இடுகைகள்

30.5 அந்திப்போர் 🪻

உமையாள் சொன்னப்பொழுதெல்லாம், அப்படி என்ன பெரியதொரு மாற்றத்தை ஒரு குழந்தையால் ஏற்படுத்திவிட முடியும் என்று பல தடவை ஈத்தன் யோசித்து இருக்கின்றான்… ஆனால் இப்பொழுதோ அந்த பெரிய மாற்றத்தை நேரிலேயே அனுபவித்துக்கொண்டு இருந்தான்… எண்ணற்ற கவுன்சிலிங்கள்… பயிற்சிகள்… மன கட்டுப்பாடுகள்… என்று அத்தனை அனுபவமானவர்களின் மூலம்… தன் குரலினை பழையப்படி மேம்படுத்தும் சிகிச்சைகளை எடுத்தும்… இறுதிவரை வெற்றியடைய முடியாமல்… கோடிக்கணக்கான பணத்தையும்… வாய்ப்புகளையும்… அவனை நம்பியவர்களின் நம்பிக்கையையும்… சிறுக சிறுக கடந்த ஒரு வருடாமாக இழந்துக்கொண்டிருந்த ஈத்தனின் குரல்… எப்பொழுதும் இல்லாத அளவிற்கு… மந்திரம் போட்டது போல்… அதுவும் ஈத்தனே பிரம்மிக்கும் வகையில்… அவ்வளவு அற்புதமாக மாறிவிட்டு இருந்தது… அன்று அவனின் உள்ளங்கை உணர்ந்த, அவனின் உயிர் அணுக்களில் உண்டான, அந்த சிறு ஜீவனின் அசைவு, அத்தகைய அதிசயத்தை அவனில் ஏற்படுத்திவிட்டிருக்க… கால் வைத்த இடமெல்லாம் ஈத்தனுக்கு வெற்றி தான்… குறிஞ்சிக்கு பிரசவ நாள் நெருங்குவதற்குள், நிலுவையில் இருக்கும் படங்கள் அனைத்திற்குமான பாடல்களை, முடித்து கொடுத்து விட வேண்டும் என்று மு...

30.4 அந்திப்போர் 🪻

ஜெல்லி மீன் போல் அங்கும் இங்கும் நீந்தும் அவன் பிள்ளையின் அசைவை… அவனுடைய கரம்… குறிஞ்சியின் ஆடைக்கு மேலேயே உணர… “ஓ மை காட்….” என்று தன் கரத்தினை தூக்கி உள்ளங்கையினை பார்த்த ஈத்தன், “மை பேபி…” என்று அழுத்தமாக தன் இதழ்களை குழந்தையை உணர்ந்த அந்த உள்ளங்கையில் பதித்தவன்… சிறு தயக்கமுமின்றி, மீண்டும் தன் கரத்தினை எடுத்துச்சென்று குறிஞ்சியின் வயிற்றில் பதித்து இருந்தான்… அதை அனுமதித்த குறிஞ்சியும், அவனின் கரத்தினை பற்றி, “இப்ப இங்க இருக்காங்க சார் உங்க பேபி…” என்று நகர்த்தி சரியான இடத்தில் வைக்க… ஈத்தனின் நாடி நரம்பெல்லாம் அப்படியொரு மென் உணர்வு… உடல் முழுவதும் லேசாகி பறப்பது போல் சொர்க்கமாய் இருந்தது… அதனை தன் கண்களை மூடி அவன் மேலும் மேலும் உள்வாங்கி ரசிக்க… குறிஞ்சியின் கண்கள் அவனை கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தன… ஈத்தன் மீதான குறிஞ்சியின் அந்நேர உணர்வுகளை எல்லாம்… காதல் என்ற சிறிய வார்த்தைக்குள் எல்லாம் அடைக்கவே முடியாது… அது அனைத்தையும் கடந்துவிட்டு இருந்தது… மீண்டும் மீண்டும் தன்னை அவனிடம் தொலைத்தாள்… குழந்தையின் அசைவு சிறிது நேரத்தில் சுத்தமாக நின்றுவிட… நிமிர்ந்து குறிஞ்சியின...

30.3 அந்திப்போர்

 நின்று நின்று எப்படியோ ஏறி மேல் மாடியை தொட்டுவிட்டவளுக்கு… அப்படி மூச்சு வாங்கியது… ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், ஈத்தன் எங்கே தேட… அவனோ வெறும் தரையில், ரோஜா தொட்டிகளுக்கு மத்தியில் கண்களை மூடி அமைதியாக படுத்துக் கிடந்தான்… அவனை கண்டுபிடித்ததும்… வேக எட்டுக்களை வைத்து அவனை குறிஞ்சி நெருங்க… அவளின் கொலுசுகளின் மெல்லிய ஒலி ஈத்தனின் அமைதியை கலைத்தது.. அதில் சட்டென்று தன் கண்களை திறந்தவன்… தலையை திருப்பி பார்க்கவும்… முகம் கொள்ளாத புன்னகையுடனும், நெஞ்சம் நிறைந்த அன்புடனும் அவனை பார்த்தப்படியே நடந்து வந்துக்கொண்டிருந்த குறிஞ்சி… அவன் தன் வரவை உணர்ந்ததும்… “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். எப்பவும் நீங்க மகிழ்ச்சியா, நீண்ட ஆயுளோட வாழனும்….”, என்றப்படியே… அவன் அருகே வந்துவிட்டவள்… ஈத்தனின் இரண்டு கண்களில் இருந்தும் வழிந்துக்கொண்டிருந்த கண்ணீரை பார்த்து… அப்படியே அசையாமல் நின்றுவிட்டாள்… “சார்…”, என்று அதிர்ந்து கூறியவளின் கண்களில் இருந்தும் நீர் முத்துக்கள் உற்பத்தியாகி, தரையில் சிதறியிருந்தன… குறிஞ்சியின் அந்த அதிர்ந்த முகத்தை பார்த்த ஈத்தன், பட்டென்று தன் முகத்...

30.2 அந்திப்போர் 🪻😘

அன்று இரவு, வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த குறிஞ்சிக்கு…  காலையில் அவள் சொன்னது பொய் என்று கூட தெரியாமல்… அவள் கூறுவதை அப்படியே நம்பி… ஈத்தன் அழைத்துச்சென்று சாந்தினியை பார்க்க வைத்ததில்… அவ்வளவு குற்ற உணர்வு… அவனின் நம்பிக்கையை ஆரம்பம் முதலே தவறாக அல்லவா பயன்படுத்திக்கொண்டு வருகின்றாள்.. அதில், இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் ஈத்தனிடம் எந்த பொய்யும் கூற கூடாது… அவனுக்கு தொந்தரவும் எதுவும் தரக்கூடாது… சொன்னதுப்போல் குழந்தையை பெற்று அவன் கையில் தந்துவிட்டு கிளம்பிவிட வேண்டும்… ஏற்கனவே முடிவு செய்தது போல், அம்மாவுடன் எங்காவது புது ஊருக்கு சென்று, மீதி வாழ்க்கையை வாழ்ந்துக்கொள்ளலாம்… என்று முடிவெடுத்துக்கொண்டவள்… ஒருமாதிரி மனதை திடப்படுத்திக்கொண்டு… அவனுடனான பொழுதுகளை அனுபவித்து… தன்னுடைய மீதி வாழ்க்கைக்காக அதனையெல்லாம் நினைவில் சேமித்துக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள்… ஏமாற்றங்களும்… நிராசைகளும்… ஏக்கங்களும்… ஒன்றும் புதிதில்லையே அவளுக்கு… ஏற்கனவே பக்குவப்பட்டவள்… மேலும் பக்குவமாகி போனாள்… ________________________________ கடந்த ஒருவாரமாகவே குறிஞ்சிக்கு ஈத்தனை பார்ப்பதே பெரும...

30.1 அந்திப்போர் 🪻😘📽️

🙆🔴 ஹாய் டார்லிங்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க? என் மேல செம கோபமா இருப்பீங்கன்னு தெரியது😥 சாரி டார்லிங்ஸ்... இந்த கதை ஆரம்பிச்ச நேரத்தில் இருந்தே எனக்கு புது புது வேலையா வந்துட்டு இருக்கு... எனக்கு கழுத்தில் சின்னதா ஒரு சர்ஜரி பண்ண சொல்லி இருக்காங்க. சின்னது தான். ஆனால் எமர்ஜென்சி. அதில் தான் இந்த மாசம் ஒரே அலைச்சல். இங்க இன்சூரன்ஸ் எதுவும் கிளைம் பண்ண முடியாததால்... இந்தியாக்கு வந்து தான் சர்ஜரி பண்ணிக்க போறேன்.. ஜூன் 11 to ஜூலை 9 வரை இந்தியா தான். அதுவும் ஆறு வருஷம் கழிச்சு இந்தியா வர போறேன். அம்மா அப்பா எல்லாரையும் பார்க்கனும்... அண்ணா குழந்தைக்கு 5 வயசாகுது... இப்ப தான் முதல் தடவை பார்க்க போறேன்... நிறைய பர்சனல் கமிட்மென்ட்ஸ் இருக்கு டார்லிங். பேக்கிங் எல்லாம் பண்ணனும்... 🔴 கண்டிப்பா கதை போடுவதை நிறுத்த மாட்டேன்... முடிஞ்சளவு ஊருக்கு போகுறதுக்கு முன்னாடி முடிச்சிட்டு போக பார்க்கிறேன்... அப்படி முடியலைனாலும் ஊரில் இருந்தும் நிச்சயம் கதை எழுதி போடுறேன். 🔴கொஞ்சம் பதிவுகள் தாமதமா வந்தா பொறுத்துக்கோங்க டார்லிங்ஸ்(ஆனால் யூடி கேட்கிறதை நிறுத்தாதிங்க. எனக்கு நீங்க தான் கீ கொடுக்கனு...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates