33. அந்திப்போர் 🪻😘📽️

அத்தியாயம் -33

தன் மொபைலை எடுத்த ஈத்தன், ஈஷா கூறிய பிரச்சனையை, என்னவென்று கூகுளில் தேடி பார்த்துவிட்டு…

அந்த இரவே, அவளை அழைத்துக்கொண்டு, இரவு நேர அவசர மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டு இருந்தான்.

செல்லும் வழியெல்லாம் ‘மருத்துவமனை வேண்டாம்’ என்று அடம் பிடித்த ஈஷாவை…

“ஒன்னும் இல்லை பேபி… ப்ரீ டீன் கேர்ள்ஸுக்கு இது நார்மல்னு தான் போட்டு இருக்காங்க டா… நாம ஜஸ்ட் டாக்டரை பார்த்து… பெயின் போக மெடிசன் மட்டும் வாங்கிட்டு வந்துடலாம்…” என்று அவளை சமாதானம் செய்து, எப்படியோ மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டவனால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது போனது…

உள்ளே அவளை பரிசோதனைக்கு என்று அழைத்துச்சென்ற பெண் மருத்துவர்… என்னவென்று பார்க்க முற்பட…

‘தொடவே கூடாது… எனக்கு பிடிக்கவில்லை… நோ…’ என்று கத்தி ஒரே அழுகை ஆர்பாட்டம் ஈஷா…

குழந்தையாக இருந்த போது கூட அவள் இந்தளவிற்கு அழுதது கிடையாது. அனைத்திற்கும் சேர்த்து வைத்து அன்று அவள் அழுது தீர்த்துவிட்டாள்…

பெரிதாக மக்களுடன் தொடர்பு இல்லாது, அவளை சிறு கூட்டிற்குள் வைத்தே ஈத்தன் வளர்த்துவிட்டு இருக்க… அவளால் யாரையும் ஒரு எல்லைக்கு மேல் அக்கூட்டிற்குள் சட்டென்று அனுமதிக்க முடியவில்லை…

அதுவும் ஈத்தனிடம் சொல்லவே கூச்சப்பட்டவள்… எப்படி முன் பின் தெரியாத மருத்துவரிடம் தன்னை காண்பிப்பாள்…

பூப்பெய்திய தினம் கூட அவள் அப்படி தான் இருந்தாள். ஆனால் குறிஞ்சி பேசும் விதத்தில் நயமாக பேசி, பொறுமைகாத்து அவளை தன் வசம் கொண்டு வந்துவிட்டு இருந்தாள். தாய் போல் அனைவரும் அவளிடம் அவளுக்கு ஏற்றப்படி பொறுமையாக, அனுசரணையுடன் நடந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே…

ஈஷா மறுக்கும் விதத்தை பார்த்த மருத்துவர் வேறு, நிச்சயம் அவளுக்கு பரிசோதனை செய்தே ஆக வேண்டும் என்று கூறிவிட…

ஈத்தன் அவன் செய்த தவறுக்கு எல்லாம், அந்த இரவே தண்டனை மொத்தத்தையும் அனுபவிக்கும் நிலையாகி போனது…

அந்தளவிற்கு ஈஷா முரடு பிடித்தாள். 

நம்மூராக இருந்து இருந்தால், நாலு அடி வைத்து, நாலு திட்டு திட்டி என்று பிள்ளையை வழிக்கு கொண்டு வந்து இருப்பார்கள். 

ஆனால் அதையெல்லாம் எங்கிருந்து ஈத்தன் செய்வான். அதுவும் ஈஷாவை போய்.

அவளை கொஞ்சியும், கெஞ்சியும், அவளுக்கு சூழ்நிலையை புரிய வைத்து. அந்த மருத்துவருடன் மீண்டும் அவளை அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

ஒருவழியாக பரிசோதனையை முடித்து வெளிவந்த மருத்துவர், “எதுவும் பெரிதாக பிரச்சனை இல்லை. பதின்ம வயதில் வரும் சில ஹார்மோன் மாற்றங்களும், மார்பக வளர்ச்சியும் தான் அவளின் வலிக்கு காரணம்” என்று ஏற்கனவே அவன் கூகுளில் பார்த்ததை தான் கூறியவர்.

மேலும், ‘வீட்டில் யாரும் பெண்கள் இல்லையா’ என்று விசாரித்துவிட்டு, பள்ளிக்கும் அவள் செல்வதில்லை என்ற தகவலையும் கேட்டுக்கொண்டு…

வலிப்போக இந்த தடவை மட்டும் மாத்திரை தருவதாக கூறியவர்…

இனி வலி வராமல் இருக்க, எப்படியான உள்ளாடைகள்(supportive inner wears) அவள் அணிய வேண்டும், என்னென்ன விளையாட்டுகள் விளையாடும் போது அவள் கவனமாக இருக்க வேண்டும்,

உடன் உணவில் எதையெல்லாம் அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது, எதையெல்லாம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்தையும் ஈத்தனிடம் தெளிவாக கூறி… ஈஷாவிற்கும் தைரியம் அளித்து அனுப்பி வைத்தார்…

காரில் திரும்பி வரும் பொழுதே தூங்கிவிட்டிருந்த ஈஷாவை, தூக்கம் கலையாமல் தூக்கிவந்து அறையில் படுக்க வைத்திருந்த ஈத்தன்.

அந்த இரவு முழுவதுமே ஒரு பொட்டு கூட தூங்கவில்லை.

மனதிற்குள் அவ்வளவு ஓடிக்கொண்டு இருந்தது.

அரசாங்க விதிமுறைகளை மீறி சிங்கிள் பேரண்ட்டாக குழந்தை பெற்று கொண்டது, எவ்வளவு பெரிய தவறு என்று, இன்று கண் முன்பு கண்டு, படாத பாடு பட்டு உணர்ந்துக்கொண்டு இருந்தவனுக்கு எப்படி தூக்கம் வரும்.

ஏற்கனவே இதனால் குறிஞ்சியின் மனநிலையில் ஏற்பட்டுவிட்டிருந்த மாற்றத்தையும் வேறு பார்த்து இருந்தானே. 

இப்பொழுது அவ்வரிசையில் மகளும் வந்து நின்றுவிட…

இரண்டும் சேர்ந்து அவனை அப்படி பயமுறுத்திவிட்டன.

வாழ்க்கையில் அவன் தெரிந்தே செய்த ஒரே தவறு…

நிச்சயம் அது தவறாகாது என்று அவன் நினைத்திருக்க…

கனவில் கூட அவன் நினைத்திறாத விளைவுகளை அது கொண்டுவந்து சேர்த்துவிட்டு இருந்தது…

மறுநாள் காலை, மருந்துகளின் பலனாக, நன்றாக உறங்கி, வலி எதுவும் இல்லாமல், புன்னகை முகத்துடன் எழுந்தமர்ந்த ஈஷாவை பார்த்த பிறகு தான், ஈத்தன் சற்று தெளிந்து, நிம்மதியாக மூச்சையே ஒழுங்காக விட்டான்.

இதற்கு மேலும், குறிஞ்சி குறித்து ஈஷாவிடம் பேச, நேரம் காலம் பார்த்து காத்திருப்பது, அவசியமற்றது என்று இரவே ஈத்தன் முடிவெடுத்துவிட்டு இருந்தான்…

அவன் தாமதிக்கும் இடைவெளியில், அவன் பிள்ளைக்கு ‘அன்னை இல்லை’ என்ற ஏக்கம் மீண்டும் வந்துவிட்டால்… கூடவே கூடாது…

அவளின் உடல்நலத்தினை விசாரித்தவன்…

காலை உணவிற்கு பிறகு அவளுடன் ரோஜா தோட்டத்திற்கு சென்று அமர்ந்துவிட்டு இருந்தான்…

ஈத்தனின் முகம் பார்த்த ஈஷா…

“பேபி இப்போ நான் ரொம்ப நல்லா ஃபீல் பண்றேன். நீங்க சொன்ன மாதிரி என்னோட பெயின் எல்லாம் போயிடுச்சு” என்று தன்னை நினைத்து ஈத்தன் வருத்தப்படுகின்றானோ என்று கூறியவள். “சாரி பேபி. உங்களுக்கு நிறைய கஷ்டம் கொடுத்துட்டேன். இனி உங்கக்கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன். பிராமிஸ்” என்றாள் அவனுடைய கைப்பற்றி.

அதில், “பேபிக்கு உடம்பு சரியானதே டாடிக்கு போதும் டா… சாரி எல்லாம் எதுக்கு… ஈஷா பேபிக்கு நான் செய்யாமல் யார் செய்வாங்க…” என்று மென் புன்னகையுடன் அவளின் கையில் தட்டிக்கொடுத்தவனுக்கு… உள்ளே இதயம் வாய் வழியாக வெளியே வந்துவிடும் அளவிற்கு துடித்துக்கொண்டு இருந்தது.

ஒருசில வினாடிகள் தன்னை நிலைப்படுத்த எடுத்துக்கொண்டவன்…

“டாடி, உங்கக்கிட்ட ஒரு விஷயம் ஷேர் பண்ண போறேன் பேபி. அதுக்கு தான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றவன்…

“நேத்து கேட்டீங்க இல்ல பேபி. அந்த ஏஞ்சல் குறிஞ்சி ஆன்ட்டி மாதிரி இருப்பாங்களான்னு?”, என்று ஈத்தன் கேட்க.

“எஸ் பேபி” என்றாள் ஈஷா வேகமாக தலையை ஆட்டி.

“அப்ப அந்த ஏஞ்சலை பார்த்துட்டு சொல்லுங்க பேபி… எப்படி இருக்காங்கன்னு” என்ற ஈத்தன்…

தன் சிறிய வகை பர்சனல் Mac லாப்டாப்டை திறந்து அவளிடம் காட்ட ஆரம்பித்து இருந்தான்.

ஆதாரத்திற்காக நிறைய புகைப்படங்கள், திருமணம் மட்டுமில்லாது, குறிஞ்சி முதல் மாதம் கர்ப்பம் தரித்ததில் இருந்து அவள் கிளம்புவதற்கு முன்பு வரை எடுத்து வைத்திருந்தான் ஈத்தன்.

அதில், ஈஷாவை குறிஞ்சி தூக்கி வைத்திருப்பது போல் கூட நிறைய புகைப்படங்கள் இருக்க…

அதைப்பார்த்து, “பேபிஈஈஈஈ…” என்று கத்திய ஈஷா… 

“நான் கேட்ட மாதிரியே ஏஞ்சல், குறிஞ்சி ஆன்ட்டி மாதிரி தான் இருக்காங்க…” என்றாள் உடல் முழுவதும் நடுங்க.

அவளின் விரல்கள் லேப்டாப் ஸ்கீரினை தொட்டு… தன் தாயினை உணர முற்பட்டுக்கொண்டு இருக்க…

அவளை தன்னுடன் சேர்த்து நெருக்கமாக அணைத்துக்கொண்ட ஈத்தன்…

“ஏஞ்சல் குறிஞ்சி ஆன்ட்டி மாதிரி இல்லை பேபி. ஏஞ்சலே குறிஞ்சி ஆன்ட்டி தான். உன்னோட அம்மா குறிஞ்சி தான்”, என்றவன்… அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன்பு அவசர அவசரமாக “நேத்து ஏஞ்சலை தேடி, நம்ம வீட்டிக்கு கூட்டிட்டு வரலாம் சொன்னீங்க இல்ல பேபி. இப்ப குறிஞ்சியை போயிட்டு நாம கூட்டிட்டு வந்துடலாமா” என்று கேட்டு முடித்துவிட்டான்.

ஈஷாவுக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.

நடப்பதில் அப்படி குழம்பிப் போனாள்.

சிறிது நேரம் லேப் டாப்பையே பார்த்துக்கொண்டு இருந்தவள்…

ஈத்தன் மீது அமைதியாக படுத்து விட்டாள்.

அவளுக்கான நேரத்தை கொடுத்து ஈத்தன் அமைதி காக்க…

மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்…

“அப்ப சித்ரலேகா கிரானி மாதிரியே… குறிஞ்சி ஆன்ட்டியும் உங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டாங்களா பேபி… எனக்கும் ஸ்டெப் டாடி எல்லாம்…” என்று கேட்க வந்தவள் வாயை அவசரமாக “நோ பேபி” என்று மூடிய ஈத்தன்…

“நான் உங்கக்கிட்ட சொல்லி இருந்தேன் இல்ல பேபி. ஏஞ்சல் கிட்ட நான் பேபி மட்டும் தான் கேட்டேன்னு. அதனால் தான் டா குறிஞ்சி நம்மக்கூட இல்லை. டாடியோட மிஸ்டேக் தான் அது. நான் நம்ம கூடவே இருக்க சொல்லி இருக்கனும்.” என்றவன்…

குறிஞ்சிக்கு அவனையும், ஈஷாவையும் எவ்வளவு பிடிக்கும் என்று விளக்கி... 

“குறிஞ்சி உனக்கு மட்டும் தான் பேபி அம்மா. வேற யாருக்கும் கிடையாது. நம்மளை நினைச்சப்படியே தான் அங்க தனியா இருக்காங்க” என்று ஓரளவிற்கு உண்மை என்னவோ அதையே அவளுக்கு கூறினான்.

அதில் ஈஷா, “அப்போ குறிஞ்சி ஆன்ட்டி உங்களை லவ் பண்றாங்களா பேபி” என்று கேட்க.

மகள் முன்பு முகம் மாறாது காக்க பெரும் போராட்டமாகிப்போனது ஈத்தனுக்கு…

உள்ளுக்குள் பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்தியவன்…

“உங்களையும் தான் பேபி லவ் பண்றாங்க” என்றான்.

அதில், மகிழ்ச்சியாக புன்னகைத்த ஈஷா… பல கேள்வி கணைகளை கொண்டு வந்து ஈத்தன் மீது செலுத்த…

அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறிக்கொண்டு இருந்தான்.

அதன் பலனாக அன்று மாலையே குறிஞ்சி ஆன்ட்டி… அம்மாவாக மாறி போயிருந்தாள் ஈஷாவின் பேச்சில்…

மியூசிக் கன்சர்ட் முடியவும் இரண்டு பேரும் கொடைக்கானலுக்கு செல்வது என்று முடிவானது…

அந்த இடைப்பட்ட காலத்தில் குறிஞ்சியை குறித்து நிறைய விஷயங்களை ஈஷாவிடம் ஈத்தன் பகிர்ந்துக்கொண்டே இருந்தான்.

அப்பொழுது தான் குறிஞ்சியுடன் அவளால் எளிதாக ஒன்ற முடியும் என்பதால்.

அனைத்தையும் ஆர்வமாக கேட்டுக்கொண்ட ஈஷாவும்… குறிஞ்சியை பார்க்க போகும் கணத்திற்காக காத்துக்கொண்டிருக்க…

அங்கு குறிஞ்சியோ, அவளுடைய பழைய வாழ்க்கைக்கே திரும்பிவிட்டு இருந்தாள்.

ஈத்தன் மீது இருந்த வருத்தங்களை எல்லாம், அவன் மீது அவள் வைத்திருக்கும் அன்பு தூக்கிச்சென்று விட…

ஈத்தன் தன்னை தேடி வராததே நல்லது. வந்து என்ன ஆனது என்று அவன் விசாரித்தால், அவனிடம் என்னவென்று கூறி தப்பிப்பாள். ஒன்றா, இரண்டா அவள் செய்து வைத்திருந்தது எல்லாம். நினைக்கும் பொழுதே தேகம் தூக்கிப்போட்டது அவளுக்கு.

வெறும் தாலிக்கே அவளை துரோகி என்ற ஈத்தன்… மற்றவை எல்லாம் தெரிய வந்தால் அவளை பற்றி என்ன நினைப்பான்… ‘ச்சீ…’ என்று விடுவானோ என்று தோன்ற…

“ஹையோ… கடவுளே… திரும்ப சார் கண்ணில் மட்டும் தப்பி தவறிக்கூட நான் பட்டுடவே கூடாது… அவருக்கு என்னை பத்தி எதுவும் ஞாபகம் படுத்தி விட்டுடாதிங்க… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று வேண்டிக்கொண்டவள்…

நிஜங்கள் அவளை தேடி வரப்போவதை அறியாமல்…

நிஜம் தனக்கு வேண்டவே வேண்டாம் என்று, நினைவுகளுடனே குடும்பம் நடத்திக்கொண்டு இருந்தாள்.
________________________________

அன்று மாலை ஐந்தரை மணிக்கு ஷிஃப்ட் முடிய… கான்வென்ட்டில் இருந்து வெளிவந்த குறிஞ்சி…

வானம் லேசாக தூரல் போடுவதை பார்த்து…

தன் கைப்பையில் இருந்த குடையை எடுத்து விரித்தவள்…

குளிர்ந்த காற்றில் சிலிர்க்கும் தேகத்தை, முந்தானையால் மூடியப்படியே, காதில் இருக்கும் ஹெட் செட்டை சரிசெய்துவிட்டு…

மெல்ல குவார்ட்ஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…

மண் வாசனை ஒருபுறம் மனதை மயக்க…

மறுபுறம் காதில் ஸ்வர்ணலதா…

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

என்று சூழ்நிலைக்கு தக்கவாறு பாடி அவளை மயக்கிக்கொண்டு இருந்தார்.

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற

வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை

நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது

குறிஞ்சியின் இதழ்கள் தானாக அவளுடைய நாயகனை நினைத்து மலர்ந்து ஒளிவீச…

சுற்றுப்புறம் எதையும் பார்க்காமல், காதில் ஒலிக்கும் வரிகளில் மட்டுமே தன் முழு கவனத்தையும் வைத்தப்படியே, 

வளைவில் திரும்பியவளின் கால்கள், அடுத்த அடியினை எடுத்து வைக்க மறந்து அப்படியே உறைந்து நின்றிருந்தன… அவளின் நாசி, நுகர்ந்த மணத்தை அவளின் மூளைக்கு செய்தியாக அனுப்பியதில்…

நிமிர்ந்தவளின் கண்கள் அவசர அவசரமாக சுற்றி தேட… அவளுக்கு எதிர்ப்புறம் இருந்த சாலை ஓரம் சில அடி தூரத்தில் நின்றிருந்தான் ஈத்தன்… 

அவளை பார்த்தப்படி தான்…

ஏற்கனவே மலர்ந்திருந்த குறிஞ்சியின் இதழ்கள், ஈத்தனை எதிர்பாராத விதமாக பார்த்ததில், மேலும் விரிந்துக் கொள்ள…

ஈத்தனின் இதழ்களிலும் அதன் பிரதிபலிப்பு…

“ஹாய் கேர்ள்” என்று புன்னகையுடன் கையசைத்தவன்…

சாலையின் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு… சாலையை கடந்து அவளை நோக்கி வர…

மெல்ல குறிஞ்சியின் இதழ்களில் இருந்த புன்னகை மறைந்து… அவளின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய ஆரம்பித்தன…

“ஐயோ! சார் எதுக்கு என்னை தேடி வந்திருக்கார்…” என்று நினைத்தப்படியே…

இரண்டு மூன்று அடிகளில் அவளை நெருங்க போகும் ஈத்தனை ஒருப்பார்வை பார்த்தவள்…

மறுவினாடி செய்ய ஆரம்பித்ததை பார்த்து… இப்பொழுது அதிர்வது ஈத்தனின் முறையாகிப்போனது…

பின்னே அவ்வளவு வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்துவிட்டு இருந்தாள் குறிஞ்சி…

“வாட்...”, என்று என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒருகணம் அப்படியே நின்றுவிட்ட ஈத்தன்…

பட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டு…

“குறிஞ்சி…”

“குறிஞ்சி மலர்…”

என்று சற்று தன் குரலை உயர்த்தி அவளை அழைத்து நிறுத்தப்பார்த்தான்…

அதில் அவளோ, கையில் இருந்த குடையை கூட தூக்கிப்போட்டுவிட்டு மேலும் வேகமாக ஓடி அந்த தெருவில் இருந்தே மறைந்துவிட…

சுற்றி, தன் பார்வையை ஒருமுறை ஓடவிட்ட ஈத்தன்… 

மக்கள் யாரும் அங்கில்லை என்பதை உறுதிசெய்த மறுகணம், 
கொஞ்சமும் யோசிக்காது, அவள் ஓடிய பக்கம், அவனும் வெட்கம் விட்டு ஓடத்தொடங்கினான்.

ஒருசில வினாடிகளிலேயே அவளை நெருங்கிவிட்டான்.

“ஹேய் குறிஞ்சி… ஏன் இப்படி ஓடுற… ஸ்டாப் கேர்ள்… உன்னை பார்க்க தான் வந்தோம்…”

என்று அவன் குரல் பின்புறமிருந்து கேட்க..

குறிஞ்சி மேலும் தன் வேகத்தை கூட்டி விட்டாள்…

அதில் “காட்… குறிஞ்சி… விழுந்துட போற…” என்ற ஈத்தனின் பேச்சினை கேட்க குறிஞ்சி அங்கு இல்லை.

அடுத்த தெருவில் நுழைந்துவிட்டு இருந்தாள்.

அதில் அவனும் அவளை போலவே ‘யார் பார்த்தால் என்ன?’ என்று குடையை தூக்கிப்போட்டுவிட்டு வேகமாக ஓட ஆரம்பித்துவிட்டு இருந்தான்…

🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

  1. Inda loose ponna enna nu solradu ethan eduku vandan nu ketu irukalame nee enga odinalum ini vida matan kurimji

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா28 மே, 2025 அன்று 2:37 AM

    Next part sis very interesting

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா28 மே, 2025 அன்று 2:41 AM

    Ayyayyo!!!!! Kurinji!!! Enna pannikittu irukkira
    Wennai thirandu varumpoadu thazhiya udaicha kadhaiya irukku poazhakka theriyadha pillaya irukkale

    பதிலளிநீக்கு
  4. Paithiyama iva... Vadivel mathiriye keka thonuthe.. intha lusu kurinji ethuku ipdi panra. Paavam samar.. Ava enathuku odaranu theriyamale pinnadi oditu irukan

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா28 மே, 2025 அன்று 3:56 AM

    அடேய் என்னடா ஓட்டப்பந்தயம் நடத்தறீங்க...

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா28 மே, 2025 அன்று 5:33 AM

    Waiting Waiting next UD plsssssss ore aarvamairuku romba

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா28 மே, 2025 அன்று 5:48 AM

    பைத்தியமே puduchudum அடுத்து என்னன்னு தெரியாம please next UD plsssssss

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா28 மே, 2025 அன்று 7:11 AM

    Waiting for next ud pls

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா28 மே, 2025 அன்று 7:56 AM

    Mental ennanu kekama odura paru ha ha ha...evale keduthuruva pola ellathaium.. superb eppis sis🥰🥰

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா28 மே, 2025 அன்று 9:19 AM

    Hahaha 🤣🤣 யார் ஜெயிச்சான்னு தெரியலையே 🤩🤣🤣

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா28 மே, 2025 அன்று 10:28 AM

    Wowww sema waiting for next

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா29 மே, 2025 அன்று 5:49 AM

    Waiting for next update

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா29 மே, 2025 அன்று 7:07 AM

    Plsssssss next UD plsssssss

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா29 மே, 2025 அன்று 7:39 PM

    Plsssssss next UD plsssssss

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா30 மே, 2025 அன்று 12:26 AM

    பைத்தியமே புடிச்சது ud வருமா வராதா please 🙏 😢 😭

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா30 மே, 2025 அன்று 10:00 AM

    Health conscious kurinji morning running poga maranthuttaanga athaan ippo theru theruva odi practice panraanga

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா31 மே, 2025 அன்று 9:12 AM

    Plsssssss update mattum late pannadhinga......thailai valikudhu......next yenna aachu..... please yenaku heart attack varadhukulla next ud potudunga..... please please

    பதிலளிநீக்கு
  18. Ponga sis ud ku waipanikite irukom ipadi kakka vakirinkale please ud podunga

    பதிலளிநீக்கு
  19. Sis romba hurt aagudhu ....pls next ud yeppodhaa varum? ......neenga epdilam panna mattingale...ungakitta pudichadhey unga punctuality dhaa...☹️..but eppo update late aagudhu...seekiram kudunga please

    பதிலளிநீக்கு
  20. Ada pongappa saita open panni pathu pathu veruthu potchu please next UD plsssssss

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story