இடுகைகள்

36.1 அந்திப்போர்

 அத்தியாயம் -36 குறிஞ்சியை சந்தோஷமாக வரவேற்று, அவளுடன் பேசிக்கொண்டிருந்த மதர்… ‘இனி எப்பொழுதும், ஈத்தன் மற்றும் ஈஷாவுடன் தான் அவள் இருக்க வேண்டும்…’ என்று உரிமையாக அவளுக்கு அன்பு கட்டளையிட. “கண்டிப்பா மதர்” என்று உறுதியளித்தாள் குறிஞ்சி. அதைத்தொடர்ந்து, அன்று ஈத்தன் வந்து, அவரிடம் திருமண காணொளியை காண்பித்து, பேசிய அனைத்தையும் அவளுடன் பகிர்ந்துகொண்டவர், அவளின் அன்னையின் உடல்நலம் மற்றும் அவள் பணம் இல்லாது பட்ட கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவிக்க. “இருக்கட்டும் மதர். பரவாயில்லை” என்றாள். என்றோ நடந்து முடிந்துவிட்டதை யாரால் இனி என்ன செய்ய முடியும். அதைத்தொடர்ந்து அன்று, சென்னை கான்வென்ட்டில் இருக்கும் மதருடன், அவரும் ஈத்தனும் பேசியதை கூறியவர். ஈத்தன் முதலில் அவளுக்கு வேறொரு திருமணம் செய்ய முடிவெடுத்ததையும்… பிறகு அன்றே அவன் தன் முடிவை கடவுளின் கிருபையால் மாற்றிக்கொண்டதையும் கூற… ‘என்ன எனக்கு வேறொரு திருமணமா!’ என்று முதலில் அதிர்ந்த குறிஞ்சி, இறுதியாக அவர் கூறியதை கேட்டப்பிறகு தான் ஆசுவாசம் அடைந்தாள். பின்னே! அப்படியெல்லாம் ஈத்தன் வந்து அவளை வற்புறுத்தியிருந்தால். நிலைமையை நினைத்து...

35.4 அந்திப் போர்

மறுநாள் அதிகாலை மணி 5.30… எங்கோ ரேடியோவில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பழக்கமற்ற சாமி பாட்டில்… தூக்கம் கலைந்து கண்களை திறந்த ஈத்தன்… இருக்கும் இடம் உணர்ந்து… ஈஷாவை பார்த்துவிட்டு… கீழே பார்க்க… அங்கு குறிஞ்சியும் இல்லை, அவளின் படுக்கையும் இல்லை… அதில் பதறிப்போனவன்… அப்படியே எழுந்து அறையில் இருந்து வெளிவந்து… திறந்திருக்கும் வாசல் கதவை பார்த்து மேலும் பதறி… வெளிப்பக்கம் ஓடிச்சென்று பார்க்க… அங்கு… எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா?! எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா… இசையின் ஸ்வரங்கள் தேனாய் இசைக்கும் குயில் நீ தானா?! பனியில் நனையும் மார்கழிப் பூவே! எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே. உனக்கென பிறந்தவள் நானா? நிலவுக்கு துணை இந்த வானா. வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்! வந்தாயே உறவாகா இன்னாள். என்று குறிஞ்சியின் காதில் ப்ளூடூத் வழியாக ஜானகி அம்மா பாடிக் கொண்டிருக்க… உடன் சேர்ந்து அவளும் பாடியப்படியே… இன்னும் இருள் பிரியாத பொழுதில், அடிக்கும் வெண் பனி காற்றில், தேகம் மொத்தமும் ஜில் ஜில்லென்று இருப்பதை சற்றும் பொருட்படுத்தாமல்…  தண்ணீர் தெளித்து சுத்தமாக இருந்த வாசலில்…  அ...

35.3 அந்திப் போர்

ஈஷா அவளுடைய சிறு வயது உடைகளை பார்த்து, “சோ கியூட்…” என்று கொஞ்சியப்படியே… அதனை தன்னுடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொள்ள… அவள் முகத்தில் வழிந்த ஆசையில்..‌. ‘இன்னும் நிறைய டிரஸ்ஸை குறிஞ்சி எடுத்துட்டு போய் இருக்கலாம்’ என்று ஈத்தனும்… ‘ச்சே… இன்னும் நிறைய எடுத்துட்டு வந்திருக்கலாமே’ என்று குறிஞ்சியும் நினைத்து இருந்தனர்… அப்பொழுது, அடுத்ததாக ஈத்தனின் பொருட்கள் அடங்கிய இடம் வரவும்… அவ்விடத்தில் இருந்து ஈஷாவை அவளுக்கே தெரியாதவாறு நகர்த்தி சென்றுவிட்டான் ஈத்தன்… அதில் குறிஞ்சியிடம், மீதமிருந்த கொஞ்ச நஞ்ச பதட்டமும் ஓடப்பார்க்க… அது எப்படி? அதற்குள் உன்னை விட்டுவிடுவோமா என்ற விதி‌… அவளை வசமாக சிக்க வைத்துவிட்டு இருந்தது… அதில் முன்பு விடைப்பெற்று சென்றிருந்த பதட்டமும், மீண்டும் ஓடிவந்து அவளுடனே ஒட்டிக்கொண்டது… அதிலும் ‘அடிப்பாவி….’ என்பது போலான ஈத்தனின் அதிர்ந்த பார்வையில்… எங்கு சென்று ஒளிந்துக்கொள்வது என்று தான் குறிஞ்சிக்கு தெரியவில்லை. “பேபி நம்ம ஃபேவரைட் hello kitty ஷர்ட்…” என்று ஒரே மாதிரி இருக்கும் அவர்கள் இருவரின் சட்டையை… அங்கிருக்கும் குறிஞ்சி ஸ்வெட்டர் பின்னும் மேஜையில் இர...

35.2 அந்திப்போர்

சிறிது நேரத்தில் ஈத்தனுக்கு தொலைப்பேசியில் அழைப்பு வர… வெளியே சென்று பேசிவிட்டு உள்ளே வந்தவனுடன்… அவனை தொடர்ந்து உள்ளே வந்த தாமஸ்… ஈத்தன் மற்றும் ஈஷாவின் பொருட்கள் அடங்கிய இரண்டு சிறிய ட்ராலிகளையும்… அவர்கள் அனைவருக்குமான இரவு உணவையும் வைத்துவிட்டு… ஈத்தனுடன் பேசிக்கொண்டிருக்க… குறிஞ்சி தான், ‘அச்சோ இங்க சாப்பாடு வச்சி சாப்பிட சின்ன மேஜை கூட இல்லையே… ரூம்ல இருக்கிறதை எடுத்து வந்து போடலாமா… ஆனா அது உயரம் சரி வராதே’ என்று அவர்களின் வசதிக்கு பார்த்து தவிக்க… ஈத்தனுக்கும், ஈஷாவிற்கும் அந்த வீட்டின் வசதி குறைப்பாடுகள் எதுவுமே கண்ணுக்கு தெரியலை… குறிஞ்சியுடன் இருக்கும் நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அதை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருந்தனர்… அவள் வாழும் இடத்தில் அவர்களால் வாழ முடியாதா என்ன?! குறிஞ்சிக்கு அப்பொழுது தான், அவளுடன் மதர் கூறி தங்கியிருந்த ஆசிரியர் பெண்ணின் ஞாபகம் வந்து, ஓடிச்சென்று அவளின் அறையை பார்த்தாள்… அந்த அறையோ, சிறு துரும்பு கூட அங்கு இல்லாமல், சுத்தமாக காலி செய்யப்பட்டு காணப்பட… ‘என்ன இது’ என்று உடனே அவளுக்கு குறிஞ்சி தொலைப்பேசியில் அழைத்து விசாரிக்க… “ஈத்தன் சார்...

35.1 அந்திப்போர்

அத்தியாயம் -35 இது ஈஷா மற்றும் குறிஞ்சிக்கான நேரம் என்பது புரிந்து… அவர்கள் இருவருக்குள்ளும் செல்லாமல் அமைதியாக நின்றிருந்த ஈத்தன்… ஒரு எல்லைக்கு மேல், குறிஞ்சியின் உணர்வுகள் வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே செல்லவும்… இதற்கு மேல் ஒரு வினாடி விட்டாலும் அவள் உடைந்துவிடுவாள்… அது அவளின் உடல் நலனுக்கும் நல்லதில்லை… ஈஷாவின் மனநிலைக்கும் நல்லதில்லை என்பதை உணர்ந்து… சூழ்நிலையை இலகுவாக்க… குறிஞ்சியின் உள்ளங்கையில் சிறு அழுத்தம் கொடுத்து வருடியப்படியே… அவளை ஈஷாவிடம் இருந்து மெல்ல பிரித்தவன்… குடிக்க தண்ணீர் எடுத்துவர கூறி குறிஞ்சியை அனுப்பிவிட்டு இருந்தான். ஈஷாவின் சிவந்த முகத்தை பார்த்து தன்னை சுதாரித்துக்கொண்ட குறிஞ்சியும்… உடனே சமையல் கட்டிற்குள் சென்று மறைந்துவிட்டு இருந்தாள்… ஹாலில், “அம்மா ரொம்ப பாவம் இல்ல பேபி. நீங்க சொன்ன மாதிரி நம்மளை ரொம்ப மிஸ் செய்திருக்காங்க. ஐ ஃபீல் சோ பேட் ஃபார் ஹர். இனி நாம அவங்க கூடவே இருக்கலாம். அவங்களுக்கு நிறைய லவ்வை தரலாம்” என்று மனதில் தோன்றுவதை எல்லாம், கலங்கிய கண்களுடன் ஈத்தனிடம் ஈஷா பகிர்ந்துக்கொண்டிருக்க… “கண்டிப்பா பேபி” என்று ஈஷாவை சமாதானம் ச...

34.3 அந்திப்போர் 🪻😘📽️

வீட்டின் வாசலில் இருக்கும், இரும்பு கேட் திறக்கும் சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து மதர் மற்றும் ஈஷாவின் குரலும் கேட்க… பரப்பரப்பாகி போனாள் குறிஞ்சி. அதை உணர்ந்து அவளின் கன்னத்தில் தட்டிக்கொடுத்த ஈத்தன்… “பேபி முன்னாடி எதுவும் காட்டிக்க வேண்டாம் குறிஞ்சி. நாம பிறகு பேசலாம். ஓகே” என்றுவிட்டு வெளியே சென்று அவன் பார்க்க. பிறகு வருவதாக ஈத்தனிடம் கூறிய மதர், ஈஷாவை மட்டும் விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். ஈத்தனை பார்த்த பொழுது நெஞ்செல்லாம் குறிஞ்சிக்கு பூ பூத்தது என்றால்… ஈஷாவின் அண்மையை உணர தொடங்கியதற்கே அவளின் உடல் முழுவதுமே பூ பூத்துவிட்டிருந்தது… அவளின் ஒரு பகுதி.  அவளின் உதிரம்.‌  அவளின் உயிர். அவளே நினைத்தாலுமே மறுக்க முடியாதே! பீச்(Pinkish Orange) வண்ணத்தில் அடுக்கடுக்காக தைக்கப்பட்ட முட்டி வரையிலான ஸ்கர்ட் அணிந்து. அதன் மீது ஈத்தன் போலவே க்ரீம் வண்ணத்தில் ஸ்வெட் ஷர்ட் அணிந்திருந்த ஈஷா. தன் நீண்ட இரட்டை ஜடைகள் முன்னும் பின்னும் ஆட, ஈத்தனுடன் பேசியப்படியே… கையில் மிகப்பெரிய சிகப்பு நிற ரோஜா பூங்கொத்துடன் அவ்வீட்டினுள் நுழைய… குறிஞ்சியின் அடிவயிற்றில் மிகப்பெரிய பூகம்பம். அத...

34.2 அந்திப்போர் 🪻😘📽️

இருவரின் மௌனத்தையும் களைக்கும் விதமாக… ஈத்தனின் தொலைப்பேசி அப்பொழுது மெல்ல ஒலியெழுப்ப ஆரம்பித்தது… அதில் குறிஞ்சியை ஒருக்கையால் பிடித்தப்படியே, ஈத்தன் மறுக்கையால் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த தொலைப்பேசியை எடுத்துப் பார்த்தான்… மதரிடம் இருந்து அழைப்பு என்றவுடன் உடனே அவன் அழைப்பை ஏற்று பேச… குறிஞ்சிக்கு அப்பொழுது தான் ஈத்தனின் அணைப்பில் அவள் இருப்பது புரிந்தது… அதில் அதிர்ந்து பட்டென்று அவள் விலகப்பார்க்க… அதை உணர்ந்த ஈத்தனும் தன் கரத்தினை விலக்கிக்கொண்டான்…  ஆனால் பார்வை மொத்தத்தையும் மட்டும், அவள் மீது தான் விலக்காமல் வைத்து இருந்தான்… பின்னே மறுபடியும் அவள் ஓட பார்த்தால், அவன் ஓடி பிடிக்க வேண்டுமே… அப்பொழுது மதர், “உன் மனைவி என்ன சொல்றா ஈத்தன். எல்லாம் பேசிட்டயா?” என்று கேட்க. ஈத்தனுக்கு மிக அருகில் நின்றிருந்த குறிஞ்சிக்கு அவர் பேசியது ஒரு வார்த்தை விடாமல் கேட்டு இருந்தது. அதில், ‘என்ன மனைவியா!’ என்று அதிர்ந்துப்போன குறிஞ்சி… மேலும், ‘ஐயோ மதருக்கு எல்லாம் தெரியுமா?’ என்று ஈத்தனை நிமிர்ந்துப்பார்க்க… அவளின் கேள்விகள் அனைத்தையும், அவளின் விழி வழியே படிக்க கற்றுக்கொண்டிருந...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates