இடுகைகள்

சங்கீதம்-25.1

அத்தியாயம் -25 ஈத்தனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்பதை மட்டுமே தன் முழு நோக்கமாக வைத்துக்கொண்டு… அவனுக்கு ஏற்றபடி அவனிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பியிருந்த குறிஞ்சிக்கு… அவள் பேசியதை எல்லாம் நினைத்து பார்க்கும் பொழுதே தலை சுற்றியது… அதிலும் ஐஸ்வர்யாவிடம் இந்த விஷயத்தை குறித்து பேச போவதை நினைத்தாலே… உள்ளுக்குள் ஜுரம் அடிப்பது போல் இருந்தது… அதைவிட பெரிய ஏழரை லோகேஸ்வரி…. அன்னையிடம் வந்து போட்டு கொடுத்துவிடுவார்களோ… இல்லை ஈத்தனிடம் சென்று போட்டு கொடுத்துவிடுவார்களோ… என்று அனைத்து பக்கமும் இருந்து யோசித்துப் பார்த்தவள்… ‘பேசாமல் நாமே அம்மாவிடம் அனைத்தையும் கூறி… சாரிடம் இதற்கு சம்மதம் என்று கூற சொல்லலாமா?’ என்று நினைத்தவள்… ‘இல்லை இல்லை வேண்டாம்… நிச்சயம் அம்மா இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்… காரியம் கெட்டுவிடும்…’ என்று அந்த யோசனைக்கு உடனே முற்று புள்ளி வைத்துவிட்டாள். ஈத்தனிடமும் அம்மாவிடம் மட்டும் இதை குறித்து இப்பொழுது கூறப்போவது இல்லை… அந்த காலத்து மனுஷி… பயந்துவிடுவார்… அதுவும் இப்பொழுது தான் பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது… நான் பிறகு கூறிக்கொள்கி...

24.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

எறும்பு ஊற ஊற… கல்லும் மெல்ல கரைய தொடங்கியதின் அறிகுறியாக… சில வினாடிகளில் நிமிர்ந்தவன்… “ஓகே கேர்ள்…‌ நான் US சர்ரகசி ஏஜெண்ட்ஸ்(surrogacy Agents) கிட்ட பேசுறேன்… அங்க லீகல் தான்… நான் அங்க எனக்கு பேபி பெத்துக்கறேன்… I really appreciate your kindness and concern. Thank you.” என்றான்… அவனின் இந்த பதிலில் பளிச்சென்று முகம் மலர்ந்தவளுடன் சேர்ந்து… அவளுடைய கண்களும் சிரிக்க… ஈத்தனின் கண்களில் மெல்ல அவன் தொலைத்த உயிர்ப்பு ஏற தொடங்கியது… அதைப்பார்த்தப்படியே… “ஏன் சார் அங்க எல்லாம்… நான் தான் இங்க பெத்து தரேன்னு சொல்றேன் இல்ல… அதுவும் நீங்க தமிழ் பொண்ணு தானே கேட்டீங்க…” என்றவள்… தொடர்ந்து, “எனக்கு இந்த ஜீவனை கொடுத்த… என் அம்மாவை… எனக்கு காப்பாத்தி கொடுத்தவங்க சார் நீங்க… உங்களுக்கு அது சின்னதா தெரியலாம்… ஆனா எனக்கு அது ரொம்ப பெருசு… என் அம்மாவோட வலியில்லாத இன்றைய வாழ்க்கைக்கு காரணம் நீங்க தான்… என்னோட கடமையை நீங்க செய்து கொடுத்திருக்கீங்க…”, என்றவள்… “உங்களுக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சின்ன உபகாரம்…” என்றவளுக்கு அன்று தெரியவில்லை… குழந்தை உபகாரம் இல்லை… அவளின் சதை… ரத்தம்… உயிர்… எல்லாம் ...

24.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

என்ன கூறுகின்றாள் இவள்… இந்த கண்ணீர் எனக்காகவா?  அதிர்ந்துப்போனவன்… சில வினாடிகளில்… அவள் இன்னுமே அழுதுக்கொண்டிருப்பது புரிய… “ஹேய் கேர்ள்… இங்க பாரு… எனக்கு ஒன்னும் இல்லை…” என்று முன்னேறிய ஈத்தன்… “வந்து உட்காரு முதல்ல…” என்று அவள் கைப்பற்றி அழைத்து சென்று அமர வைத்து… அங்கிருக்கும் கண்ணாடி பாட்டிலை திறந்து அவளுக்கு குடிக்க நீரை தர… அதுயெல்லாம் குறிஞ்சியின் கண்களுக்கு தெரியவே இல்லை… அன்னையை காணோம் என்று தேடி அலையும் குழந்தை… அவர் கிடைத்ததும் அவரிடம் சண்டைக்கு கிளம்புமே… அந்த மனநிலையில் தான் இருந்தாள்… அதற்கெல்லாம்… யார் கொடுத்த உரிமை அவளுக்கு என்று தான் தெரியவில்லை… கண்களால் அவனை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்தவாரே… அழுதுக்கொண்டே இருந்தாள்… அவளின் பயத்தை புரிந்துக்கொண்டிருந்தவன், சமாதானமாக, “இங்கப்பாரு கேர்ள்… எனக்கு ஒன்னும் இல்லை… பிளீஸ் ரிலாக்ஸ் ஆகு… தண்ணி குடி… இதுக்கெல்லாமா அழுவாங்க… I’m perfectly alright…” என்றுக்கூற… அதற்கு, ‘இல்லை…’ என்று பலமாக தலையாட்டி மறுத்தவள்… “நீங்க பொய் சொல்றீங்க… நீங்க நல்லா இல்லை… நான் நம்ப மாட்டேன்…” என்றாள் உறுதியாக… அதில் ஈத்தனின் புருவங்கள்...

24.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

மேலும் ஒருவாரம் ஈத்தனின் வீட்டிற்கு நடந்தும்… அவன் குறித்து எதையும் குறிஞ்சியால் அறிந்துக்கொள்ள முடியவில்லை… அதிலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒரு மனிதன் தன் அலைப்பேசியை உபயோகப்படுத்தவில்லை என்றால் என்னவென்று நினைப்பாள் அவள்?  குறிஞ்சியின் பதட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது… அன்று சனிக்கிழமை… எப்பொழுதும் போல் வேளையாக எழுந்து கிளம்பி ஈத்தனின் வீட்டிற்கு சென்றவள்… ஓடிச்சென்று செக்யூரிட்டியிடம் விசாரித்தாள்… ‘ஏதோ பெரிதாக பண உதவி தேவைப்படுகிறது போல்… பாவம்… அதனால் தான் விடாமல் வருகின்றாள்’ என்று தான் அங்கு இருந்தவர்கள்… அவளை பற்றி இதுவரை நினைத்து இருந்தார்கள்… அதில் இவள் வந்ததும் செக்யூரிட்டி, “பாப்பா ஐயா வந்துட்டாங்க… காலை ஃபிளைட்ல வந்தவங்க… கொஞ்சம் நேரம் முன்னாடி தான் வீடு வந்து சேர்ந்தாங்க…” என்று அவள்‌ எதிர்பார்த்த தகவலை கூற… சட்டென்று ஒரு மலர்ச்சி குறிஞ்சியிடம், “அப்படியா அண்ணா… சார் வந்துட்டாங்களா… சாரை நீங்க பார்த்தீங்களா… எப்படி இருக்கார்… நான் போயிட்டு பார்க்கவா…” என்று அவள் பரபரக்க… “காருக்குள் இருந்தார் பாப்பா… நான் பார்க்கலை” என்றப்படியே வீட்டு ஒருங்கிணைப்பாளருக்கு ...

24.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

அத்தியாயம் -24 🌸 டார்லிங்ஸ் இன்னைக்கு இரண்டு யூடி போட்டிருக்கேன். முன்னாடி இருக்கிறது படிச்சுட்டிங்களான்னு பார்த்துக்கோங்க...🌸 மறுநாள் விடிந்ததும், ஈத்தனின் வீட்டை நோக்கி ஓடிய குறிஞ்சி, அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ஈத்தன் குறித்து விசாரிக்க… ஏற்கனவே முன்தினம் மாலையில் இருந்து பத்திரிகையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள் பட்டாள படைகள் பலவற்றை பார்த்து ஓய்ந்துப்போய் இருந்தவர்கள்…. “சார் வீட்டில் இல்லைம்மா… வேற எதுவும் எங்களுக்கு தெரியாது… அவர் வந்தப்பிறகு வந்து பாருங்க…” என்றுவிட… “சார் எப்ப வருவாங்கன்னு எதுவும் தெரியுமா அண்ணா… நீங்க சார்கிட்ட பேசனீங்களா… இப்ப எப்படி இருக்காங்கன்னு மட்டும் சொல்லுங்களேன்… ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சும் குரலில்… இவளிடம் இருக்கும் ஈத்தனின் தனிப்பட்ட தொலைபேசி எண் கூட அவரிடம் கிடையாதே… பாவம் அவர் என்ன பதில் கூறுவார்… “தெரியலை பாப்பா… உன்னை மாதிரி தான் நானும்… எதுவும் தெரியாது…” என்றுவிட… நுழைவு வாயிலிலேயே வீட்டின் ஒருங்கிணைப்பாளர் வரும் வரை காத்திருந்து… அவரிடம் ஓடி விசாரித்து பார்த்தாள்… செக்யூரிட்டி கூறிய அதே பதில் தான் அவளுக்கு அவரிடமும் கிடைத்தது… ‘உண்மையிலேயே ...

23.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

அமெரிக்கா பொறுத்தவரை அவன் அனுமதி இல்லாது அவனுடைய மருத்துவ விஷயங்கள் எள்ளளவும் வெளியே செல்லாது என்பதால்… இப்பொழுது வரை யாருக்கும் விஷயம் தெரிந்திருக்கவில்லை… ஆனால் அவனை காண சென்று இருந்த சித்ரலேகாவிற்கு அவனின் அனுமதி கூட தேவையில்லையே… அவன் அறையில் இருந்த மருத்துவ அறிக்கையை அவன் மறுக்க மறுக்க எடுத்து பார்த்துவிட்டு இருந்தார்… உயிருக்கே சில நேரங்களில் ஆபத்து விளைவித்துவிடும் மருந்துகளை அவன் எடுத்ததில் அதிர்ச்சி அடைந்து, “என்ன ஈத்தன் இதெல்லாம்…?” என்றவரிடம்…  ஈத்தன் என்னவென்று தன்னிலையை விலக்குவது… இருந்தும் வேறுவழியின்றி கூறினான்… “நான் பாட்டியை ரொம்ப மிஸ் பண்றேன் மாம்… அதில் மூட் எப்பவும் டவுனாவே இருக்கு… எனக்கு வேற வழி தெரியலை” என்று முகம் கசங்கிய நிலையில் கூறியவனை பார்த்த சித்ரலேகா… அடுத்து அடுத்து பேசியவைகள் அவனை மொத்தமாக உடைத்து போட்டுவிட்டு இருந்தது… “மனநிலை சரியில்லாதவன் மாதிரி பேசாத ஈத்தன்… என்னை விட உனக்கு ஒன்னும் பாட்டியோட இழப்பு பெருசில்லை… எனக்கு அவங்க அம்மா… உனக்கு ஜஸ்ட் பாட்டி மட்டுமே ஈத்தன்… அழனும்னா நான் எவ்ளோ அழலாம்… என்னுடைய கடமைகள் எல்லாத்தையும் அதை காரணம் க...

23.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

அதற்குள் தூங்கி முடித்து வெளியே எழுந்துவந்த லோகேஸ்வரி… குறிஞ்சியை டீப்போட சொல்லி விரட்ட… மனமே இல்லாமல் சென்று போட்டுக்கொண்டு வந்தவள்… அனைவருக்கும் தந்துவிட்டு… மீண்டும் அயர்ன் செய்யும் இடத்தில் அமர்ந்தப்படியே லோகேஸ்வரி பார்த்துவிட போகின்றார் என்று பயந்து பயந்து தொலைக்காட்சியை பார்க்க… அவளின் புருவங்கள் இரண்டும் சந்தேகமாக சுருங்க ஆரம்பித்தன… நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பார்த்தவாறு தான் ஈத்தன் இப்பொழுதும் சிரித்துக்கொண்டு இருந்தான்… ஆனால் அதில் முதலில் இருந்தது போல் இப்பொழுது உயிர்ப்பு சிறிதும் இல்லை… வலுக்கட்டாயமாக சிரித்தும்… கண்களை சிமிட்டியப்படியும் இருந்தான்… அவன் குரலின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அவனுடைய அம்மாற்றம் தெரியாமல் இருக்கலாம்… ஆனால் அவனுடைய ரசிகையான குறிஞ்சிக்கு அது தெரியாமல் போகுமா என்ன? “என்ன ஆச்சு சாருக்கு…” என்று நினைத்தவளுக்கு இதயம் படபடப்பாகி போனது… நேரம் செல்ல செல்ல ஈத்தனின் உடல் மொழி முற்றிலும் மாறிவிட்டது… வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டு இருந்தவன்… அதன்பிறகு அதைக்கூட செய்யவில்லை… நல்லவேளையாக பாடல்களும் அதற்கு ஏற்றப்போல் இருந்துவிட தப்பித்தவன்… நிகழ்ச...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates