இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

27.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘

திருமண பதிவுகளையும் அன்றே முடித்துவிட்டு… ஏற்கனவே தகுந்த பாதுகாப்புகளுடன் ஏற்பாடு செய்து வைத்திருந்த தனி வீட்டிற்கு குறிஞ்சியுடன் அன்றே ஈத்தன் வந்துவிட்டு இருந்தான்… வாழ்வில் முதல்முறை மற்றவரின் வீட்டில் தங்கப்போவதிலும், அன்னையை முதல்முறை பிரிந்து வந்ததிலும், செய்யப்போகும் பெரிய காரியத்திலும், கூறிய ஏகப்பட்ட பொய்களை நினைத்தும், குறிஞ்சியின் மனதினுள் வெவ்வேறான அலைகள் மாறி மாறி அடிக்க… அவளின் முகத்தில் அலங்காரத்தினை தாண்டி தெரிந்த சோர்விலும், கலக்கத்திலும் பதறி அவளிடம் வந்த ஈத்தன்… “என்ன ஆச்சு குறிஞ்சி… முகம் ஏன் டல்லாகிடுச்சு… பிடிக்கலையா மா…?” என்று தொடர்ந்து கேட்க… அவனின் முகம் பார்த்த குறிஞ்சி, ‘ஹையோ… ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தவருக்கு, நல்லது செய்கிறோம் என்ற பெயரில், நாம் இன்னும் அழுத்தத்தை கொடுக்கின்றோமே…’ என்று உடனடியாக தன் முகத்தை மாற்றிக்கொண்டவள்… “அச்சோ சார்… எனக்கு ஒன்னுமில்லை… இந்த நகையெல்லாம் தான் ரொம்ப ரொம்ப வெயிட்டா இருக்குங்க சார்… கழுத்தையே அசைக்க முடியலை… அதான்” என்று கூற… அதில், “ஊப்ஸ்…” என்று நிம்மதி மூச்சினை விட்ட ஈத்தன்… “இந்த ரூம் உன்னோடது குறிஞ்சி, சீக்கிர...

27.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

Important Disclaimer* The information provided in this chapter is for general informational purposes only and should not be considered as medical advice. Consult a qualified healthcare professional for personalized advice and treatment. This chapter discusses sensitive and personal topics related to reproductive health and fertility. Reader discretion is advised. This is a work of fiction. Any resemblance to real events, individuals, or circumstances is purely coincidental. The information provided is intended for educational purposes only and should not be used as a substitute for professional medical advice or treatment. அத்தியாயம்-27 இரண்டு பக்கமும் கதவு வைத்து, நடுவில் இரண்டையும் இணைத்து தாழ்ப்பாள் போட்டு பூட்டும் முறைக்கொண்ட… அந்தக்கால வீடு அது… அதில் இரண்டு கதவையும் ஒருசேர திறந்த ஈத்தன்… அவன் உயரத்திற்கு சற்று குனிந்து உள் நுழைந்தவன்…  நேராக போடப்பட்டிருந்த கட்டிலை பார்த்து, “காட்! பெட் ரூம் போலயே இது…” என்ற நினைப்பில் அடுத்து முன்னால் வைக்க சென்ற அடியை அப்படியே நிறுத்தி… தனி...

சங்கீதம் -26.2 🪻🎼😘

ஹே பேபி! ஆர்ட் கேலரி எப்படி இருந்துச்சு டா. என்ஜாய் பண்ணயா?!” என்றான் ஈத்தன்… மகளின் புன்னகை முகம்… ஈத்தனின் முகத்திலும் மின்னல் வேகத்தில் புன்னகையை பரப்பிவிட்டு இருந்தது… “வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ் பேபி” என்றப்படியே அவனை நெருங்கிய ஈஷா, “உங்களுக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் கொண்டு வந்து இருக்கேன். Guess it?” என்றாள்.  அவளின் ஒரு கை மட்டும் முதுகுக்கு பின்புறம் மறைவாக இருக்க… புன்னகையுடன் அவளை பார்த்த ஈத்தன். ஒருசில வினாடிகள் யோசிப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு இருந்துவிட்டு… “Flowers?!” என்றான். அதில் “பேபி….” என்று தன் கண்களை அகல விரித்த ஈஷா சினுங்கியப்படியே, “போங்க பேபி. எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. நீங்க ஆர்ட் சொல்லுவீங்க நினைச்சேன்” என்றவள்… ஈத்தனுக்காக கொண்டுவந்திருந்த சிறிய சிவப்பு ரோஜா பூங்கொத்தை தர… “வாவ்! தேங்க் யூ பேபி. இட்ஸ் சோ பியூட்டிஃபுல், ஜஸ்ட் லைக் யூ” என்று வாங்கிக்கொண்ட ஈத்தன். “சாரி பேபி. எனக்கு ரோஸ் தான் பிடிக்கும்னு, உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும் இல்லடா. அண்ட் ஆர்ட் ஆ இருந்து இருந்தா நீ இப்படி ஒரு கையில் மட்டும் கேஷ்வலா பிடிச்சு பேசிட்டு இருக்க மாட...

சங்கீதம்- 26.1 🪻😘🪄

அத்தியாயம்-26 அன்று குழந்தைக்கு ஈடாக, குறிஞ்சிக்கு பணம் கொடுத்து கையெழுத்து வாங்கியதையெல்லாம், இப்பொழுது நினைக்கும் பொழுது ஈத்தனுக்கு… நெஞ்சை யாரோ அழுந்த பிசையும் உணர்வு… அதில், “நான் அப்படி செய்திருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் மதர். என்னை மட்டுமே மனசில் வச்சு நிறைய சுயநலமா இருந்துட்டு இருக்கேன். அதில் குறிஞ்சியோட வாழ்க்கை மொத்தமும் கேள்விக்குறியாகிட்டு இருக்கு”, என்று உணர்ச்சி வசத்தில் பழியை மொத்தமாக தன் மீது போட்டுக்கொண்டவன், “ப்ளீஸ் மதர் இப்பவாவது நான் கேட்டதை சொல்லுங்களேன்… குறிஞ்சி எப்படி இங்க வந்து சேர்ந்தா? அவளோட ஃபேமிலி எங்க? இதெல்லாம் தெரிஞ்சா தான் என்னால் அடுத்து என்னன்னு பார்க்க முடியும்” என்றவனுக்கு… அவளின் மார்பில் இன்னும் தவழும் அவன் அணிவித்த மாங்கல்யமும்… காலில் வீற்றிருக்கும் கொலுசுகளும் நினைவில் வந்து படபடப்பை வரவழைத்தன… அதை அணிவித்தப்பொழுது கூட அவன் இந்தளவிற்கு படபடத்திருக்கவில்லை… மாற்றான் தோட்டத்து மல்லிகை என்ற நினைப்பில் தைரியமாக இருந்தவனிடம், திடீரென்று வந்து, இல்லை அது உன் தோட்டத்து மல்லிகை என்றால் எப்படி இருக்கும்… ஈத்தனின் பக்க கதையை கேட்டதற்கே, பாவம் மத...

சங்கீதம் -25.3

குழந்தைக்காக தான் எல்லாம் என்னும் நிலையில், குறிஞ்சியிடம் அவளுக்கு முழு உடல் பரிசோதனை ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கேட்டிருந்த ஈத்தன்…  சாந்தினி இருந்த மருத்துவ மனையிலேயே அதை செய்ய கூறி… அந்த மருத்துவ அறிக்கையில், அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று வந்ததும்…  அடுத்த முகூர்த்தத்திலேயே ரெஜிஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்ய கூறிவிட்டு இருந்தான்… அதற்கு இடைப்பட்ட காலத்தில்… மீண்டும் ஐஸ்வர்யாவையும், பிரபுவையும் வேறொரு இடத்திற்கு குறிஞ்சியுடன் வரவழைத்திருந்த ஈத்தன்… திருமண பதிவிற்கு பிறகில் இருந்து குறிஞ்சி அவனுடைய முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிருக்கும் என்றும்… அதற்கு பிறகு அவள் குழந்தை தரித்து… குழந்தையை பிரசவித்து… அதற்கு பிறகும் ஆறு மாதங்கள் அவள் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றவன்… அதற்கு பிறகு தான் அவளை வெளியே விடுவேன்… அதுவரை அவளை அவர்களால் பார்க்க முடியாது என்றுக்கூற… “கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகிடுமே சார். அதுவரை அவளை யாரும் எங்கன்னு கேட்டா நாங்க என்ன சொல்றது…” என்ற ஐஸ்வர்யா… “தாய்ப்பால் எல்லாம் எதுக்கு சார்… ...

சங்கீதம்-25.2

மறுநாள் ஈத்தனின் வீட்டிற்கு குறிஞ்சி... பிரபு மற்றும் ஐஸ்வர்யாவுடன் செல்ல… முன்பு குறிஞ்சியை அப்படியே அனுமதித்தது போல் இம்முறை அப்படியே அவளை அவர்கள் அனுமதிக்கவில்லை… மூவரிடம் இருந்தும் ஃபோன் முதற்கொண்டு அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டவர்கள்… அவர்களை நன்கு பரிசோதித்துவிட்டு… வீட்டின் பின்புறம் இருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு வர… அதன் பிரமாண்டத்திலேயே ஐஸ்வர்யா தன் திறந்த வாயை மூடவில்லை… வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் பிரபுவும் அதே மனநிலையில் தான் இருந்தான்… அனைவருக்கும் சிற்றுண்டிகள் வேறு பரிமாறப்பட… குறிஞ்சி எதையும் தொடக்கூட இல்லை… “கடவுளே… எப்படியோ இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்டுட்டிங்க… ப்ளீஸ்… மீதியையும் நல்லபடியா முடிச்சு கொடுத்துடுங்க…”, என்ற வேண்டுதலுடன் அமர்ந்து இருக்க… அரைமணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்து சேர்ந்த ஈத்தன்… அனைவரையும் முறையாக வரவேற்றுவிட்டு அமர்ந்தவன்… நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டு இருந்தான்… குறிஞ்சி சொன்னதையே தான் அவனும் கூறி… சம்மதமா என்று அனுமதி கேட்க… ஐஸ்வர்யா, “எங்களுக்கு இதில் பரிபூர்ண சம்மதம் ஈத்தன் சார்… என் தங...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates