இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

33. அந்திப்போர் 🪻😘📽️

அத்தியாயம் -33 தன் மொபைலை எடுத்த ஈத்தன், ஈஷா கூறிய பிரச்சனையை, என்னவென்று கூகுளில் தேடி பார்த்துவிட்டு… அந்த இரவே, அவளை அழைத்துக்கொண்டு, இரவு நேர அவசர மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டு இருந்தான். செல்லும் வழியெல்லாம் ‘மருத்துவமனை வேண்டாம்’ என்று அடம் பிடித்த ஈஷாவை… “ஒன்னும் இல்லை பேபி… ப்ரீ டீன் கேர்ள்ஸுக்கு இது நார்மல்னு தான் போட்டு இருக்காங்க டா… நாம ஜஸ்ட் டாக்டரை பார்த்து… பெயின் போக மெடிசன் மட்டும் வாங்கிட்டு வந்துடலாம்…” என்று அவளை சமாதானம் செய்து, எப்படியோ மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டவனால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது போனது… உள்ளே அவளை பரிசோதனைக்கு என்று அழைத்துச்சென்ற பெண் மருத்துவர்… என்னவென்று பார்க்க முற்பட… ‘தொடவே கூடாது… எனக்கு பிடிக்கவில்லை… நோ…’ என்று கத்தி ஒரே அழுகை ஆர்பாட்டம் ஈஷா… குழந்தையாக இருந்த போது கூட அவள் இந்தளவிற்கு அழுதது கிடையாது. அனைத்திற்கும் சேர்த்து வைத்து அன்று அவள் அழுது தீர்த்துவிட்டாள்… பெரிதாக மக்களுடன் தொடர்பு இல்லாது, அவளை சிறு கூட்டிற்குள் வைத்தே ஈத்தன் வளர்த்துவிட்டு இருக்க… அவளால் யாரையும் ஒரு எல்லைக்கு மேல் அக்கூட்டிற்குள் சட்டென்று ...

32.2 அந்திப்போர் 🪻😘

ஈத்தனால் அக்கணங்களின் உணர்வுகளை தாங்கவே முடியவில்லை… எங்கோ தோற்ற உணர்வு அவனுக்கு… எப்படி மகள் அப்படி கூறலாம்… தொண்டையெல்லாம் அடைத்துவிட்டது அவனுக்கு… அவன் ஒருமாதிரியான வலியில் இருக்க… ஈஷாவோ வேறு மாதிரியான உணர்வுகளில் தவித்துக்கொண்டு இருந்தாள்… நிமிர்ந்து ஈத்தனின் முகம் பார்த்தவள்… அவன் தாடையை பற்றி, “அம்மா இல்லாமல் உங்களுக்கு நிறைய கஷ்டமா இருந்து இருக்கும் இல்ல பேபி?” என்று கேட்டாள் திடீரென்று, சற்றும் சம்பந்தமே இல்லாமல். அதில் சுத்தமாக குழம்பி போனான் ஈத்தன். ஈஷாவின் அமைதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அவன் மூளை வேக வேகமாக யோசிக்க ஆரம்பித்தது… திடீரென்று மகள் ‘அம்மா இல்லாமல் நீ நிறைய கஷ்டத்தை அனுபவித்தாயா’ என்று கேட்டால் என்ன அர்த்தம். அக்கஷ்டத்தை அவள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறாள் என்று தானே அர்த்தம். முன்பு ஈஷா கேட்டதை விட… இது அதிக வலியை ஈத்தனுக்கு தர… அதற்குள் ஈஷா அடுத்த கேள்வியாக, “பேபி நீங்க பார்த்த அந்த ஏஞ்சல். குறிஞ்சி ஆன்ட்டி போல் இருப்பாங்களா பேபி…?” என்று வேறு கேட்டு வைக்க… ஈத்தனுக்கு இதயமெல்லாம் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது… கண்ணுக்கு புலப்படாத இயற்கையின் சக்தி...

32.1 அந்திப்போர் 🪻😘

அத்தியாயம் -32 ஈஷாவுடன் ஈத்தன் அமெரிக்காவிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகிறது. இந்த மாதம் முடியும் வரையுமே அங்கு தான் அவர்கள் இருக்க போகிறார்கள். ஈத்தனுக்கு சில ரெக்கார்டிங் உடன், பெரிய மியூசிக் கன்சர்ட் ஒன்று அம்மாத இறுதியில் இருந்தது. அதில் பயங்கர பிசி அவன். ரெக்கார்டிங் வேலைகளை முதலில் முடித்துவிட்டு, அடுத்து முழு மூச்சாக இசைவிழாவிற்கான பயிற்சிகளில் இறங்க வேண்டும் என்று அட்டவணை போட்டு ஓடிக்கொண்டு இருந்தவன்… ஒருவழியாக குறிப்பிட்டிருந்த தேதிக்குள், ரெக்கார்டிங் பணிகளை முடித்துவிட்டு இருந்தான்…  அடுத்து இசைவிழாவிற்கான ரிகர்சலை பார்க்க வேண்டியது தான்… அதற்கு ஆயுத்தமாவதற்கு முன்பு, மேற்கொள்ளும் விஷயங்களான… உடல் மற்றும் மனநிலையை அதீத புத்துணர்வாக மாற்ற வேண்டி… வீட்டிலேயே சற்று ஓய்வாக ஈத்தன் தங்கிவிட்டான்… ரெக்கார்டிங்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரீடேக் எடுத்து பாடிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நிறைய எடிட்டிங் முறைகள் அதில் பயன்படுத்தி பாடலை நன்றாக டியூன் செய்துவிடுவார்கள். ஆனால் நேரடியாக லைவ்வில் பாடும் பொழுது இது எதையும் செய்ய முடியாது. உடன் இடைவெளிகள் எதுவுமின்றி சோர்ந்து போகா...

31. அந்திப்போர் 🪻😘📽️

அத்தியாயம் -31 தன் கூடு வந்து அடைந்துவிட்டிருந்த குறிஞ்சி, மறுநாள் எப்பொழுதும் போல் காலை எழுந்து, பணிக்கு செல்ல தயாரானாள். என்ன தினமும், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்தப்படியே கிளம்புபவளுக்கு, இன்று எதிலுமே சிறிதும் கவனம் இல்லை.  கைப்பாட்டுக்கும் பழக்கப்பட்ட வேலைகளை பார்க்க, மனம் முழுவதும் ஈத்தனும், ஈத்தன் வீட்டில் நடந்தவைகளும் தான். இந்நொடி வரை அவளால் சிறிதும் நம்பமுடியவில்லை. அவ்வளவு நடந்த பிறகும் எப்படி அவளை ஈத்தன் செல்ல அனுமதித்தான். அவளறிந்த ஈத்தன் அப்படி கிடையாதே. அதுவும் அவளிடம். அதனால் தானே இரவோடு இரவாக கிளம்பிவிட முடிவு செய்திருந்தாள். உள் மனம் ஒன்றுக்கூற, நடந்திருந்த நிதர்சனமோ அதற்கு மாறாக அல்லவா இருந்துவிட்டது. அதை நினைக்கும் பொழுதே முணுக்கென்று அவள் கண்களில் இருந்து நீர் மணிகள் உருண்டோடின… ஈத்தனுக்கு ‘அவளை பிடித்து வைக்க விருப்பம் இல்லை’ என்பது தானே, அவளை அவன் போக விட்டதற்கு ஒரே காரணமாக இருக்க கூடும். நிறைவேறாத இத்தனை வருட காதல் கூட இவ்வளவு வலியை தரவில்லை… ஆனால் நிராகரிக்கப்பட்ட காதல், ஒரே நாளில் நெஞ்சம் முழுவதும் அப்படியொரு வலியுடன் கூடிய வெற்றிடத்தை கொடுத்...

30.7 அந்திப்போர் 🪻😘

அன்று, அவளை அழைத்துச்செல்ல பிரபுவும் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார்கள்… குறிஞ்சியின் பொருட்கள் அனைத்தும் வண்டியில் ஏற்றிமுடிய… குறிஞ்சியின் கரத்தினை பிடித்தப்படி ஹாலில் அமர்ந்திருந்த ஈத்தன்… “இந்த பதினாறு மாசத்தை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் குறிஞ்சி. ஆசிர்வதிக்க பட்ட நாட்கள் எல்லாமே”, என்றவன்… “உனக்காக உன் அம்மா காத்திட்டு இருப்பாங்க. அவங்களோட சந்தோஷமா இரு டா…” என்றவன்… “இந்த வருஷம் கல்யாணமாகிடும் இல்ல உனக்கு?” என்று கேட்க. உள்ளே தன் பற்களை போட்டு அழுந்த கடித்துக்கொண்டிருந்த குறிஞ்சி… வெளியே சிறு புன்னகையுடன் “ஆம்” என்று தலையாட்ட… “குட்… குட்…” என்ற ஈத்தன்… “எனக்கு தெரியும்… நாளைக்கு நீ நல்ல அனுசரனையான மனைவியாகவும்… நல்ல அன்பான தாயாகவும்… பொறுப்பான குடும்ப தலைவியாகவும் ஷைன் பண்ணுவன்னு கேர்ள்…” என்றப்படியே எழுந்துக்கொண்ட ஈத்தன்… “ஆல் த பெஸ்ட் குறிஞ்சி…” என்று… ஈஷாவை ஒரு கையில் வைத்தபடியே… மறுக்கையால் அவளை அணைத்து விடைக்கொடுக்க… இரண்டு மூன்று வினாடிகளே ஆன அவனின் அவ்விணைப்பினுள் அடங்கி இருந்த குறிஞ்சியின் இதயம்… உள்ளுக்குள்ளே வெடித்து சிதறி இருந்தது… அவளின் கரங்கள், ஈத்தனை அவனின...

30.6 அந்திப்போர் 🪻

கண்ணை மூடி திறப்பதற்குள் ஆறு மாதங்கள் ஓடிவிட்டு இருந்தது… ஈஷாவை தன் அறையில் இருக்கும் குளியலறையில்… குழந்தைக்களுக்கான பாத் டப்பிள் வைத்து… விளையாட்டு காட்டியப்படியே குளிக்க வைத்த ஈத்தன்… அவளை தூக்கி வந்து நன்கு துடைத்துவிட்டு, உடலில் பாடி லோஷன் தடவி, டயாப்பர் போட்டு, அழகான காட்டன் கவுன் ஒன்றை அணிவித்து… தூக்கிக்கொண்டு குறிஞ்சியிடம் வந்தான்… குறிஞ்சி, குழந்தையின் தலையில் இருக்கும் பஞ்சு போன்ற முடியினை சீவிவிட்டு… அதனை எல்லாம் ஒன்று சேர்த்து… தென்னை மரம் போல் நடுவில் ஒரு சிண்டினை சிறிதாக போட்டு விட… ஈஷா அதனை தொட்டு தொட்டு பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்… அதில், “என் அழகு பேபி…” என்று அவளை தூக்கிக்கொஞ்ச ஆரம்பித்துவிட்டிருந்தான் ஈத்தன்… தினமும் நடக்கும் சங்கதி தான் அது… சளைக்காமல் கொஞ்சிக்கொண்டே இருப்பான்… அதைப்பார்க்கும் குறிஞ்சியும்… “உங்க பேபி மட்டும் அழகு இல்லை சார். நீங்களும் தான் ரொம்ப அழகு…” என்று சொல்லிக்கொள்வாள்… மனதினுள் தான்… இன்றும் அவ்வாறே மனதினுள் சொல்லிக்கொண்டவள்… மனதின் உள்ளே எங்கோ ஒரு மூலையில் விண் விண் என்று ஒரு வலி…  இன்னும் ஒருவாரம் தான்… அவர்களுடன் அவள்...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates