30.5 அந்திப்போர் 🪻
உமையாள் சொன்னப்பொழுதெல்லாம், அப்படி என்ன பெரியதொரு மாற்றத்தை ஒரு குழந்தையால் ஏற்படுத்திவிட முடியும் என்று பல தடவை ஈத்தன் யோசித்து இருக்கின்றான்… ஆனால் இப்பொழுதோ அந்த பெரிய மாற்றத்தை நேரிலேயே அனுபவித்துக்கொண்டு இருந்தான்… எண்ணற்ற கவுன்சிலிங்கள்… பயிற்சிகள்… மன கட்டுப்பாடுகள்… என்று அத்தனை அனுபவமானவர்களின் மூலம்… தன் குரலினை பழையப்படி மேம்படுத்தும் சிகிச்சைகளை எடுத்தும்… இறுதிவரை வெற்றியடைய முடியாமல்… கோடிக்கணக்கான பணத்தையும்… வாய்ப்புகளையும்… அவனை நம்பியவர்களின் நம்பிக்கையையும்… சிறுக சிறுக கடந்த ஒரு வருடாமாக இழந்துக்கொண்டிருந்த ஈத்தனின் குரல்… எப்பொழுதும் இல்லாத அளவிற்கு… மந்திரம் போட்டது போல்… அதுவும் ஈத்தனே பிரம்மிக்கும் வகையில்… அவ்வளவு அற்புதமாக மாறிவிட்டு இருந்தது… அன்று அவனின் உள்ளங்கை உணர்ந்த, அவனின் உயிர் அணுக்களில் உண்டான, அந்த சிறு ஜீவனின் அசைவு, அத்தகைய அதிசயத்தை அவனில் ஏற்படுத்திவிட்டிருக்க… கால் வைத்த இடமெல்லாம் ஈத்தனுக்கு வெற்றி தான்… குறிஞ்சிக்கு பிரசவ நாள் நெருங்குவதற்குள், நிலுவையில் இருக்கும் படங்கள் அனைத்திற்குமான பாடல்களை, முடித்து கொடுத்து விட வேண்டும் என்று மு...