இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

29.5 அந்திப்போர் 🪻😘📽️

குறிஞ்சிக்கு, மாதம் கூடக்கூட, குழந்தையின் அளவிற்கு ஏற்ப கர்ப்பப்பை விரிவடைந்துக்கொண்டே செல்வதில்… இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உணவுப்பை சுருங்கிவிட…கொஞ்சம் சாப்பிட்டாலே கழுத்துவரை உணவு இருப்பது போல் இருந்தது… அதில் அசதியாக இருந்தாலும்… சாப்பிட்டதும் உடனே படுக்க முடிவதில்லை… அதிலும் வீட்டிலும் ஒரு வேலையும் அவளுக்கு இல்லையே…. அதில் இரவு உணவிற்கு பிறகு கையுடன் மாடிக்கு ஈத்தனுடன் சென்றுவிடுவாள்…  இன்றும் அவ்வாறே சென்று… நிலாவையும், நக்ஷத்திரங்களையும், தூரத்தில் தெரியும் கடற்கரையையும் பார்த்தப்படியே ஒரு அரைமணி நேரம் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டு இருக்க… ஈத்தன் அங்கிருந்த ரோஜா செடிகளில் இருந்த காய்ந்த இலைகளை அப்புறப்படுத்திக்கொண்டும்… ட்ரிம் செய்துக்கொண்டும் இருந்தான்… ஒருவழியாக குறிஞ்சி, அங்கிருந்த நீச்சல் குளத்திற்கு அருகே போட்டிருந்த சாய்வு நாற்காலியில்… நடந்தது போதும் என்று அப்படியே மூச்சுவாங்க ஓய்வாக அமர்ந்துவிட… “குறிஞ்சி மலருக்கு இந்த ஈத்தனோட கடைசி பரிசு…” என்று ஈத்தன் தன் பாக்கெட்டில் இருந்த கொலுகளை எடுத்து அவளிடம் நீட்டி இருந்தான்… குறிஞ்சி கேட்டது போலவே அதிக சலங்கை வைத...

29.4 அந்திப்போர் 🪻😘📽️

அந்த வாரம் முடிவதற்குள்ளாகவே திடீரென்று ஒருநாள் காலை… அவளை வெளியே செல்ல வேண்டும் என்று கிளம்ப கூறியவன்…. அவளை தன்னுடைய பிளாக் போர்ஷ்(Porsche) 911 ஆன… ஸ்போர்ட்ஸ் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பி இருந்தான்… எங்கே என்று புரியாமல் அந்த வித்தியாசமான அமைப்பை கொண்ட காரினையே அவள் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டு வர… டேஷ் போர்டில் இருந்து ஒரு மாஸ்கினை எடுத்து அணிந்தப்படியே… ஈத்தன் மேலேயிருந்த ஒரு பட்டனை அழுத்த… காரின் மேற்கூரை மொத்தமாக பின்புறமாக மடிந்து… ட்ரன்க் பெட்டிக்குள் சென்று மறைந்துவிட்டு இருந்தது… அதில் “அச்சோ சார் எப்படி இப்படி”, என்று குறிஞ்சி ஆச்சரியமாக மேலே தெரிந்த வானத்தையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டு வர… “சீட்ல அப்படியே விண்டோ பக்கம் தலையை சாய்ச்சப்படி உட்காரு கேர்ள்… குயிக்…” என்ற ஈத்தன்… அவள் அப்படி அமர்ந்ததும்…  “லாங்க் ட்ரைவ்… ஜன்னல் சீட்டு… ஜிலு ஜிலு காத்து…” என்று அவள் கூறியது போலவே கூறியவன்… “வேடிக்கை பார்த்துட்டே வா கேர்ள்… காரை நான் நிறுத்த மாட்டேன்” என்று கூற… அதிர்ந்துப்போன குறிஞ்சி ஈத்தனை திரும்பி பார்க்க… அவளை பார்த்து தன் கண்களை சிமிட்டியவன்… “என்ஜாய் கேர்ள்…”...

29.3 அந்திப்போர் 🎼🪻😘

இன்றோ, அவன் அவளுக்கு தந்திருந்த அவனின் பேன்ட் சட்டைகள் அனைத்தும் ஒன்றுவிடாமல் அழகாக அயர்ன் செய்யப்பட்டு… அவளுக்கு அன்று அவன் வாங்கி தந்திருந்த சில உடைகளுடன் அங்கு அடுக்கப்பட்டு இருந்தன… அத்துடனா அவளுக்கு அவன் வாங்கி கொடுத்தவைகள் நின்று இருந்தது… கொஞ்சம் கொஞ்சமாக அவளை அவளிடம் இருந்து எடுத்தவைகள் ஏராளமானதாகுமே… எப்படியெல்லாம் ஒரு ஆண் நடந்துக்கொண்டால்… ஒரு பெண்ணுக்கு பிடிக்குமோ… அப்படியெல்லாம் அவளிடம் கல்நெஞ்சக்காரன் அவன் நடந்துக்கொண்டிருக்க… ஏற்கனவே அன்பின் பால் எளிதில் சாயிந்துவிடும் பலகீனம் உள்ளவள்… மேலும் கர்ப்பக்கால ஹார்மோன்களின் ஆட்டத்தில் பலகீனமடைந்து… மொத்தமாக அவனிடம் தன்னை தோற்றுவிட்டு இருந்தாள்… அதிலும் பதின்ம வயதையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடந்திருந்த, வெறும் இருபத்தியோரு வயது பெண்ணிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்… அன்று, எட்டாக்கனியான அவன் மீதான தன் நேசத்தை உணர்ந்த நொடி குறிஞ்சி… எப்படியெல்லாம் துடிதுடித்து போய்விட்டு இருந்தாள்… அதையெல்லாம் இன்று உணர ஆரம்பித்திருந்த ஈத்தன்… அவளுக்கு இணையாக இன்று துடிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தான்… ஏழாம் மாத முடிவில் அடுத்த ம...

29.2 அந்திப்போர் 🎼🪻😘

என்ன அவ்வளவு வேகமாக ஈத்தன் செயல்பட்டும் இருவரும் காற்றின் வேகத்தில் தொப்பலாக நனைந்துவிட்டு இருந்தனர்… அதில் “சீக்கிரம் நீ ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு ஹேர் ட்ரை செய்ய ஸ்டார்ட் பண்ணு கேர்ள்… நான் சூடா குடிக்க டீ கொஞ்சம் ப்ரிபேர் பண்றேன்… குயிக்” என்று அவளின் அறை வாயிலில் அவளை இறக்கிவிட்டுவிட்டு செல்ல… ஈத்தன் சொன்னப்படியே குளியலறையில் தன் ஈர உடைகளை கழட்டி போட்ட குறிஞ்சிக்கு… அப்பொழுது தான் அணிந்திருப்பது தவிர்த்து… அவளுக்கு தற்போதைக்கு பொருந்தும் அளவில் வேறு உடை இல்லாதது நினைவிற்கு வந்தது… அதில் “கடவுளே… இந்த வேகாத வெயில் காலத்தில் போயிட்டு, இப்படி தீடீர்னு மழையை அனுப்பி என்னை சோதிக்கலாமா நீங்க…?” என்று நொந்தப்படியே… துண்டினை எடுத்து சுற்றிக்கொண்டு… அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் முடியை உலர்த்த தொடங்கினாள்… அவளிடம் இருந்த முக்கால்வாசி உடைகள்… அவளுக்கு நான்காம் மாதம் பாதியில் இருந்தே பத்தாமல் போக ஆரம்பித்து… இப்போதைக்கு இரண்டு உடைகள் தான் பத்தும் நிலை வந்து இருந்தது… ஈத்தனின் கவனிப்பும்… உள்ளே இருக்கும் அவனின் குட்டி லட்டுவின் வேலையும் தான் அதற்கு காரணம்… எப்பொழுதும் ஐஸ்வர்யா போட்...

29.1 அந்திப்போர் 🪻🎼😘

அத்தியாயம் -29 தன் கையில் இருந்த மியூசிக் ப்ளேயரை எடுத்த இடத்திலேயே பத்திரமாக வைத்துவிட்டிருந்த ஈத்தன், “ஏன் கேர்ள் இப்படியெல்லாம் என்னை சோதிக்கிற… நான் இப்ப என்ன செய்யுறது… நீயே சொல்லு…”, என்று அப்படியே அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்துவிட்டு இருந்தான்… மதரிடம் சற்றுமுன்னர் அவன் கூறியது போல் எளிதாக பிடுங்கி வேறொரு இடத்தில் நடும் நிலையில் குறிஞ்சியின் நேசம் இல்லை என்பதை அவனின் ஆழ்மனம் உணர துவங்கியதின் வெளிப்பாடே அவனின் அந்த செயலற்ற நிலைக்கு காரணம்… ஈத்தனும்… அவனின் நினைவுகளும்… குறிஞ்சியின் ஒவ்வொரு அணுவிலும் இத்தனை வருடங்கள் கடந்தும்… சிந்தாமல், சிதறாமல் வேர்விட்டு… அவளின் நாடி நரம்பெல்லாம் பின்னி பிணைந்து குடியிருக்க…  அவனுக்கு ‘என்ன செய்வது’ ஒன்றும் புரியவில்லை… எப்படி அதனை பிடுங்கி எடுப்பது… முடியும் என்று தோன்றவில்லை… ஆரம்பிக்கும் முதலே ‘தான் வேறொருவனுக்கு சொந்தமானவள்’ என்று கூறி அவனின் மனதிற்கு விலங்கிட்டு இருந்தவள்… தன் மனதை மட்டும் சுதந்திரமாக அலையவிட்டுவிட்டிருக்க… ஈத்தனின் மனமோ அவள் போட்டு பூட்டிவிட்ட விலங்குகளை மீறி வெளிவரவும் முடியாமல்… உள்ளேயே இருக்க...

28.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

அதில் மொத்தமாக அதிர்ந்து போன ஈத்தன்… “ஓ மை கோஷ்(gosh)…” என்றப்படி உடனே எழுந்துக்கொள்ள… திடீரென்று வாந்தி எடுத்ததை விட… அதனை ஈத்தன் மீது எடுத்து வைத்ததில் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது குறிஞ்சிக்கு… அந்த பயத்தில் “சாரி சார்… நான் தெரியாமல்” என்றுக்கூற வாயை திறந்தவள்… மீண்டும் அவன் மீதே குபுக் குபுக்கென்று வயிற்றில் மீதமிருந்த கடைசி சொட்டு வரை வாந்தியெடுத்து வைத்துவிட… மேலும் பயந்து விட்டாள் குறிஞ்சி… அதில் சரசரவென அவளின் கண்கள் இரண்டும் கண்ணீரை கொட்ட ஆரம்பித்துவிட்டன… எங்கு மீண்டும் அவன் மீது வாந்தி எடுத்துவிடுவோமோ… என்று… தன் துப்பட்டாவினால் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டவள்… அவனிடம் இருந்து தள்ளி நிற்க… ஏற்கனவே அவளின் செய்கையில் பதறி போய் இருந்த ஈத்தன்… அவள் அழுவதில் மேலும் பதறி விட்டான்… “ஹேய் என்னமா ஆச்சு… வயிறு எதுவும் வலிக்குதா… வா உடனே ஹாஸ்பிடல் போகலாம்…” என்று அவன் அவளை நெருங்கி கைப்பற்ற வர… “அச்சோ… கிட்ட வராதிங்க சார்… திரும்ப உங்க மேல வாந்தி எடுத்திட போறேன்…”, என்ற குறிஞ்சிக்கு மீண்டும் குமட்டிக்கொண்டு வர… “ப்ளீஸ்…” என்று பின்னோக்கி நகர்ந்தவளுக்கு… தலையெல்லாம் ச...

28.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

அத்தியாயம்-28 ஹாலில் இருந்தது போலவே குறிஞ்சியின் படுக்கை அறைக்குள்ளும் அவ்வளவு சிகப்பு நிற ரோஜா செடிகள்… அது வீடா… இல்லை நர்சரியா என்று தெரியாத அளவிற்கு… மனதின் இறுக்கத்தை குறைக்க மென்மையாக அதனை வருடிக்கொடுத்த ஈத்தனுக்குள்… அதுக்குறைவதற்கு பதிலாக பழைய நினைவுகள் எல்லாம் ஆர்ப்பரித்துக்கொண்டு மேலெழுந்து அவனை சுழலுக்கும் இழுத்து சென்றன… அதுவும் இந்த ரோஜாக்களுடன், அவனுக்கும், குறிஞ்சிக்கும், இடையிலான நிகழ்வுகள்… அன்று, குறிஞ்சியின் கர்ப்பம் வீட்டில் உறுதியானதும், உடனடியாக அவளுடன் மருத்துவமனைக்கு சென்றும் அதனை உறுதிப்படுத்திக்கொண்டு வந்திருந்த ஈத்தன்… அவளை அதே வீட்டில் தகுந்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வைத்துவிட்டு… ரெக்கார்டிங் வேலையாக உடனேயே அமெரிக்காவிற்கு கிளம்பிவிட்டு இருந்தவன்… வேலை நெருக்கடியால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்தியாவிற்கு திரும்பவில்லை… திருமணம் மற்றும் அதைத்தொடர்ந்து குழந்தைக்கான சிகிச்சை என்று நீண்ட நாட்கள் இந்தியாவிலேயே அவன் இருந்துவிட்டதால்… அங்கு வேலைகள் அதிகம் தேங்கிவிட்டு இருந்தன… அதில் முடிக்க முடிந்தவற்றை எல்லாம் முடித்துக் கொடுத்துக்கொண்டு வந்தவன்… முட...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates