29.2 அந்திப்போர் 🎼🪻😘
என்ன அவ்வளவு வேகமாக ஈத்தன் செயல்பட்டும் இருவரும் காற்றின் வேகத்தில் தொப்பலாக நனைந்துவிட்டு இருந்தனர்…
அதில் “சீக்கிரம் நீ ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு ஹேர் ட்ரை செய்ய ஸ்டார்ட் பண்ணு கேர்ள்… நான் சூடா குடிக்க டீ கொஞ்சம் ப்ரிபேர் பண்றேன்… குயிக்” என்று அவளின் அறை வாயிலில் அவளை இறக்கிவிட்டுவிட்டு செல்ல…
ஈத்தன் சொன்னப்படியே குளியலறையில் தன் ஈர உடைகளை கழட்டி போட்ட குறிஞ்சிக்கு… அப்பொழுது தான் அணிந்திருப்பது தவிர்த்து… அவளுக்கு தற்போதைக்கு பொருந்தும் அளவில் வேறு உடை இல்லாதது நினைவிற்கு வந்தது…
அதில் “கடவுளே… இந்த வேகாத வெயில் காலத்தில் போயிட்டு, இப்படி தீடீர்னு மழையை அனுப்பி என்னை சோதிக்கலாமா நீங்க…?” என்று நொந்தப்படியே… துண்டினை எடுத்து சுற்றிக்கொண்டு… அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் முடியை உலர்த்த தொடங்கினாள்…
அவளிடம் இருந்த முக்கால்வாசி உடைகள்… அவளுக்கு நான்காம் மாதம் பாதியில் இருந்தே பத்தாமல் போக ஆரம்பித்து… இப்போதைக்கு இரண்டு உடைகள் தான் பத்தும் நிலை வந்து இருந்தது…
ஈத்தனின் கவனிப்பும்… உள்ளே இருக்கும் அவனின் குட்டி லட்டுவின் வேலையும் தான் அதற்கு காரணம்…
எப்பொழுதும் ஐஸ்வர்யா போட்டு சலித்து, இனி வேண்டாம் என்று தரும் உடைகள் தான் அவளுக்கு… அதை தன் அளவிற்கு ஏற்றவாறு நான்கைந்து தையல்களை போட்டு பிடித்து… போட்டுக்கொள்வாள்…
அதில் தான், அந்த தையல்களையெல்லாம் முடிந்தளவு கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துவிட்டு அணிந்து… ஆறாம் மாதம் வரை ஓட்டிவிட்டு இருந்தவளுக்கு…
ஏழாம் மாதம் தொடங்கியது முதலே… முக்கால்வாசி உடைகளுக்கு மேல் மார்பை தாண்டி உள் நுழைவது இல்லை…
எண்ணி வைத்தது போல், இரண்டு தான் சென்றுக்கொண்டு இருந்தது… அதுவே போதும் என்று இருந்தவளுக்கு… இன்று பெரும் சோதனையாகிவிட…
“சார் சொன்னப்போல குளிக்காம இருந்து இருந்தா தப்பிச்சு இருக்கலாம் குறிஞ்சி நீ…” என்று புலம்பியவண்ணம்… தலைமுடியை உலர்த்தி முடித்தவள்… சட்டென்று “ஐடியா…” என்று கழட்டிப்போட்ட உடையை தூக்கிவந்து படுக்கையில் போட்டு… அதனை ஹேர் ட்ரையர் கொண்டே உலர்த்த தொடங்கிவிட…
அதுகாயும் வரையுமா ஈத்தன் டீ தயாரிப்பான்…
உடனேயே “குறிஞ்சி…” என்று வந்து கதவை தட்டிவிட்டான்…
அதில், “சார் டூ மினிட்ஸ்…” “சார் டூ மினிட்ஸ்…” என்று நேரத்தை அவள் கடத்திக்கொண்டே செல்ல…
“என்ன ஆச்சு கேர்ள்… ஓடிவந்ததில் உடம்புக்கு எதுவும் முடியலையா…” என்ற ஈத்தன்…
எப்பொழுதும் அவளின் மின்னல் வேகத்திற்கு பழகி இருந்ததால்… எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்து…
“நான் டோர் ஓப்பன் செய்துட்டு உள்ளே வரவா… ஆர் யூ ஓகே?” என்று கேட்கும் நிலைக்கு வந்துவிட…
“ஐயோ இருங்க சார்…” என்று பதறியவள்… அந்த ஈர உடையுடனே குளியலறைக்குள் புகுந்து… அதையே அணிந்துக்கொண்டு வந்து கதவை திறக்க…
மறுகணமே “ஏன் இன்னும் இந்த வெட் டிரஸ்லயே இருக்க குறிஞ்சி… சொல்லிட்டு தானே போனேன்…” என்று ஈத்தனின் வார்த்தைகள் சற்று கடுமையாக அவளை நோக்கி பாய…
குறிஞ்சிக்கு முதுகு தண்டுவடமெல்லாம் ஜில்லிட்டுவிட்டது…
“சாரி சார்… சாரி… சாயங்காலம் தான் தோயிச்சு போட்டதால்… ட்ரஸ் இன்னும் காயலை... நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… நான் காயவச்சி போட்டுட்டு வரேன்…” என்றவள் பயத்தில் உண்மையையே கூறிவிட…
“வாட்…” என்றவனுக்கு… அவள் வேறுவழியின்றி விளக்கம் தர…
“இதை நீ முன்னாடியே சொல்லி இருக்கனும் இல்ல கேர்ள்…” என்று கடிந்தவன்… ஓடிச்சென்று… தன்னுடைய உடைகளில் சிலதை அள்ளிவந்து அவளிடம் கொடுத்து… “இப்போதைக்கு உடனே இதில் எதையாவது போட்டுக்கோ… நான் உனக்கு வேற வாங்கி தரேன்… ப்ளீஸ் சீக்கிரம்… உனக்கு ஃபீவர் வந்தா… பேபி எப்படி தாங்கும்” என்றுக்கூற…
“இதோ மாத்திடறேன் சார்… சாரி” என்று அவன் கொடுத்த உடைகளுடன் உள்ளே நுழைந்தவளுக்கு… அவ்வளவு சங்கடமாக இருந்தது…
எப்படி ஒரு அந்நிய ஆணின் உடையை அணிவது…
அதற்குள் ஈத்தன் வேறு வெளியிலிருந்து, “சீக்கிரம் வந்து டீ குடி குறிஞ்சி…” என்று அழைக்க…
“ஐயோ கடவுளே…” என்று கண்களை மூடியப்படியே… ஈத்தனின் ஒரு டீஷர்ட் மற்றும் ஒரு ட்ராக் பேண்ட்டை எடுத்து அணிந்து பார்க்க…
அந்த வெண்ணிற சட்டை பாதி முட்டிவரை நீளமாக இருந்தாலும்… ஓரளவுக்கு அளவுப்படி சரியாக இருந்தது… அந்த கருப்பு பேண்ட் தான் பாதம் தாண்டி தரையை பெருக்கியது….
“ராமா…” என்று அதை மடித்துவிட்டுக்கொண்டவள்… ஒரு கருப்பு துப்பட்டாவை தூக்கி… கழுத்தை சுற்றிப்போட்டுக்கொண்டு வந்து கதவை திறக்க…
பென்குயின் போல் இருந்தவளை பார்த்து, வந்த புன்னகையை தன் இதழ்களுக்குள் அடக்க ஈத்தன் பெரும்பாடு பட்டுப்போனான்…
முகத்தில் எதையும் கடுகளவு கூட காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக அவளுடன் அவன் பேச… அவளுக்கோ உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அப்படி கூசியது… அதிலும் மேனியெங்கும் வீசும் அவனின் பிரத்யேகமான பர்ஃபியூம் மணம்… கூச்சத்தில் மூட துடிக்கும் கண்களை திறந்து வைக்கவே படாத பாடு பட்டவள்… டீ கப்பை இறுகப்பிடித்து எப்படியோ அதையெல்லாம் அடக்கிக்கொண்டாள்…
மறுநாள் காலை முதல் வேலையாக அவளிடம் உடையளவு கேட்டுக்கொண்டு… கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கே உரிய… ஒரு மெட்டர்னிட்டி பொட்டிக்கிற்கு சென்றிருந்த ஈத்தன்…
அங்கிருந்த உடைகளில் உடலை உறுத்தாதவாறு இலகுவாக, அதேசமயம் எளிதாக காற்றோட்டமாக இருக்கும் வகையில், காட்டன் மற்றும் டென்சிலில் இருந்த உடைகள் அனைத்திலுமே, Medium to Large அளவில் ஒன்றைப்பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான்…
உடன் கடைப்பெண் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது நல்லது, அது நல்லது என்று கூறி… கடையில் இருக்கும் கிரீம் முதல் செருப்பு வரை தந்தனுப்பியதும் மூன்று கவர்களில் இருந்தன…
‘ஐயோ இத்தனையா…’ என்று குறிஞ்சி முதலில் மலைத்தாலும்… ‘பிரக்னென்சி கிட்டே அத்தனை வாங்கி வந்தவர் தானே இவர்’ என்று தன் ஷாக்கை குறைத்துக்கொள்ள…
ஈத்தனோ இரண்டாம் முறையாக தன் தலைமுடியை இடதுக்கையால் அழுந்த கோதியவண்ணம்… அவள் முன்பு நின்று இருந்தான்…
அன்று, அவன் பாடிய பாடல்களை கேட்க கூறியது போல், இன்று என்ன கூற போகின்றானோ என்று நினைத்த குறிஞ்சி… “என்னாச்சுங்க சார்… என்கிட்ட எதுவும் சொல்லனுமா… தயங்காமல் சொல்லுங்க…” என்று இலகுவாக அவனை உந்த…
அதில் கூற வந்ததை அவனும் கூறிவிட…
கேட்ட குறிஞ்சியின் இதயம் தான் அதிர்ச்சியில் உள்ளே ஃபுட்பால் போல் அங்கும் இங்கும் பறந்துக்கொண்டு இருந்தது…
எத்தனை தடவை தான் அவளும் ‘ஐயோ… ஐயோ…’ என்று சமாளிப்பது…
அதிலும் இதனை…
ஐயோவெற்கெல்லாம் ஐயோவாக இருந்தது…
அதற்குள், “ஐ யம் சோ சாரி” என்று ஈத்தன் தன் மொபைலை வேறு அவள் கையில் கொடுக்க…
அதனை வாங்கியவள்… பட்டென்று அவனுக்கு முதுகை காட்டியப்படி திரும்பி நின்றுக்கொண்டாள்…
சற்றுமுன் அவளிடம் ஈத்தன், “சாரி குறிஞ்சி… நான் இதை பத்தி உன்கிட்ட பேச கூடாது தான்… ஆனா பேசியாக வேண்டிய சூழ்நிலை…” என்றிருந்தவன்…
“பிரக்னென்சி டைம்ல பேபிக்கு ஃபீட் பண்றதுக்காக பிரெஸ்ட் சைஸ் இன்க்ரீஸ் ஆகும்னு ஷாப் லேடி சொன்னாங்க… சோ உனக்கு இன்டிமேட் வியர்ஸ் வாங்கியாகனும் இல்ல…”, என்றவன்…
“நீ எது வேண்டும்னு பார்த்து இதில் செலக்ட் செய்து நீயே பிக்அப் ஆர்டர் போட்டுடு… நான் போயிட்டு வாங்கிட்டு மட்டும் வந்து தந்துடறேன்…” என்று தன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு கூறி இருந்தான்… அவன் சென்றிருந்த கடையின் ஷாப்பிங் ஆப்பை திறந்து கொடுத்து…
இருவரின் நிலையுமே, உப்பை தின்றவன் நீரை அருந்தி தானே ஆக வேண்டும்…. நிலைதான்…
வேறுவழியின்றி அவன் கூறியிருக்க…
அவளும் வேறுவழியின்றி அவன் சொன்னது போல் ஆர்டர் செய்துவிட்டு… அவன் கையில் ஃபோனை கொடுத்துவிட்டு இருந்தாள்…
உடன் அத்தோடு ‘போதும் டா சாமி’ என்று சற்றுநேரம் தூங்க போவதாக கூறி அறைக்குள் அவள் நுழைந்துவிட… ஈத்தனும் ஓடியேவிட்டு இருந்தான்…
_______________________________
🪻 அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக