30.7 அந்திப்போர் 🪻😘
அன்று,
அவளை அழைத்துச்செல்ல பிரபுவும் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார்கள்…
குறிஞ்சியின் பொருட்கள் அனைத்தும் வண்டியில் ஏற்றிமுடிய…
குறிஞ்சியின் கரத்தினை பிடித்தப்படி ஹாலில் அமர்ந்திருந்த ஈத்தன்…
“இந்த பதினாறு மாசத்தை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் குறிஞ்சி. ஆசிர்வதிக்க பட்ட நாட்கள் எல்லாமே”, என்றவன்…
“உனக்காக உன் அம்மா காத்திட்டு இருப்பாங்க. அவங்களோட சந்தோஷமா இரு டா…” என்றவன்…
“இந்த வருஷம் கல்யாணமாகிடும் இல்ல உனக்கு?” என்று கேட்க.
உள்ளே தன் பற்களை போட்டு அழுந்த கடித்துக்கொண்டிருந்த குறிஞ்சி… வெளியே சிறு புன்னகையுடன் “ஆம்” என்று தலையாட்ட…
“குட்… குட்…” என்ற ஈத்தன்…
“எனக்கு தெரியும்… நாளைக்கு நீ நல்ல அனுசரனையான மனைவியாகவும்… நல்ல அன்பான தாயாகவும்… பொறுப்பான குடும்ப தலைவியாகவும் ஷைன் பண்ணுவன்னு கேர்ள்…” என்றப்படியே எழுந்துக்கொண்ட ஈத்தன்…
“ஆல் த பெஸ்ட் குறிஞ்சி…” என்று…
ஈஷாவை ஒரு கையில் வைத்தபடியே… மறுக்கையால் அவளை அணைத்து விடைக்கொடுக்க…
இரண்டு மூன்று வினாடிகளே ஆன அவனின் அவ்விணைப்பினுள் அடங்கி இருந்த குறிஞ்சியின் இதயம்… உள்ளுக்குள்ளே வெடித்து சிதறி இருந்தது…
அவளின் கரங்கள், ஈத்தனை அவனின் எலும்புகள் நொருங்கும் வண்ணம் இறுக்கமாகப் அணைக்க துடித்தது…
அவனுள்ளே புதைந்து அவனுக்குள் பிண்ணி பிணைந்து வாழ அவ்வளவு ஆசையாக இருந்தது…
ஆனால் அதில் எதுவுமே நடக்க சாத்தியம் இல்லை…
அவ்வளவு தான் அனைத்தும் முடிந்துவிட்டது.
அவளின் கண்முன்னே அவளின் கனவுகள் எல்லாம் கரைந்து காணாமல் போய்விட்டது…
வெளியே அதை எதையும் காட்டிக்கொள்ளாமல்… சிரித்துக்கொண்டே விடைப்பெற்றுக்கொண்டு இருந்தாள் குறிஞ்சி…
தாய் பாசம் அவன் விஷயத்தில் குன்றிவிட்டதில், குறிஞ்சியையும் ஈத்தன் அதே இடத்தில் வைத்து அன்று அனுப்பிவிட்டு இருந்தான்.
அவளும் அதற்கு தகுந்தப்போல் நடந்துவிட்டு வெளியேறிவிட்டிருக்க…
அனைத்தும் தீர்க்கப்படாமல் நிலுவையில் பல வருடங்களாக நின்றுவிட்டு இருந்தன…
காலம் அதனை அவர்களினால் உண்டான ஈஷாவின் மூலமே தீர்த்துவைக்க முடிவெடுத்து, இப்பொழுது செயல்பட ஆரம்பித்துவிட்டு இருந்தது.
________________________________
இதற்குமேல் அவ்வறையில் இருக்கும் எதையும் எடுத்து பார்க்கும் சக்தி ஈத்தனிடம் இல்லவே இல்லை…
அதில் எழுந்துக்கொண்டவன்…
அந்த அறைக்குள் வந்த வேலையை முடிக்க எண்ணி… குளியலறையில் இருந்து நீரைப்பற்றிக்கொண்டு வெளிவந்தவன்… அங்கு குறிஞ்சி நட்டு வைத்திருந்த ரோஜா செடிகள் அனைத்திற்கும்… தொட்டியில் சிறு துளை ஒன்றை மண்ணிற்குள் போட்டு நீரை ஊற்றியவன்… மீண்டும் அதனை மூடி ஊற்றிய தடத்தினை மறைந்துவிட்டு இருந்தான்… கள்ளிக்கு ஏற்ற கள்வனாக…
அதற்குள் அவன் வரக்கூறியிருந்த ஆட்கள் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டிருக்க… அவர்களை பள்ளிக்கு வெளியிலேயே காத்திருக்க கூறியவன்…
உள்ளே சென்று அனைத்தும் இருந்த இடத்தில் சரியாக இருக்கிறதா என்று சரிப்பார்த்துவிட்டு… கிளம்ப அறைக்கதவை முடிவிட்டவன்…
மனம் பொறுக்காமல் மீண்டும் அந்த அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து இருந்தான்…
அந்த அறையில் அவன் பார்க்காமல் விட்டு வைத்திருந்த… அந்த ஒற்றை பெரிய பெட்டியையும் பார்த்துவிட்டு செல்ல…
பின்னே ஈஷாவிற்கு அத்தனை பொருட்கள் வாங்கி வைத்திருக்கின்றாள் என்றாள் அவனுக்கு என்ன என்று பார்க்க வேண்டாமா…?
அவன் எதிர்ப்பார்த்தது போலவே அவனுக்கான பெட்டி தான் அது. அதில் அவனுக்கும் உடைகள் நிறைய இருந்தன… அதுவும் அவள் பார்த்து பார்த்து தன் கைகளால் பின்னப்பட்ட ஸ்வெட்டர்களுடன்…
ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தவனை… யாரோ மயிலிறகால் வருடுவது போல் இருந்தது…
காயமும் நீயே… மருந்தும் நீயே… என்று கூறுவது போல்… சற்று முன் அவனை அழ வைத்தவள்… இப்போழுது சிரிக்க வைத்து இருந்தாள்…
காதலிக்கபடுவதை விட பெரிய போதை இந்த உலகில் உண்டா?!
அப்பொழுது பெட்டிக்குள் கடைசியாக அவள் மடித்து வைத்திருந்த பழைய காகிதம் ஒன்று ஈத்தன் கண்ணில் விழ…
‘இதுயென்ன… தலை முடி… நகம் மாதிரி எதையும் சேர்த்து வச்சி இருக்காளோ…!’ என்று எண்ணியப்படியே அதனை எடுத்து ஈத்தன் பிரிக்க…
அதற்குள் இருந்த காய்ந்த பூக்கள் கீழே சிதறியிருந்தன…
அது ஈத்தன் அவளுக்கு முதல் முதலாக வாங்கித்தந்திருந்த மைசூர் மல்லி பூக்கள்…
குனிந்து வேக வேகமாக அதனை தன் கரங்களில் பத்திரமாக சேகரித்துக்கொண்ட ஈத்தன்… அதன் மணத்தை தன் நாசியில் நிரப்பியப்படியே…
தன் பார்வையை அந்த காகித்தில் பதிக்க…
குறிஞ்சி… தன் முத்து முத்தான கையெழுத்தினால்…
ஒவ்வொரு வீண்மீனாக தேடிச்செல்கிறேன்…!
என்னவனின் கண்களின் ஒளியைத் தேடி…!
ஒவ்வொரு பறவையாக தேடிச் செல்கிறேன்…!
என்னவனின் மயக்கும் குரலைத் தேடி…!
ஒவ்வொரு இறகாக தேடிச்செல்கிறேன்…!
என்னவனின் மென்மையைத் தேடி…!
ஒவ்வொரு மலராக தேடிச்செல்கிறேன்…!
என்னவனின் வாசத்தைத் தேடி…!
இதில் எதை நான் தேடிச் செல்ல…?
என்னவனின் நான் அறியா இதழ்களின் சுவையை அறிய…!
என்று எழுதி வைத்திருக்க…
முதல்முறை ஈத்தனின் முகம் முழுவதும் வெட்கத்தில் சிவந்திருந்தது…
சத்தியமாக குறிஞ்சி தன்னை குறித்து இப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பாள் என்று அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை…
காதல் என்றால் அனைத்தும் தானே…
பல கவிஞர்கள்… அவ்வளவு கோர்வையாக… உணர்வுகள் சொட்ட சொட்ட எழுதி வைத்திருந்த… காதல் வரிகளில் எல்லாம் விழாதிருந்தவன்… குறிஞ்சியின் சாதாரண அந்த எழுத்துகளில், சலனம் கொள்ள ஆரம்பித்துவிட்டு இருந்தான்…
படபடக்கும் தன் இடது பக்க மார்பை தட்டி தட்டி சமன்படுத்த பார்த்தான் ஈத்தன்…
அவன் இதழ்களில் மந்தகாச புன்னகை ஒன்று நிலையாக நிலைத்துவிட்டு இருக்க…
அவன் மனம் ஒருபக்கம், குறிஞ்சியின் இதழ்கள் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பி…
உடனே அவனின் நினைவடுக்குகளில் அதற்கான தேடலை தொடங்க…
அக்காகிதத்தின் இறுதி பகுதியில் மீண்டும் தன் பார்வையை ஈத்தன் செலுத்தினான்…
இதில் எதை நான் தேடிச் செல்ல…?
என்னவனின் நான் அறியா இதழ்களின் சுவையை அறிய…!
“ஓ மேன்…” என்ற ஈத்தன்…
அதனை அப்படியே மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு… அறையை மூடிவிட்டு… கிளம்பிவிட்டு இருந்தான்…
அன்று இரவு, பள்ளிக்கு வந்து சேர்ந்த குறிஞ்சி, தன் வீட்டினை திறந்துக்கொண்டு உள் நுழைய…
அவளை ஓடிவந்து அணைத்த காற்றை… ஆழமாக இழுத்து சுவாசித்த குறிஞ்சியின் புருவங்கள் சுருங்கி இருந்தன…
காற்றில் மிதந்து வந்த அவளுடைய ஆணவனின் வாசனையை அறிந்து…
அதில் சந்தேகமாக வீட்டினை சுற்றி சுற்றி வந்தவள்… எதையும் கண்டறிய முடியாது… ஒருமுறை தன்னையே குனிந்து முகர்ந்துப்பார்க்க… நேற்று படியில் உருண்ட அவளை ஈத்தன் தூக்கி இருந்ததில்… அவளின் மீது அவனின் வாசனை மீதம் இருந்துவிட்டு இருக்க…
ஈத்தன் தப்பித்துவிட்டு இருந்தான்…
அதேநேரம் அங்கு சென்னையில், ஈஷா தூங்கிக்கொண்டிருக்க… அவளருகே தூங்காமல் அமர்ந்துக்கொண்டிருந்த ஈத்தனின் கரத்தில்…
அவர்களின் திருமண காணொளி ஓடிக்கொண்டிருந்தது…
"Whispers of Petals End, Echoes of Harmony Begins”
அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Awesome.. take care of your health . I will wait for your updates but health is priority.
பதிலளிநீக்குIntha story ah evlo venalum leverage pani podunga . Padika nanga irukom
பதிலளிநீக்கு1st 2,3 epis la konjam diff therijathu ipa back to form vanthutinga. Good job. Keep it up . Awesome writing.
பதிலளிநீக்குஹாய் டியர் 😍 நன்றி 🎉 எந்த எபியில் difference தெரிஞ்சதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா, எனக்கு உதவியாக இருக்கும்? நான் எடிட்டிங் பொழுது கரெக்ஷன் செய்துப்பேன் ❤️ நன்றி டியர் 😍
நீக்குWonderful story ❤️
நீக்குஅச்சோ... என்னன்னு சொல்ல.. எத்தனை பாகம் இருந்தாலும் பத்தலன்னு தான் சொல்ல தோணுது.. ஈத்தன் இதுவரை அவனே அறியாத ஒரு உணர்வை உணர வச்சிட்டா இந்த குறிஞ்சி... இனி...
பதிலளிநீக்குகலக்கிட்டிங்க போங்க....எவ்ளோ அழகு அந்த கவிதை வரிகள்....உடம்ப பாத்துக்கோங்க சிஸ்டர்...இவ்வளோ அழகான காதல்காக நாங்க கண்டிப்பா வெய்ட் பண்ணுவோம்...முடிஞ்சவர அபடேட குடுங்க... டேக்கர்...
பதிலளிநீக்குAwesome. Nice move from ethen. 👍
பதிலளிநீக்குஅருமை
நீக்குஎன்ன சொல்றதுன்னு தெரியலையே. ஐய்யய்யோ தொடர்ந்து 5யூடியும் சிறிதும் நிறுத்தாமல், நடுவில் ஏதோ கேட்ட கணவருக்கு எந்த பதிலும் தராமல் படித்து மு. டித்தேன் . அருமை,அருமை.
பதிலளிநீக்குSoooooo good dear. No words to explain your writing
பதிலளிநீக்குHi sis story super. Please take care of your health. God bless you.... Welcome come to India. Your native place?
பதிலளிநீக்குநன்றி டியர் 😍 விழுப்புரம்.
நீக்குStory spero super sis,
பதிலளிநீக்குWaiting for next ud and take care of your health sis
Verynice ….lovely wordings ….heartouching lines 👌
பதிலளிநீக்குஉண்மையில் ஒரு முழுமையான தாய்மை உணர்வை உணர்திவிடர்கள்
பதிலளிநீக்குyenaku Romba happy aa eruku,, oru unmaiyana life kulla pona maadhiri eruku,,, ethan _solla vaarthaigale Ella....super super ..
பதிலளிநீக்குDeivame.. deivame.... Pppaaahhh ena oru ud... Unga health ah bathrama pathukonga. India vanthutu sollunga kandipa nan paka varen. And story apdiye en heart ah fulfill paniruchu writer. no words to say.. I m speechless... Ipdilam epdi unga kutty brain yosikuthunu nanum en illatha brain ah ketutu iruken. Ans than therila. Awesome story.. wonderstory uds.. ungaloda matha stories mathiri ithuvum heart ah melt pannuthu
பதிலளிநீக்குReally melting
நீக்குAmazing u r really great 👍
பதிலளிநீக்குTake care sister 👍
பதிலளிநீக்குVery very nice and Amazing story 😍
Waiting for next ud 😃
Take care ma safe ah iru ma enjoy the vacation,
பதிலளிநீக்குEn ma un heros ellorum evlo romance ah lover ah boy ah irukanumga Ivana mattum en ma ippadi irukan kadai varai ivanuku love feel varathu Pola iruke ma ippo enna mudivu eduka porano, kurimji un love nee sollala analum avanuku terimji pochi
Superb eppis Lata vanthalum semmaiya irruku really superb ayy eppi
பதிலளிநீக்குAyyo eppi mudinchiduchanu irruku sis...take care but sekiram adutha eppi podunka..story mudinjalum enda mudithunu irrukum pola..nenga ezhuthara vithamnu onnu irrukula athu superb athuthan romba Rasika vaikuthu...eethan pothaikondano nangal ungal writting ku bothaikondom...superb 😍 take care and be healthy sis🥰🥰👏
பதிலளிநீக்குMam really wonderful n nice ovoru line padikkumpothu its so good I like you so much mam 😊 awaiting next ud
பதிலளிநீக்குSwathi Lakshmi ma’am, u r unbelievable. என்ன ஒரு intimacy ( reference about huggggg). Million of words going to be worship for your hands.
பதிலளிநீக்குஉங்களுக்கு நிகர் நீங்கள் தான் சகோதரி... சூப்பர் சூப்பர் சூப்பர்... இது போன்று இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள்.. முதலில் உங்கள் உடல் நிலையை கவனமாக கருத்தில் கொண்டு மருத்துவம் செய்யுங்கள்.. பிறகு நீங்களே எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடுவீர்கள்.. நிறைய நம்பிக்கை உள்ளது உங்கள் மீது..
பதிலளிநீக்குAwesome sis😍😍😍😍each and every line is purely magical and like a poem 😘😘😘😘
பதிலளிநீக்குPlsssssss next UD plsssssss
பதிலளிநீக்குNext ud pls 🙏
பதிலளிநீக்குNext ud plsssssss
பதிலளிநீக்குPlsssssss next UD plsssssss
பதிலளிநீக்குPlsssssss next UD plsssssss
பதிலளிநீக்கு