இடுகைகள்

17.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

அத்தியாயம் -17 குறிஞ்சி மலர், குமாருக்கும் சாந்தினிக்கும் திருமணமாகி, பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு தேவையில்லாது பிறந்தவள். ஆம்! தேவையான நேரத்தில் பிறக்காது… இலக்கணம் மாற்றப்பட்டு… தேவைகள் தீர்ந்து… அனைத்தும் அடங்கிய பிறகு மலர்ந்தவள்… திருமணமான அடுத்த மாதத்தில் இருந்து, “ஏதாவது விஷேசம் உண்டா?” என்று தொடங்கி, “இன்னுமா ஒன்னும் இல்லை…” என்று மாறுபட்டு, இறுதியில், “அவ்ளோ தான் போல…” என்று திருமணமான ஒரே வருடத்தில் குமார் வீட்டிலிருந்து சாந்தினியியை திருப்பி அனுப்பிவிட… சாந்தினியின் அண்ணன், யார் அவரை காலம் முழுக்க வீட்டில் வைத்து சோறு போடுவது என்று பதறி, மீண்டும் அங்கேயே இழுத்துவந்து தள்ள பார்க்க… உட்கார சொந்த வீடுக்கூட இல்லாத நிலையில், குமாரின் பெற்றோர் தங்களின் வீட்டிற்கு வாரிசு வேண்டும் என்று உறுதியாக மறுத்துவிட… குமாரும், புது மாப்பிள்ளையாகும் குஷியில் சாந்தினியை கைக்கழுவி விட்டார்… ஏற்கனவே செலவு செய்து, கழித்துவிட்ட சாந்தினியை, அவரின் அண்ணனுக்கும் அண்ணிக்கும், மீண்டும் வீட்டில் திரும்ப வைத்துக்கொள்ள, சுத்தமாக விருப்பம் இல்லை. பெற்றோரையும் ஏற்றிவிட்டு மீண்டும் மீண்டும் குமாரின் வீட்ட...

16.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

அத்தியாயம் -16.1 இரவு பதினோரு மணிக்கு, மருத்துவமனையில், தன் ஐடி கார்டினை ஸ்கேன் செய்துவிட்டு, உடை மாற்றும் அறைக்குள் சென்ற குறிஞ்சி, காலையில் தான் அணிந்து வந்த உடைக்கு மாறிக்கொண்டு, மருத்துவமனை உடையை அங்கிருந்த கூடையில் துவைக்க போட்டவள், ஷூவையும் அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, முகத்தில் போட்டிருந்த மேக்-அப்-களையும் கழுவிவிட்டு, தன் பையுடன் வெளிவந்தாள். அங்கு ஹாஸ்பிடல் வேன் நின்று இருந்தது. இரவு நேரத்தில் பணி முடிந்து செல்பவர்களை அழைத்து செல்வதற்கு. அதில் சென்று அமர்ந்துக்கொண்ட குறிஞ்சிக்கு… அப்பாடா என்று இருந்தது…  வண்டியை எடுத்தால் அடுத்த கால் மணி நேரத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும்… உடலை நன்றாக தளர்த்தி அமர்ந்து, அருகில் இருந்த ஜன்னல் மீது தலையை சாய்த்து கொண்டாள்…  காலையில் இருந்து நடந்துக்கொண்டே இருந்ததில், உடல் தூக்கத்திற்கு கெஞ்சியது… தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் அவள் வேலை இரவு 11 மணிக்கு தான் முடியும். தினமும் இரண்டு ஷிஃப்ட் பார்க்கின்றாள்… இரண்டிற்கும் சேர்த்து பதினெட்டாயிரம் சம்பளம்… மூட துடிக்கும் இமைகளை சிமிட்டி சிமிட்டி மூட விடாது தடுத்து கொண்டி...

16.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!

அத்தியாயம் -16 முதலில், என்ன திடீரென ஒரு பெண் வந்து, தன்னிடம் இப்படியெல்லாம் பேசுகின்றாள், என்ற சங்கடத்தில் நின்ற ஈத்தனை, குறிஞ்சியின், ‘என் ஆயுசு இருக்கும் வரை, வருஷத்துக்கு ஒன்னுன்னு எத்தனை குழந்தை வேண்டும்னாலும் உங்களுக்கு பெத்து தரேன் சார்… பிராமிஸ்…’ என்ற வாக்கியம் அசைக்க… அவனுடைய மார்பளவு உயரத்தில் இருந்தவளின் முகத்தை உற்றுப்பார்த்தான்… அவளும் அவனை தான் தன் கழுத்தை முழுதாக நிமிர்த்தி தவிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்… இலகுவான பர்கண்டி நிறத்திலான(deep reddish purple) மருத்துவமனை சீருடையான, பேண்ட் மற்றும் சட்டையில்… வெள்ளை என்றோ, இல்லை மாநிறம் என்றோ, ஒருக்கோட்டில் நிறுத்த முடியாத இளம் எலுமிச்சை நிறத்தில், சிறிய வட்ட முகம், அதற்கு ஏற்ற அளவில் சிறிய கூர் நாசி, இளஞ்சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் போட்ட முழு வடிவம் பெற்ற சிறிய இதழ்கள், அழுவதில் சிவந்திருந்த சற்று பெரிய கண்கள், அதை சுற்றி போட்டிருந்த மேக்அப் தாண்டி தெரிந்த கருவளையம், என்று இருந்தவளுக்கு நிச்சயம் வயது 17… 18… தான் இருக்கும் என்று தோன்றியது ஈத்தனுக்கு… ஆனால் இல்லை என்றது அவளின் வேலை… அவன் பார்ப்பதை அவளும் உணர்ந்திருந...

15.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

நேரம் வேண்டும் என்று கேட்டிருந்த ஈத்தன் ‘இன்று பதில் கூறுவான், நாளை பதில் கூறுவான்…’ என்று தினம் தினம் எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்க்கும் உமையாளிற்கு அவர் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவேயில்லை… அதில் சற்று பௌர்ணமி போல் முழு மகிழ்வுடன் காணப்பட்ட அவரின் முகம்… மெல்ல தேய்பிறையாக தேய்ந்து பழையப்படி கவலையில் மூழ்கி இருண்டுவிட…  ஈத்தனின் கண்களில் இருந்து அது தப்பவில்லை… அன்று காலை அவருடன் அமர்ந்து உணவு உண்டவன்… கேஷ்வல் உடையில் தயாராகி கீழேயிறங்கி வர… உமையாள் அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்… அதில், “நீங்க கேட்ட விஷயமா தான் வெளியே போறேன் பாட்டி… நீங்க சொன்ன லட்டு பொண்ண நினைச்சாலே எனக்கும் ஆசையா இருக்கு…” என்றுவிட்டு அவன் கிளம்ப… பாவம் அவன் குட்டி லட்டுவை குறித்து கூறியதை அறியாது, பெரிய லட்டுவை தான் பார்க்க போகிறான் என்று நினைத்த உமையாளுக்கு, மகிழ்ச்சியில் ஒன்றும் பிடிப்படவில்லை… உடல், மனம் அனைத்தும் அவ்வளவு லேசாகிவிட்டது… “சந்தோஷம் சமரா… நல்லதே நடக்கும்… போயிட்டு வா…” என்று அவனை அனுப்பிவிட்டவர்… நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களின் தோட்டத்திலேயே அமைந்திருக்கும் கோவிலுக...

15.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

“பாட்டி… என்ன ஆச்சு உங்களுக்கு…” என்றவன், “கல்யாணம் எல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம்… இப்போ என்ன அவசரம்...” என்றான்… அதற்கு, “அவசரம் தான் சமரா” என்றார் உமையாள் உறுதியாக. அதில் வேறுவழியின்றி ஈத்தன், “நீங்க மட்டும் போதும் பாட்டி எனக்கு… கல்யாணமெல்லாம் வேண்டாம்…” என்றான். ‘வயசு பையன் பேசும் பேச்சா இது’ என்று நினைத்த உமையாள்… “என்னால் உன் கூட தொடர்ந்து இருக்க முடியாதுன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும் சமரா…”, என்றவர், “கல்யாணம் பண்ணிக்கோ” என்றார் முடிவாக. அதற்கு “மாட்டேன் பாட்டி” என்று உறுதியாக மறுத்தான் அவனும். அதில், “தேவையில்லாத விஷயம் எதையும் மனசில் போட்டுக்காதே சமரா… பாட்டி உன் நல்லதுக்கு தானே சொல்வேன்… இதில் எந்த பொண்ணை உனக்கு பிடித்து இருக்குன்னு பாரு… எல்லாருமே ரொம்ப நல்ல குடும்பம்… உனக்கு ஏற்றப்போல் தான் பார்த்திருக்கேன்…” என்றார் அவனிடம் பல வரன்களை காட்டி… எப்பொழுதுமே அவரை ஈத்தன் எதிர்த்து பேசியது இல்லை‌‌… அவர் கூறியது போல் அவனுக்கு அவர் நல்லதை மட்டும் தான் செய்திருக்கிறார்… ஆனால் இம்முறை அவர் கூறுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை விட, அவனுக்கு சுத்தமாக அதி...

15.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

மருத்துவர்களோ, அவனின் பாதுகாவலர்களோ எவ்வளவு சொல்லியும் ஈத்தன் கேட்கவில்லை. இரவு முழுவதையும் அவசர சிகிச்சை பிரிவிற்கு முன்புறம் இருந்த நாற்காலியிலே தான், அமர்ந்தே கழித்து இருந்தான். Angioplasty and Stenting முறையில், இதயத்தில் இருந்த இரத்த அடைப்புகளை எடுத்திருந்ததால், பல மணிநேரம் கடந்தும், நோய் தொற்றிற்கு பயந்து யாரையும் உள்ளே விடவில்லை. அவருக்கு வயது கூட என்பதால் தான் கூடுதல் கவனம். தொடர் மருத்துவ கண்காணிப்பிலேயே வைத்து இருந்தனர். அதில் தான் உள்ளே நிலைமை என்ன ஏதென்று தெரியாமல், அப்படி தவித்துக்கொண்டு கிடந்தான் ஈத்தன்… கண்ணால் பார்த்திருந்தால் ஆவது சற்று தேறியிருந்திருப்பான். ஒருவழியாக பதினெட்டு மணி நேரம் கழித்து உமையாள் கண்விழித்து விட்டார் என்றும், அவர் நல்ல நினைவுடன் இருப்பதாகவும் வந்து கூறிய மருத்துவர்கள், இரவு நேரில் பார்க்கலாம் என்றுவிட்டு செல்ல… ஈத்தனின் சுவாசம் அப்பொழுது தான் சற்று சீரானது… இரவு எப்பொழுது வரும் என்று அவன் காத்திருக்க… மாலை சித்ரலேகா, ஆப்ரஹாம் மற்றும் அவர்கள் இருவரின் இரண்டு பிள்ளைகள் என்று நால்வரும் சென்னை வந்திறங்கி, மருத்துவமனையை அடைந்திருந்தனர்.  ‘எவன...

15.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

அத்தியாயம் -15 மயில்வாகனத்தின் இறப்பை கூட முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு, உமையாள் அம்மாவை கடமைகள் இழுத்துக்கொண்டுவிட்டு இருந்தன…  அதிலும், சினிமா தயாரிப்பு நிறுவனம் என்பது எவ்வளவு பெரிய கடல்… அதில் இறங்கியிருந்தவர்கள் தொடர்ந்து நீந்தவில்லை என்றால் ஒன்றுமில்லாமல் அடித்துசெல்லப்பட்டு விடுவார்களே. உமையாளுக்கு அந்த வேலை ஒருபக்கம் என்றால், விவரம் பாதி தெரிந்தும், பாதி தெரியாமலுமான பேரனை பாதுகாப்பது பெரும் வேலையாக இருந்தது. இரண்டையும் எப்படியோ ஒருசேர கட்டி இழுத்தவருக்கு… அந்நேரத்தில் தான் முதல் ஹார்ட் அட்டாக் வந்து இருந்தது… ஈத்தன் அவனையே உணராத காலம் அது… எதற்கு நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம் என்பது கூட அவனுக்கு தெரியாது…  ஹன்டரின் திருமணமும், சித்ரலேகாவின் திருமணமும் ஈத்தனை அந்தளவிற்கு அச்சமயம் பாதித்து இருந்தது… ஏற்கனவே தனக்கு யாருமில்லை என்ற ஒருவித பாதுகாப்பற்ற பயத்தில் இருந்தவனை, அவை மேலும் மனதளவில் துவண்டுவிட செய்துவிட்டு இருந்தது… வெறித்த இல்லை மருண்ட முகத்துடன் இருப்பவனை, உமையாள் அம்மையார் தான், தன் முந்தானை கதகதப்பிலேயே போட்டு, குஞ்சினை அடைகாக்கும்...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates