36.3 அந்திப்போர்
ஏர்போர்ட்டில் ஐடி(ID) பரிசோதனைகள் நடக்கும் போது தான் குறிஞ்சி ஒன்றை உணர்ந்தாள்.
எப்பொழுதும் வெளியே பொதுவெளியில் அவளுடன் இருக்கும் பொழுதுகளில் எல்லாம் மாஸ்க் மற்றும் கூலர்ஸூடன் இருக்கும் ஈத்தன். இன்று காலை முதலே அது எதுவும் இல்லாது அவளுடன் இயல்பாக நெருக்கமாக இருந்ததை.
உடன் இருந்தவர்கள் செக்யூரிட்டிகளாக இருந்தாலும் கவனித்து இருப்பார்களே என்ற ஐயம் அவளுள் எழுந்தது.
போன முறை, ஏர்போர்ட் வந்தப்பொழுது, நர்ஸ் போர்வையில், பல அடி தூரம் அவர்களிடம் இருந்து பின்தங்கி வந்து இருந்தாள்.
இப்பொழுதோ ஈஷா அவளின் கையையும், ஈத்தனின் கையையும் ஒருசேர பிடித்தப்படி நடக்கவும், உடலெல்லாம் வெலவெலவென வந்தது, குறிஞ்சிக்கு…
தங்களை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாதே. அப்படி இருக்கையில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ஈத்தனை குறித்து தவறாக எண்ணுவார்களோ? என்னையும் தவறாக எண்ணுவார்களோ? என்றெல்லாம் சினிமா வெளிச்சத்திற்கு பழக்கப்படாத சாதாரணமான பெண்ணாக அவளுக்கு அச்சம் வந்தது…
உடன் இன்னொன்றும் கண்முன் வந்து அவளை கலவரப்படுத்தியது.
ஈத்தன் இதை எல்லாம் மறந்துவிட்டானா? என்று நினைத்தவளாள்… அவனை எச்சரிக்கை கூட செய்ய முடியவில்லை…
‘சரி. ப்ரைவேட் எக்ஸிட் வழி தானே. விரைந்து சென்றுவிடலாம்’ என்று நினைத்தவள்…
அங்கு நிற்கும் ஓரிருவர் கவனத்தை கூட கவராதவாறு, முந்தானையால் தன் தோளை மூடியப்படியே, முடிந்தளவு அவள் முகம் தெரியாதவாறு நடக்க…
அது எப்படி உன்னை தப்பிக்க விடுவேன் என்ற விதி… ஓடிவந்து அவர்களின் வழியை மறித்தது…
“சாரி சார். ப்ரைவேட் எக்ஸிட் வழியில் சின்ன பிராப்ளம். டைல்ஸ் ரீப்லேஸ் செய்துட்டு இருக்காங்க. காமன் எக்ஸிட் வழியா தான் போக முடியும். எங்களோட செக்யூரிட்டிசும் உங்களுக்கு பாதுகாப்பா வருவாங்க”, என்று விமான நிலைய அதிகாரி வந்துக்கூற.
குறிஞ்சிக்கு அடிவயிற்றில் மிக பெரிய பாறாங்கலே உருண்டது.
ஈத்தனோ “இட்ஸ் ஓகே. நோ பிராப்ளம்” என்றுவிட்டு அந்தப்பக்கம் அவருடனே நடக்க ஆரம்பித்துவிட…
கிடைத்த இடைவெளியில் ஈஷாவின் கரத்தில் இருந்து தன் கையை வேறு வழியின்றி உருவிக்கொண்ட குறிஞ்சி… சற்று பின்தங்கிய வாறே… ஒரு கையில் தன்னுடைய ஒரு லக்கேஜ் பையை தூக்கிக்கொண்டு வர…
மக்கள் அனைவரும் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து இருந்தனர்.
எண்ணி சில வினாடிகளுக்குள்ளே, அவ்விடத்தில் பயங்கர பரபரப்பும், சலசலப்பும்.
அதில் தங்களால் எந்த இடையூறும் வந்துவிடக்கூடாது என்று, செக்யூரிட்டிகளுடன் ஈஷாவின் கரம் பற்றி வேகமாக நடந்துச்சென்றுக்கொண்டிருந்த ஈத்தன் சட்டென்று நின்று திரும்பிப்பார்த்தான்.
குறிஞ்சி எங்கோ இருந்தாள்.
அதில் அதிர்ந்தவன், ஈஷாவுடன் திரும்பி நடந்துச்சென்று…
“என்ன ஆச்சு குறிஞ்சி. நடக்க முடியலையா. இன்னும் கொஞ்சம் தூரம் தான் மா” என்றவன்…
அவள் கையில் பை இருப்பதை பார்த்து, “நீ ஏன் கேர்ள் இதை தூக்கிட்டு வர. செக்யூரிட்டீஸ் எடுத்துட்டு வருவாங்க… கொடு” என்று வாங்க…
“இருக்கட்டும். நான் எடுத்துட்டு வரேன். ஒன்னும் பிரச்சினை இல்லைங்க. எடை குறைவு தான்”, என்று பையை தர மறுத்தவள். “நீங்க போங்க. நான் வரேன். புடவை கட்டிட்டி வேகமா நடக்க முடியலை…” என்று ஏதே ஒரு காரணத்தை கூறி, அவனை அவள் விரட்ட பார்க்க.
“ஓகே ஓகே. யார்கிட்டேயும் உன் லக்கேஜை கொடுக்க வேண்டாம். நானே பத்திரமா எடுத்துட்டு வரேன்” என்று அவள் பொருட்கள் அடங்கிய பையை, அவள் கையில் இருந்து வாங்கிய ஈத்தன்…
“பொறுமையாவே போகலாம். அவசரமில்லை” என்று வேகம் குறைத்து நடக்க…
ஈஷாவின் கை குறிஞ்சியின் கையை மீண்டும் பிடித்து இருந்தது.
இதையெல்லாம் தூரம் இருந்தே, ‘என்ன இது… திரும்பவும் இந்த நர்ஸம்மாவ நம்ம தலைவர் கூட்டிட்டு வந்து இருக்கார்…’ என்று புருவம் சுருக்கி பார்த்துக்கொண்டிருந்த சக்தி…
அவர்கள் மூவரும் வெளியே வரவும், “தலைவரே! கார் இந்தப்பக்கம் இருக்கு. வாங்க” என்று ஓடிவந்து ஈத்தனிடம் பேசியவன்…
“எதுக்கு தலைவரே நீங்க இந்த பையெல்லாம் தூக்கிட்டு… என்கிட்ட கொடுங்க…” என்று சக்தி வாங்க போக.
“வேண்டாம் டா. நான் தான் தூக்கிட்டு வரனும்” என்ற ஈத்தன். புன்னகையுடன் திரும்பி குறிஞ்சியை பார்க்க…
அவளோ, தனக்கு கண்ணுக்கு தெரியாமல் மறைந்துக்கொள்ளும், invisible power எதுவும் கிடைக்காதா என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அதற்குள் ஒருபக்கம் முழுவதும் நின்றிருந்த சினிமா பத்திரிகையாளர்கள் ஈத்தனை பார்த்து உற்சாகமாக கத்தி அழைக்க…
“ஃபைவ் மினிட்ஸ் ஹனீஸ். திரும்ப வரேன். வெயிட் ப்ளீஸ்” என்று எவ்வித பந்தாவும், அலட்சியமும் காட்டாது, அவர்களிடம் கூறிய ஈத்தன்…
ஈஷாவையும், குறிஞ்சியையும் பத்திரமாக காரில் விட்டுவிட்டு…
திரும்பி சக்தியுடன் வந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் சிறிது நேரம் பேசியவன்… அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட பிறகு தான் கிளம்பினான்…
சினிமா மக்களுக்கு என்று இருக்கும் அதீத ஹை கிளாஸ் லுக்கும், உடல் மொழியும் இல்லாததாலோ என்னவோ, ஈத்தனுடன் வந்திருந்தாலும் யாரின் கவனத்தையுமே குறிஞ்சி கவர்ந்து இருக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டாள்.
அதில், நல்லது என்று ஓடிவந்து வீட்டினுள் அடைந்து விட்டாள் குறிஞ்சி.
சிறிது நேரத்தில், “நாளை அலுவலகத்திற்கு வருகிறேன்” என்று சக்தியிடம் கூறி, எப்பொழுதும் போல் அவனை தரைத் தளத்துடன் ஈத்தன் அனுப்பிவிட…
குறிஞ்சியின் வரவை குறித்து கேட்க வேண்டும் என்று நினைத்தாலும், கேட்க முடியாமலேயே சக்தி கிளம்பிவிட்டு இருந்தான்.
________________________________
அதற்குள் ஈத்தன் செய்ய வேண்டும் என்று நினைத்ததை எல்லாம், அங்கே ஈஷா அவனுக்காக செய்து முடித்துவிட்டு இருந்தாள்.
குறிஞ்சியையும், ஈஷாவையும் தங்களுடைய படுக்கையறையில் விட்டுவிட்டு… ஈத்தன் கீழே சென்ற பிறகு…
“அம்மா நீங்க உங்க திங்க்ஸ் எல்லாம் என்னோட வார்ட்ரோப்ல வச்சுக்கோங்க. நாம இரண்டு பேரும் ஷேர் செய்துக்கலாம்” என்று அந்த அறைக்குள்ளே தனியாக ஈஷாவின் துணி மணிகளுக்கு மட்டும் என்று இருந்த அறையில், குறிஞ்சியின் பொருட்களையும் வைக்க இடம் கொடுத்த ஈஷா…
அதேப்போல், “அம்மா இது பேபியோட பாத்ரூம். இது என்னோட பாத்ரூம். நீங்க என்னோடதை யூஸ் பண்ணிக்கோங்க” என்று, குறிஞ்சியின் பேஸ்ட் பிரஷ் அனைத்தையும் அப்பொழுதே உள்ளே அடுக்க செய்தவள்…
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து குறிஞ்சிக்காக செய்தாள்.
எந்த நேரத்தில் ‘நீ என் அம்மா டா செல்லம்’ என்று ஈஷாவிடம் குறிஞ்சி கூறினாளோ தெரியாது. உண்மையிலேயே அவள் குறிஞ்சிக்கு அம்மாவாக தான் செயல்பட்டாள்.
________________________________
கீழே ரெக்கார்டிங் அறையில் ஈத்தன், சக்தி சென்றப்பிறகு ராகவ்வுடன் தனியாக பேசிக்கொண்டிருந்தான்.
“நீ என்ன செய்வயோ எனக்கு தெரியாது மேன். எனக்கு சீக்கிரம் குறிஞ்சியோட ஃபேமிலியை மீட் பண்ணனும். குறிஞ்சிக்கும், அவ அம்மாவுக்கும் அவங்க தானே கார்டியனா ரொம்ப வருஷம் ஆதரவு தந்துட்டு இருந்தாங்க. கடைசியில் அவங்களோட வீட்டை விட்டு சொல்லிக்கொள்ளாமல் குறிஞ்சி கிளம்பினது, அதுவும் என்னாலன்றப்ப ஒரு மாதிரி தொடர்ந்து ரொம்ப கில்டியா இருக்கு. நான் அவங்கக்கிட்ட குறிஞ்சியோட சார்பா மன்னிப்பு கேட்கனும்”, என்று இருந்தான் ஈத்தன்.
அதற்கு ராகவ், “கண்டிப்பா சாரே. எங்க இருந்தாலும் அவங்களை சீக்கிரம் கண்டுப்பிடிச்சு கூட்டிட்டு வந்துடறேன். நீங்க கவலை பட வேண்டாம். காதல்னா இதெல்லாம் சகஜம் தான். நீங்க ரிலாக்ஸா இருங்க” என்று கூற.
“இரண்டு மாசமா இதை தான் ராகவ் நீ சொல்ற” என்ற ஈத்தன், “குறிஞ்சிக்கு அவங்க வீட்டில் பார்த்து வச்சிருந்த அந்த மாப்பிள்ளை பத்தியும் விசாரி ராகவ். காம்பன்சேஷன் மாதிரி எதுவும் முடிஞ்சளவு கொடுத்துடலாம்” என்றான்.
“கண்டிப்பா சாரே. வேற ஒரு பிராஜெக்ட்ல கொஞ்சம் மாட்டிட்டு இருந்தேன். இப்போ அது ஓகே ஆகிடுச்சு”, என்றவன். “சீக்கிரம் நல்ல செய்தியோட உங்களுக்கு கூப்பிடறேன்” என்றுவிட்டு விடைப் பெற்றுக்கொள்ள.
ஈத்தன் மேலே தங்களது அறைக்கு கிளம்பினான்.
________________________________
நேரம் மாலையை கடந்துவிட்டு இருந்ததில்…
ஈஷா சென்று குளித்துவிட்டு வரவும்… அவளுக்கு அழகாக தலையைப் பின்னி தயாராக்கிவிட்டிருந்த குறிஞ்சி…
கீழே ஈத்தன், தன் தலையில் போட மிகப்பெரிய அணு குண்டு ஒன்றை தயார் செய்துக்கொண்டு இருப்பதை அறியாது, அவளும் குளிக்க சென்று இருந்தாள்.
ஈத்தனும், குறிஞ்சி ஏற்கனவே பல அணுகுண்டுகளை அவளுடைய குடும்பம் என்ற பெயரில், அவனிடம் அறிமுகம் படுத்தி இருந்ததை அறியாமல், ஈஷாவிடம் ‘குறிஞ்சி எங்கே என்று கேட்டு, அவளிடம் பேசிவிட்டு’ குளிக்க சென்று இருந்தான்.
இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து மூவரும் ஒரே படுக்கையில் படுத்து இருந்தார்கள்.
மத்தியில் அவர்கள் இருவரின் கையையும் பற்றி தன்மீது போட்டுக்கொண்டு, ஈஷா நன்றாக உறங்கிக் கொண்டு இருக்க…
அவளின் இருபுறமும் படுத்திருந்த இவர்கள் மட்டும் நீண்ட நேரம் உறங்காமல் விழித்து இருந்தனர்.
ஈத்தனின் படுக்கையில் முதல் பெண் வாசனை!
அதில், ஒருபக்கம் நினைத்த காரியம் நடந்துவிட்டதில் நிம்மதியாக இருந்தாலும், மறுப்பக்கம் அனைத்தும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது ஈத்தனுக்கு. இந்த புது வாழ்க்கை மாற்றத்தினால் நாளை என்ன நடக்கும் என்பது கூட அவனுக்கு தெரியாதே! நிச்சயம் எதுவாக இருந்தாலும் நல்லதாக தான் இருக்கும் என்ற எண்ணம் அடிமனதில் தோன்ற, அன்றைய நினைவுகள் தந்த புன்னகையுடன் கண்களை மூடி தூங்க முயற்சித்துக்கொண்டு இருந்தான்.
குறிஞ்சிக்கோ, அவளின் குழந்தையின் வாசனையும், அவள் விரும்பும் ஆணின் வாசனையும் ஒருசேர நாசியில் மோதி, சொர்க்கத்தை காட்டியது!
ஒவ்வொரு இரவையும் அவர்களின் நிழல்களுடன் கழித்தவள்… இன்று நிஜத்துடன் கழித்தாள்…
ஈஷாவின் மீதிருந்து வரும் மெல்லிய ரோஜா இதழ்களின் நறுமணத்தை தாண்டி, இன்னும் அவள் பிறந்தப்பொழுது, அவள் மீது அடித்த, அந்த பால் மணத்தை குறிஞ்சியின் நினைவுகள் அவளுக்கு மீட்டி கொடுக்க…
கண்களை மூடியப்படியே, அவள் அதை ஈஷாவின் ஸ்பரிசத்துடன் சேர்த்து அனுபவித்தப்படி கிடக்க…
சிறிது நேரத்தில் ஈத்தனின் பக்கம் மொத்தமாக திரும்பி நகர்ந்து படுத்த ஈஷா, பழக்க தோஷத்தில் எப்பொழுதும் போல் அவனுடைய கை வளைவில் தலை வைத்து உறக்கத்தை தொடர.
சட்டென்று குறிஞ்சிக்கு அவள் பொம்மை பறிபோன உணர்வு.
அதில், அவளிடமிருந்து விலகி தூரம் சென்றுவிட்டிருந்த ஈஷாவையே பார்த்தப்படி அவள் படுத்திருக்க…
தூங்க ஆரம்பித்துவிட்டிருந்த ஈத்தன், திடீரென்று தன் கண்களை திறந்து குறிஞ்சியை பார்த்து இருந்தான்.
அந்த மெல்லிய இரவு விளக்கு ஒளியிலும், அவளின் கண்கள் திறந்திருப்பது அவனுக்கு புரிந்த மறுகணமே...
ஈத்தன் பார்ப்பதை உணர்ந்த குறிஞ்சி, உடனே தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டுவிட்டாள்.
ஒருசில வினாடிகளில் குறிஞ்சியின் கை அழுந்தப்பற்றப்பட்டு இழுக்கப்பட…
அதை அறிந்து குறிஞ்சி தன் கண்களை திறப்பதற்கு முன்பாகவே… அவள் ஈஷாவின் அருகில் ஈத்தனால் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள்…
ஈத்தன் பிடித்து வைத்திருந்த அவளின் கையை ஈஷாவின் மீது அணைக்கும் விதமாக போட்டவன்…
குறிஞ்சியின் கன்னத்தில், ‘கவலை படக்கூடாது’ என்னும் அர்த்தத்தில், லேசாக தட்டிக்கொடுத்துவிட்டு விட்ட உறக்கத்தை தொடர…
மெல்ல பதட்டம் நீங்கி, ஈஷாவை மென்மையாக அணைத்தப்படியே குறிஞ்சியும் நிம்மதியாக உறங்க ஆரம்பித்து இருந்தாள்.
🔴அப்டேட் எப்படி இருந்தது டார்லிங்ஸ். கேப் விட்டு எழுதுனதில் எதுவும் வித்யாசம் தெரியுதா. Flow ok வா இருக்கா. கமெண்ட் ப்ளீஸ் டார்லிங்ஸ். இன்னும் மூனு அப்டேட், அடுத்து ஃபைனல் அண்ட் எபிலாக் வரும்.
லட்டுகுட்டிக்கு ரகசியம் பேச கூட வரல.. இப்படி அப்புராணியா வளத்து வச்சிருக்கியே ஈத்தன்... 😃
பதிலளிநீக்குகுறிஞ்சி உன் இணத்துக்கு வந்துட்டேன்னு இன்னும் உனக்கு புரியவே இல்ல.. சீக்கிரமே ஈத்தன் அழுத்தமா...... புரிய வைப்பான்னு நம்பறேன்...😁😁😁😁😁
Super
பதிலளிநீக்குSuper sis
பதிலளிநீக்குAwesome store sis chance ah illa. Oru oru epium esha baby mari loodu epi.epi epovarum nu romba romba aasaya wait pandren. Malar wife ah ellathapove samar apdi pathukitan epo husband &wife ah samar love ah paka romba aasaya iruku sis. Sema ya iruku unga way of writing. Really enjoyed evlo epi thanthalum pathave ila sis enum konjam venunum pola sema writing sis
நீக்குMmm... Inoru secret reveal aga pora toe vanthuruchu. Superu... Kurinji yen inum ivlo feel panra. Husband and baby nu happy ah irukama.. epdiyum samar elathaiyum kandu pudika poran. Athukula ivale unmaiya solidalam la... Okay.. unga health epdiniruku. R u ok now. Operation epo pana porenga..
பதிலளிநீக்குUpdate super n Ana innum oru 2 ud potta nallarukkum
பதிலளிநீக்குEthan and kurunji ku romance scene vichi eluthunga after twelve years they will feel love
பதிலளிநீக்குசாப்டுகிட்டேயிருக்கும்போது தட்டை தூக்கறாப்போல தொடர் முடிஞ்சுடுது .So sad.
பதிலளிநீக்கு