இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

7.3- சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!

படம்
குறிஞ்சியின் முகத்தை பார்த்தப்படியே, கப்பில் மீதியிருந்த லெமன் ஹனி டீயினை சொட்டு விடாமல் குடித்துவிட்டு, கப்பினை டேபிள் மீது வைத்தான். அச்சிறு இடைவெளியிலேயே ஈத்தன் கேட்காமல் விட்டதை எல்லாம், அவனின் பார்வை அவளிடம் தேடி முடித்திருந்தது. கோவிலில் இருந்து கிளம்பும் போது வாங்கியிருந்த மல்லிகை மொட்டு சரங்கள் அவளின் தோள் வழியாக பளிச்சென்று பூத்து எட்டிப்பார்க்க, அதற்கு போட்டியாக, அவளின் சிரிக்கும் கண்கள் இரண்டும் வைர மகுடங்களாக மின்ன…  உடன் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி, குங்குமம், சந்தனம் என அனைத்தும், அவளின் வெளிர் மஞ்சள் நிற நெற்றியில் அழகாக வரிசையாக இடம் பெற்று அமர்ந்திருக்க..  அவளின் முகம், அவ்விரவு நேரத்திலும் பரிபூரண பொலிவுடன் மங்களகரமாக காணப்பட்டது...  அதில் அவள் நிறைவாக வாழ்வதாக நினைத்த ஈத்தன்… மேலும் அவளிடம் எந்த தனிப்பட்ட கேள்விகளும் கேட்காது… நிறுத்திக்கொண்டு… “அப்புறம் குறிஞ்சி…” என்றான். அதில் குறிஞ்சி ‘ஹப்பாடா’ என்று அவனை கிளப்பும் விதமாக “நீங்க உள்ளே படுத்துக்கோங்க சமர் சார். நான் இங்க இருக்கேன்” என்றாள். ஈத்தனோ அவள் மறந்துவிட்டதை மறக்காமல் ஞாபகத்தி...

7.2- சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!

படம்
உள்ளாடையில் எவ்வாறு அணையாடையை(napkin) பொருத்த வேண்டும், என்று குழந்தைக்கு செயல்முறை விளக்கம் காட்டியப்படியே செய்தவள், ஒரு வழியாக அவளை தயார் செய்து அழைத்துக்கொண்டு வெளியே வர… “தேங்க்ஸ் ஆன்ட்டி” என்ற ஈஷா மீண்டும் தந்தையுடன் சென்று ஒட்டிக்கொண்டாள். ஈத்தனும் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து பிடித்துக்கொள்ள. நேரில் அவர்களின் அன்பையும், அந்நியோன்யத்தையும், வாஞ்சையுடன் பார்த்த குறிஞ்சிக்கு, மனம் முழுவதும் கனிந்து நிறைந்தது.  இருவரும் இதே அன்புடன் என்றென்றும் வாழ இறைவனிடம் வேண்டுதல் வைத்தவள்.. “கொஞ்சம் பால் மட்டும் மெஸ்ல இருந்து வாங்கிட்டு வந்து தரேன் ஈஷா. வயிறு காலியா இருந்தாலும் பெயின் வரும். குடிக்கறியா மா?” என்று ஈஷாவிடம் கேட்க. வெந்நீரில் குளித்ததில் உடலும், குறிஞ்சியின் அணுகுமுறையில் மனமும் சற்று தெளிந்திருந்த ஈஷாவிற்கும், லேசாக பசிப்பது போலிருக்க.. “ஓகே ஆன்ட்டி” என்றாள்  தன் குண்டு கன்னங்கள் இரண்டும் ஆடும் வண்ணம் தலையாட்டி… அதில், “அழகு பூக்குட்டி ரொம்பவும் சமத்து” என்று தன்னை மீறி உரைத்திருந்த குறிஞ்சி, அதை சற்றும் உணராமல், “5 மினிட்ஸ் சமர் சார். வந்துடறேன்” என்றுவிட்டு வெளி...

7.1-சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!

படம்
 அத்தியாயம்-7 “காட்…! குறிஞ்சி… குறிஞ்சி தானே…!? I couldn't believe my eyes!” என்ற ஈத்தனுக்கே நீண்ட வருடங்களுக்கு பிறகான, எதிர்பாராத சந்திப்பில், மூச்சு விடுவது சற்று சிரமமாக இருப்பது போல் இருந்தது.  அதில் ஆழ் மூச்சு ஒன்றை உள்ளிழுத்து வெளியிட்டவன்… தன் முன்பு ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டிருந்த அஞ்சனம் தீட்டியிருந்த பெரிய விழிகள் முன்பு, “ஹாய் கேர்ல்” என்று தன் கரத்தினை அசைக்க… அவனுடைய கையசையில், “ஹ்ம்ம்” என்று விழித்த குறிஞ்சிக்கு இன்னுமே நிகழ்வது ஒன்றுமே புரியவில்லை‌‌… அவனின் நீலநிற விழிகளினுள் தடுக்கி விழுந்துவிட்டிருந்தவள், அப்படியே திசையேதும் அறியாது எங்கோ அடித்துச்செல்லப்பட்டாள்… அவளின் இம்முக பாவனையில் ஈத்தனின் இதழ்கள் மெல்ல புன்னகையில் விரிந்துக் கொள்ள, அவளின் காதோரம் சொடுக்கிட்டவன், “கொஞ்சமும் மாறவேயில்லை குறிஞ்சி நீ” என்றப்படியே குனிந்து, அவள் சிதறவிட்ட பொருட்களை விரைந்து சேகரிக்க ஆரம்பிக்க… ஈத்தனின் விரல்கள் தீண்டாமலேயே காதோரம் தந்துவிட்ட குறுகுறுப்பில், குறிஞ்சிக்கு தேகம் முழுவதும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது… நடப்பதை உணர்ந்தவள், சட்டென்று கீழே தன் ஒரு கால் முட்...

6.2- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼 🪻😘

படம்
  இந்த நேரத்தில் யார் அழைப்பது என்று சட்டென்று இஸ்திரி பெட்டியின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு ஓடிவந்து அலைப்பேசியை எடுத்து பார்த்தாள். அதில் "Mother Superior” என்ற பெயரை பார்த்ததும்… பள்ளி விடுதியில் ஏதோ அவசரம் போல் என்று உடனே அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க மதர்…” என்று கேட்க. “கொஞ்சம் அவசரம் குறிஞ்சி… நம்ம வி.ஐ.பி சூட்ஸ் இருக்கும் பிளாக்-க்கு போமா…” என்றவர், என்ன பிரச்சனை என்பதையும், அறை எண்ணையும் கூறிவிட்டு வைக்க… ஸ்வெட்டரை எடுத்து சுடிதாரின் மீது மின்னல் வேகத்தில் அணிந்துக்கொண்டவள்… வீட்டை பூட்டிவிட்டு… சூட்டை நோக்கி வேக நடையிட தொடங்கினாள்... அங்கு வி.ஐ.பி சூட்டில்,  “ஸ்கேரியா(scary) இருக்கு பேபி… ரொம்ப வலிக்குது…” என்று தொடர்ந்து ஈஷா அழ… “இங்கப்பாரு பேபி… அழக்கூடாது… டாடி சொல்றேன் இல்ல… இது நார்மல் தான் பேபி… உனக்கு ஒன்னும் கிடையாது… ரிலாக்ஸ் பேபி… டாடி கூட இருக்கும் போது உனக்கு என்ன பயம்… சரியாகிடும் பேபி” என்று ஈத்தன் அவளை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான். அன்று காலையே ஈஷாவுடன் ஈத்தன் அப்பள்ளிக்கு வந்துவிட்டிருந்தான். ஏற்கனவே மதர் சுப்பீரியரிடம் அவன் ஈஷா தொடர்பான அனைத்து...

6.1- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘

படம்
  அத்தியாயம் -6 எப்பொழுதுமே சனி மற்றும் ஞாயிறு குறிஞ்சிக்கு ஓய்வு தான். ஏதேனும் அவசரம் அல்ல அந்த தினங்களில் டியூட்டிக்கு வருபவர்கள் தவிர்க்க முடியாது விடுமுறை எடுத்தால் மட்டுமே இரவுகளில் அவளை அழைப்பார்கள்.  வேலைபளூ என்பது அவளுக்கு சிறிதும் கிடையாது. அதற்கு ஏற்றப்போல் சம்பளமும் பெரிதாக ஆஹோ ஓஹோ என்று இல்லையென்றாலும் அவள் ஒருத்திக்கு என்று வரும் பொழுது அது அதிகமே. அதுவும் தங்கும் வீடு வேறு இலவசம். வரும் வருமானத்தில் பாதிக்கு மேலே சேமிப்பிற்கு தான் செல்லும். நிம்மதியான தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கையே! வாராவாரம் சனிக்கிழமையில் பள்ளியில் இருக்கும் இளம் கன்னியாஸ்திரிகள் அருகில் உள்ள மலை கிராமங்களுக்கு சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவது வழக்கம். அவர்களுடன் எப்பொழுதும் குறிஞ்சி இணைந்துக்கொள்வாள். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், தன் பிறப்பிற்கு அவளால் முடிந்த ஒரு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியே! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அடிப்படை உடல்நல மருத்துவ பரிசோதனைகளை முகாம் போட்டு செய்வது, அனைத்து வயதினருக்குமே எழுத படிக்க கற்று தருவது, பெண...

5.2- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘📽️

படம்
நேரம் செல்ல செல்ல அவனால் கவனத்தை சரியாக வேலையில் வைக்க முடியவில்லை… ஈஷாவே மூளைக்குள் சுற்றிக்கொண்டு இருந்தாள்… எப்பொழுதுமே மகளின் அன்பும், கருணையும் நிறைந்த குணம், அவனை ஒரு தந்தையாக மிகுந்த பெருமிதம் கொள்ள செய்யும்... ஆனால் அவையே இன்று அவனை யோசிக்க வைத்தன! வாழ்வில் ஒவ்வொரு அடியையுமே மிகுந்த அலசல்களுக்கும், யோசனைகளுக்கும் பிறகு தான் ஈத்தன் வைப்பான்… பொறுமையும், நிதானமும் அவனிடம் எப்போதுமே கொட்டி கிடக்கும்… காரணம் தெரியாத விஷயத்தில் மாட்டி காயம் பட்டுவிட கூடாது என்பது தான்… அதேதான் ஈஷாவிற்கும்… மகளின் விஷயங்களை அவ்வளவு உன்னிப்பாக கவனித்துக் கொள்வான்… கடமைக்காகவோ, பேருக்காகவோ பிள்ளை பெற்றுக்கொண்டவன் இல்லை அவன்… ஆசையாக பெற்றுக்கொண்டவன்… அவள் தான் அவனின் எல்லாம்… அதன் பொருட்டு, பன்னிரண்டு வயதில், தனக்கு என்னவெல்லாம் தெரியும் என்று மகளுடன் ஒப்பிட்டு பார்த்தவனுக்கு, எதிரிகளை எடைப்போடும் அறிவு மகளிடம் கொஞ்சமும் இல்லாதது புரிந்தது. அதேசமயம், அவள் தனித்து தனக்கு தோன்றியதை வைத்து முடிவெடுக்கும் அளவு வளர்ந்திருந்திருப்பதும் புரிந்தது. அனைத்து பெற்றோர்களும் எதிர் கொள்ளும் பிரச்சனை தான். பதி...

5.1- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻❤️🎶

படம்
அத்தியாயம்-5 ஒரு தொலைக்காட்சி மற்றும் ஒரு யூடியூப் சேனல் விடாது அனைத்திலும், ஈஷா பாடிய பாடலும், தன் அன்னை குறித்து அவள் பேசியதும், ஈத்தனுடன் அவளிருந்த நிமிடங்களும் தான், சிறு சிறு வீடியோ துணுக்குகளாக விதவிதமாக சுற்றிக்கொண்டு இருந்தன…  விடிய விடிய சினிமா நியூஸ் சேனல்ஸ் மக்கள் உட்கார்ந்து, வேலைப்பார்த்துவிட்டு இருந்தனர்... ஈத்தன் காலை கண்விழித்ததும் முதலில் பார்த்தவை இவைதான்... அதில் எங்காவது அவனை குறித்தோ, ஈஷா குறித்தோ எதிர்மறையான பகிர்வுகள் உள்ளதா என்று ஆராய்ந்தான்…  எதுவும் இல்லை. அவனின் IT Wing தீயாக இருந்தனர்…  அதில் சிறிது ஆசுவாசம் ஆன ஈத்தனை… வழக்கமான தினசரி வேலைகள் இழுத்துக்கொள்ள… அனைத்தையும் முடித்து ஈஷாவுடன் சேர்ந்து காலை உணவை முடித்தவன், அவளை கையுடன் அழைத்துச்சென்று ரோஜா தோட்டத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டான்… “என்ன ஆச்சு பேபி‌.‌.‌. உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு… நான் எதுவும் தப்பு செய்துட்டனா பேபி.‌‌… ஏன் கார்டன் வந்து இருக்கோம்…?” என்று ஈத்தனின் முக மாறுதலை உள்வாங்கிய ஈஷா கேட்டாள்.  முக்கியமான விஷயம் எது பேசுவதாக இருந்தாலும் ஈத்தன் அவளுடன் அங்கு தான்...

4.3 -சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘📽️

நாளை ஈஷாவிடம் பேச வேண்டியதை நினைத்தப் படியே குளித்துமுடித்து இரவு உடைக்கு மாறிய ஈத்தன், அறைக்குள் நுழைந்து ஈஷாவின் அருகில் சென்று படுக்க, எப்பொழுதும் போல் அருகில் அவனின் இருப்பை தூக்கத்திலேயே உணர்ந்தவள், மறுகணம் இடம்பெயர்ந்து ஈத்தனின் கை வளைவிற்குள் தலை வைத்து, அவன் மார்புக்குள் அடங்கிவிட… உலகமே மறந்துப்போனது ஈத்தனுக்கு! மகளின் அருகாமையும், ஸ்பரிசமும், வாசமும் தாயாய் மாறி அவனை தாலாட்ட, மகளின் தலையை கோதி கலைந்த முடிகளை காதோரம் ஒதுக்கி அவளை உச்சி முகர்ந்தவனை, உறக்கம் சுகமாய் வந்து அணைத்துக்கொள்ள,  அவனுடைய பிரபஞ்ச விதி கூற்றின் படியே, அவன் தெரிந்தே சரியாக செய்த பிழை ஒன்று, அவனை விழுங்க விருட்சமாக வளர்ந்து வந்துக்கொண்டு இருப்பதை அறியாது, அமைதியான நித்திரைக்கு சென்றுவிட்டான். "For every action, there is an equal and opposite reaction” - Newton’s 3rd Law. ____________________________ மெல்லிய சத்தத்தில் ஈத்தனின் குரலில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, அதில் லயித்தப்படியே இணையத்தில் இன்றைய அவனுடைய இசை நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த படங்களையும், தொலைக்காட்சியில் தான் எடுத்த படங்களையும்...

4.2 - சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘📽️

4.2 அனைவரும் சென்றபிறகு, “நீ என்னடா வீட்டுக்கு போகலையா? கிளம்பு கிளம்பு” என்றான் ஈத்தன்… அதில், “என்னா தலைவரே! மெரினா பீச்ல எதுவும் உங்களுக்கு சிலை வேணுமா! அப்படி எதுவும் ஆசையிருந்தா என்கிட்ட சொல்லுங்க, சத்தமில்லாமல் நான் ஏற்பாடு பண்ணிடறேன். அதைவிட்டுட்டு இவ்வளோ நல்லவராலாம் நீங்க இருக்கனும்னு அவசியம் இல்லை…” என்று சக்தி புலம்ப ஆரம்பிக்க… “டேய்… அமைதியா வீட்டுக்கு போடா… தூக்கம் வரலையா உனக்கு…?” என்று ஈத்தன் அவனை விரட்டுவதிலேயே குறியாக இருக்க. “தூக்கமா… க்கும்… ஆத்திரம் மட்டும் தான் வருது… அதுவும் உங்க மேல தான் டன் கணக்கில் வருது…” என்றவன். தன் மனதில் இருந்தவை அனைத்தையும் கொட்ட ஆரம்பித்துவிட்டான். “போங்க தலைவரே, அந்த சௌந்தர்யா வேண்டும்னு உங்களை அசிங்கப்படுத்த ஸ்கெட்ச் போட்டு, எனக்கே விபூதி அடிச்சு, நம்ம பாப்பாக்கிட்ட கேள்விக்கேட்டு, என்னலாம் பண்ணிவிட்டுடுச்சு… கொஞ்ச நேரத்தில் எனக்கு அள்ளுவிட்டு போச்சு… வந்த ஆத்திரத்துக்கு இன்னைக்கு நம்ம ஏரியா பசங்களை வச்சு அந்த பொம்பளை மூஞ்சி முகரையெல்லாம் பேத்துடனும்னு இருந்தேன்… கடைசியில் என்கிட்டவே அதை வீட்டுக்கு பத்திரமா அனுப்புற பொறுப்பை கொடுத்த...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates