இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

22.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

கார்டினை வாங்கி பார்த்த ஐஸ்வர்யாவின் முகம்… சுவிட்ச் போட்டது போல்… அப்படியே பூத்துவிட்டது… “வாவ்… வாங்கிட்டயா… இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னடி… உன் அம்மா மாதிரி உனக்கும் கேடா என்ன…” என்றப்படியே ஈத்தனின் கையெழுத்தில் தன் இதழ்களை பதித்தவள்… “அச்சோ என்னால நம்பவே முடியலயே…” என்று ஈத்தனின் கையெழுத்தை வருடி பார்த்து… உடனே அதனுடன் செல்ஃபி ஒன்றை எடுத்து… காலேஜ் வாட்ஸ் அப் குருப்பில் அதனை ஷேர் செய்துவிட்டு… அனைத்து சோஷியல் மீடியாவிலும் உள்ள அவளின் கணக்குகளில் பதிவு செய்துக்கொண்டே வர…  அதற்குள் அவளின் தோழிகள் மாறி மாறி அவளுக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டு இருந்தனர்… அது ஒரு தனி உலகம்… குறிஞ்சி அறியாத உலகம்… ‘ஒரு கையெழுத்தில் போயிட்டு என்ன தான் இருக்கோ… அட போங்கடா’ என்று நினைத்தவள்… அதற்காக சென்று… தான் வாங்கிய மண்டக படியை நினைத்தப்படியே சாந்தினியை சென்று பார்க்க ஆரம்பித்து விட்டாள்… என்ன தான் அவன் கண்டித்து அனுப்பி இருந்தும்… அவளின் கண்முன் ஈத்தனின் தூக்கிய கன்னத்து எலும்பு வந்து வந்து அவளை ஒருவழி செய்தது…  முன்பும் ஈத்தன் ஒன்றும் பெரிதாக 6 பேக்… 8 பேக்… என்று எதுவும் வைத்துக்கொண்...

22.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻🎼

🔴🌸ஹாய் டியர்ஸ்... இன்னைக்கு அத்தியாயம் 22-ல் பாதி தான் போட்டு இருக்கேன்... மீதி டைப் செய்துட்டு இருக்கேன்... சிலர் இன்னும் தூங்காமல் வெயிட் பண்ணதால் டைப் செய்த வரை போட்டு இருக்கேன்🌸🔴 and இன்னொரு முக்கியமான விஷயம் நிறைய பேர் அத்தியாயம் 21 இன்னும் வாசிக்கலை... மிஸ் பண்ணவங்க அதை வாசித்துவிடுங்க... அத்தியாயம் 21 லிங்க் - https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/04/211.html அத்தியாயம் -22 ஈத்தன் வீட்டில் இருந்து, எப்படி மருத்துவனையை சென்று அடைந்தாள் என்று கேட்டால் குறிஞ்சிக்கு தெரியாது… கால் போன போக்கில் எப்படியோ சரியாக சென்று சேர்ந்துவிட்டு இருந்தாள்… இன்னும் நெஞ்சில் தோன்றிய படபடப்பு நிற்கவில்லை… அவ்வளவு அவமானமாக இருந்தது… ‘அம்மாடி… அவ்வளவு கோபம் வரும் மாதிரியா நாம பேசிட்டோம்…’ ‘கடவுளே…’ என்று தன் கண்களை மூடி மூடித்திறந்தாள்… இதற்கே ஈத்தன் அவளை கத்தவோ, திட்டவோயில்லை… ஆனால் அவன் அடித்துவிட்டது போல், உடல் முழுவதும் அவளுக்கு காய்ச்சல் அடித்தது… இருந்தும் ‘அவருக்காக தானே சொன்னோம்… இதில் என்ன தப்பு…’ என்று எங்கோ மூலையில் இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டே தான் இருந்தது… பின்னே ...

🔴My Complete Novel List: Ongoing and Finished

படம்
📚 Ongoing Stories  1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! Free Site Link 📚 Completed Stories  1. உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே! இலவச சைட் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க்(Audio Format) பிரதிலிபி லிங்க்(Ebook) 2. மகிழ்மதியின் அரசன்! அமேசான் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க்(Audio Format) 3. அழகான இராட்சசியே! அடிக்கரும்பாய் இனிக்கிறியே! அமேசான் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க் (Audio Format) புத்தகமாக வாங்கி படிக்க (Call/WhatsApp to பிரியா நிலையம்: +91 94444 62284 ) 4. ஆண் மனதை அழிக்க வந்த சாபம்! அமேசான் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க் (Audio Format) புத்தகமாக வாங்கி படிக்க (Call/WhatsApp to பிரியா நிலையம்: +91 94444 62284 ) 💌 To Contact Me swathinovels@gmail.com   🌐To Follow Me Facebook   WhatsApp YouTube   Instagram   Telegram  

21.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

மறுநாள் காலை, ரவியை வீட்டிற்கு வரக்கூறிய ஈத்தன், அந்த வாரம் மீதமிருந்த ரெக்கார்டிங் அனைத்தையும் உடனே கேன்சல் செய்யக்கூறிவிட்டு… தொடர்ந்து யோகாவில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக்கொண்டவன்… பத்து நாட்கள் கடந்த நிலையில், தன்னுடைய தனிப்பட்ட ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் தனியாக பாடி பார்க்க… அதுவும் தோல்வியே… அதற்குள் மற்ற பட பிரொடியூசர்கள் வேறு அவனுக்கு நெருக்கடி கொடுக்க… என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை… குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்க பழக, கௌன்சிலிங் கூட தினமும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டு இருந்தவனை… அன்று நேரில் பார்த்து பேச என்று ப்ரொடியூசர் வீட்டிற்கே வந்துவிட்டு இருந்தார்… தமிழ் சினிமா உலகில் அவர்களின் ஓம் பிரொடக்ஷனுக்கு நிகரான ஆள் என்றால் அவர் மட்டும் தான்… அன்று அவருடைய படத்திற்கு பாடப்போய் தான்… ஈத்தன் சொதப்பிவிட்டு திரும்பி வந்துவிட்டு இருந்தான்… அவர்களுக்கு ரிலீஸ் நாள் நெருங்க ஆரம்பித்துவிட்டு இருந்ததில்… ஈத்தன் ‘தன்னால் பாடி தர முடியாது’ என்று அட்வான்ஸ் பணத்துடன், அவர்களுக்கு சட்டப்படி அறிக்கை அனுப்பி இருந்தவன்… நஷ்ட ஈடாக என்ன கேட்கிறார்களோ அதை தந்துவிடுவதாகவும் க...

21.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

படம்
அத்தியாயம் -21 "It's okay, Ethan. These things happen. Take your time, and we'll try again” என்ற படத் தயாரிப்பாளர், முகம் தெளியாதிருந்த ஈத்தனை, அவன் கார் வரை வந்து வழியனுப்பி வைக்க… ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து அவனின் கார் வீட்டை நோக்கி புறப்பட்டது… காரில் பின் சீட்டில் அமர்ந்து, தன் தலையை பின்புறம் சாய்த்து, கண்களை அழுந்த மூடிக்கொண்ட ஈத்தனுக்கு, தனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை…  ‘ஏன்…’, என்று நினைக்க நினைக்க அது அதிகம் ஆவது போல் இருக்க… தன் வலது கரத்தை எடுத்து, படபடக்கும் இடது பக்க மார்பின் மீது அழுத்தமாக வைத்தவன்… தன்னை தானே அமைதிப்படுத்த பார்த்தான்… முடியவேயில்லை… முதல் சறுக்கல்… கடந்திருந்த ஐந்து வருடங்களில், தொழில் சார்ந்து, ஒருமுறை கூட அவன் எதிர்கொண்டிராத சறுக்கல்… அவன் சிகரம் தொட்டு ஒருநிலைக்கு வந்தப்பின் இப்பொழுது பார்த்து வந்திருந்ததில் பயங்கர தடுமாற்றம் அவனுக்கு… உமையாள் அம்மையார், மறைந்தப்பின் முதல் இரண்டு வாரங்கள் மட்டுமே ஈத்தன் வீட்டில் அடைந்து இருந்தது எல்லாம். அதற்கே பல ரெக்கார்டிங்கள் அவனுக்கு நிலுவையில் விழுந்துவிட்டு இருந்தன… அதில் தயாரிப்பாளர...

20.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘📽️

ஈசி… ஈசி… ஒன்னுமில்லை… எல்லாம் சரியாகிடும்… ரிலாக்ஸ் கேர்ள்…” என்று அவளுடைய முதுகில் லேசாக அவன் தட்டி கொடுக்க…  மேலும் அழுதாள் அவள்… தன் துக்கங்களை பகிரக்கூட ஆள் இல்லாமல் கிடந்தவளுக்கு… ஈத்தனின் அணைப்பும், வார்த்தைகளும்… அடிவயிற்றில் இருந்து சொல்ல முடியாத உணர்வுகளை கிளப்பி கொண்டு வந்தன… ஆண் பெண் வித்தியாசங்கள் எதுவும் அங்கு இல்லை…   அவனின் அரவணைப்பும், அவளின் அடைக்கலமும் தான் அங்கு இருந்தன… அவளை கொஞ்ச நேரம் அழவிட்டவன்… அதற்கு மேல் முடியாது… “இப்படி அழுதுட்டே இருந்தா உடம்பு என்ன ஆகும் குறிஞ்சி… போதும்… கன்ட்ரோல் பண்ணு” என்று அவளின் முகத்தை பிடித்து நிமிர்த்தினான்… முதல் சந்திப்பு தொடங்கியே, ஏதோ காலேஜில் முதல் வருட ஜூனியரை, கடைசி வருட சீனியர் பார்க்கும் பார்வை தான் அவனுக்கு அவளிடம்… அவனுடைய மார்பளவு உயரத்தில் குட்டையாக இருந்தவள், அப்படி தான் தெரிந்தாள்… அதிலும் அவளின் சிறிய வட்ட முகம், இப்பொழுது கசங்கி காணப்பட்டதில்… அவன் நெஞ்சில் அவ்வளவு இரக்கம் அவளுக்காக சுரந்தது… அழும் குழந்தையை யாரால் அப்படியே பார்த்தும் பார்க்காதவாறு கடக்க முடியும்… எட்டி, அங்கே டிஷ்ஷூ பாக்சில் இருந்து ...

20.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘

அவரும் என்ன ஏது என்று விசாரித்துவிட்டு… “சார் கிட்ட சொல்லாம நீங்களே ஏன்மா இவ்வளவு பெரிய முடிவை எடுத்தீங்க…” என்று கிட்டத்தட்ட திட்ட… மிரண்டுப்போனவள்… “வேற என்ன சார் செய்ய சொல்றீங்க… ஆப்ரேஷன் பண்றதே ரிஸ்க் எடுக்கிறதுன்றாங்களே… அதைவிட இவங்க ஹாஸ்பிட்டல் கட்டுன மொத்த காசையும் எனக்கு பில்லா போட்டு தராங்களே… நான் என்ன செய்றது” என்றாள் அழாத குறையாக. அதற்கு, “அது எதுவா இருந்தாலும் நீங்க சார் கிட்ட சொல்லி இருக்கனும்… இல்லை என்கிட்ட சொல்லி இருக்கனும்… சாருக்குலாம் இவ்ளோ செலவு ஆகும்னு ஏற்கனவே தெரிஞ்சு தான் இருக்கும்… இப்ப உங்களால் நான் தான் திட்டு வாங்க போறேன்… கொஞ்சம் லேட்டா வந்ததில் எவ்வளவு பெரிய பிரச்சனையை எனக்கு இழுத்துவிட்டுட்டீங்க” என்றுவிட்டு சென்றவர்… ஒருசில நிமிடங்களிலேயே அவளிடம் தன் அலைப்பேசியை எடுத்துவந்து ஈத்தன் லைனில் இருப்பதாக கூறியப்படியே நீட்டி இருந்தார்… உடன் தான் சாந்தினியுடன் இருப்பதாக சொல்லி, அவளை வெளியே சென்று பேசிவிட்டு வரக்கூறி அனுப்ப… மருத்துவமனை லாபிக்கு சென்ற குறிஞ்சி, “ஹலோ சார்…” என்றாள் ஃபோனை காதில் வைத்து… அதற்காகவே காத்திருந்த ஈத்தன், “என்ன கேர்ள் செய்து வச்சிருக...

20.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

அத்தியாயம் -20 குறிஞ்சி ஆவலாய் எதிர்பார்த்திருந்த மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டதாக வந்து கூறிய செவிலியர், அதைக் குறித்து கலந்தாலோசிக்க என்று குறிஞ்சியை கான்ஃபரென்ஸ் ஹாலிற்கு அழைத்துச்செல்ல… அங்கு நீள்வட்ட மேஜையை சுற்றி ஐந்து மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள். குறிஞ்சி அமர்ந்ததும், அதிலிருந்த முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரும், நரம்பியல் நிபுணரும், அவளிடம் ஒவ்வொரு ரிப்போர்ட்டாக காட்டி, சாந்தினியின் உடல் இருக்கும் நிலைமையை விளக்க ஆரம்பித்தார்கள்… சாந்தினிக்கு அடிப்பட்டு ஒருவருடம் கடந்து விட்ட நிலையில், முதுகு தண்டுவட செல்களில் ஏகப்பட்டவை பாதிப்படைந்துவிட்டதாக கூறியவர்கள்… மேலும் அதை தொடர விடாமல் தடுக்க, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்… இல்லையெனில் மற்ற உறுப்புகளும் ஒவ்வொன்றாக உணர்வுகளை இழந்து செயலிழந்து விடும்… என்றவர்கள்… அறுவை சிகிச்சை மட்டுமின்றி, முதுகில் இறந்த செல்களை புதுப்பிக்க… அவரின் உடலில் இருந்தே ஸ்டெம் செல்களை, எலும்பு மஜ்ஜை(bone marrow) மற்றும் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, முதுகு தண்டில் செலுத்த வேண்டும்…  அப்படி செய்தால் தான...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates