33. அந்திப்போர் 🪻😘📽️
அத்தியாயம் -33 தன் மொபைலை எடுத்த ஈத்தன், ஈஷா கூறிய பிரச்சனையை, என்னவென்று கூகுளில் தேடி பார்த்துவிட்டு… அந்த இரவே, அவளை அழைத்துக்கொண்டு, இரவு நேர அவசர மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டு இருந்தான். செல்லும் வழியெல்லாம் ‘மருத்துவமனை வேண்டாம்’ என்று அடம் பிடித்த ஈஷாவை… “ஒன்னும் இல்லை பேபி… ப்ரீ டீன் கேர்ள்ஸுக்கு இது நார்மல்னு தான் போட்டு இருக்காங்க டா… நாம ஜஸ்ட் டாக்டரை பார்த்து… பெயின் போக மெடிசன் மட்டும் வாங்கிட்டு வந்துடலாம்…” என்று அவளை சமாதானம் செய்து, எப்படியோ மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டவனால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது போனது… உள்ளே அவளை பரிசோதனைக்கு என்று அழைத்துச்சென்ற பெண் மருத்துவர்… என்னவென்று பார்க்க முற்பட… ‘தொடவே கூடாது… எனக்கு பிடிக்கவில்லை… நோ…’ என்று கத்தி ஒரே அழுகை ஆர்பாட்டம் ஈஷா… குழந்தையாக இருந்த போது கூட அவள் இந்தளவிற்கு அழுதது கிடையாது. அனைத்திற்கும் சேர்த்து வைத்து அன்று அவள் அழுது தீர்த்துவிட்டாள்… பெரிதாக மக்களுடன் தொடர்பு இல்லாது, அவளை சிறு கூட்டிற்குள் வைத்தே ஈத்தன் வளர்த்துவிட்டு இருக்க… அவளால் யாரையும் ஒரு எல்லைக்கு மேல் அக்கூட்டிற்குள் சட்டென்று ...