38.5

குறிஞ்சி கூறியதில் முற்பகுதி எந்தளவிற்கு ஈத்தனுக்கு வருத்தத்தை கொடுத்ததோ. அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பிற்பகுதி அவனுக்கு கோபத்தை கொடுத்து இருந்தது.

அது தீக்குழி என்று நன்றாக தெரிந்தப்பிறகும், அதில் இறங்கி இருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம். சரி அதுக்கூட, அவளின் அம்மாவிற்காக பயந்துக்கொண்டு போனாள் என்று தள்ளுபடி செய்தாலும், அவர் மறைந்த பிறகும் அவனிடம் அவள் வரவில்லையே. அவன் குத்துக்கல் போல் இருக்கும் பொழுது, எதற்கு அவள் அந்தளவிற்கு யோசித்து, பதறி, பயந்து, யார் யாரின் உதவியையோ நாடி, ஓடி, ஒளிந்து ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.

அதிலும் அவளால், அவன் செய்து வைத்தவைகளின் விளைவுகள், Butterfly Effect எனப்படும் பட்டாம்பூச்சி விளைவினை போல், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு, இன்று வரை அதன் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க. 

குறிஞ்சியை வெளிப்படையாகவே கோபமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஈத்தன்.

அதில், “எல்லாம் தான் சொல்லிட்டோமே. இப்ப என்ன!” என்று ஒன்றும் புரியாமல் அதிர்ந்த குறிஞ்சி. மீண்டும் அவனருகில் இருந்து எழுந்துக்கொள்ள பார்க்க.

அவளின் மடிமீது தன் கரத்தினை போட்டு. அவளை எழ விடாமல் செய்த ஈத்தன்.

“ஏன் என்கிட்ட நீ திரும்பி வரலை குறிஞ்சி மலர். எதுவா இருந்தாலும் என்கிட்ட வரனும்னு உன்கிட்ட சொல்லி தானே அனுப்பி இருந்தேன். அவ்வளவு தான் என்மேல் நீ வச்சிருந்த நம்பிக்கையா. அவ்வளவு தானா நான் உனக்கு” என்றான் அழுத்தமாக.

அதற்கு, “எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு உங்கக்கிட்ட நான் வரது” என்று சிறு குரலில் கூறியவள். “நிறைய பொய் உங்கக்கிட்ட சொல்லி இருந்தேனே… அதான் வரலை…” என்றாள்.

அதில் தன் கண்களை ஒருகணம் மூடி திறந்த ஈத்தன்.

“இப்ப எல்லாம் தெரிஞ்ச பிறகு. உன்னை நான் என்ன செய்துட்டேன் குறிஞ்சி. கிரேசி மாதிரி ரீசன் சொல்லாத. நான் ஒன்னும் செய்ய மாட்டேன்னு உனக்கே தெரியும். பிளீஸ். பீ சீரியஸ்” என்றான் கண்டிக்கும் விதமாக.

அதற்கு, “என்னை மன்னிச்சுடுங்க தப்பு தான்” என்று உடனே குறிஞ்சி சரணடைய. 

ஈத்தன் அவளின் மன்னிப்பை திரும்பி கூட பார்க்கவில்லை.

அதில், “என் கதையை கேட்டா உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்னு தான் நான் உங்கக்கிட்ட திரும்பி வரலை. எனக்கு நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா குழந்தையோட வாழனும்றது தான் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம். அதை எப்படி நானே வந்து கெடுக்கிறது. சொல்லுங்க” என்றவள்.

“கண்டிப்பா என்னை மீறி நிலைமை போய் இருந்தா, உங்க கிட்ட தான் வந்து நின்னு இருப்பேன். பிராமிஸ்” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற.

“எப்ப வந்திருப்ப குறிஞ்சி மலர். அந்த ஆசைதம்பி வந்து உன்னை தூக்கிட்டு போய். உன் யுட்ரெஸ்ல(கர்ப்பப்பைல)” என்றவன். அதற்கு மேல் கூற முடியாமல் எழுந்துவிட்டு இருந்தான்‌.

அக்கணம், அவள் மீது கடலளவு கோபம் கொந்தளித்தது ஈத்தனுக்கு. ஆனால் அதில் ஒருத்துளியை கூட அவளிடம் காட்ட முடியாமல் நின்று இருந்தான்.

ஏற்கனவே நொந்து விட்டிருந்தவளை, எவ்வாறு மீண்டும் நோகடிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.

தன் தலைமுடியை அழுந்த கோதிய வண்ணம் அப்படியும், இப்படியும் அறைக்குள் நடந்தவன்.

திரும்பி குறிஞ்சியை பார்க்க.

அவள் எப்பொழுதோ எழுந்து நின்றுவிட்டு இருந்தாள்.

“நீ உன் வீட்டை விட்டு போனதுக்கு மறுநாள், என்ன நடந்துச்சுன்னு தெரியுமா குறிஞ்சி மலர்”, என்று கேட்ட ஈத்தன்.

“உன் மாமா, நான் கொடுத்த பணத்தோடவும். அந்த ஆசைத்தம்பி கிட்ட வாங்குன 60 லட்சதோடவும். உன் அக்காவையும், குழந்தையையும் விட்டுட்டு ஊரை விட்டே ஓடிட்டான்” என்று கூற.

‘என்ன?’ என்று அதிர்ந்து இருந்தாள் குறிஞ்சி.

“மறுநாள், உன்னை அந்த ஆசைத்தம்பிக்கிட்ட ஒப்படைச்சுடறேன்னு, பேரம் பேசி முடிச்சிருந்திருக்கான் அந்த ராஸ்கல்” என்றவன்.

“இதில், அந்த ஆசைத்தம்பி தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச ஒரு ஏ1 குற்றவாளி. நில அபகரிப்பு, இல்லீகல் பொருட்கள் கடத்தல், போலி ஆவணங்கள் ரெடி பண்ணி தரதுன்னு, அவன் மேல அவ்ளோ கேஸ் இருக்கு. அவனை ஏதோ ரியல் எஸ்டேட் விஷயத்திற்கு பார்க்க போய் இருந்த உன் மாமா, அவனுக்கு தேவையில்லாம குழந்தை பெத்து தரோம்னு ஹோப் கொடுத்து. அவ்வளவு வேலை பார்த்து இருக்கான். அவனும் உன் மூலம் குழந்தை பெத்துக்கிறதுன்னு ஃபிக்ஸ் ஆகிட்டு இருக்கான்” என்றவன்.

“மறுநாள் நீ வரலைன்னதும். உங்க வீட்டுக்கு ஆசைத்தம்பி ஆள் அனுப்பி பார்த்து இருக்கான். அப்ப வீட்டில் நீயும் இல்லை, பிரபுவும் இல்லைன்றதை உன் சித்தியோட அழுகை மூலம் தெரிஞ்சிக்கிட்டு. கொஞ்சமும் யோசிக்காமல், கொடுத்த பணத்துக்கு உன் சித்தி குடும்பத்தை மொத்தமா தூக்கிட்டு போய்ட்டான்”, என்று நிறுத்தியவன்.

“உன் அக்கா மூலம் குழந்தையும் பெத்துக்கிட்டான்”, என்று கூற.

“ஐயோ…” என்று அலறி இருந்தாள் குறிஞ்சி. 

சத்தியமாக அவள் இப்படி ஒன்று நடந்து இருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எதிரிக்கும் வரக்கூடாது என்று நினைக்கும் நிலைமை. எங்கோ குடும்பமாக வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள் என்று தான் இத்தனை ஆண்டுகளும் நினைத்துக்கொண்டு இருந்தாள்.

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கு இணங்க. அவள் கண்களில் இருந்து நீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது.

“நீ ஒருநாள். ஒரே ஒருநாள், அந்த வீட்டில் கூட இருந்து இருந்தா கூட. உனக்கு அதுதான் நடந்து இருக்கும் குறிஞ்சி மலர்” என்று ஈத்தன் கூற.

அதன் வீரியம் புரிந்து…

கால்கள் நடுங்க. நிற்க முடியாமல், தரையில் மண்டியிட்டுவிட்டு இருந்தாள் குறிஞ்சி.

யார் செய்த புண்ணியமோ தப்பித்துவிட்டு இருந்தாள்.

ஈத்தன் சொல்வது போல் எல்லாம், எதுவும் அவளுக்கு நடந்து இருந்தால், நிச்சயம் அவள் உயிருடனே இருந்து இருக்க மாட்டாள்.
________________________________

அப்பொழுது, சட்டென்று ஏதோ தோன்ற நிமிர்ந்தவள்.

“பூஜா பாப்பா… இப்ப எங்க இருக்கா… நல்லா இருக்கா தானே…”, என்று ஐஸ்வர்யாவின் மகளை குறித்து அடிவயிறு பதற கேட்டாள். அவள் வயிற்றில் சுமக்கவில்லை என்றாலும், அவள் தூக்கி வளர்த்த குழந்தை ஆயிற்றே. இன்று இருபது இருபத்திரண்டு வயது பிள்ளையாக வளர்ந்து இருப்பாளே.

ஈத்தன், “ம் நல்லா இருக்கா… ஆனா உன்னை மாதிரியே” என்றான்.

குறிஞ்சி அவனை புரியாமல் பார்க்கவும்.

அவள் அக்கா ஐஸ்வர்யாவும், அவள் சித்தி லோகேஸ்வரியும், எங்கு செல்வது என்று தெரியாது, அந்த ஆசைத்தம்பி வீட்டிலேயே அவன் மனைவியை காக்கா பிடித்து ஒட்டிக்கொண்டு, வீட்டு வேலை செய்த வண்ணம் அடிமை வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பதாக கூறியவன். அங்கு தான் பூஜாவும் இருப்பதாக கூற.

குறிஞ்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

தன் வினை தன்னை சுடும் என்ற பழமொழி யாருக்கு பொருத்தமாக இருக்குமோ, இருக்காதோ தெரியாது. ஆனால் ஐஸ்வர்யாவிற்கும், லோகேஸ்வரிக்கும் 100 சதவீதம் பொருந்தும் வண்ணம் அது இருந்தது‌.

நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாது, குறிஞ்சிக்கும், சாந்தினிக்கும் தாயும், மகளும் சேர்ந்து செய்த சித்திரவதைகளை எல்லாம் கடுகளவு கூட குறையாது, இப்பொழுது பல மடங்காக அனுபவித்துக்கொண்டு இருந்தனர்.

அதிலும், குறிஞ்சி அவ்வளவு செய்த பிறகும், அவளை மீண்டும் குழந்தை பெற்று தரக்கூறி, ஒரு பெண்ணாக ஐஸ்வர்யாவா கேட்டு வந்ததை. குறிஞ்சியால் பல காலம் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. அந்தளவிற்கு என்ன வன்மம் என் மீது என்று.

அதிலும், நன்றாக கணவன், குழந்தை என்று வாழ்ந்துக் கொண்டிருந்தவள். குறிஞ்சிக்கும் அதுப்போல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ஒருவினாடி கூட யோசித்து பார்த்ததில்லை. யோசித்து இருந்தால் ஈத்தனுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க அவள் கிளம்பிய பொழுதே தடுத்து இருப்பாளே!

அதற்கெல்லாம் சேர்த்து வைத்து, அவளுக்கு காலம் மொத்தமாக பாடம் கற்பித்துவிட்டு இருந்தது. 

அவள் தன் மொத்த காதலையும், நம்பிக்கையையும் வைத்திருந்த பிரபு, அவளை விட்டு ஓடியது ஒருபக்கம் என்றால், யாரென்றே தெரியாத ஒருவனுக்கு, வாடகை தாயாக பிள்ளை சுமந்த வலி. நரகமாக இருந்தது அவளுக்கு. அதுமட்டுமின்றி எவ்வித பொறுப்புகளையும் ஏற்காது, ஒரு வேலையும் செய்யாது, ஓசியில் மற்றவரை ஏய்த்து உடம்பை வளர்த்துக்கொண்டு இருந்தவளுக்கு, கஷ்ட நேரத்தில் எப்படி தன்னை காத்துக்கொள்வது என்றுக்கூட தெரியவில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டிருந்த லோகேஸ்வரியின் வளர்ப்பு அப்படி தான் இருந்தது.

சாந்தினி போல், மகளுக்கு நல்லதை கற்பித்து, ஒழுங்காக படிக்க வைத்து, வளர்த்துவிடாததற்கு எல்லாம் சேர்த்து வைத்து, லோகேஸ்வரியும் வளையாத தன் உடலை வளைத்து, அவ்வீட்டில் மலைப் போல் குவியும், பத்து பாத்திரங்கள் அனைத்தையும் தேய்த்தும், துடைத்தும், வயதான காலத்தில் வயிற்றை கழுவிக்கொண்டு இருந்தார்.

இதில் பாவம் எப்பாவமும் அறியாத பூஜா தான். வதைப்பட்டு போனாள். குறிஞ்சி இருந்தவரை கான்வென்ட்டில் படித்துக்கொண்டிருந்தவளின் படிப்பே மொத்தமாக நின்றுவிட்டு இருந்தது. வயது வந்த பிள்ளையாக நின்றவளை, ஐஸ்வர்யா வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு ஒவ்வொரு இரவும் காப்பாற்றிக்கொண்டு வந்து இருந்தாள்.

ஒரு பெண் பிள்ளைக்கு தந்தையாக, ஈத்தனால் பூஜாவின் கஷ்டங்களை தான் தாங்க முடியாமல் போனது. அன்று அவன் முன்பு சிறுக்கூடாக, வறுமையின் தாக்கத்துடன் வந்து நின்ற குறிஞ்சியை மீண்டும் பார்த்தது போல் இருந்தது. என்ன செய்வது. பெற்றோர்கள் சரியில்லாத பல பிள்ளைகளின் நிலைமை அதுதானே.

ராகவ், எப்படியோ ஐஸ்வர்யாவை கண்டுப்பிடித்து, அழைத்து வந்திருக்க, அவள் கூறியவற்றையெல்லாம் கேட்டு அதிர்ந்துப்போய் இருந்த ஈத்தனுக்கு. அந்த சிக்கல்களை எல்லாம் யாருக்கும் தெரியாதவாறு, அவன் பேர் எங்கும் சிறிதளவும் கசியாமல் களைந்து, அவர்களை காப்பாற்றுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டு இருந்தது. அதிலும் அந்த ஆசைத்தம்பியின் அரசியல் செல்வாக்கை முற்றிலும் உடைத்து, மறைமுகமாக பல வேலைகளை துரிதமாக பார்த்து, அவன் மீது சென்ட்ரல் நடவடிக்கை எடுக்கும் படி செய்தவன். மொத்தமாக அவனை ஜெயிலுக்கு அனுப்பி வைத்து இருந்தான்.

அதுமட்டுமின்றி பிரபுவையும் கண்டறிந்து, ஆசைத்தம்பிக்கு கொடுத்த சிகிச்சையை அவனுக்கும் கொடுத்து இருந்தனர்.

இந்திய பெருங்கடலில் உள்ள பல தீவிகளில் ஒன்றான, சீசெல்ஸ் தீவில்(Seychelles Island)...

சொந்தமாக ரிசார்ட் வாங்கிப் போட்டு, மாதுவில் ஆரம்பித்து அனைத்து வித போதைப்பொருட்களையும் அங்கு விநியோகம் செய்த வண்ணம், கோடிகளில் புரண்டு சக்கரவர்த்தியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தான், பிரபு.

பணத்திற்கு மத்தியில், கட்டின மனைவி, பெத்த பிள்ளை எதுவுமே அவனுடைய கண்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

அதையெல்லாம் பார்ப்பவனாக அவன் இருந்து இருந்தால். குறிஞ்சிக்கு எதிராக அவ்வளவு செய்து இருக்க மாட்டானே.

வீடு, வாசல், கண்ணுக்கு லட்சணமாக இரவுகளை அலங்கரிக்க ஐஸ்வர்யாவும் மதுவும், வேலை செய்யவும் சம்பாதித்து கொட்டவும் குறிஞ்சி என்று, பிறந்த இடத்தை விட நன்கு சுகமாக வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தவன். அதற்கு மேல் கிடைக்கவும் பழையதை உதறிவிட்டு அப்படியே தாவிவிட்டு இருந்தான். கிட்டத்தட்ட குறிஞ்சியின் தந்தை குமாரின் குணம் கொண்டவன்.

ராகவ், பிரபுவின் கதையை அங்கேயே அடித்து துவைத்து முடித்து, புதைத்து விட்டு வருகிறேன் என்று ஈத்தனிடம் கூற. 

ஈத்தன் அதெல்லாம், வேண்டவே வேண்டாம் என்று ஒரேயடியாக தடுத்து விட்டான். 

இந்த அடிப்பது, கொல்வது எல்லாம் அவனின் அகராதியில் மாபெரும் விஷயங்கள் ஆயிற்றே.
 
எப்படி அவனால் அதையெல்லாம் செய்ய முடியும்.

இல்லை அப்படி செய்வதால் நடந்தது எதுவும் தான் மாற போகிறதா?

இல்லை, நிம்மதி தான் கிட்ட போகிறதா?

சிறு வயதில், Don't take revenge yourself. Leave it to God. The Bible says, "VENGEANCE IS MINE, I WILL REPAY” says the Lord. (Romans 12:19) என்று அவன் படித்த போதனை, அவன் மனதில் நின்று அவனை வழிநடத்திக்கொண்டிருக்க…

தேவனின் வழியில், பிரபுவினை அத்தீவின் அரசாங்கத்திடம், ஈத்தன் சிக்க வைத்துவிட. உலகின் அதிக பட்ச தண்டனையான, மரண தண்டனையை அவனுக்கு அங்கு பரிந்துரை செய்து இருந்தார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ, அவர்களுக்கு நடந்த நிகழ்வுகளுடன், ஈத்தனின் பங்கும் இருந்துவிட. பூஜாவின் மொத்த பொறுப்பினையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டிருந்த ஈத்தன். அவர்கள் மூவருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து. பாதுக்காப்பான இடத்தில் நேற்று தான் தங்க வைத்துவிட்டு வந்து இருந்தான்.
________________________________

முதலில், குறிஞ்சியிடம் இதையெல்லாம் கூற வேண்டாம். அவளால் தாங்க முடியாது. நாமே பார்த்து முடித்துவிடலாம் என்று தான் ஈத்தன் நினைத்து இருந்தான். ஐஸ்வர்யா, ‘குறிஞ்சி உயிருடன் இருக்கின்றாளா?’ என்று அதிர்ந்து, அவளை பார்க்க வேண்டும் என்று கேட்டப்போது கூட மறுத்துவிட்டு இருந்தான்.

அவளுக்கு, எப்படியான மன வேதனைகளை இவர்கள் கொடுத்து இருந்தால். அவள் அந்தமாதிரி எழுதி வைத்துவிட்டு ஓடியிருப்பாள். என்று நினைத்தவன். குறிஞ்சியின் வாழ்க்கையில் அவர்கள் யாரும் திரும்ப நுழைய வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தான்.

ஆனால், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு. பொய்யாக ஒரு நாள் கூட அவனால் குறிஞ்சியுடன் வாழ முடியாது போக. மொத்தமாக கூறிவிட்டு இருந்தான்.

அதில், தன் வாயை மிக இறுக்கமாக மூடிக்கொண்டு அமர்ந்து இருந்த குறிஞ்சிக்கு. 

நடப்பது எல்லாம் தூக்கத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள் போல் இருந்தது‌.

‘இந்த பிரபுவிற்கு ஏன் தான் அவ்வளவு பணத்தாசையோ. அதுவும் பொண்டாட்டி, பிள்ளைகளை மீறி. ஈத்தன் கொடுத்திருந்த பணத்தை வைத்து எவ்வளவு அருமையாக வாழ்ந்து இருக்கலாம்’, என்ற எண்ணம் தான் அவளுக்கு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

என்ன செய்வது, குரங்கின் கையில் சென்று பூமாலையை கொடுத்தது இவர்களின் தவறு தானே. மொத்தமாக பிய்த்துப்போட்டு, யாருக்கும் பயனின்றி செய்துவிட்டு இருந்தான்.

அப்பொழுது, வலியில் தெரிக்கும் தன் நெற்றிப்பொட்டை, அழுத்தமாக பற்றிய ஈத்தன்.

“நீ போயிட்டு படு குறிஞ்சி. மார்னிங் மீதியை பேசிக்கலாம். நான் கொஞ்சம் ரோஸ் கார்டன் வரை போயிட்டு வரேன்” என்று கிளம்ப.

ஓடிவந்து அவனுடைய கையை பற்றிய குறிஞ்சி, “நான் தலையை பிடிச்சு விடறேன். உட்காருங்க” என்றாள்.

அவளிடம், “வேண்டாம்…” என்று ஈத்தன் மறுத்துவிட்டு கிளம்ப.

குறிஞ்சி அவனை விடவே இல்லை. இறுக்கமாக அவனுடைய கையினை பற்றி வைத்துக்கொண்டு இருந்தாள்.

அதில், “என்னோட ஹெல்ப் எப்படி உனக்கு தேவையில்லாமல் போச்சோ. அதே மாதிரி உன்னோட ஹெல்பும் இனி எனக்கு தேவையில்லை குறிஞ்சி. விடு” என்று இருந்தான் ஈத்தன். 

அதில் குறிஞ்சி திகைத்து விழிக்க.

“ஒழுங்கா போய்ட்டு படுத்து தூங்கு. நான் வரும் பொழுது முழிச்சு இருந்தனா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது. இதோ இந்த ஷாலை வச்சி அன்னைக்கு மாதிரியே முகத்தை மூடி படுத்திடு. போ” என்றெல்லாம், எப்படி அவளை திட்டுவது என்று தெரியாமல், என்னத்தையோ கூறி ஈத்தன் திட்ட.

குறிஞ்சி, தன் விழிகள் இரண்டையும் பெரிதாக திறந்து வைத்து, அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

என்ன செய்வது, கோபப்பட்டு கூட ரசிக்க வைக்கின்றானே!

நொடியில் அவளை உலகத்தை மறக்க செய்கின்றானே!

அதில் மேலும் கோபமான ஈத்தன், “You're a devil, I hate you” என்றுவிட்டு, அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
________________________________ 

💌👩‍❤️‍💋‍👨 ஹாய் டார்லிங்ஸ் ❤️ அப்டேட் எப்படி இருந்தது. Flashback மொத்தமும் இந்த அப்டேட்ல முடிச்சிடனும்னு முடிச்சிட்டேன். ஈத்தன், குறிஞ்சி கேரக்டருக்கு ஒத்து வரும் போல் எழுதி இருக்கேன். ஓகே வா? எதுவும் நான் மிஸ் பண்ணி இருந்தால் கமெண்ட்டில் பண்ணுங்க❤️ 
-சுவாதி லக்ஷ்மி 💕 🪻 

கருத்துகள்

  1. ஈத்தன் முதல்லையே தேடி வரலன்னு கோபப்படற சரி தான்.. ஆனா குறிஞ்சியோட பொய்கள் அவளை அவனை நோக்கி வர தயங்க வச்சிடுச்சே...
    அதுமட்டுமா.. அவ மனசுல ஈத்தன் வேற மாதிரி பதிஞ்சு போயிருக்கறதுல அவ எப்படி அவன் முன்னாடி எந்த பாதிப்பும் இல்லாதவ மாதிரி நார்மலா நடந்துக்க முடுஞ்சிருக்கும்...

    ஒருவேள அவனோட இருந்து அனுபவித்த எல்லாத்தையும் விட மனசு இல்லாம வந்திட்டாளன்னு ஈத்தன் நினைக்கவே மாட்டான்.. ஆனா நினைச்சுட்டான்னு அவளுக்கு இருக்கலாமே.. ஏன்னா அவ சொனன் எல்லாமே பொய் மட்டும் தானே அவன்கிட்ட... அப்போ இப்ப மட்டும் உண்மைய அவ சொல்லவான்னு அவன் நம்பாம போயிட்டான்னு பயந்து வரல...

    விடு ஈத்தன் இப்ப உன்கிட்ட வந்துட்டா... லேட் தான்.. ஆனாலும் உன்கிட்ட வந்தவள வச்சு வாழாம நீயும் இன்னும் யோசிச்சிட்டு இருக்கே... இந்த ரைட்டருக்கு எப்ப தான் மனசு வருமோ உங்கள சேர்த்து வைக்க...

    பதிலளிநீக்கு
  2. Prabhu ku udane thuku dandanai kuduka kudathu semathiya pinni edukanum, soundarya logeswari kum inda dandanai thevai dan, ethan un kitta eppadi varuva da, enga unmai terimjita poi sonnanu thappa ninaipano nu dan varama iruka kochikatha da mannichidu, pavam avaluku yar iruka unnai vitta

    பதிலளிநீக்கு
  3. I think.... flashback konjam disappointed aa erukku.... Ennum perusa expect pannom.... sorry' sis ....we are not satisfied

    பதிலளிநீக்கு
  4. Eppo Yella sikkalum mudinjadhu la....enimel aachum ithan and kurinjiku romantic scens erukuma?

    பதிலளிநீக்கு
  5. அப்டேட் கொஞ்சம் சீக்கிரம் sis.. Pls

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story