கி வந்து இருந்தாள். இப்பொழுதோ ஈஷா அவளின் கையையும், ஈத்தனின் கையையும் ஒருசேர பிடித்தப்படி நடக்கவும், உடலெல்லாம் வெலவெலவென வந்தது, குறிஞ்சிக்கு… தங்களை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாதே. அப்படி இருக்கையில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ஈத்தனை குறித்து தவறாக எண்ணுவார்களோ? என்னையும் தவறாக எண்ணுவார்களோ? என்றெல்லாம் சினிமா வெளிச்சத்திற்கு பழக்கப்படாத சாதாரணமான பெண்ணாக அவளுக்கு அச்சம் வந்தது… உடன் இன்னொன்றும் கண்முன் வந்து அவளை கலவரப்படுத்தியது. ஈத்தன் இதை எல்லாம் மறந்துவிட்டானா? என்று நினைத்தவளாள்… அவனை எச்சரிக்கை கூட செய்ய முடியவ...