சங்கீதம்-25.1
அத்தியாயம் -25 ஈத்தனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்பதை மட்டுமே தன் முழு நோக்கமாக வைத்துக்கொண்டு… அவனுக்கு ஏற்றபடி அவனிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பியிருந்த குறிஞ்சிக்கு… அவள் பேசியதை எல்லாம் நினைத்து பார்க்கும் பொழுதே தலை சுற்றியது… அதிலும் ஐஸ்வர்யாவிடம் இந்த விஷயத்தை குறித்து பேச போவதை நினைத்தாலே… உள்ளுக்குள் ஜுரம் அடிப்பது போல் இருந்தது… அதைவிட பெரிய ஏழரை லோகேஸ்வரி…. அன்னையிடம் வந்து போட்டு கொடுத்துவிடுவார்களோ… இல்லை ஈத்தனிடம் சென்று போட்டு கொடுத்துவிடுவார்களோ… என்று அனைத்து பக்கமும் இருந்து யோசித்துப் பார்த்தவள்… ‘பேசாமல் நாமே அம்மாவிடம் அனைத்தையும் கூறி… சாரிடம் இதற்கு சம்மதம் என்று கூற சொல்லலாமா?’ என்று நினைத்தவள்… ‘இல்லை இல்லை வேண்டாம்… நிச்சயம் அம்மா இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்… காரியம் கெட்டுவிடும்…’ என்று அந்த யோசனைக்கு உடனே முற்று புள்ளி வைத்துவிட்டாள். ஈத்தனிடமும் அம்மாவிடம் மட்டும் இதை குறித்து இப்பொழுது கூறப்போவது இல்லை… அந்த காலத்து மனுஷி… பயந்துவிடுவார்… அதுவும் இப்பொழுது தான் பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது… நான் பிறகு கூறிக்கொள்கி...