28.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அதில் மொத்தமாக அதிர்ந்து போன ஈத்தன்… “ஓ மை கோஷ்(gosh)…” என்றப்படி உடனே எழுந்துக்கொள்ள…
திடீரென்று வாந்தி எடுத்ததை விட… அதனை ஈத்தன் மீது எடுத்து வைத்ததில் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது குறிஞ்சிக்கு…
அந்த பயத்தில் “சாரி சார்… நான் தெரியாமல்” என்றுக்கூற வாயை திறந்தவள்… மீண்டும் அவன் மீதே குபுக் குபுக்கென்று வயிற்றில் மீதமிருந்த கடைசி சொட்டு வரை வாந்தியெடுத்து வைத்துவிட…
மேலும் பயந்து விட்டாள் குறிஞ்சி…
அதில் சரசரவென அவளின் கண்கள் இரண்டும் கண்ணீரை கொட்ட ஆரம்பித்துவிட்டன…
எங்கு மீண்டும் அவன் மீது வாந்தி எடுத்துவிடுவோமோ… என்று… தன் துப்பட்டாவினால் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டவள்… அவனிடம் இருந்து தள்ளி நிற்க…
ஏற்கனவே அவளின் செய்கையில் பதறி போய் இருந்த ஈத்தன்… அவள் அழுவதில் மேலும் பதறி விட்டான்…
“ஹேய் என்னமா ஆச்சு… வயிறு எதுவும் வலிக்குதா… வா உடனே ஹாஸ்பிடல் போகலாம்…” என்று அவன் அவளை நெருங்கி கைப்பற்ற வர…
“அச்சோ… கிட்ட வராதிங்க சார்… திரும்ப உங்க மேல வாந்தி எடுத்திட போறேன்…”, என்ற குறிஞ்சிக்கு மீண்டும் குமட்டிக்கொண்டு வர… “ப்ளீஸ்…” என்று பின்னோக்கி நகர்ந்தவளுக்கு… தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்துவிட்டு இருந்தது…
அதில், “ஷ் குறிஞ்சி… இதெல்லாம் ஒரு விஷயமா… என்ன நீ…” என்று அவளை தன்னுடன் சேர்த்துப்பிடித்துக்கொண்ட ஈத்தன்…
உடனேயே மருத்துவமனைக்கு அழைத்து விட்டான்…
இவனின் குரலில் வெளிப்பட்ட பதட்டத்தில்… மருத்துவரையே அவர்கள் லைனில் இணைத்துவிட…
அவரோ, “மார்னிங் சிக்னெஸ் நார்மல் தான் ஈத்தன்… ஈவன் இந்த மாற்றங்கள் எல்லாம் பேபி ரொம்ப ஹெல்தியா இருந்தால் தான் வரும்… பயப்பட வேண்டாம்… வாந்தி எடுத்தாலும் பரவாயில்லைன்னு நீராகாரம் மட்டும் தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க… நான் பதினொரு மணிக்கு அப்பாயிண்மெண்ட் ஷிஃப்ட் பண்ணிடறேன்… பொறுமையா வாங்க… ஹாஸ்பிடலில் பார்க்கலாம்…” என்று வெகு சாதாரணமாக பேசிவிட்டு வைத்துவிட…
ஈத்தனுக்கு தான் இன்னுமே நிலைக்கொள்ளவில்லை…
எந்த கர்ப்பிணி பெண்ணை அவன் இதற்குமுன் உடனிருந்து பார்த்து இருக்கின்றான்…
குறிஞ்சியால் வேறு அதற்குமேல் ஒருவினாடி கூட நிற்க முடியவில்லை… மீண்டும் மீண்டும் குமட்டியவள்… வாடிய கொடியாக மொத்தமாக அவனின் பிடிக்குள் துவண்டுப்போக…
“நல்லவேளை இன்று இந்தியா வந்து சேர்ந்தோம்” என்ற எண்ணத்துடன் அவளை அங்கிருந்த சோஃபாவில் கவனமாக படுக்க வைத்த ஈத்தன்…
ஓடிச்சென்று மின்னல் வேகத்தில் தன் உடைகளை மொத்தமாக கழட்டி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு… வேறு உடைக்கு மாறிக்கொண்டவன்..
ஈரத்துண்டினை கொண்டு வந்து அவள் முகம் துடைத்துவிட்டு…
மருத்துவர் கூறியப்படியே, நீரினை ஸ்பூனின் மூலம் சிறிது சிறிதாக எடுத்து பருக வைக்க…
ஒருசில வினாடிகளிலேயே குடித்த அந்த நான்கு வாய் நீரினையும் குறிஞ்சியின் உடல் வெளியே தள்ளிவிட்டு இருந்தது…
அதில் ஈத்தன் தன் தலையில் கை வைக்காத குறை தான்…
மேகி நூடுல்ஸ் போல் பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டால் போதும்… எளிதாக தயாராகி வந்துவிடுவது போலவே… குழந்தையும் தயாராகிவிடும் என்ற நினைப்பில் இருந்தவனுக்கு… எடுத்த காரியத்தின் வீரியம் அன்று தான் மெல்ல புரிய ஆரம்பித்தது.
வலியில் வயிற்றை அழுந்த பற்றிக்கொண்டு சுருண்டுவிட்ட குறிஞ்சிக்கும் தான்…
நேற்று வரை நன்றாக இருந்த உடல்நலம் திடீரென்று முற்றிலும் மாறிப்போனதில்… மொத்தமாக சோர்ந்துவிட்டு இருந்தாள்…
ஈத்தன் தான் விடாமல் இளநீர்… ஜூஸ்… என்று எதை எதையோ வரவழைத்து அவளுக்கு கொடுத்து பார்த்தவன்… ஒருக்கட்டத்தில் ஓய்ந்து… இதன்பிறகு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று எப்படியோ குறிஞ்சியை கிளம்ப வைத்து அவளுடன் மருத்துவமனைக்கு கிளம்பிய ஈத்தன்…
காரினை வாயில் கேட்டினை நோக்கி செலுத்துவதற்குள்… குறிஞ்சிக்கு மீண்டும்… அதுவும் பயங்கரமாக குமட்டிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டது… அதில் எங்கு வாய் வழியாகவே குழந்தை வெளிவந்துவிடுமோ என்று பதறி காரினை அப்படியே நிறுத்திவிட்டிருந்த ஈத்தன்…
அப்பொழுது தான்… அங்கு அருகிலேயே அவர்களின் தோட்டத்தில் மலர்ந்திருந்த… சிகப்பு ரோஜாக்கள் பலவற்றை பறித்து பூங்கொத்துப்போல் கட்டி… குறிஞ்சியிடம் கொடுத்தவன்…
“இதை ஸ்மெல் பண்ணிட்டே இரு கேர்ள்… கொஞ்சம் பெட்டரா இருக்கும்… மைல்ட் ஸ்மெல் தான்…” என்றவன்… “ஐ யம் சோ சாரி, கேர்ள்… என்னால் உனக்கு எவ்ளோ கஷ்டம்… இந்தளவுக்கு இருக்கும்னு எனக்கு தெரியாது…” என்றப்படியே… எப்பொழுதும் தன் பாக்கெட்டில் இருக்கும்… அவன் உபயோகிக்கும் பிரத்யேக பர்ஃபியூம் நிரம்பிய மிக சிறிய குப்பியை எடுத்து… அந்த பூக்களின் மேல் லேசாக அடித்துவிட…
அதனை மெல்ல ஆழ்ந்து சுவாசித்த குறிஞ்சிக்கு… ஈத்தன் சொன்னதாலா இல்லை இயற்கையிலேவா என்று தெரியாது… சற்று உடல் தேவலாம் போல் இருந்தது…
ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து பார்த்துவிட்டே காரினை எடுத்தவன்… ஒருவழியாக மருத்துவமனையை சென்று அடைய… காலையில் இருந்தே அவர்களுக்காக அங்கு காத்திருந்த ராகவ் அவர்களை பத்திரமாக உள்ளே அழைத்துச்சென்றான்…
குறிஞ்சியை பரிசோதித்துப்பார்த்த மருத்துவர்… குழந்தை நன்றாக இருப்பதாக கூறி… ஈத்தனுக்கு ஸ்கேன் மூலம் மானிட்டரில் குழந்தையை காட்டியவர்… குழந்தையின் இதய துடிப்பையும் கேட்க வைக்க…
காலையில் இருந்து அவனின் உள்ளம் முழுவதும் நிறைந்திருந்த பதட்டம் அப்படியே வடிந்துவிட்டு இருந்தது…
உமையாளுக்காக என்று ஆரம்பித்த குழந்தை விஷயம்… பிறகு அவனுக்காக என்று எப்படியோ குறிஞ்சியால் உருமாறி…
இன்று உண்மையிலேயே உயிர்பெற்று… கண் முன் திரையில் ஒரு இன்ச் அளவில் “லப் டப்… லப் டப்…” என்று துடித்துக்கொண்டு இருக்க…
“மை பேபி…” என்றவனின் உடலில் இருந்த ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்து எழுந்து நின்றுக்கொண்டன…
மருத்துவரின் அனுமதியுடன் தன் தொலைபேசியில் அக்காட்சியினை பத்திரமாக பதிவு செய்துக்கொண்டான் ஈத்தன்…
அதனை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சியின் இதழ்களில் அத்தனை சோர்வையும் தாண்டி ஒரு நிறைவான புன்னகை…
தான் நல்லவன் ஒருவனின் குழந்தையை சுமப்பதிலும்… தன் வயிற்றில் இருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு நல்ல ஒரு எதிர்காலமும், வளரும் சூழலும் கிடைக்க இருப்பதிலும்…
வேறென்ன எதிர்பார்த்துவிட போகிறது அவளின் உள்ளம்… ஒரு பெண்ணாகவும்… தாயாகவும்…
அன்று மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்வதற்குள், “தேங்க் யூ சோ மச் கேர்ள்… தேங்க் யூ சோ மச்… I am grateful forever” என்று ஆயிரம் முறைக்கு மேல் அவளுக்கு நன்றிக்கூறிவிட்டு இருந்த ஈத்தன்…
வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் மருத்துவர் கொடுத்திருந்த வாந்தியை நிறுத்தும் மாத்திரையை குறிஞ்சியை போட வைத்து… சிறு இடைவெளிக்கு பிறகு… அவளுக்கு மதிய உணவினை கொடுக்க… குறிஞ்சியோ சாதம் வாசனைக்கே போட்ட மாத்திரையையும் சேர்த்து வாந்தி எடுத்துவைத்து இருந்தாள்…
அதன் பிறகென்ன ஈத்தனுக்கு ஒரே வசந்த காலம் தான்…
அமெரிக்காவில் இருந்து எப்பொழுது நம் தந்தை வருவான் என்று அவனுக்காகவே வழி மீது விழி வைத்து குறிஞ்சியின் வயிற்றினுள் காத்திருந்த அவனின் குட்டி லட்டு… உள்ளிருந்தப்படியே வரிசையாக அவனுக்கு கொடுத்த வேலைகளில்… ஈத்தன் தனக்கு டிப்ரெஷன் என்று ஒன்று இருந்ததையே மறந்து… முழுநேர குறிஞ்சியின் சேவகனாகவே மாறிவிட்டு இருந்தான்…
அதிலும் ஒரே வாரத்தில் எலும்பும் தோளுமாக மாறிவிட்டவளை பார்த்தே, தானும் எடை குறைந்துவிட்டு இருந்தவன்…
அவளுக்கு எது ஒத்துக்கொள்கிறது… எந்த வாசனை எல்லாம் ஒவ்வாமையாக இருக்கிறது… என்று அவள் உடனே இருந்து கண்டறிந்து… பெரிய லிஸ்டே தயாரித்து…
முடிவில் அவளுக்கு தான் குடிக்கும் பால் எதுவும் கலக்காத இயற்கையான பூக்கள் மற்றும் பழங்களின் டீக்களை கொடுத்து பழக்கியவன்…
அதேப்போல் அவன் பெரும்பாலும் உண்ணும், பெரிதாக எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்க்காத Indo American உணவுகளையே அவளுக்கும் கொடுத்து பார்க்க… அதிசயமாக குறிஞ்சியின் வயிறு அதனை ஏற்றுக்கொண்டு இருந்தது…
அதில் உள்ளுக்குள் ஈத்தனுக்கு, தன் குழந்தைக்கு தனக்கு பிடித்தமானது மட்டும் தான் பிடிக்கும் போலவே என்ற மகிழ்ச்சி கலந்த பெருமிதம் வேறு…
அதிலும், தோட்டத்தில் இருந்த மொத்த ரோஜா செடிகளையும் தொட்டியில் மாற்றி அவள் அறையினுள் நிரப்பிவிட்டு இருந்தவன்… படுக்கையில் தலையணைக்கு அருகில் கூட மலர் கொத்துக்களை வைத்து… காலையில் எழுந்ததும் குறிஞ்சிக்கு வந்தே தீரும் உமட்டலை கூட வெற்றிகரமாக நிறுத்திவிட்டு இருந்தான்…
________________________________
இதில் பிறந்ததில் இருந்தே தேவையில்லாத ஆணியாகவே வாழ்ந்துவிட்டிருந்த குறிஞ்சிக்கு… ஈத்தனின் இந்த அதீத அக்கறை கவனிப்புகளில் எல்லாம்…. ஆரம்பம் முதலே அவ்வளவு சங்கடம்…
அதில்,
‘நான் செய்துக்கறேன் சார்…’
‘நான் பார்த்துக்கறேன் சார்…’
‘நீங்க போயிட்டு ஏன் இதெல்லாம்…’
‘உங்களுக்கு ஏன் வீண் சிரமம்…’
என்று அவள் பாட்டுக்கும் ஒருப்பக்கம் தடுத்துக்கொண்டு தான் இருப்பாள்…
அவன் தான் எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டான்…
“என்னோட பேபியை சுமக்கும் உனக்கு… நான் செய்யாமல் வேற யார் செய்வா கேர்ள்… இது என்னோட கடமை… ஃபிரியா இரு” என்று அவளை அடக்கிவிடுவான்…
ஒருகட்டத்திற்கு மேல் அவனின் உதவிகளை குறிஞ்சியின் மனமும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட… ஈத்தனின் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத தூய அன்பில் மொத்தமாக நனைய ஆரம்பித்துவிட்டு இருந்தாள்…
அதிலும் அவனின் அந்த தொடுகைகள்…
ஒருநாளும் அவளின் சதையை அறியும் வகையில் இருந்தது இல்லை…
அவ்வளவு மென்மையாக இருக்கும்…
அவள் பணியில் இருந்த மருத்துவமனையில், முழுகாமல் இருக்கும் மனைவியினை அழைத்து வரும் பல கணவன்மார்களே… அங்கு பணியில் இருக்கும் செவிலியர்களை(அவளுடன் சேர்த்தே) இச்சை பார்வை பார்ப்பதை எல்லாம் பார்த்து இருந்தவளுக்கு… ஈத்தனின் கண்ணியமான அணுகுமுறையும்… தப்பி தவறிக்கூட எல்லைகள் கடக்காத பேச்சுகளும்… அவ்வளவு பிடித்து இருந்தது…
அதிலும் அந்த ரோஜா செடிகளையும்… ரோஜாக்களையும் அவன் பார்த்துக்கொள்ளும் பாங்கையும்… வருடி கொடுப்பதையும்… அப்படி ரசித்து பார்ப்பாள்…
தந்தை என்ற பெயரில் ஒரு பொறுக்கியையும், மாமா என்ற பெயரில் ஒரு ஓநாய்யையுமே பார்த்து வளர்ந்திருந்தவளுக்கு… அதே ஆண் இனத்தை சேர்ந்த ஈத்தன் மிக மிக வித்தியாசமாக தெரிந்ததில் ஏற்கனவே கவரப்பட்டிருந்த குறிஞ்சி… இயற்கையான உந்துதலின் பேரில் அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்கி மனதினுள் சேமிக்க ஆரம்பித்துவிட…
தனக்கே தெரியாமல் மெல்ல தன்னை இழக்க ஆரம்பித்து இருந்தாள்…
அப்படியானவளை மேலும் தன்னிலை இழுக்க செய்யவென்றே… ஒருநாள் அவளிடம் வந்த ஈத்தன்…
“மியூசிக் கேட்கிறது பேபிக்கு ரொம்ப நல்லதாம் குறிஞ்சி”, என்றவன்…
“இதில் எல்லா சிங்கரோட ஃபீல் குட் சாங்ஸும்… தனித்தனி ப்ளே லிஸ்ட்டா போட்டு இருக்கேன்…”, என்று அவளிடம் புதிதாக வாங்கியிருந்த ஒரு உயர்தர மியூசிக் ப்ளேயரை தந்தவன்…
என்றும் இல்லாத வகையில், தன் தலைமுடியை இடதுக்கையால் கோதியவண்ணம் அவளை பார்த்து சிரிக்க…
குறிஞ்சிக்கு ஒன்றும் புரியவில்லை…
இருந்தாலும், என்னவென்று அவனின் முகத்தையே சிறு புன்னகையுடன் அவள் பார்த்துக்கொண்டிருக்க…
அவனோ, “ஐ நோ கேர்ள்… என் வாய்ஸ் உனக்கு ஃபேவரைட் இல்லைன்னு… ஆனால் என் பேபிக்கு என்னோட குரல் மனதில் பதிய… என் பாடல்களையும் கொஞ்சம் கேட்கறியா… ப்ளீஸ்…”, என்று அவளிடம் கண்களை சுருக்கி கேட்டு இருந்தான்…
பின்னே இதுவரை ஈத்தனை பார்த்தவர்களில்… அவனுடைய பாடல்களை பற்றி பேசாத ஓரே ஆளாக குறிஞ்சி இருக்கும் போது… அவளுக்கு தன்னுடைய குரல் பெரிதாக பிடிக்காது போல என்ற எண்ணத்திற்கு அவன் வந்ததில் தப்பில்லையே…
ஆனால் அவனுக்கு தெரியாது, அன்று அவன் கேட்ட நாள் தொடங்கி… இன்று வரை… அவனுடைய பாடல்களை மட்டுமே குறிஞ்சி கேட்டுக்கொண்டு இருக்கின்றாள் என்பது…
இன்று, அந்த தகவலைகளை அவனுக்கு கூறவென்றே… குறிஞ்சியின் அறைக்குள் அழகான சிறிய அலமாரி ஒன்று அவன் முன்னால் நின்றுக்கொண்டிருந்தது…
ஈத்தன் பாடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களின் ஒர்ஜினல் சிடிகள், ஒன்றுவிடாமல், வருடங்கள் வாரியாக வரிசையாக ஒருபக்கம் அடுக்கப்பட்டிருக்க...
மறுபக்கம், அவனின் இன்றுவரையிலான அனைத்து இசைவிழாக்களின் வீடியோக்களும்… ஆல்பம் பாடல்களும் அடுக்கப்பட்டிருந்தன…
உடன், அதெல்லாம் மகுடமாக பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அவளுக்கு அவன் வாங்கிக்கொடுத்திருந்த அந்த மியூசிக் பிளேயரும்!
________________________________
🪻 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Super sis, very very nice and interesting sis ❤️❤️❤️
பதிலளிநீக்குEthan ku ini dan love varuma ah nu parkanum, love feel illada hero na athu ethan dan
பதிலளிநீக்குஅற்புதம்❤❤❤
பதிலளிநீக்குSema feel.. good caring 💕😍 last update la baby sick nu u said .. now she is good uh
பதிலளிநீக்குWriter ud ku waiting panna vechu en pregnancy ah nyabaga paduthitenga. Nanum kurinji mathiri than mrng sickness and ethu saptalum kudichalum vomit panitu irunthen. En hubby um ipdi bayanthu poi hsptl kotitu poi doctor athelam pregnancy la nadakarathu than nu sollra varaikum avar tension la ye iruntharu. Samar ku ipothan ena Avan panitu irukan avanoda oru aasai evlo periya visayam nu purinju irukum la. Ana samar ku yen kurinji mela love feel varave ila
பதிலளிநீக்கு1 week wait pannirukkom so innum oru 2 ud kidaikkuma waiting & Intha ud nice n interesting 👍
பதிலளிநீக்குஉண்மையான அன்பு
பதிலளிநீக்குSuperrrrrr
பதிலளிநீக்குVery nice...
பதிலளிநீக்கு1 week waitpannadhu romba disappointed aa erundhuchi.....so seekiram next update kudunga pls
பதிலளிநீக்குNext UD plsssssss
பதிலளிநீக்குWaitingggg next ud
பதிலளிநீக்குPlsssssss next UD
பதிலளிநீக்கு