இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

19.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

கீழே வந்த ஈத்தனோ, குறிஞ்சிக்கு பதில் கூற சற்றும் இடம் தராது, “லெட்ஸ் ஈட் ப்ரேக்ஃபாஸ்ட் டூகெதர் குறிஞ்சி. கம் ஆன்…” என்றப்படியே நடக்க… அதில் வேறுவழியின்றி அவனுடன் நடந்த குறிஞ்சி, டைனிங் டேபிளில் அவன் அருகே அமர… முன்பே அவர்கள் இருவருக்கும் தேவையான அனைத்தும் அங்கு அடுக்கப்பட்டு இருந்தன… இரண்டு பணியாளர்கள் வந்து இருவரையும் தனித்தனியாக கவனிக்க… குறிஞ்சிக்கு அவ்வளவு சங்கடமாக இருந்தது… எந்த ஊரில் உதவி கேட்டு வருபவர்களுக்கு இத்தனை கவனிப்பு தருவார்கள்… அதிலும் அவள் முன்பு வைக்கப்பட்ட வெள்ளி தட்டும், டம்ளரும் அவளை அப்படி மிரட்டிவிட்டது… அதன்பிறகு தான் மேஜையில் இருந்த உணவு பாத்திரங்கள் அனைத்துமே, கனமான வெள்ளி பாத்திரங்களாக இருப்பதையே குறிஞ்சி கவனித்தாள்… ஈத்தனின் அணுகுமுறை எளிமையாக இருந்தாலும், அவனை சுற்றியுள்ள பொருட்கள் யாவும் அவளின் அடிவயிற்றில் பல பயப்பந்துகளை உருட்டிவிட்டுக்கொண்டே இருக்க… மெல்லிய நடுக்கம் உடல் முழுவதும் குறிஞ்சிக்கு பரவியது… சத்தியமாக அவள் முன்பு வைத்திருந்த வெள்ளி தட்டினை தொட்டு பார்க்ககூட அவளுக்கு விருப்பம் இல்லை… தன் தகுதிக்கு மீறியதாக அவள் அதை நினைத்துக்கொண்டு இருக்க…...

19.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

முதல் தடவை, ஆட்டோவில் வந்த பொழுதே, திரும்பி செல்லவென்று, அந்த வழியினை மனப்பாடம் செய்துவிட்டிருந்த குறிஞ்சி, பேருந்தில் இருந்து இறங்கி, ஈத்தனுடைய வீட்டிற்கு நடந்தே வந்துவிட்டாள். முன்பு போலவே செக்யூரிட்டி அவள் வைத்திருந்த விசிட்டிங் கார்டினை வாங்கி சரிப்பார்த்துவிட்டு, கேட்டினை திறந்து உள்ளே அனுமதித்தவர்… பேட்டரி காரினை எடுத்துவர செல்ல… எதற்கு வீண் சிரமம் என்று அவரிடம் மறுத்தவள்… மெல்ல மாளிகை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்… மனதினுள், டிரீட்மெண்ட் ஆரம்பித்த பிறகு எப்படி நிறைய நாள் லீவ் எடுப்பது, வீட்டு வேலைகளை எப்படி சமாளிப்பது, சம்பளத்தை பிடித்துவிட்டால், இதர செலவுகளுக்கு என்ன செய்வது, போன்ற பல சிந்தனைகள்… உடன் ஈத்தன் எந்தளவுக்கு உதவி செய்வான் என்றும் அவளுக்கு தெரியாது… ஆப்ரேஷன் போக மருந்து, மாத்திரை, போக்குவரத்து என்று எவ்வளவோ செலவு இருக்கிறதே… அவசரத்திற்கு வைக்கவோ, விற்கவோ கூட அவளிடம் குண்டு மணி தங்கம் கிடையாதே… மனம் விடுவிடுவென்று கணக்குகள் போட… திடீரென்று முகத்தில் வந்து வேகமாக மோதிய காலை நேர இளந்தென்றலில், தன் சிந்தனையில் இருந்து கலைந்த குறிஞ்சி, குளிரில் சிலிர்த்துவிட தன் கைகளை வரு...

19.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

🫨சாரி டியர்ஸ் யூடி தர லேட் ஆகிடுச்சு... லாஸ்ட் அப்டேட்ஸ் நிறைய எமோஷன்ஸ் அண்ட் நிறைய நிறையன்னு டைப் செய்து கம்பிளீட்டா பிளான்க் ஆகிட்டேன்... அதில் கொஞ்சம் கேப் ஆகிடுச்சு... மன்னிச்சு... 🙂‍↕️ அத்தியாயம் -19 இரண்டு வாரங்கள் கடந்த நிலையில்… “நான் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் குறிஞ்சி. ஒரு வருஷம் தான் எக்ஸ்பீரியன்ஸ்னு. உறுதியா வேண்டாம் சொல்லிட்டாங்க. நீ எதுவும் ஏஜென்சி மூலம் முயற்சி செய்து பாரேன்…”, என்றார் குறிஞ்சியுடன் வேலைப் பார்க்கும் செவிலியர். அதில் “சரிங்க க்கா” என்று முகம் வாட கூறியவள்… திரும்பி தன்னுடைய இடத்திற்கு வந்துவிட்டாள். அவர்கள் மருத்துவமனையில் வேலையில் இருக்கும் ரோஹன், கனடா போன்ற வெளி நாடுகளுக்கு வீட்டில் இருந்தே பணிப்புரிய செவிலியர்களை, இங்கு தமிழ்நாட்டில் இருந்து எடுத்து அனுப்புவது உண்டு. மாதா மாதம் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவனுக்கு கமிஷனாக தந்துவிட்டால் போதும். மாதத்திற்கே மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை சம்பளமாக வரும் என்று கூற… தனக்கு அவ்வேலை கிடைத்தால்… இங்கு அன்னையை மருத்துவ வசதியுடன் கூடிய ஹோம் மாதிரியான இடத்தில் சேர்த்துவிட்டு கூட சென்று ப...

18.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

ஈத்தனின் தாத்தா மயில்வானத்தின் கதையில் ஆரம்பித்து, உமையாள், சித்ரலேகா, ஹன்டர், அவர்களின் காதல், திருமணம்… என்று சொல்லிக்கொண்டே போக… “அம்மாடி…” என்று குறிஞ்சிக்கு கேட்கும் போதே அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது… மேலும் தொடர்ந்து, ஈத்தனின் சிறு வயதிலான பல தகவல்களை சுவாரஸ்யமான புகைப்படங்களுடன் காட்ட… “பொம்மையெல்லாம் இவரை பார்த்து தான் செய்திருப்பாங்களோ…” என்று நினைத்தவளின்… கண்கள்… அவனின் நீல கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தது… அழகான காணொளி என்று அவள் நினைத்து முடிக்கும் முன்பே, அவனுடைய பெற்றோர்களின் திடீர் பிரிவு, அவர்களின் மறுமணம் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகள், ஈத்தன் இங்கேயே தாத்தா பாட்டியுடன் வந்து வசிக்க ஆரம்பித்தது என ஒன்றுவிடாமல் அனைத்து தகவல்களையும் புகைப்படத்துடன் கூற கூற… அழகான கோலம் கலைந்த உணர்வு… ‘அச்சோ… இதனால் தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி, குழந்தை மட்டும் கேட்டாரா…? நமக்காவது கூட அம்மா இருக்காங்க… பாவம் சமர் சார்…  இப்ப பாட்டியும் வேற இல்லையே… கடவுளே’ என்று நினைத்தவளுக்கு… இப்பொழுது உமையாள் அம்மாவின் இறுதி வார்த்தைகளும்… ஈத்தனின் தவிப்பும், அழுகையும்…. புரிய… ஏற...

18.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

தயாராக இருந்த மருத்துவர்கள் ஓடிவந்து உமையாளை சூழ்ந்துக்கொண்டனர்… ஈத்தனை விலக்கி விட்டவர்கள்… விடுவிடுவென்று அவரின் மார்பில் அழுத்தம் கொடுத்து, முதல் கட்ட சிபிஆர் செய்துப்பார்த்துவிட்டு… இறுதியாக டிஃபிபிரிலேட்டரை கொண்டு வந்து அவரின் மார்பில் வைத்து, மின்சாரத்தை செலுத்தி பார்க்க… உமையாளிடம் சிறு அசைவும் இல்லை… மேலும் இரண்டு முறை முயன்றும்… ஒரு பயனும் இல்லை… இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது… அதில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள்… ஈத்தனை திரும்பி பார்க்க… நிதர்சனத்தை அவனால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… உமையாளின் இரண்டு கரத்தினையும் பிடித்து அதில் முகத்தை புதைத்துக்கொண்டவன்… அழுத அழுகையில்… குறிஞ்சிக்கெல்லாம் இதயமே நின்றுவிடும் போல் இருந்தது… அதற்குள் அவனை சூழ்ந்துக்கொண்ட அவனின் பாதுகாவலர்களும், மேனேஜர்களும், அவனுக்கு ஆறுதல் கூறி… அவனை உமையாளிடம் இருந்து பிரித்தெடுக்க… “சாரி ஈத்தன்…” என்ற மருத்துவர்கள், “ஹாஸ்பிடல் ப்ரோசியூஜர்ஸ் கொஞ்சம் இருக்கு…” என்றுவிட்டு உமையாள் இருந்த ஸ்டெச்சரை இறக்கி, மருத்துமனைக்குள் தள்ளிக்கொண்டு செல்ல… குறிஞ்சிக்கு என்ன செய்வது என்று தெரியவில்...

18.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

ஈத்தன் வெளியே கிளம்புவதை பார்த்த, வீட்டு ஒருங்கிணைப்பாளர் ஓடிவந்து, குறிஞ்சி வந்து காத்திருப்பதை குறித்து கூற… “காட்… எப்படி மறந்தேன்…” என்று தன் வாட்சை திருப்பி பார்த்த ஈத்தன்… குறிஞ்சி இருந்த அறையை நோக்கி நடந்தான்… கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு மேலாக, மணியை பார்த்தவாறே, அவ்வளவு பெரிய அறையில், தனியாக அமர்ந்திருந்த குறிஞ்சி, திடீரென்று பரப்பரப்பானாள்… காற்றில் மிதந்து வந்த ஈத்தனின் பர்ஃபியூம் மணத்தை அவளின் நாசி சரியாக உணர்ந்து மூளைக்கு செய்தி அனுப்பிவிட்டு இருக்க… “ஹாய்…” என்றப்படியே ஈத்தன் அவ்வறைக்குள் நுழைந்து இருந்தான்… அதில் பட்டென்று கையில் இருந்த பையுடன், எழுந்து நின்றுக்கொண்ட குறிஞ்சிக்கு, பதட்டத்தில் குப்பென்று வியர்க்க ஆரம்பித்து இருந்தது… “சாரி குறிஞ்சி. நீ வந்து அதிக நேரம் ஆகுதுப்போல. காக்க வச்சிட்டேன்” என்ற ஈத்தன்… “குறிஞ்சி தானே பேர்…” என்று கேட்க… “ஆமாம் சார்” என்றவள், “நீங்க சரியான நேரத்திற்கு தான் சார் வந்திருக்கீங்க… நான் தான் சீக்கிரம் வந்துட்டேன்… சாரி”, என்றாள் சங்கடத்துடன் புன்னகைத்தப்படியே… “ஹே கூல்…” என்றவன், “வெல்கம் டூ அவர் ஹோம்” என்று அவளை வரவேற்கும் விதம...

18.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!

அத்தியாயம் -18 ஈத்தனின் வீடு இருக்கும் பகுதிக்கு மாநகர பேருந்தில் சென்று இறங்கிய குறிஞ்சி, புது ஏரியா என்பதால் வழி தெரியாது, வேறுவழியின்றி ஒரு ஆட்டோவை பிடித்து, அவன் வீட்டை எட்டு மணிக்கே அடைந்துவிட்டாள்… ‘என்னடா இது… அந்த சார் வீடுன்னு தானே சொன்னார்… ஆனா இது ஏதோ கம்பெனி மாதிரி இருக்கே…’ என்று குழப்பமாக பெரிய காம்பவுண்ட் மதில் சுவரையும், இரும்பு கேட்டினையும் பார்த்து நினைத்தவள்… விசிட்டிங் கார்ட்டில் இருந்த எண்ணை ஒருமுறை சரியா என்று சரிப்பார்த்துக்கொண்டாள்… பிறகு அங்கு பக்கவாட்டில் சிறிதாக தெரிந்த செக்யூரிட்டி அறையின் ஜன்னல் பக்கம் சென்று, விசிட்டிங் கார்டை காட்டி விசாரிக்க‌… கேட்டை திறந்து அவளை உள்ளே அனுமதித்தார்கள்… அதில், உள்ளே நுழைந்துப்பார்த்த குறிஞ்சிக்கு கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்துக்கொண்டது… மண்டபமா, கோவிலா, அரண்மனையா என்னவென்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை… சுற்றி பச்சை பசேலென்று பெரிய தோட்டம் பூங்கா போல் இருக்க… மத்தியில் இருந்தது ஒர் வெண்ணிற மாளிகை…  தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அவ்வளவு பிரமாண்டமாக வேலைப்பாடுகளுடன் தெரிந்தது… அதில், “அண்ணா இந்த விசிட்டிங...

17.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

இப்படியாக அந்த வீட்டில் வளர்ந்து வந்த குறிஞ்சி, அவ்வீட்டில் தன்னிலை அறியாது, சாந்தினியை ‘அம்மா…’ என்றும், குமாரை ‘அப்பா…’ என்றும், அழைத்து சுற்றிவர… அவ்வீட்டில் பிரச்சனை பெரிதாக வெடித்தது… ஐஸ்வர்யாவின் பக்கம் இருந்து… கைக்கு கிடைத்தது அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்தவள்… “நான் இனி ஸ்கூலுக்கு போகவே மாட்டேன். எல்லாரும் உங்க அப்பாக்கு இரண்டு பொண்டாட்டியா? நீ இரண்டாவது பொண்டாட்டி பொண்ணான்னு கேட்டு கிண்டல் பண்றாங்க… தெருவில் பசங்க கூட என்னை கிண்டல் பண்ணுதுங்க…” என்று ஓவென்று கத்தி கதறி அழுதவள்… “இனி நான் உயிரோடவே இருக்க மாட்டேன்…” என்று கத்தியை வேறு எடுத்து கீறிக்கொண்டாள்… அவளும் குழந்தை தானே…  பெரியவர்கள் செய்துவைக்கும் பாவங்களுக்கான பலனை குழந்தைகளால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்… ஐஸ்வர்யாவிற்கும் குறிஞ்சிக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம்… அவளால் குறிஞ்சியையும், அவர்களின் உறவையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… தன் தந்தை, தனக்கு மட்டும் தான் தந்தை, என்றாள். ஏற்கனவே தன் வாழ்க்கையை தன் அக்கா அழித்துவிட்டால் என்ற பயத்தில் இருந்த லோகேஸ்வரிக்கு, மகளின் பிரச்சனையும் உடன் சேர்ந...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates