27.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘
திருமண பதிவுகளையும் அன்றே முடித்துவிட்டு… ஏற்கனவே தகுந்த பாதுகாப்புகளுடன் ஏற்பாடு செய்து வைத்திருந்த தனி வீட்டிற்கு குறிஞ்சியுடன் அன்றே ஈத்தன் வந்துவிட்டு இருந்தான்… வாழ்வில் முதல்முறை மற்றவரின் வீட்டில் தங்கப்போவதிலும், அன்னையை முதல்முறை பிரிந்து வந்ததிலும், செய்யப்போகும் பெரிய காரியத்திலும், கூறிய ஏகப்பட்ட பொய்களை நினைத்தும், குறிஞ்சியின் மனதினுள் வெவ்வேறான அலைகள் மாறி மாறி அடிக்க… அவளின் முகத்தில் அலங்காரத்தினை தாண்டி தெரிந்த சோர்விலும், கலக்கத்திலும் பதறி அவளிடம் வந்த ஈத்தன்… “என்ன ஆச்சு குறிஞ்சி… முகம் ஏன் டல்லாகிடுச்சு… பிடிக்கலையா மா…?” என்று தொடர்ந்து கேட்க… அவனின் முகம் பார்த்த குறிஞ்சி, ‘ஹையோ… ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தவருக்கு, நல்லது செய்கிறோம் என்ற பெயரில், நாம் இன்னும் அழுத்தத்தை கொடுக்கின்றோமே…’ என்று உடனடியாக தன் முகத்தை மாற்றிக்கொண்டவள்… “அச்சோ சார்… எனக்கு ஒன்னுமில்லை… இந்த நகையெல்லாம் தான் ரொம்ப ரொம்ப வெயிட்டா இருக்குங்க சார்… கழுத்தையே அசைக்க முடியலை… அதான்” என்று கூற… அதில், “ஊப்ஸ்…” என்று நிம்மதி மூச்சினை விட்ட ஈத்தன்… “இந்த ரூம் உன்னோடது குறிஞ்சி, சீக்கிர...