29.5 அந்திப்போர் 🪻😘📽️
குறிஞ்சிக்கு, மாதம் கூடக்கூட, குழந்தையின் அளவிற்கு ஏற்ப கர்ப்பப்பை விரிவடைந்துக்கொண்டே செல்வதில்… இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உணவுப்பை சுருங்கிவிட…கொஞ்சம் சாப்பிட்டாலே கழுத்துவரை உணவு இருப்பது போல் இருந்தது…
அதில் அசதியாக இருந்தாலும்… சாப்பிட்டதும் உடனே படுக்க முடிவதில்லை…
அதிலும் வீட்டிலும் ஒரு வேலையும் அவளுக்கு இல்லையே….
அதில் இரவு உணவிற்கு பிறகு கையுடன் மாடிக்கு ஈத்தனுடன் சென்றுவிடுவாள்…
இன்றும் அவ்வாறே சென்று…
நிலாவையும், நக்ஷத்திரங்களையும், தூரத்தில் தெரியும் கடற்கரையையும் பார்த்தப்படியே ஒரு அரைமணி நேரம் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டு இருக்க…
ஈத்தன் அங்கிருந்த ரோஜா செடிகளில் இருந்த காய்ந்த இலைகளை அப்புறப்படுத்திக்கொண்டும்… ட்ரிம் செய்துக்கொண்டும் இருந்தான்…
ஒருவழியாக குறிஞ்சி, அங்கிருந்த நீச்சல் குளத்திற்கு அருகே போட்டிருந்த சாய்வு நாற்காலியில்… நடந்தது போதும் என்று அப்படியே மூச்சுவாங்க ஓய்வாக அமர்ந்துவிட…
“குறிஞ்சி மலருக்கு இந்த ஈத்தனோட கடைசி பரிசு…” என்று ஈத்தன் தன் பாக்கெட்டில் இருந்த கொலுகளை எடுத்து அவளிடம் நீட்டி இருந்தான்…
குறிஞ்சி கேட்டது போலவே அதிக சலங்கை வைத்த கொலுசுகள்…
ஆனால் அவள் வெள்ளியில் ஆசைப்பட்டிருக்க… ஈத்தனோ தங்கத்தில் வாங்கி வந்து இருந்தான்…
ஒவ்வொன்றும் ஐந்தாறு பவுனுக்கு குறையாமல் இருக்கும் என்பது பார்க்கும் போதே தெரிய…
தன் வாயினை இருக்கைகளாலும் மூடிக்கொண்ட குறிஞ்சி…
“வேண்டாம்…”, என்று தலையாட்ட…
“ஷ்… போட்டுக்கோ கேர்ள்… பேபிக்கும் இந்த சவுண்ட் நல்லதாம்…” என்று அவன் ஆட்டிக்காட்ட…
வெள்ளி போல் ஜல் ஜல் என்று கேட்காது… சற்று சன்னமாக மென் மெட்டாக அதன் ஓசை கேட்க…
தந்தைக்கு ஆதரவாக உள்ளே குட்டி லட்டு உருண்டோடினாள்…
அதில் தன் வயிற்றில் கையினை வைத்து பிடித்துக்கொண்ட குறிஞ்சி…
“தங்கத்தை காலில் எல்லாம் போட கூடாதுன்னு சொல்லுவாங்க சார்…” என்றாள் தயக்கத்துடன்…
அதற்கு “வாட்…” என்ற ஈத்தன்… “தங்கத்தை விட மதிப்பு மிக்கவ குறிஞ்சி நீ… தங்கம் வெறும் மெட்டல்(உலோகம்) தான்… அதுக்கூட நீ உன்னை கம்பேர் பண்ணலாமா…?” என்றவன்…
“போட்டுக்கோ கேர்ள்… உனக்கு பிடிக்கும் இல்ல” என்று அவள் கைப்பிடித்து அவன் கொடுக்க…
அப்பொழுதும் அதில் இருந்து வந்த சத்தத்திற்கு… வயிற்றில் குழந்தையின் அசைவு தெரிந்தது…
அதில் கிளம்பும் போது… தாலியுடன் சேர்த்து இதனையும் கழட்டி கொடுத்துவிட்டு சென்றுவிடலாம் என்று நினைத்த குறிஞ்சி….
“இதுக்கு மேல தயவுசெஞ்சு எதுவும் வாங்காதிங்க சார்… கண்டிப்பா நான் வாங்கிக்க மாட்டேன்…”, என்றப்படியே கொலுசினை வாங்கி தன் காலில் போட முற்பட…
அவளை முழுதாக குனிய விடாது வயிறு இடித்தது…
அதில், “ஹேய்… ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்…” என்ற ஈத்தன்…
“வயிற்றை போட்டு அழுத்தாதே கேர்ள்” என்றப்படியே…
அவளின் கால்களுக்கு அருகே தன் ஒற்றை காலை மட்டும் மடக்கி அமர்ந்தவன்…
“கொடு நான் போட்டு விடறேன்…” என்று அவள் கையில் இருந்த கொலுசினை வாங்கிக்கொண்டு… அவளின் பாதத்தினை பற்ற…
“ஐயோ சார்… நீங்க போயிட்டு என் காலை தொட்டுட்டு… கடவுளே…” என்று வேகமாக தன் காலினை இழுத்துக்கொண்ட குறிஞ்சி… எழுந்தே நின்றுவிட…
“ஷ் குறிஞ்சி… என்ன இது… எதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ற… கை மாதிரி தான் காலும்… அதென்ன கால்லை போயிட்டுன்னு… ஸ்டோன் ஏஜ் மாதிரி பேசிட்டு இருக்க… இப்படி எல்லாம் ஆர்தோ டாக்டர்ஸ் எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சா யோசிச்சு பாரு” என்ற ஈத்தன்…
“ஒழுங்கா முன்னாடி மாதிரியே உட்காரு கேர்ள்” என்று அவளை அமர வைத்தவன்…
அவளின் ஒவ்வொரு பாதமாக பற்றி… கொலுசினை போட்டுவிட…
எப்பொழுதும் போல் அவனின் விரசம் சிறிதும் இல்லாத தொடுகையில்…பெண் மனம் கரைந்துக்கொண்டு இருக்க…
திருகாணியை போட்டு, கழண்டு விடாமல் இருக்க… நன்கு அழுத்தி திருக ஆரம்பித்த ஈத்தனின் இதயத்தில்… இப்பொழுது குறிஞ்சியின் பாதம் அழுத்தமாக பதிந்திருந்தது…
அதுவரையுமே அவன் முகத்தை தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சி… திடீரென்று தன் பாதம் புதிதாக உணரும் கதகதப்பில் கவனம் சிதறி… பார்வையை அவன் முகத்தில் இருந்து கீழே இறக்கி இருந்தவள்…
அதிர்ந்து, “அச்சோ சார்… சாரி சாரி…”, என்று… தன் பாதத்தினை மடக்கி அவனின் இதயத்தில் இருந்து விலக்கப்பார்க்க…
ஈத்தனும் அப்பொழுது தான் அதை கவனித்து இருந்தான்…
அதில், உடனே அவனே அவளின் பாதத்தினை தன் மடிக்கு மாற்றிவிட்டான்…
இருந்தும் குறிஞ்சிக்கு குற்ற உணர்வு குறையாமல், “சாரி… சாரி…” என்று கூறிக்கொண்டே இருக்க…
“ஹே, இட்ஸ் ஆல்ரைட்! நாட் அ பிக் டீல். நோ வொர்ரீஸ்”, என்றவன்… இறுதியாக, “என்னோட பேபியை சுமக்கும் உன்னோட கால் என் இதயத்தின் மேல் படலாம் கேர்ள்… தப்பில்லை… தப்பில்லை… கூல்… கூல்…”, என்றுக்கூறி… அவளை பார்த்து தன் கண்களை சிமிட்டி புன்னகைக்க…
குறிஞ்சியின் இதயம் சட்டென்று தன் துடிப்பையே நிறுத்தி இருந்தது…
என்ன மாதிரியான வார்த்தைகளை சட்டென்று கூறிவிட்டான்…
ஒவ்வொரு மனைவியும், தன் கணவனிடம் எதிர்பார்க்கும் வார்த்தைகள்…
ஒவ்வொரு கணவனும், தன் மனைவியிடம் மட்டுமே கூறும் வார்த்தைகளும்…
எங்கிருந்தோ வந்த ஒரு புதுதென்றல் குறிஞ்சியின் முகத்தை வருடிவிட்டு செல்ல…
சட்டென்று சிலிர்த்தவளின்…
முகம்… மெல்ல… மிக மெல்ல… மலரத்தொடங்கிவிட்டிருந்தது…
உடன் ஈத்தனின் தொடுகைகள்… அவளை வசமிழக்க செய்ய…
குறிஞ்சியின் இதயம் மெல்ல நழுவி… கீழிறங்கி… மிக அருகில் தெரிந்த… அந்த நீல நிற கண்களுக்குள் சென்று மறைந்துவிட்டு இருந்தது…
மீண்டும் ஒரு தென்றல் காற்று அவளை சற்று அழுத்தமாக வருடிவிட்டு செல்ல…
குறிஞ்சிக்கு தான் செய்துக்கொண்டிருக்கும் செயல் அப்பொழுது தான் புரிந்தது…
அதில், வெலவெலத்துப்போய்… தன் பார்வையை திருப்பிக்கொண்டவள்…
பத்துவினாடிகள் கூட தாக்குபிடிக்கவில்லை…
மீண்டும் தன்னை மீறி அவனை பார்க்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள்…
அவனோ, நிலாவை விட பளிச்சென்ற தன் பளிங்கு முகத்தில்… காற்றில் அடங்காது அலைப்பாய்ந்து வந்து விழும் முன்னெற்றி முடியை ஒற்றை கையால் கோதிய வண்ணம்…
“பர்ஃபெக்ட்…” என்று அவளின் பாதத்தை மெல்ல தரையிறக்கிவிட்டு எழுந்து நின்று அவளை பார்க்க…
குறிஞ்சியும் அடிவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் உந்துதலில்… தன் கழுத்தை மொத்தமாக நிமிர்த்தி அவனையே தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்…
அவளின் திடீரென்ற முக மாற்றத்தை ஈத்தனும் அக்கணம் கவனித்துவிட்டு இருந்தான்… ஆனால் அதை தவறாக கணித்துவிட்டு இருந்தான்…
“என்ன குறிஞ்சி மலர் ரொம்ப ஹேப்பி போலவே… முகம் டாலடிக்குது… சாப்பிட்ட லட்டு எல்லாம் கன்னத்திலேயே செட்டில் ஆகிடுச்சா…?”, என்று அவளிடம் புதிதாக வந்திருந்த குண்டு கன்னத்தில் மெல்ல தட்டி… குறும்பாக கேட்டவன்…
“வாங்க மேடம் தூங்க போகலாம்” என்று அவள் கரத்தினை பற்றி எழுப்பியும் விட…
குறிஞ்சிக்கு அப்படியே அவன் கரத்தினை பற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தது…
விடாமல் அறை வரையுமே பற்றிக்கொண்டும் வந்து இருந்தாள்…
“குறிஞ்சி பூ மட்டும் தான் கேர்ள் உன் விஷ் லிஸ்ட்ல மிஸ்ஸிங்… சாரி இந்த இயர் பூக்காதுன்னு சொல்லிட்டாங்க…”, என்று வருத்தமாக கூறியவன்… “இந்த அபூர்வமான குறிஞ்சி மலரை பார்க்க, எப்ப அந்த குறிஞ்சி மலருக்கு அதிர்ஷ்டம் அமையும் தெரியலை…” என்று புன்னகையுடன் கூறியவன்…
“குட் நைட் கேர்ள்… மார்னிங் பார்க்கலாம்…” என்றுவிட்டு சென்ற பிறகும்… சற்று முன் ஈத்தனிடம் உணர்ந்த அந்த இதம் குறிஞ்சியிடம் இருந்து மறையவில்லை…
முன்பு சாதாரணமாக தெரிந்தது எல்லாம் இப்போது வேறாக தெரிந்தது…
தங்க கொலுசுகள் மெல்ல சத்தமிட… நடந்துச்சென்று படுக்கையில் விழுந்தவள்… முதல் முறையாக காதல் கனவுகளை காண ஆரம்பித்து இருந்தாள்…
இன்னும் ஈத்தன் அவளின் இமைகளுக்குள் சிரித்துக்கொண்டு இருந்தான்…
அவனின் கதகதப்பை உணர்ந்த பாதங்கள் குறுகுறுத்தன…
கைகளும் தான்…
அதில், அருகில் இருந்த தலையணையை இறுக்கமாக அணைத்துக்கொண்டு நீண்ட நேரம் கிடந்தவள்…
தன்னுள் தோன்றும் உணர்வுகளை தாங்க முடியாது… எழுந்து… அறைக்குள் மலர்ந்து கிடந்த… ரோஜாக்களை வருடினாள்… அதுவும் அவனை நினைவுபடுத்தி அவளின் உணர்வுகளை எக்கச்சக்கமாக அதிகரித்துவிட…
பால்கனியில் சென்று அமர்ந்தவள்… துணைக்கு பாட்டை போட்டு ஹெட்செட்டில் கேட்க ஆரம்பித்தாள்… கவனமாக ஈத்தனின் பாடல்களை தவிர்த்து தான்…
இருந்தும்…
மழையோடு நான் கரைந்ததுமில்லை!
வெயிலோடு நான் உருகியதில்லை!
பாறை போல் என்னுள்ளம்
இருந்ததடா!
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே!
பொல்லாத இளம்காதல் பூத்ததடா!
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே!
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே!
மனம் விரும்புதே உன்னை உன்னை!
என்று யார் பாடினாலும்… ஈத்தன் தான் அந்த வரிகளின் மூலம் அவளின் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடினான்…
இதற்காக தானே அரசாங்கத்தில் அத்தனை சட்டங்கள் போட்டு இருந்தார்கள்… திருமணம் ஆகாத பெண்… வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொடுக்கக்கூடாது என்று… அது அந்த குழந்தைக்காக மட்டும் இல்லையே… அந்த பெண்ணின் உணர்வுகளுக்காகவும் தானே…
ஏற்கனவே நிச்சயமானவள் என்று கூறி… அவளே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டு விட்டாளே…
வேலி எப்படி பயிரினை மேயும்…
ஈத்தன் எப்படி அவனின் எல்லைகளை கடந்து அவளை அடைவான்…
மாற்றான் தோட்டத்து மல்லிகையை முகர்ந்து பார்க்கும் அளவுக்கு ஒன்றும் இச்சை கொண்டவன் அவன் இல்லையே…
என்ன… மருத்துவர் கூறியிருந்தப்படி… அவளின் சின்ன சின்ன விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி கொடுத்திருந்தவன்…
அன்று அவளுள் மிக பெரிய ஆசையை அறியாமலேயே விதைத்து விட்டு இருந்தான்…
அன்று, அவன் அறிந்து விதைத்ததோ… அறியாமல் விதைத்ததோ… இன்று முழுதாக வளர்ந்து… தோட்டக்காரன் அவன் முன்பு, அறுவடைக்கு தயாராக நின்று இருந்தது…
-தொடரும்...
________________________________
அடுத்த அத்தியாயம் லிங்க் கீழே
Wowwww... Super episode ♥️♥️♥️♥️♥️
பதிலளிநீக்குஇப்படி ஒருத்தன் தாங்கினா எந்த பொண்ணு தான் மயங்க மாட்டா.. என்ன அவளோட மயக்கம் அவனுக்கு புரியவில்லைங்கறதோட அது தெரியவே இல்லைங்கறது தான் வேதனை..
பதிலளிநீக்குVery very nice
பதிலளிநீக்குKurimji um enna pannuva ipdi ellam husband kuda parthuka matan ana kuzhandai kaga parthukurane love varalana dan adisayam,
பதிலளிநீக்குகண்ணீர் வருகின்றது . உண்மையான அன்பு கண்டு.
பதிலளிநீக்குEnakku indha episode romba heart melting aga irundhadhu dear . Nanume emotionala connect aagitten sweet of you ❤️ ♥️ 😘 💕 💖
பதிலளிநீக்குSuperb 💖💖 it's very interesting 😍
பதிலளிநீக்குAvaloda feelings eppo than avanukku puriyum n avanukku aval mela entha feelingsum vanthathu illaiya mam
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குVery nice eppidi sis 🥰
பதிலளிநீக்குWriter sema ponga.. itha itha itha than Nan ethirpathen.. samar ku kurinji oda love therinju again kurinji ya mrg pannikanum. Avanga happy ah irukanum. Ana athuku munadi inum neriya past ah reveal panna vendi iruke. Yen kurinji Inga kodaikanal vantha nu therinjukanum.. ana ipo pota intha 5 uds um super super supero super... Samar paiyan avanga appa amma love ah paathu veruthu irunthavan inimel kurinji ya neriya love pannanum. Avanuku ipove kurinji mela love feel start agiruchunu nenaikaren
பதிலளிநீக்குMind-blowing mam. No words to describe your story creating talent
பதிலளிநீக்குMam awesome story lines,l love this hero character and fentastic story move.supero super👌👌👌👌👌💖
பதிலளிநீக்குஅவ ஏற்கனவே நிச்சயமான பொண்ணு என்பது ஈத்தன் மனசில பதினஞ்சு போயிட்டுது
பதிலளிநீக்குஆவலுடன் அடுத்த அத்தியாயத்திற்காக
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்குSis eppo next UD plsssssss
பதிலளிநீக்குடபுள் தமமாக்கா கிடைக்குமா? ஆவலுடன்
பதிலளிநீக்குUd plss.. Waiting
பதிலளிநீக்குWe have disappointed....next uds poda romba late panringa...we need double dhamaka..pls
பதிலளிநீக்குPlsssssss next UD
பதிலளிநீக்குPls waiting next UD
பதிலளிநீக்குWaiting long time for next UD plsssssss
பதிலளிநீக்குWait panni veruthupochi ☹️..... please seekiram next uds kudunga
பதிலளிநீக்கு