29.4 அந்திப்போர் 🪻😘📽️
அந்த வாரம் முடிவதற்குள்ளாகவே திடீரென்று ஒருநாள் காலை… அவளை வெளியே செல்ல வேண்டும் என்று கிளம்ப கூறியவன்….
அவளை தன்னுடைய பிளாக் போர்ஷ்(Porsche) 911 ஆன… ஸ்போர்ட்ஸ் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பி இருந்தான்…
எங்கே என்று புரியாமல் அந்த வித்தியாசமான அமைப்பை கொண்ட காரினையே அவள் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டு வர…
டேஷ் போர்டில் இருந்து ஒரு மாஸ்கினை எடுத்து அணிந்தப்படியே… ஈத்தன் மேலேயிருந்த ஒரு பட்டனை அழுத்த…
காரின் மேற்கூரை மொத்தமாக பின்புறமாக மடிந்து… ட்ரன்க் பெட்டிக்குள் சென்று மறைந்துவிட்டு இருந்தது…
அதில் “அச்சோ சார் எப்படி இப்படி”, என்று குறிஞ்சி ஆச்சரியமாக மேலே தெரிந்த வானத்தையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டு வர…
“சீட்ல அப்படியே விண்டோ பக்கம் தலையை சாய்ச்சப்படி உட்காரு கேர்ள்… குயிக்…” என்ற ஈத்தன்… அவள் அப்படி அமர்ந்ததும்…
“லாங்க் ட்ரைவ்… ஜன்னல் சீட்டு… ஜிலு ஜிலு காத்து…” என்று அவள் கூறியது போலவே கூறியவன்… “வேடிக்கை பார்த்துட்டே வா கேர்ள்… காரை நான் நிறுத்த மாட்டேன்” என்று கூற…
அதிர்ந்துப்போன குறிஞ்சி ஈத்தனை திரும்பி பார்க்க…
அவளை பார்த்து தன் கண்களை சிமிட்டியவன்… “என்ஜாய் கேர்ள்…” என்று ஒரு கையால் காரை ஓட்டியப்படியே… மறுக்கையால் அவளின் தாடையை பற்றி அந்த பக்கம் வேடிக்கை பார்க்க திருப்பிவிட்டு இருந்தான்…
ஏதோ நேரம் போக கேட்கிறான் என்று நினைத்து… அவளும் அன்று அவளின் விருப்பங்களை கூறியிருக்க… ஈத்தன் அதை சீரியசாக எடுத்துக்கொண்டு அவளை அழைத்து வந்ததில் அவ்வளவு ஆச்சரியம் அவளுக்கு…
அதில் எச்சில் கூட்டி விழுங்கியவளின்… முகத்தில் வந்து மோதிய காற்று ‘என்னை பார்’ என்று அவளை அழைக்க…
ஈத்தன் கூறியது போலவே அந்த பயணத்தை சீட்டில் தலை சாய்த்து மெல்ல அனுபவிக்க ஆரம்பித்தவள்… அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சூல் கொண்ட களைப்பில் நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டு இருந்தாள்…
அதில் அவளை தொந்தரவு செய்யாமல் வேகத்தை குறைத்து ஈத்தன் காரினை செலுத்த…
ஒருவழியாக தூங்கி முடித்து கண்விழித்த குறிஞ்சியின் முன்பு ஈத்தன்… அவளுக்கு பிடித்த ஆரஞ்சு வண்ண மோட்டிசூர்(motichoor) லட்டுகள் அடங்கிய இனிப்பு பெட்டியினை நீட்டி இருந்தான்…
அதில் குறிஞ்சிக்கு தான் கனவு எதுவும் காண்கிறோமா என்ற சந்தேகமே வந்துவிட்டு இருந்தது…
அதில் தன் கண்களை கசக்கிக்கொண்டு அவள் லட்டினை தொட்டுப்பார்க்க…
“எடுத்து சாப்பிடு கேர்ள்… எல்லாம் ஒர்ஜினல் தான்…” என்று காரினை ஓரிடத்தில் பார்க் செய்த ஈத்தன்… அங்கேயே வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மதிய உணவுகளை அவளுடன் முடித்துக்கொண்டு கிளம்ப…
குறிஞ்சி “ஐயோ இவர் கிட்ட அன்னைக்கு ஏன் எல்லாத்தையும் சொன்னோம்னு தெரியலையே…” என்ற சங்கடத்துடன் அடுத்து என்ன வர போகிறது என்று அமர்ந்துக்கொண்டு வர…
அடுத்து அவளை யாருமற்ற ஒரு வயலுக்குள் அமைந்திருந்த சிவன் கோவிலுக்கு அழைத்துச்சென்று அமர வைத்திருந்தான் ஈத்தன்…
நீண்ட நேரம் கடவுளுடன் உரையாட வேண்டும் என்று கேட்டிருந்தவளுக்கு… அக்கணம் மனமே காலியானது போல் ஒன்றுமில்லாமல் இருந்தது…
அதில் வெறுமனே தன் கண்களை மூடிக்கொண்டிருந்தவள், இறுதியாக, “சாமி ஈத்தன் சார் ரொம்ப நல்லா இருக்கனும்… அவரோட குழந்தையை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுகமா இந்த பூமிக்கு கூட்டிட்டு வந்து அவர் கையில் கொடுத்துடுங்க… அதுபோதும் எனக்கு” என்ற வேண்டுதலுடன் அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு கிளம்பிவிட…
அவளுக்கு ஓய்வெடுக்கவென ஏற்கனவே ராகவ் மூலம் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு அவளுடன் சென்ற ஈத்தன்… மாலை வரை அங்கு ஓய்வெடுத்துக்கொண்டு கிளம்பும் முன்…
மாலை சிற்றுண்டிகளுடன்… சரியாக அளந்து வைத்தது போல் 50ml அளவில் சூடான காஃபியை அவளுக்கு ஊற்றி அவன் தர…
கப்பினுள் எட்டி பார்த்து தான் அது காஃபியெனவே குறிஞ்சியால் அறிந்துக்கொள்ள முடிந்தது…
ஈத்தனோ, “காஃபி எல்லாம் உடம்புக்கு நல்லது இல்லை கேர்ள்… அதுவும் பிரக்ணென்ட் டைமில்… இந்த ஒருதடவை மட்டும் தான்… இனி கேட்கக்கூடாது…” என்று வேறு கூற…
புன்னகையுடன் அதனை எடுத்து “தேங்க்ஸ் சார்…” என்று அருந்தி முடித்த குறிஞ்சியுடன்… ஈத்தன் வீடு நோக்கி கிளம்பி இருந்தான்…
வீட்டிற்கு வந்தப்பிறகும் அவன் சும்மா இருக்கவில்லை…
அவளுக்கு நீளமாக முடி வளர பிரத்யேகமான எண்ணெய், ஷாம்பூ, மாஸ்க், சீப்பு என்று பரிசாக தந்தவன்…
உடன் நெருங்க தொடுத்திருந்த மைசூர் மல்லிப்பூ பந்தினையும் தந்துவிட…
“ஐயோ சார்… என்னால் உங்களுக்கு எவ்ளோ செலவும்… நேர விரயமும்… ஏன் இவ்ளோ… எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு…” என்று மறுக்க…
“எனக்கு இது ஒன்னும்… நேர விரயம் எல்லாம் இல்லை குறிஞ்சி… நீ ரொம்ப முக்கியமான பர்சென் என் வாழ்க்கையில்… உனக்காக செய்றதில் எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் தான்…” என்றவன்… “ஏன் சங்கடம்… உன் பெஸ்ட் ஃபிரண்ட் கிஃப்ட் பண்ணா வாங்க மாட்டயா…” என்று வேறு கேட்க…
அவளுக்கு ஏது பெஸ்ட் ஃபிரண்ட் எல்லாம்…
அதில் தலையை எல்லா பக்கமும் அவள் ஆட்டி வைக்க…
“வா வா… தோசை சாப்பிட போகலாம்…”, என்று ஈத்தன் அவளை இழுத்துச்சென்று இருந்தான்…
“உன் அம்மா செய்யும் அளவுக்கு இது இருக்குமா தெரியலை குறிஞ்சி…” என்றவன்… “அண்ட் கிரீன் சில்லியும் ஒன்னு தான் போட சொல்லி இருந்தேன்… டூ மச் ஸ்பைசி நல்லதுக்கு இல்லை…” என்று அவளுக்கு அவன் இருப்பதிலேயே மொறுவலாக இருக்கும் தோசை எது என்று பார்த்துப் பார்த்து எடுத்து வைத்து… சாம்பாரை ஊற்ற…
கண்ணெல்லாம் கலங்கிவிட்டு இருந்தது குறிஞ்சிக்கு…
பாவம் அந்த ஜப்பான் செஃப் இன்று தான் கற்றுக்கொண்டு அந்த சாம்பாரை வைத்து இருந்தார். ஆனால் அதுவோ ஈத்தன் கைப்பட்டு அவளின் தட்டிற்கு வந்ததிலேயே… அவளின் அம்மா சமைப்பதை விட… சுவை கூடிவிட்டு இருந்தது…
மனமும்… வயிறும்… போதும் போதுமெண்ணும் அளவிற்கு குறிஞ்சிக்கு நிறைந்துப்போக…
இல்லை இன்னும் கொஞ்சம் மனதில் இடம் இருக்கிறது என்று அவளை மொட்டை மாடிக்கு ஈத்தன் அழைத்துச்சென்று இருந்தான்…
________________________________
🪻 அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக